Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

டோனிக்கு ரூ.6 கோடி

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

டோனிக்கு ரூ.6 கோடி

Wednesday, 20 February, 2008 02:24 PM

.

மும்பை, பிப்.20: ஐபிஎல் போட்டிகளில் பங்கேற்கும் சென்னை அணியின் சார்பில் விளையாட மகேந்திர சிங் டோனி ரூ.6 கோடிக்கு வாங்கப்பட்டிருக்கிறார். இலங்கை வீரர் முத்தையா முரளீதரனும் சென்னை அணி சார்பில் வாங்கப்பட்டுள்ளார்.

.

கொல்கத்தா அணி சார்பில் ஷோயிப் அக்தர், ஜெய்ப்பூர் அணி சார்பில் ஷேன்வார்னே, மொகாலி அணி சார்பில் ஜெயவர்த்தனே ஆகியோர் ஏலம் எடுக்கப்பட்டுள்ளனர்.

இந்திய கிரிக்கெட் வாரியம் தொடங்கியுள்ள இந்தியன் பிரிமியர் லீக்கில் இடம் பெற்றுள்ள அணி களில் விளையாட உள்ள வீரர்களை தேர்வு செய்வதற்கான ஏலம் இன்று மும்பையில் நடைபெற்று வருகிறது.

முதல்கட்ட ஏலத்திற்கு பிறகு இந்திய வீரர் மற்றும் ஒருநாள் அணியின் கேப்டன் மகேந்திர சிங் டோனி சென்னை அணியால் 1.5 மில்லியன் டாலருக்கு வாங்கப்பட்டி ருக்கிறார். முத்தையா முரளீதரனும் சென்னை அணியால் வாங்கப் பட்டுள்ளார்.

கில்கிறிஸ்ட் ஐதராபாத் அணி யாலும், ஜெயவர்த்தனே மொகாலி அணியாலும், ஷோயிப் அக்தர் கொல்கத்தா அணியாலும் வாங்கப் பட்டுள்ளனர். வார்னே ஜெய்ப்பூர் அணியால் வாங்கப்பட்டுள்ளார்.

முதல்கட்ட ஏலத்தில் அதிக தொகைக்கு வாங்கப்பட்ட வீரராக டோனி திகழ்கிறார். வார்னே, முரளீதரன், ஜெயவர்த்தனே மற்றும் கில்கிறிஸ்ட் ஆகிய வீரர்களை விட அதிக தொகைக்கு அவர் வாங்கப் பட்டுள்ளார்.

சென்னை அணியின் உரிமை இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவனத்தால் வாங்கப்பட்டிருக்கிறது.

இந்த அணிக்கு சென்னை சூப்பர் கிங்ஸ் என பெயர் சூட்டப் பட்டுள்ளது.

ஐபிஎல் நடத்தும் போட்டிகளில் சென்னை சூப்பர் கிங்ஸ் சார்பாக டோனி களமிறங்குவார்.

சென்னை ரசிகர்கள் போட்டிகளின் போது டோனிக்கு ஆதரவாக குரல் கொடுத்து மகிழலாம்.

இந்திய கிரிக்கெட் வாரியம், இந்தியன் பிரிமியர் லீக் எனும் புதிய அமைப்பை ஏற்படுத்தி 20 ஓவர் போட்டிகளை நடத்த உள்ளது.

இந்த அமைப்பில் 8 அணிகள் இடம் பெற்றுள்ளன. 8 அணிகளையும் ரிலையன்ஸ் உள்ளிட்ட வர்த்தக நிறுவனங்கள் மற்றும் ஷாருக்கான், ப்ரீத்தி ஜின்தா ஆகிய பாலிவுட் நட்சத்திரங்கள் விலைக்கு வாங்கி உள்ளனர்.

மேலை நாடுகளில் உள்ள தொழில் முறையான லீக் அமைப்பில் போட்டிகள் நடத்தப்பட உள்ளதால் வீரர்களும் மேலை நாடுகளில் இருப்பது போல ஏல முறையில் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

ஐபிஎல் அமைப்பில் ஆட ஒப்புக் கொண்டுள்ள வீரர்களிலிருந்து தங்களுக்கு தேவையான வீரர்களை ஒவ்வொரு அணியும் ஏலம் கேட்டு தேர்வு செய்து கொள்ளலாம். இதற்கான ஏலம் இன்று மும்பையில் நடைபெறுகிறது.

லண்டனை சேர்ந்த பிரபல ஏல நிபுணர் ரிச்சர்டு மேட்லே இந்த ஏலத்தை நடத்துகிறார். காலை 11 மணிக்கு தொடங்கும் இந்த ஏலம் நள்ளிரவு வரை நீடிக்கும் என்று தெரிகிறது.

ஏலத்திற்காக என்று பிரத்யேக சாப்ட்வேர் உருவாக்கப்பட்டுள்ளது. அணியின் உரிமையாளர்கள் தாங்கள் விரும்பும் வீரர்களை ஏலம் கேட்கலாம்.

அப்போது அவர்கள் இவர் யாரிடமும் தொடர்பு கொள்ள முடியாது. வீரர்கள் பற்றி வழங்கப்படும் விவரங்கள் அடிப்படையில் அவர்கள் ஏலம் கேட்கலாம். அதிக விலைக்கு கேட்கப்படும் அணிக்கு வீரர் வழங்கப்படுவார்.

வீரர்களின் தன்மைக்கேற்ப ஒவ்வொரு சுற்றாக ஏலம் நடத்தப்படும். குறைந்தபட்சம் 33 லட்சம் டாலர்களையும், அதிகபட்சமாக 50 லட்சம் டாலர்களையும் வீரர்களின் ஏலத்திற்கு அணிகளின் உரிமையாளர்கள் செலவிடலாம்.

வீரர்களுக்கான அடிப்படை தொகுதியிலிருந்து ஏலம் தொடங்கும். ஒவ்வொரு அணிக்கும் நட்சத்திர வீரர்கள் என ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளார்.

சச்சின் டெண்டுல்கர், சவுரவ் கங்குலி, ராகுல் திராவிட், வீரேந்திர ஷேவாக் உள்ளிட்ட 5 வீரர்கள் அவர்கள் வசிக்கும் நகரங்களை சேர்ந்த அணியில் இடம் பெற்றிருப்பார்கள். அவர்களை ஏலம் எடுக்க முடியாது.

ஒவ்வொரு அணியிலும் அதிகபட்சமாக 8 வெளிநாட்டு வீரர்கள் இடம் பெறலாம். இவர்களில் இருவர் மட்டுமே ஆஸ்திரேலியாவை சேர்ந்த வீரர்களாக இருக்கலாம்.

உள்ளூரை சேர்ந்த 4 வீரர்கள் மற்றும் 22 வயதுக்குட்பட்ட 4 வீரர்கள் கட்டாயம் அணியில் இடம் பெற்றிருக்க வேண்டும். அதிக பட்சமாக 16 வீரர்கள் ஒவ்வொரு அணியிலும் இடம் பெறுவார்கள்.

டோனி, பாண்டிங், சைமன்ஸ், வார்னே ஆகிய வீரர்களை ஏலம் எடுக்க கடும் போட்டி இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், முதல்கட்டத்தில் டோனி, அக்தர், முரளீதரன் மற்றும் கில்கிறிஸ்ட் ஆகியோர் ஏலம் எடுக்கப்பட்டுள்ளனர்.

maalaisudar.com

  • கருத்துக்கள உறவுகள்

தங்கள் தங்கள் நகரங்களுக்காக விளையாடும் வீரர்கள் மிகவும் பரிதாபத்துக்குரியவர்கள். என்ன செய்வது அவர்கள் அங்கே பிறந்தது அவர்கள் தலைவிதி.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

டோனி விலை போனது எப்படி?

.

Thursday, 21 February, 2008 11:49 AM

.

மும்பை, பிப்.21: சென்னை அணியால் மகேந்திர சிங் டோனி ரூ.6 கோடிக்கு வாங்கப் பட்டிருப்பது பரபரப்பாக பேசப்பட்ட நிலையில், இந்த ஏலத்தின் போது நடந்த பின்னணி விவரங்கள் தெரிய வந்துள்ளன.

.

ஐபிஎல் சார்பில் நேற்று நடத்தப் பட்ட ஏலத்தில் வீரர்கள் கோடிக் கணக்கான ரூபாய்க்கு விற்கப்பட்டது கிரிக்கெட் உலகையே உலுக்கி உள்ளது. மகேந்திர சிங் டோனி சென்னை அணியால் அதிகபட்சமாக ரூ.6 கோடிக்கு வாங்கப்பட்டுள்ளார்.

அநேகமாக எல்லா நாளிதழ்களுமே டோனி அதிக விலைக்கு வாங்கப் பட்டதை முக்கிய செய்தியாக வெளியிட்டுள்ளன. இந்த அளவுக்கு டோனிக்கு விலை கொடுக்கப்பட்டது எப்படி? எனும் கேள்விக்கு விடை கிடைத்துள்ளது.

ஏலத்தின் போது நடந்த பரபரப்பான போட்டி பற்றிய பின்னணி தகவல்கள் தெரிய வந்துள்ளன. சென்னை அணி ஏலத்தில் பங்கேற்பதற்கு முன்பாகவே எப்பாடு பட்டாவது மகேந்திர சிங் டோனியை வாங்கி விடுவது என முடிவு செய்ததாக கூறப்படுகிறது.

ஏலம் தொடங்கியதும் டோனியை வாங்க அந்த அணி போட்டியிட்டது. ஆனால் எல்லா அணிகளுமே டோனிக்காக போட்டியிட்டன. இதன் விளைவாக டோனிக்கான விலை ரூ.9 லட்சம் டாலராக உயர்ந்தது. இந்த கட்டத்தில் போட்டியிலிருந்து மற்ற அணிகள் விலகி கொண்டதாக தெரிகிறது.

சென்னை மற்றும் மும்பை அணிகள் மட்டுமே களத்தில் இருந்தன. இந்த இரு அணிகளுக்கு இடையே போட்டி நிலவியது. அப்போது சென்னை அணி டோனிக்கான விலையை 10 லட்சம் டாலராக உயர்த்தி இருக்கிறது.

மும்பை அணி உடனே 11 லட்சம் கேட்டது. சென்னை அணி 12 லட்சம் என உயர்த்தி கேட்டது. இந்த நேரத்தில் மும்பை அணி 13 லட்சம் என அறிவித்தது. அப்போதும் தயங்காத சென்னை அணி 15 லட்சம் டாலர் என உயர்த்தியது. இறுதியில் இந்த விலை முடிவானது. டோனி சென்னை அணியால் வாங்கப்பட்டார்.

மும்பை அணிக்கு ஏற்கனவே முத்திரை வீரராக சச்சின் டெண்டுல்கர் இருந்ததால் இதனை விட அதிக விலைக்கு டோனியை அவர்களால் ஏலம் கேட்க முடிய வில்லை என்று கூறப்படுகிறது.

சென்னை அணிக்கு முத்திரை வீரர் என்று யாரும் இல்லாததால் டோனி 15 லட்சம் டாலர்களுக்கு அதாவது ரூ.6 கோடிக்கு வாங்கப்பட்டி ருப்பதாக கிரிக்கெட் வட்டாரத்தில் பேசப்படுகிறது.

malaisudar.com

  • கருத்துக்கள உறவுகள்

' ஆடாமல் ஆடுகிறேன் பாடாமல் பாடுகிறேன்"

மேல்தட்டு மக்களுக்காக மேல்தட்டு மக்களால் நடாத்தப்படும் கௌரவமிக்க அடிமை வியாபாரம் வாழ்க!!!

:wub::lol:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.