Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அமெரிக்க உளவு செய்மதி வெற்றிகரமாக சுட்டு வீழ்த்தப்பட்டது !

Featured Replies

அமெரிக்க உளவு செய்மதி வெற்றிகரமாக சுட்டு வீழ்த்தப்பட்டது ! அண்டவெளியில் தொங்கும் செய்மதிகளுக்கு வருகிறது ஆபத்து ! திசை மாறுகிறது உலகப் போர் !

கடந்த 2006ம் ஆண்டு ஏவப்பட்ட பழுதடைந்த உளவு சற்லைற்றை விண்வெளியில் வைத்து சுட்டு வீழ்த்தியதன் மூலம் அமெரிக்கா புதிய போரியல் சரித்திரம் ஒன்றை நேற்றிரவு எழுதி முடித்துள்ளது. தரையில் இருந்து 210 கி.மீ தூரத்தில் அண்ட வெளியில் நகர்ந்து கொண்டிருக்கும் ஒரு செய்மதியை மணிக்கு 25.000 கி.மீ வேகத்தில் பறந்து சென்று குறி தவறாமல் சுட்டு வீழ்த்துவது போரியல் வரலாற்றில் புதிய சாதனை என்று வர்ணிக்கப்படுகிறது. சுமார் 60 மில்லியன் டாலர்களை பாவித்து இதை சுட்டு வீழ்த்தியுள்ளது அமெரிக்கா.

இந்தச் சாகசச் செயல் பலருக்கு அச்சத்தை ஊட்டியுள்ளது. சென்ற மாதம் ஈரான் தனது அணு குண்டு ஏவுகணையை நெறிப்படுத்த வல்ல சற்லைற்றை விண்ணுக்கு ஏவியது தெரிந்ததே. வருங்காலங்களில் எதிரி நாடுகள் அணு குண்டு தலை பொருத்தப்பட்ட ஏவுகணைகளை ஏவ முடியாதபடி அந் நாடுகளின் சற்லைற்றுக்களை சுட்டு வீழ்த்த முயலுமா என்ற அச்சம் உருவாகியுள்ளது. அப்படி ஒரு நிகழ்வு இடம் பெறுமாயின் இன்று அணு குண்டை வைத்திருக்கும் நாடுகளின் அணு குண்டுகள் யாவும் ஒரே நொடியில் செல்லாக்காசு குண்டுகளாக மாறும் அபாயம் உள்ளதா என்பது முக்கிய சந்தேகமாகியுள்ளது.

எவ்வாறாயினும் ஓர் ஏவுகணையை குறி தவறாமல் சுட்டு வீழ்த்துவதும், சற்லைற் ஒன்றை சுட்டு வீழ்த்துவதும் இரு வேறுபட்ட பணிகள். சற்லைற் பருமன் கூடியதாக இருப்பதால் அதை ஏவுகணை குறி தவறாமல் சுடுவது இலகுவானது. அதேவேளை சற்லைற்றுக்கள் வேகமாக நகருவதாலும், அதிலிருந்து வரும் வெப்ப வெளியேற்றம் குறைவானது என்பதாலும் அவற்றை வெப்பத்தின் உதவியால் சுடுவது கடினமானது. மறுபுறம் ஏவுகணை சிறியதாக இருந்தாலும், அது கக்கும் பாரிய வெப்பம் காரணமாக அதை வெப்பத்தின் உதவியால் எளிதாகச்சுட்டு வீழ்த்த முடியும்.

மேலும் நேற்று சுட்டு வீழ்த்தப்பட்டுள்ள அமெரிக்க சற்லைற்றில் விஷத்தன்மை வாய்ந்த 450 கிலோ ஹஹைட்ராசின் ரசாயன வாயு காணப்பட்டாலும், அது முக்கியமல்ல. அதைவிட மிகப் பெரிய முக்கியம் அது உளவு சற்லைற் என்பதே.

அமெரிக்க உளவு சற்லைற்றுக்கள் ஒட்டுக் கேட்பதில் வல்லமை பெற்றவை. அமெரிக்காவின் செவ்வியல் இரக சற்லைற் ஓர் அறைக்குள் இருந்து யார் என்ன மொழியில் பேசினாலும் அதை கவர்ந்து பென்ரகனுக்கு ஆங்கிலத்தில் மொழி மாற்றிக் கொடுக்கும் வல்லமை கொண்டது. உலகத்தின் அனைத்து உளவுப் பிரிவுகளையும் ஒற்றாடி அவர்களின் தகவல்களை சேகரிக்க வல்லது. பிரான்சிய உளவுத் தகவல்களையே அமெரிக்க உளவு சற்லைற்றுக்கள் ஒற்றாடியுள்ளதாக கடந்த சில ஆண்டுகளுக்கு முன் பெரும் சர்ச்சை ஐரோப்பிய வட்டகையில் எழுந்தது தெரிந்ததே. இந்த நிலையில் இப்படியொரு உளவு சற்லைற் மாதிரி வடிவம் மற்றவர் கைகளுக்கு அகப்படுவதையும் அமெரிக்கா விரும்பாது என்பது குறிப்பிடத்தக்கது. கைத்தொலைபேசியில் கதைத்தால் அதை வைத்து கதைக்கும் நபரை தாக்கும் தொழில் நுட்பத்தை மிக சாதாரண தொழில் நுட்பமாக உள்ளடக்கியது.

சுட்டு வீழ்த்தப்பட்ட அமெரிக்காவின் என். ஆர்.ஓ.எல்.-21 என்ற உளவு சற்லைற் செயலிழந்து விண்ணில் இருந்து பூமியை நோக்கி வந்தது. இது பூமியில் மோதினால் பெரும் அபாயம் ஏற்படும்; அதன் ரசாயன விஷத்தால் மக்களுக்கு ஆபத்து ஏற்படும். பிரிட்டனை நோக்கி வந்து கொண்டிருந்த இந்த 2270 கிலோ எடையுள்ள செயற்கைக் கோள் அடுத்த மாதம் பூமியில் மோதும் என்று கணிக்கப்பட்டது.

செயற்கைக்கோள் இபூமியில் விழுந்து நொறுங்கினால் ஏற்கனவே சேதம் அடைந்த அதன் எரிசக்தி தாங்கியில் இருந்து விஷ வாயு பரவி இரண்டு கால் பந்து மைதான அளவு பரப்பு பகுதிகளில் உள்ள எல்லாம் அழியும் ஆபத்து ஏற்படும் என்பதால் விண்ணிலேயே சுட்டு வீழ்த்த முடிவு செய்யப்பட்டது.

இதற்கான ஏற்பாடுகளை அமெரிக்க ராணுவ தலைமையகமான பென்டகன் செய்தது. பசிபிக் கடலில் தயார் நிலையில் இருந்த அமெரிக்க போர்க் கப்பலில். செயற்கைக்கோளை சுட்டு வீழ்த்த மூன்று ஏவுகணைகள் பொருத்தப்பட்டன. புவி ஈர்ப்பு பகுதிக்குள் நுழையும் முன் இன்று இச்செயற்கைக்கோள் சுட்டு வீழ்த்தப்பட்டது. 10 வினாடிகளில் ஏவுகணை இயக்கப்பட்டு செயற்கை கோளை பொடிப்பொடியாக்கியது. இதை அடுத்து அமெரிக்க அதிபர் புஸ் இதை சுட்டு வீழ்த்தும் உத்தரவை பிறப்பித்தாh என்று எளிமைப்படுத்தப்பட்ட செய்திகள் தெரிவிக்கின்றன.

இந்த நடவடிக்கைக்கு சீனாவும் ரஷ்யாவும் கண்டனம் தெரிவித்துள்ளன. மற்ற நாடுகளின் செயற்கைக் கோள்களை விண்ணிலேயே அழிக்கும் திறன் படைத்த அதிநவீன ஏவுகணைகளை அமெரிக்கா தயாரித்துள்ளது. இதற்கான சோதனையாகதான் தற்போதைய செயற்கைக்கோள் ஒத்திகை நடைபெறுகிறது. இதன் மூலம் விண்வெளிப் போருக்கு அமெரிக்கா தயாராகிவிட்டது தெரிகிறது என்று குற்றம் சாட்டியுள்ளன. இதுபோல ஒரு பழுதடைந்த காலநிலை சற்லைற்றை சீனா கடந்த ஆண்டு சுட்டு வீழ்த்தியது. இதனால் ஒரு இலட்சம் துணிக்கைகள் அண்டவெளியை சுற்றி வருகின்றன. அதில் 2600 துணிக்கைகள் 10 செ.மீ நீளமானவை.

இது இவ்விதமிருக்க அமெரிக்காவின் எப் 15 சீ இரக யுத்த விமானங்கள் இரண்டு மெக்சிக்கோ குடாவிற்கு அருகில் விபத்துக்குள்ளாகின. பயணித்த விமானிகளில் இருவரும் காப்பாற்றப்பட்டாலும் அதில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

http://www.alaikal.com/

  • கருத்துக்கள உறவுகள்

இனி ரசியாவும்,சீனாவும் சும்மா இருக்காது. விண்வெளி யுத்தத்தை எதிர்பார்க்கலாம்.பாதிக்கபடு

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.