Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கச்சதீவை தாரைவார்த்துக் கொடுத்ததால் தமிழக மீனவர்களின் வாழ்க்கை கேள்விக்குறி - ஜெயலலிதா கடும் கண்டனம்

Featured Replies

தி.மு.க. ஆட்சியில் இந்தியா வசமிருந்த கச்சதீவு, அன்றைய பிரதமர் இந்திரா காந்தி தலைமையிலான மத்திய அரசால் இலங்கைக்கு தாரைவார்த்துக் கொடுக்கப்பட்டது. இதன் மூலம் தமிழகத்தின் உரிமை சர்வதேச அளவில் பறிபோய் விட்டது என தமிழக முன்னாள் முதல்வரும் அ.தி.மு.க. பொதுச் செயலாளருமான ஜெயலலிதா குற்றம் சாட்டியுள்ளார்.

இன்று தமிழக மீனவர்களின் வாழ்க்கை கேள்விக் குறியாகவுள்ளது என்று குறிப்பிட்டுள்ள அவர், நான் முதலமைச்சராக இருந்தபோது கச்சதீவை நிரந்தர குத்தகைக்கு எடுத்துக்கொள்ள வேண்டும் என்று பல முறை வற்புறுத்தினேன். ஆனால், மத்திய அரசு அதற்கு செவிசாய்க்கவில்லை என்றும் கூறியுள்ளார்.

இந்திய மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினரால் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டதாக அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதா விடுத்துள்ள கண்டன அறிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். அதன் விபரம் வருமாறு;

இராமநாதபுரம் மாவட்ட இராமேஸ்வரம் அருகே தங்கச்சிமடம் சூசையப்பர் பட்டினத்தைச் சேர்ந்த குயின்ராஜ் என்பவருக்கு சொந்தமான படகில் அக்காள்மடம் மீனவர் காலனியைச் சேர்ந்த மீனவர்கள் கிறிஸ்டி, அந்தோனி, ராயப்பன், குயிட்டோ மற்றும் மரிய பிச்சை ஆகியோர் கச்சதீவு அருகில் நடுக்கடலில் மீன் பிடிக்கச் சென்றபோது அவர்களை பார்த்த இலங்கை கடற்படையினர் வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டபடி அவர்கள் அருகில் வந்தனர். இதனால், பயந்து போன மீனவர்கள் தங்கள் கையை மேலே தூக்கி நின்றனர். இதைப் பார்த்த கடற்படையினர் அப்படியே அசையாமல் நில்லுங்கள் என்று கூறி சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக தமிழக மீனவர்களை நிற்க வைத்து துன்புறுத்தி, பின்னர் அவர்களை விடுவித்துள்ளனர். விடுவித்த பின்னர் அவர்களை நோக்கி துப்பாக்கியால் கண்மூடித்தனமாக கடற்படையினர் சுட்டதால் கிறிஸ்டி என்ற மீனவர் இறந்து விட்டார்.

இதேபோன்று, இராமேஸ்வரத்தில் இருந்து மீன்துறை அதிகாரிகளின் அனுமதியுடன் தங்கச்சிமடம் ராஜா நகர் பகுதியைச் சேர்ந்த நெப்போலியன் என்பவருக்கு சொந்தமான விசைப்படகில் பயணம் செய்த மீனவர்களை நோக்கி இலங்கை கடற்படையினர் துப்பாக்கியால் சுட்டத்தில் பிரான்சிஸ் என்ற மீனவர் படுகாயம் அடைந்துள்ளார். மீன் பிடித்துக் கொண்டிருக்கும் தமிழக மீனவர்கள் மீது கடற்படையினர் நடத்தும் தாக்குதல்கள் நாளுக்கு நாள் பெருகிக்கொண்டே இருக்கின்றன.

இத்தகைய நடவடிக்கையினால் தமிழக மீனவர்களின் வாழ்க்கை கேள்விக் குறியாகியுள்ளது.

சர்வதேச பிரச்சினை, அயல் மாநிலங்களுடனான பிரச்சினை. தமிழ் நாட்டில் நிலவும் சட்டம், ஒழுங்கு பிரச்சினை ஆகியவை குறித்து மத்திய அரசிடமும் பலமுறை எடுத்துச் சொல்லியும் அவர்கள் நடவடிக்கை எடுப்பதாகத் தெரியவில்லை. மாநிலங்களவை உறுப்பினர் பதவிகளைப் பங்கு போட்டுக் கொள்ளும் ஆர்வத்தில் பாதிகூட தமிழக மக்களின் உரிமையை பெற்றுத் தருவதில் காட்டவில்லை. இவ்வாறு ஜெயலலிதா கூறியுள்ளார்.

http://www.virakesari.lk/news/head_view.asp?key_c=1367

  • கருத்துக்கள உறவுகள்

சிறீலங்கா றாஜகுலதிலகன்(எனக்கு அவருக்குக் குடுத்த பட்டம் ஞாபகம் வருகுதில்ல) இந்து ராம், மத்திய கொள்கை வகுப்பாளர்கள், ஐயா அந்தோனி எல்லாருஞ் சேர்ந்து றெக்கோட்டை மாத்தி இதற்கான பொறுப்பை தமிழப் போராளிகளுடைய தலையில போட பிளான் பண்ணிக் கொண்டிருக்கிற நேரத்தில உவ பாய்ஞ்சு விழுந்து அறிக்கைய விட்டுப்போட்டு இருக்கிறா. அவையளுடைய தலைசுத்தப்போகுது.

ஆனால் சிங்களத்துக்கு காவடி எடுப்பார் ஜெ அம்மையார் இவர் எல்லாம் ஒரு மனிதர் என

அடுத்த முறை தேர்தலில்

புரட்சிகரமாக லெஸ்பியன் திருமணம் செய்து லெஸ்பியன்களுக்கு அங்கீகாரம் வழங்கி தந்தேன் என சொல்லி வாக்கு கேட்பார் கேவலம் கெட்டவர்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.