Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கலைந்து போன சிறிலங்காவின் வதந்திகள்: "லக்பிம"

Featured Replies

ஞாயிற்றுக்கிழமை, 16 மார்ச் 2008, 06:12 மு.ப ஈழம் பி.கெளரி

தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் தொடர்பாக சிறிலங்காவின் தென்பகுதியில் வேகமாகப் பரவிவந்த தகவல்கள் எல்லாம் பொய்யானவை என்பதனை அண்மையில் விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் நாடாளுமன்ற உறுப்பினர் சிவநேசனின் இறுதி நிகழ்வில் கலந்து கொண்டதன் மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளது என்று கொழும்பிலிருந்து வெளிவரும் ஆங்கில வார ஏடான "லக்பிம" தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் அந்த வார ஏட்டின் பாதுகாப்பு ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளவற்றின் முக்கிய பகுதிகள்:

விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் கடந்த 3 மாதங்களாக சிறிலங்காவில் பெரும் புதிரை எற்படுத்தியிருந்தார். அதாவது அவர் இறந்துவிட்டதான அல்லது காயமடைந்து விட்டதான செய்திகளே சிறிலங்காவின் தென்பகுதியில் பிரதான செய்திகளாக வெளியிடப்பட்டு வந்தன. பொது மேடைகளிலும் அது பேசப்பட்டு வந்தன.

கடந்த வருடம் நவம்பர் மாதம் நடைபெற்ற வான் தாக்குதலில் அவர் காயமடைந்ததாக பல ஊடகங்கள் தகவல்கள் வெளியிட்டிருந்தன. வன்னிக்குச் சென்ற மருத்துவ நிபுணர்கள் அவரை வெளிநாட்டுக்கு கொண்டு செல்லுமாறு பணித்ததாகவும் அரச தொலைக்காட்சி நிறுவனம் தனது பிரதான செய்தியில் தெரிவித்திருந்தது.

மாவீரர் நாள் அன்று நடைபெற்ற வான்தாக்குதலில் அவர் காயமடைந்ததாக சிலர் தெரிவித்தனர். சிலர் அவருக்கு நீரிழிவு போன்ற சிக்கலான வருத்தங்கள் உள்ளதாக தெரிவித்திருந்தனர். அரசு இந்த தகவல்கள் தொடர்பாக ஆர்வமாக இயங்கியதுடன் படை உயர் அதிகாரிகளும் அதனை வலுவாக நம்பியிருந்தனர்.

விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் கடுமையாக காயமடைந்துள்ளதனை தான் வலுவாக நம்புவதாக வான்படைத் தளபதி றொசான் குணதிலக்க ஐரிஎன் தொலைக்காட்சி நிறுவனத்திற்கு வழங்கிய நேர்காணலில் தெரிவித்திருந்தார். எனினும் எக்ஸ்ரே முகாம் மீதான வான் தாக்குதலுக்கு முன்னர் விடுதலைப் புலிகளின் தலைவர் அப்பகுதியில் இருந்து வெளியேறி விட்டதாக புலனாய்வுத்துறை தெரிவித்திருந்தது.

ஆனால் படுகொலை செய்யப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கி.சிவநேசனுக்கு தனது இறுதி வணக்கத்தினை விடுதலைப் புலிகளின் தலைவர் தெரிவித்த படங்கள் கடந்த சனிக்கிழமை வெளிவந்துள்ளன. அவருடன் புலனாய்வுதுறைப் பொறுப்பாளர் பொட்டு அம்மான்இ அரசியல்துறைப் பொறுப்பாளர் பா.நடேசன்இ நிதித்துறைப் பொறுப்பாளர் தமிழேந்தி ஆகியோரும் வணக்கம் செலுத்தியிருந்தனர்.

இந்த படங்கள் வேலுப்பிள்ளை பிரபாகரன் தொடர்பாக வெளிவந்த எல்லா வதந்திகளையும் பொய்யாக்கி விட்டன. அவர் தொடர்பாக வதந்திகள் வெளிவருவது இது முதற்தடவை அல்ல. ஆழிப்பேரலை சிறிலங்காவை தாக்கிய போதும் விடுதலைப் புலிகளின் தலைவர் அலைகளால் அடித்துச் செல்லப்பட்டதாக வதந்திகள் பரவியிருந்தன.

மேலும் வாசிக்க : puthinam.com

Edited by Janarthanan

தமிழிழ விடுதலைப்புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் தொடர்பாக வெளியான தகவல்கள் யாவும் பொய்யானவை என கடந்த வாரத்தில் உறுதிப்படுத்தப்பட்டதாக சண்டே டைம்ஸின் பாதுகாப்பு நிலவர கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ளது. பிரபாகரன் ஸ்ரீலங்காவின் வானூர்தி தாக்குதலில் காயமடைந்துள்ளார் அவரின் கால் அகற்றப்பபட்டுள்ளது என்றெல்லாம் செய்திகள் தென்னிலங்கையில் வெளியாகியிருந்தன. எனினும் அவர் கொல்லப்பட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவநேசனுக்கு இறுதி அஞ்சலி செலுத்து வந்ததன் பின்னர் அந்த செய்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில் பிரபாகரனின் பிரசன்னமானது. ஸ்ரீலங்காவின் செய்திகளுக்கு முற்றுப்புள்ளிவைத்ததை விட தமிழிழ விடுதலைப்புலிகளின் போர் முனைப்புகளிலும் உத்வேகத்தை ஏற்படுத்தும் என சண்டெ டைம்ஸ் கூறுகிறது. புpரபாகரனின் பிரசன்னமானது தமிழிழ விடுதலைப்புலி உறுப்பினர்கள் மத்தியிலும் தெம்மை ஏற்படுத்தியுள்ளது. இந்தநிலையில் இதன் வெளிப்பாட்டை எதிர்காலத்தில் போர் முனைகளில் பார்க்கக்கூடியதாக இருக்கும் என டைமஸ் குறிப்பிட்டுள்ளது; இதேவேiளை மன்னாரில் மடு தேவாலயத்தில் இருந்து 2 கிலோ மீற்றர் தூரத்தில் நிலைகொண்டிருப்பதாக கூறப்படும் ஸ்ரீலங்கா படையினரும் விரைவில் தமது இலக்கிற்கான முனைப்புகளை மேற்கொள்வர் என படைதத்தரப்பு அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளதாக சண்டே டைம’ஸ தெரிவித்துள்ளது

http://www.ajeevan.ch/

எது உண்மை, எது பொய் என்ற விடயத்தை தெளிவாக சிங்களமக்களுக்கு இந்த சண்டே ரைம்ஸ் தெளிவுபடுத்த வேண்டும். சிங்கள அடிவருடிகளை விடவும் ஏனைய தமிழர்கள் இந்தப் பிரச்சாரங்களில் தெளிவாகத்தான் இருக்கிறார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

பாவம் உவங்கள் வெறும் புலுடாவுகளை விட்டு ஒரு பெரிய யுத்தத்தை நடத்தி அதில வெற்றியும் காணலாம் எண்டிற குருட்டு நமபிக்கையில இருக்கிறாங்கள். ஒவ்வொரு சந்தர்ப்பத்திலையும் திட்டங்கள் தவிடு பொடியாகுது. இப்ப சொன்னதெல்லாம் பொய்ச்சுப் போச்சுதெண்டு மூக்ககால அழுறாங்கள்.

போங்கையா எல்லாம் ஒரு தமஸ்தான்... இது தெரியாம நீங்க ஏன் ரென்ஸ்னாகிறீங்க?

  • கருத்துக்கள உறவுகள்

கலைந்து போன சிறிலங்காவின் வதந்திகள் (புலிகளின் தலைவர் தொடர்பாக சிறிலங்காவின் தென்பகுதியில் வேகமாகப் பரவிவந்த தகவல்கள்)

[ ஞாயிற்றுக்கிழமை, 16 மார்ச் 2008, 05:54.53 AM GMT +05:30 ]

தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் தொடர்பாக சிறிலங்காவின் தென்பகுதியில் வேகமாகப் பரவிவந்த தகவல்கள் எல்லாம் பொய்யானவை என்பதனை அண்மையில் விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் நாடாளுமன்ற உறுப்பினர் சிவநேசனின் இறுதி நிகழ்வில் கலந்து கொண்டதன் மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளது என்று கொழும்பிலிருந்து வெளிவரும் ஆங்கில வார ஏடான "லக்பிம" தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் அந்த வார ஏட்டின் பாதுகாப்பு ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளவற்றின் முக்கிய பகுதிகள்: விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் கடந்த 3 மாதங்களாக சிறிலங்காவில் பெரும் புதிரை எற்படுத்தியிருந்தார். அதாவது அவர் இறந்துவிட்டதான அல்லது காயமடைந்து விட்டதான செய்திகளே சிறிலங்காவின் தென்பகுதியில் பிரதான செய்திகளாக வெளியிடப்பட்டு வந்தன. பொது மேடைகளிலும் அது பேசப்பட்டு வந்தன. கடந்த வருடம் நவம்பர் மாதம் நடைபெற்ற வான் தாக்குதலில் அவர் காயமடைந்ததாக பல ஊடகங்கள் தகவல்கள் வெளியிட்டிருந்தன. வன்னிக்குச் சென்ற மருத்துவ நிபுணர்கள் அவரை வெளிநாட்டுக்கு கொண்டு செல்லுமாறு பணித்ததாகவும் அரச தொலைக்காட்சி நிறுவனம் தனது பிரதான செய்தியில் தெரிவித்திருந்தது.

மாவீரர் நாள் அன்று நடைபெற்ற வான்தாக்குதலில் அவர் காயமடைந்ததாக சிலர் தெரிவித்தனர். சிலர் அவருக்கு நீரிழிவு போன்ற சிக்கலான வருத்தங்கள் உள்ளதாக தெரிவித்திருந்தனர். அரசு இந்த தகவல்கள் தொடர்பாக ஆர்வமாக இயங்கியதுடன் படை உயர் அதிகாரிகளும் அதனை வலுவாக நம்பியிருந்தனர். விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் கடுமையாக காயமடைந்துள்ளதனை தான் வலுவாக நம்புவதாக வான்படைத் தளபதி றொசான் குணதிலக்க ஐரிஎன் தொலைக்காட்சி நிறுவனத்திற்கு வழங்கிய நேர்காணலில் தெரிவித்திருந்தார். எனினும் எக்ஸ்ரே முகாம் மீதான வான் தாக்குதலுக்கு முன்னர் விடுதலைப் புலிகளின் தலைவர் அப்பகுதியில் இருந்து வெளியேறி விட்டதாக புலனாய்வுத்துறை தெரிவித்திருந்தது. ஆனால் படுகொலை செய்யப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கி.சிவநேசனுக்கு தனது இறுதி வணக்கத்தினை விடுதலைப் புலிகளின் தலைவர் தெரிவித்த படங்கள் கடந்த சனிக்கிழமை வெளிவந்துள்ளன. அவருடன் புலனாய்வுதுறைப் பொறுப்பாளர் பொட்டு அம்மான், அரசியல்துறைப் பொறுப்பாளர் பா.நடேசன், நிதித்துறைப் பொறுப்பாளர் தமிழேந்தி ஆகியோரும் வணக்கம் செலுத்தியிருந்தனர்.

இந்த படங்கள் வேலுப்பிள்ளை பிரபாகரன் தொடர்பாக வெளிவந்த எல்லா வதந்திகளையும் பொய்யாக்கி விட்டன. அவர் தொடர்பாக வதந்திகள் வெளிவருவது இது முதற்தடவை அல்ல. ஆழிப்பேரலை சிறிலங்காவை தாக்கிய போதும் விடுதலைப் புலிகளின் தலைவர் அலைகளால் அடித்துச் செல்லப்பட்டதாக வதந்திகள் பரவியிருந்தன.

அடம்பனை நோக்கி நகரும் சிறிலங்காவின் 58 ஆவது படையணி சிறிலங்காப் படையினரின் 58 ஆவது படையணி அடம்பனை நோக்கி நகாந்து வருவதாகவும், 57 ஆவது டிவிசன் மடுவை நோக்கி மூன்று முனைகளால் நகர்ந்து வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. அது மடுவில் இருந்து 1.8 கி.மீ தூரத்தில் நிலைகொண்டுள்ளதாகவும் சிறிலங்காப் படைத்தரப்பு தெரிவித்துள்ளது. மேலும் கடந்த வாரம் ஏ-9 வீதியில் உள்ள புளியங்குளம் பிரதேசத்தை படையினர் கைப்பற்றி விட்டதாக சிறிலங்காவின் தென்பகுதியில் தகவல்கள் பரவியிருந்தன. ஆனால் அதில் உண்மையில்லை என்பது பின்னர் தெரியவந்தது. மன்னார் பகுதியில் உள்ள புளியங்குளத்தையே படையினர் கைப்பற்றியிருந்தனர். ஆனால், வன்னியில் மிக நெருக்கமான சமர்கள் நடைபெறவில்லை எனவும், விடுதலைப் புலிகள் நேரடியற்ற சூடுகளையே பயன்படுத்தி வருகின்றனர். பொறிவெடிகள் மற்றும் மிதிவெடிகளையும் அவர்கள் பயன்படுத்தி வருகின்றனர். இவையே படையினருக்கு பெரும் இழப்புக்களை ஏற்படுத்தி வருகின்றன. அடம்பன் பகுதிக்கான கட்டளைத் தளபதியாக லக்ஸ்மன் விடுதலைப் புலிகளால் நியமிக்கப்பட்டுள்ளார். அடம்பனைத் தொடர்ந்து படையினரின் இலக்கு விடத்தல்தீவாகும். இது விடுதலைப் புலிகளின் விநியோக வழிகளை தடுக்கும் நடவடிக்கையாகும்.

இந்தப் பகுதியில் உள்ள ஆழமற்ற கடற்பிரதேசம் விடுதலைப் புலிகளின் நடவடிக்கைகளுக்கு சாதகமானது. அங்கு கடற்படையினரின் டோரா வகை தாக்குதல் படகுகள் நடவடிக்கையில் ஈடுபடுவது கடினமாகும். எனவே கடற்படையினர் நீருந்து விசைப் படகுகளையே அப்பகுதிகளில் பயன்படுத்தி வருகின்றனர். மேலும் அடம்பனை கைப்பற்றுவது படையினர் ஏ-9 வீதிக்கு பதிலாக ஏ-32 வீதியை கைப்பற்றும் உத்தியை கொண்டுள்ளதை காட்டுகின்றது. இந்தப் பகுதிகளில் நடைபெற்று வரும் மோதல்களில் கடந்த வாரம் 17 இராணுவத்தினர் கொல்லப்பட்டதுடன், 60 படையினர் காயமடைந்துள்ளதாகவும் படைத்தரப்பு தெரிவித்துள்ளது. எனினும் உண்மையான இழப்புக்களை உறுதிப்படுத்த முடியவில்லை என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

http://tamilwin.com/view.php?2a36QVF4b34Z9...3g2hF2ccdvj0o0e

எல்லாருமே கட்டிக் கொண்டு ஒப்பாரி வைக்கிறார்கள்.

தமிழீழ விடுதலைப் புலிகளின் படை நடவடிக்கைகளை தானே முழுமையாக நெறிப்படுத்தி வருவதான செய்தியை விடுதலைப் புலிகளின் தலைவரின் பிரசன்னம் உலகிற்கு எடுத்தியம்பியுள்ளது. அதன் தாக்கம் போர்க்களத்திலும் வெளி உலகிலும் எதிரொலிக்கலாம் என்று கொழும்பிலிருந்து வெளிவரும் ஆங்கில வார ஏடான "சண்டே ரைம்ஸ்" தெரிவித்துள்ளது.

தொடர்ந்து வாசிக்க

சிங்களப் பத்திரிகைகளிலும் இந்த விடயம் பரவலாக வரவேண்டும். லக்பிம இதன் சாரத்தை வெளியிட்டுள்ளது. பி. ராமனின் அறிக்கையும் ஓரளவிற்கு இந்த விடயத்தைத் தெளிவுபடுத்தும். சிங்கள அரசின் இப்படியான பரப்புரைகள் களப் போராளிகளிடம் எந்தச் சோர்வையும் ஏற்படுத்தாது.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.