Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

குடா நாட்டில் விதவைகளின் எண்ணிக்கை சுமார் 29 ஆயிரம்

Featured Replies

17.03.2008 நிருபர் எல்லாளன்

யாழ் குடாநாட்டில் தொடர்ந்துகொண்டுள்ள படுகொலைகள் மற்றும் இயற்கை அனர்த்தங்கள் உள்ளிட்ட மரணங்களினால் கணவனை இழந்து வாழும்

.விதவைகளின் எண்ணிக்கை சுமார் 29 ஆயிரம் எனக்கூறப்படுகின்றது.

இந்த விதவைகளுள் 40 வயதிற்குட்பட்டவர்கள் சுமார் 7 ஆயிரம் பேர் எனவும் யாழ் புள்ளிவிபரம் ஒன்று தெரிவிக்கின்றது.

இவர்களுள் சுமார் 23 ஆயிரம் பேர் மாத வருமானமாக ஆயிரம் ரூபாவையோ அல்லது அதற்கு குறைவான தொகையினையோ மாத வருமானமாகப்பெறுகின்றனர். இவர்களில் 11 ஆயிரத்திற்கு மேற்பட்டவர்கள் எவருடைய தயவுமின்றி தம் வாழ்க்கையினை நடாத்துகின்றார்கள்.

கடந்த 2006 ஆகஸ்ட் மாதம் தொடக்கம் தற்போது வரையில் 700 பேர் வரையில் விதவைகளாகியுள்ளார்கள். அதில் பெருவாரியானோர் படுகொலைகளின் காரணமாக தங்களது கணவனை இழந்தவர்களாகக் காணப்படுகின்றார்கள்.

இவர்கள் 21 வயதற்கும் 30 வயதிற்கும் இடைப்பட்டவர்களே அதிகமாககாணப்படுவதுடன், தென்மராட்சிப்பகுதியிலேயே அதிகளவிலான விதவைகள் காணப்படுவதாகவும் வருமானத்தை ஈட்டிக்கொடுக்கும் குடும்பத்தலைவனது இறப்பின் காரணமாக அந்தக்குடும்பங்களின் பொருளாதார நிலைமை மிகவும் மோசமாகக்காணப்படுவதாகவும் அந்த ஆய்வறிக்கை மேலும் சுட்டிக்காட்டுகின்றது.

நன்றி சங்கதி

குடாநாட்டு பெண்கள் சனத்தொகையில் ஒரு கணிசமான அளவு தொகை.... அய்யா இவர்களுக்கு ஒரு உதவிதிட்டமொன்றை யாராவது தொடங்கீனார்களா? அது எது?

ஒவ்வொரு இளைஞனும் முன்வந்தால் இதைமாற்றமுடியும். நாட்டுக்காக செய்ததாய் இருக்குமே.

சுராவளி உண்மையிலே குறிபிடப் போனால் இந்த மேற்குறிப்பிட்ட எண்ணிக்கை யை விட அதிகமாகத் தான் இருக்கும் ஆனாலும் இங்கு கவலையான விடயம் என்னவெனில் இந்த எண்ணிக்கை இதைவிட கூடவோ அல்லது இதை வழட குறைவானதோ என்றல்ல ... இவர்களிற்கு என்ன நடந்ததென்பதுடன் இவர்களிற்கு வாழ்வின் ஆதாரம் என்ன அல்லது அதற்கு உதவுபவர்கள் என்று எவருமே குறிப்பிட்டுச் சொல்ல முடியாவிட்டாலும் சில அரச சார்பற்ற நிறுவனங்கள் அதாவது ( ஊள்ளுரைச் சேர்ந்தவை) மட்டும் தம்மால் ஆன சில உதவிகளை புரிந்து வருவது பாராட்டத்தக்கது ஆனாலும் அவை போதுமானதாக இல்லை.

அதுமட்டுமன்றி அவர்களில் அனைவருமே சிறழலங்கா படைகளினாலும் அவற்றின் நடவடிக்கைகளினாலும் இவ்வாறான நிலைக்கு ஆகியவர்கள் என்றில்லை என்பதுடன் இவர்களில் சில ஆயிரம் பேராவது எம்மவர்களின் நடவடிக்கைகளினால் அந்த நிலைக்கு ஆளானார்கள் என்பது மிக கசப்பான உண்மையுங் கூட ....

நானும் தென்மராட்சியை சேர்ந்தவன் என்ற வகையில் பல சம்பவங்ளை ஊருரில் இருந்த காலத்தில் நேரடியாக கண்டவன் அத்துடன் இவற்றிற்கா 1990 களின் பிற்பகுதியில் விடுதலைப்புலிகளினால் இவ்வாறான குடும்பங்கள் சிலவற்றிற்கு சில உதவிகள் வழங்கப்பட்டிருந்தன ஆனாலும் 1993 ஆண்டன் அவை பெரும்பாலும் நிறுத்தப்பட்டதும் வேதனைக்குரியது.

யாழ்ப்பாணம் வன்னி கிழக்கு என்று உலக உணவுத்திட்டம் உதவிகளால் நன்மை அடைபவர்கள் ஏன் பட்டினிச் சாவை தவிப்பவர்களே லட்சக் கணக்கானோர்.

உலகளாவிய ரீதியில் உணவுப் பொருட்களின் விலை கடந்த சில மாதங்களில் வேகமாக அதிகரித்து வருகிறது. இதற்கு பல காரணங்கள் உண்டு.

உலக உணவுத்திட்டம் இது பற்றி அபாய அறிவிப்பை 2 வாரங்களிற்கு முன்னர் வெளியிட்டிருந்தது. அவர்கள ஒதுக்கியுள்ள நிதிகளின் படி புதிய அதிகரித்த விலையில் தேவைகளை பூர்தி செய்வதற்கு கிட்டத்தட்ட 40வீத இடைவெளி இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. சிறீலங்கா அரசும் வறுமைக் கோட்டிற்கு கீள் உள்ளவர்கள், மற்றும் இடப்பெயர்வு நிவாரணம் என்று கொஞ்சமாவது கொடுத்து வருகிறது.

எகிப்த்து ஆப்கானிஸ்தான் முதல் பல ஆபிரிக்க நாடுகளிலும் அதிகரித்த உணவு தானிய விலைகளால் முன்பு தமது உணவை தாமே வேண்டும் நிலையில் இருந்தவர்கள் இன்று நிவாரணங்களை நம்பியிருக்க வேண்டிய நிலைக்கு வந்திருப்பது ஏற்கனவே நடைமுறையில் இருந்த உதவித்திட்டங்களின் தேவையை பல மடங்காக அதிகரிக்கிறது.

இதன் தாக்கம் மிக விரைவில் சிறீலங்காவிலும் தெரியும். இந்தச் சாட்டில் வடக்கு கிழக்குப் பகுதிகளிற்கான நிவாரண வினியோகங்கள் தெரிவு செய்யப்பட்ட ரீதியில் பாதிக்கப்படலாம்.

http://www.wfp.org/English/?ModuleID=137&Key=2787

http://www.un.org/apps/news/story.asp?News...han&Cr1=wfp

http://www.alertnet.org/db/an_art/20316/20...25-115301-1.htm

http://www.ft.com/cms/s/0/451604c4-e30b-11...00779fd2ac.html

http://www.alertnet.org/thenews/newsdesk/L16130793.htm

Edited by kurukaalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

கோரிக்கையற்றுக் கிடக்குதண்ணே இங்கு வேரிற் பழுத்த பலா - ஒரு

கோரமுமற்றுத் தவிக்குதண்ணே ஒளியூறிடும் வட்ட நிலா

வெட்கமில்லை வெட்கமில்லை இங்கு யாருக்கும் வெட்கமில்லை.

'எல்லா இளைஞர்களும் எப்பிடிச் சாப்பாடு கொடுக்கலாமென்றுதான் பார்க்கிறாங்க. வாழ்வு கொடுக்கிறதப் பற்றி யோசிக்கிறமாதிரியில்ல.

இப்படியான அவலங்கள் தீர்க்கப்படக் கூடியவைதான். அதற்காக குடாநாட்டினுள் இருக்கும் எதிரிகள் விரட்டப்பட்டாலே அது முடியும். எப்படிப்பட்ட ஏற்பாடுகளும் இந்த நிலையை அங்கு மாற்றங்களிற்கு உள்ளாக்காது. குடாநாடு மட்டுமல்ல, ஈழத்தின் பிற பகுதிகளிலும் இந்த நிலையுண்டு.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.