Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

புஷ்பமாலாவின் அவலம்.

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

pg25.jpg

வெள்ளித் திரையில் அழகு தேவதையாய் மின்னியவர். எம்.ஜி.ஆர், சிவாஜி, எம்.ஆர்.ராதா, சந்திரபாபு, நாகேஷ், ஜெய்சங்கர், தேங்காய் சீனிவாசன், சிவகுமார் என்று பலருடன் 400 படங்களுக்கு மேல் நடித்து ஏராளமான சொத்துக்களைச் சம்பாதித்தவர். அந்தக் காலத்திலேயே மூன்று இம்பாலா கார்களில் பவனி வந்தவர். ஆனால் இன்று சொத்துக்கள் பறிபோய், சொகுசு வாழ்வு கைநழுவிப் போய் சாப்பாட்டுக்குக்கூட வழி யில்லாத நிலையில் இருக்கிறார் நடிகை புஷ்பமாலா.

பெரியார் மாவட்டம், பெருந்துறை, வண்ணாம்பாறையில் நெடிய சந்திலுள்ள ஒரு சிறு அறை கொண்ட வீட்டில்தான் புஷ்பமாலாவின் வாழ்வு கடந்து கொண் டிருக்கிறது. அவரைச் சந்தித்துப் பேசினோம்.

‘‘1958ல் ‘இரும்புத்திரை’ படத்தில் சிவாஜி யின் அண்ணன் மகளாக அறிமுகமானேன். முதல் படத்திலேயே சிவாஜியுடன் நடிக்கும் வாய்ப்புக் கிடைத்ததால், தொடர்ந்து பட வாய்ப்புகள் வந்தன. எல்லாப் படங்களிலும் 2ஆம் நாயகி வேடங்கள்தான். வல்லவன் ஒரு வன் படத்தில் ‘அம்முகுட்டி ஹோட்டல்’ என்ற பெயரில் ஹோட்டல் நடத்தும் பெண்ணாக, தேங்காய் சீனிவாசனுக்கு ஜோடியாக நடித்தேன். அது பெரும் வரவேற்புப் பெற்றதால், ‘அம்முகுட்டி புஷ்பமாலா’ என்றே என் பெயர் ஆனது.

pg25b1.jpg

அந்தப் படத்திலிருந்து நகைச்சுவை வேடங்களும் என்னைத் தேடி வந்தன. எம்.ஜி.ஆரோடு அடிமைப்பெண், ஆயிரத்தில் ஒருவன், காவல்காரன் என்று ஏறக்குறைய அவரின் எல்லாப் படங்களிலும் நடித்தேன். கடைசியாக விஜய்காந்தின் ‘நெறஞ்ச மனசு’ படத்தில் நாயகி சூசனின் பாட்டியாக நடித்தேன்.

அடிமைப் பெண் படத்தில் சந்திரபாபுவுக்கு ஜோடியாக நடித்திருக்கிறேன்.

படங்களில் நடித்துக் கொண்டிருக்கும் போதே நாடகங்களிலும் நடித்து வந்தேன். எந்த ஊருக்குச் சென்றாலும் எனது அறையில் என்னுடைய தோழி ராஜாத்திஅம்மாளும் நானும் ஒன்றாக இருப்போம். ஒரு பக்கம் படவாய்ப்புகள் வரத் தொடங்கியபோது, சொத்துக்களும் சேரத் தொடங்கின. சென்னையில் பெரிய பங்களா ஒன்று வாங்கினேன். என் அம்மாதான் என்னுடைய கால்ஷீட் முதல் வீட்டு நிர்வாகம் வரை பார்த்துக்கொண்டார். எங்கள் வீட்டில் அம்மாவுடன் பிறந்த அண்ணன், தம்பிகள், அக்காக்கள் என எல்லோர் குடும்பமும் ஒன்றாகவே வசித்தோம். ஒவ்வொரு வேளையும் கல்யாண வீடுபோல் 25 பேர் ஒன்றாக அமர்ந்து சாப்பிடுவோம். அப்போதே எங்கள் குடும்ப எண்ணிக்கையைப் பார்த்து மூன்று கார்கள் வாங்கினேன்.

என் ஒருவள் பெயரிலேயே சொத்துக்கள் வாங்கக் கூடாது என்பதற்காக, வீட்டிலிருந்த சொந்த பந்தங்கள் பெயரிலெல்லாம் நிறைய சொத்துக்கள் வாங்கிப் போட்டார் என் அம்மா. அம்மாவின் உடல்நிலை நன்றாக இருந்த வரை கலகலப்பாக இருந்த வீடு, அவர் படுத்த படுக்கையான பிறகு களையிழந்து போனது.

அம்மா இறந்தபிறகு, சொத்துக்களோடு சொந்தங்களும் மெல்ல விலகிக் கொண்டன. அம்மா இறந்த துக்கத்தில் படப்பிடிப்பிற்குச் செல்லாமல் இருந்ததால், பட வாய்ப்புகள் கைமாறிப் போனது. வாய்ப்புகளும் குறைந்து, வருமானமும் நின்று போன நிலையில், கணக்குப் பார்த்தபோதுதான், எல்லா சொத்துக்களும், சொந்தங்கள் பெயரில் இருந்தது தெரிய வந்தது. அவர்கள் பெயரில் எழுதி வைத்தது எவ்வளவு பெரிய தவறு என்று புரிந்துகொண்டேன். ஆதரவில்லாமல் இருந்ததால் யாரும் எனக்கு அவற்றைத் திருப்பித் தரவில்லை.

நடிகர் சங்கத்தில் அப்போது முறையிட்டேன். ஆனால் அதைப்பற்றி விசாரிப்பதற்கு அன்று அவர்களுக்கு நேரமில்லை. பல ஆண்டுகள் சங்கப் பொறுப்பிலிருந்த எனக்கே இந்த கதி! நான் நடிகர் சங்கத் தேர்தலில் போட்டியிட்டபோது, அப்போது ஹிந்தி டியூஷனுக்கு என்னுடன் வந்த வைஜெயந்தி மாலா எனக்காக பிரச்சாரம் செய்தார். அந்தத் தேர்தலில் நான் வெற்றி பெற்றேன். அப்போதெல்லாம் பல நடிகர், நடிகைகளுக்கு உதவ நான் கோரிக்கைகள் வைப்பேன். இன்று எனக்காக பரிந்து பேசத்தான் ஆள் இல்லை.

சிவகுமார் என்னுடைய நிலையைக் கேள்விப்பட்டு வீட்டிற்கே வந்து மருத்துவச் செலவிற்கும், சாப்பாட்டிற்கும் உதவினார். அது கொஞ்சகாலம் வரை எனக்கு உதவியாய் இருந்தது.

pg25c.jpg

எம்.ஜி.ஆர். என்னை அ.தி.மு.க.வில் உறுப்பினராக சேர்த்ததோடு தேர்தல் சமயங்களில் பிரச்சாரத்திற்கும் என்னைப் பயன்படுத்தினார். ஆனால் இப்போது அந்த உதவியும் எனக்குக் கிடைக்கவில்லை. இன்றைய முன்னணி நடிகைகள், ஊரையே கூட்டி, விருந்து வைத்து அவர்களை நம்முடனே வைத்துக் கொண்டால் என்ன நிலைமையாகும் என்பதை, என் வாழ்க்கையைப் பார்த்தாவது புரிந்து கொள்ளட்டும்’’ என்றார் கண்ணீர் மல்க.

அரிதாரம் பூசி அழகுராணிகளாய் பவனி வந்தவர்கள் இன்று ஒருவேளைச் சாப்பாட்டிற்கே அல்லலுறுவதைப் பார்க்கும்போது, ‘சினிமா உலகம் ஒரு கனவு உலகம்’ என்று சொல்லுவது சரியாகத்தான் இருக்கிறது.

http://www.kumudam.com/

  • கருத்துக்கள உறவுகள்

:lol: குமாரசாமியர் , நீங்கள் எங்களுக்கு கேந்தி வரப்பண்ணுகின்றீர்கள் . புஷ்பமாலாவின்ரை அன்று எடுத்த படத்தையும் வண்ணத்தில் போட்டால் குறைந்தா போய்விடுவீர்கள்.

இன்று எடுத்த படத்தை ஏன் போட்டு வயித்தெரிச்சலை கிளப்புகின்றீர்கள். கி..கி....கி....

ம்ம்..கு.சா தாத்தா ரொம்ப பீல் பண்ணுறியள் போல இருக்கு...(அந்த கால தாத்தாவின் கனவு கன்னியோ :o )..இல்ல கேட்டனான் பாருங்கோ...எப்படி இருந்தவா இப்படி ஆகிட்டா உது தான் லைவ் தாத்தா நீங்க ஒன்னுக்கும் யோசிக்காதையுங்கோ என்ன :lol: ..(எல்லாம் நல்லதா நடக்கும் பாருங்கோ :D )..

தாத்தா அப்பில இருக்கிறவன் டவுன் ஆகிறதும் டவுனில இருக்கிறவன் அப் ஆகிறதும் சகஜமப்பா வாழ்க்கையில பாருங்கோ.. :lol:

ம்ம்ம்..நாளைக்கு நம்ம பாவனா அக்காவிற்கு உது தான் கதியோ யாருக்கு தெரியும்..(நினைக்கவே கொடுமையா இருக்கு :lol: )..ம்ம் பிறகு அவா சாப்பிடாம இருக்கிறா என்று போட்டு நீங்களும் சாப்பிடாமல் இருக்காதையுங்கோ என்ன :wub: ..

ஜம்மு பேபி பஞ் -

"கண்ணா அது இருந்தா எல்லாம் பவளம் அது இல்லாட்டி எல்லாம் அவலம்" :wub:

அப்ப நான் வரட்டா!!

  • கருத்துக்கள உறவுகள்

ம்ம்..கு.சா தாத்தா ரொம்ப பீல் பண்ணுறியள் போல இருக்கு...(அந்த கால தாத்தாவின் கனவு கன்னியோ :o )..இல்ல கேட்டனான் பாருங்கோ...எப்படி இருந்தவா இப்படி ஆகிட்டா உது தான் லைவ் தாத்தா நீங்க ஒன்னுக்கும் யோசிக்காதையுங்கோ என்ன :lol: ..(எல்லாம் நல்லதா நடக்கும் பாருங்கோ :D )..

தாத்தா அப்பில இருக்கிறவன் டவுன் ஆகிறதும் டவுனில இருக்கிறவன் அப் ஆகிறதும் சகஜமப்பா வாழ்க்கையில பாருங்கோ.. :lol:

ம்ம்ம்..நாளைக்கு நம்ம பாவனா அக்காவிற்கு உது தான் கதியோ யாருக்கு தெரியும்..(நினைக்கவே கொடுமையா இருக்கு :lol: )..ம்ம் பிறகு அவா சாப்பிடாம இருக்கிறா என்று போட்டு நீங்களும் சாப்பிடாமல் இருக்காதையுங்கோ என்ன :wub: ..

ஜம்மு பேபி பஞ் -

"கண்ணா அது இருந்தா எல்லாம் பவளம் அது இல்லாட்டி எல்லாம் அவலம்" :wub:

அப்ப நான் வரட்டா!!

எங்கட பவனா அக்காவை யம்முபேபி இப்படி ஒரு நிலைமயில் ஒரு போதும் விடமாட்டுது என்ற நம்பிக்கை என்றுமே எமக்குள்ளது.

:lol: எனக்கும் தான்....
  • கருத்துக்கள உறவுகள்

நடிகைக்கு 25,000: ஜெ உதவி

சென்னை

முன்னாள் நடிகை அம்முகுட்டி புஷ்பமாலாவுக்கு, குடும்பநல நிதியுதவியாக அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதா ரூ.25 ஆயிரம் நிதியுதவி வழங்கியுள்ளார். இது தொடர்பாக அ.தி.மு.க. தலைமை கழகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:

அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதாவை அவரது இல்லத்தில், 26.3.2008 அன்று மாலை பல்வேறு திரைப்படங்களில் நடித்த திரைப்பட நடிகை அம்முகுட்டி புஷ்பமாலா நேரில் சந்தித்தார்.

நடிகை அம்முகுட்டி புஷ்பமாலா நிலைமையை அறிந்த ஜெயலலிதா, அம்முகுட்டி புஷ்பமாலாவுக்கு குடும்பநல நிதியுதவியாக ரூ.25 ஆயிரம் வழங்கி, அவரது குடும்பச் செலவுக்கு தொடர்ந்து மாதா மாதம் ரூ.5 ஆயிரம் வழங்கப்படும் என்றும் தெரிவித்தார்.

நிதியுதவியினைப் பெற்றுக்கொண்ட நடிகை அம்முகுட்டி புஷ்பமாலா, தனது நிலை அறிந்து உதவி புரிந்தமைக்காக தனது நெஞ்சார்ந்த நன்றியினை ஜெயலலிதாவுக்குத் தெரிவித்துக்கொண்டார்.

இவ்வாறு அ.தி.மு.க. தலைமை கழகம் தெரிவித்துள்ளது.

malaisudar.com

  • கருத்துக்கள உறவுகள்

என் ஒருவள் பெயரிலேயே சொத்துக்கள் வாங்கக் கூடாது என்பதற்காக, வீட்டிலிருந்த சொந்த பந்தங்கள் பெயரிலெல்லாம் நிறைய சொத்துக்கள் வாங்கிப் போட்டார் என் அம்மா.

சொத்து வரி கட்ட வேண்டி வரும் என்பதற்காக அரசை ஏமாற்றப் போய், கடைசியில் ஏமாற்றுப்பட்டு நிற்கின்றார். இப்படியான சொத்துவரி கட்டாயம் ஏமாற்றியவர்களால் தான் தமிழகப் பொருளாதாரம் தாழ்ந்த நிலையில் நிற்கின்றது.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நான் இந்த செய்தியை இணைத்ததிற்கான முக்கிய காரணம் தற்போது எம் புலம்பெயர் உறவுகளை மனதில் வைத்தேயாகும். :lol:

எங்கட பவனா அக்காவை யம்முபேபி இப்படி ஒரு நிலைமயில் ஒரு போதும் விடமாட்டுது என்ற நம்பிக்கை என்றுமே எமக்குள்ளது.

அட...அட ஜம்மு பேபி மேல என்ன நம்பிக்கை :) ..(பட் என்ன பிரச்சினை என்றா ஜம்மு பேபிக்கு பாவனாவை தெரியும் அவாவிற்கு என்ன தெரியாதே அது தான் மாட்டரே :lol: )..ம்ம் நான் கைவிடாம இருக்கிறது இருகட்டும் நேக்கு வாறவா நேக்கு காலால விடாமா இருந்தா எல்லாம் பேஷா நடக்கும் பாருங்கோ.. :lol:

அப்ப நான் வரட்டா!!

:D எனக்கும் தான்....

அட தம்பி...(அண்ணன் மேல தம்பிக்கு எம்முட்டு நம்பிக்கை :wub: )...முடியல என்னால... :(

அப்ப நான் வரட்டா!!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.