Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நேபாளி> விமர்சனம்>பரத்/மீரா ஜாஸ்மின்

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

Nepali_Review.jpg

அந்நிய(ன்) நாட்டு சரக்கு. ச்சும்மா காரம் தலைக்கேறுகிறது. நேர்க்கோட்டில் சொல்ல வேண்டிய கதையை 3 துண்டுகளாக வெட்டி முப்பரிமாணத்தில் சொல்லியிருக்கிறார் இயக்குனர். கரும்பை எத்தனை துண்டு வெட்டினால் என்ன? இனிப்பு இனிப்புதானே?

கூரியர் பையனின் கையில் கூரிய ஆயுதம்! வரிசையாக போட்டுத்தள்ளுகிறான். ஒன்றுக்கொன்று தொடர்பில்லாத நபர்கள். மண்டையை பிய்த்துக் கொள்கிற போலீஸ், கொலைகாரனை கடைசியில் சுற்றி வளைக்க, அதுவரை 3 கோணங்களில் சொல்லப்பட்டு வந்த கதை திரிவேணி சங்கமமாக ஒன்றிணைந்து, அசுபம்! இறந்து போகிற கொலைகாரனை மனைவியோடு சேர்த்து வைக்கிறது ஆவியுலக அற்புதம். அங்கேயும் வில்லன்கள் வந்தால் என்று கேள்வி கேட்பவர்களுக்கு... கதையின் இரண்டாம் பாகம் வரும். ஜாக்கிரதை!

நேபாளி தோற்றத்தில் பரத் செய்யும் கொலைகள் பயங்கரம். அந்த தோற்றத்தில் அவர் இழுத்து இழுத்து பேசி பதட்டமில்லாமல் கொலையை செய்துவிட்டு வெளியேறுகிற வரை, நமது நாடி நரம்புகளில் பிரபுதேவா ஆட்டம். தன்னை போலீஸ் வளைத்துவிட்டது என்பது தெரிந்த பிறகும் நெற்றிப்பொட்டில் ஒரு சொட்டு வேர்வை கூட இல்லாமல் நிதானமாக செயல்பட்டு போலீசை திருப்பி விடும் லாவகம், கைதட்டல்களுக்குரியது.

மற்றொருவர் அலங்காரி நல்லு£ரின் ஜல்லிக்கட்டு காளை. மீராஜாஸ்மினை வளைத்துப்போட்டு பெற்றோர் சம்மதம் இல்லாமல் திருமணமும் செய்து கொள்கிறார். தனி பங்களாவில் மினி ஷோவே காட்டுகிறார்கள் இருவரும். உள்ளுர் போலீஸ் அதிகாரிக்கு மீராஜாஸ்மின் மேல் ஆசைவர, அங்கே ஆரம்பிக்கிறது கதையின் நுழைவு வாயில்.

சிறைக்குள் கம்பி எண்ணும் இன்னொரு பரத் அப்பாவி. அடிக்கடி தற்கொலைக்கு முயற்சி செய்யும் அவரை பனிஷ்மென்ட் செல்லில் போடுகிறார்கள். வாழ்வு குறித்த பயத்தை ஏற்படுத்தும் எபிசோட் அது. அதுவும் தண்ணீரை பீய்ச்சி அடித்து அவரை இம்சிக்கும் காட்சிகள் குலைநடுங்க வைக்கிறது. யாரய்யா அந்த அப்பாவி நேபாளி? மைதா மாவு மாதிரியே இருக்கிறார். நையபுடைக்கப்பட்ட அடுத்த காட்சியிலேயே பியூட்டி பார்லருக்கு போய் வந்த மாதிரி நிற்கிறார். நல்லவேளையாக சீக்கிரம் செத்துப்போக வைக்கிறார்கள். இவர் சமுக சேவகர் என்று ஒரு காட்சியில் யாரோ டயலாக் விட்டதால் அவர் மேல் பரிதாபம் வருகிறது. இல்லையேல் மண்டை குடைச்சல்தான்.

வழக்கத்திற்கு மாறாக, ஹீரோவின் பழக்கத்திற்கு தோதாக நடித்திருக்கிறார் மீராஜாஸ்மின். பரத்தின் விரல்களை இஷ்டத்திற்கு அனுமதித்திருக்கிறார். ஏ.சி.யையும் மீறி வெப்பம் தலைக்கேறுகிறது மேற்படி காட்சிகளில்.

போலீஸ் அதிகாரி கௌதமாக நடித்திருக்கும் பிரேமிடம் உடுப்புக்கு ஏற்ற மிடுக்கு. கேரக்டர் ரோல்களில் ஒரு ரவுண்டு வரக்கூடிய வாய்ப்பிருக்கிறது. போலீஸ் உடுப்பை ஒளித்து வைத்தால் அது நிறைவேறலாம். இவருடன் போலீஸ் உடுப்பில் விறைப்பு காட்டும் லக்ஷணா, இடுப்பை காட்டாமல் இருந்ததே ஆச்சர்யம். அடிக்கடி ஜட்டியோடு நிற்கும் அந்த இன்ஸ்பெக்டர் ரொம்ம்ம்ப மோசம்.

இரண்டு கைதிகளை ஒரே செல்லில் போட்டு, அவர்கள் என்ன பேசுகிறார்கள் என்று போலீஸ் ஒட்டுக்கேட்க, அவர்களோ ஒருவர் முதுகில் மற்றவர் எழுதி பேசிக் கொள்கிற காட்சியில் இயக்குனர் வி.இசட்.துரை தெரிகிறார். மும்பையிலிருந்து வந்து பரத்தை சின்ன கமல் ஹாசனாகவும் மாற்றிக் காட்டிய மேக்கப்மேன் வித்யாதர்பட்டுக்கு ஒரு ஷொட்டு. பலே வாத்தியாரே...

மதியின் ஒளிப்பதிவில் இருட்டும் பகலும் இந்திரஜாலம் நடத்தியிருக்கிறது. ஸ்ரீகாந்த் தேவாவின் பாடல்களில் கனவிலே கனவிலே அற்புதம். பின்னணி இசை மிரட்டல்.

நேபாளிக்கு கத்திதான் ஆயுதம். 3 மணிநேர படத்தில் அவ்வப்போது அதையே நம் மீதும் பிரயோகிப்பதுதான் வேதனை.

-ஆர்.எஸ்.அந்தணன்

தமிழ்சினிமா.கொம்

  • கருத்துக்கள உறவுகள்

நேபாளி

ஒரே விளக்கில் எரியும் மூன்று திரிபோல ஒரே கதையை மூன்றாக பிரித்து தந்திருக்கும் '12 -B' ஸ்டைலிலான திரைக்கதை.

பொதுவாக இம்மாதிரியான முயற்சியை கையிலெடுப்பது என்பது காட்டாற்று வெள்ளத்தில் எதிர் நீச்சல் போடுவது மாதிரிதான். இயக்குனர் துரையும் இதில் எதிர் நீச்சல் போட்டிருக்கிறார். ஆனால் அவர் கரை சேருவது ரசிகர்களின் கையில்தான் உள்ளது.

சென்னையில் நிகழும் மர்மக்கொலைகள் காவல் துறையின் கண்களில் விரல்விட்டு ஆட்டுகிறது. கொலையாளிக்கு வலைவீச நினைக்கும் போலீஸூக்கு எந்த துப்பும் கிடைக்காததால் காக்கிசட்டையெல்லாம் வியர்வையில் நனைந்து கறுப்புச்சட்டையாகிறது.

இன்னொரு ட்ராக்கில் சாப்ட்வேர் இன்ஜினியரான பரத் - மீரா ஜாஸ்மினை லவ்வி கல்யாணம் செய்துகொள்கிறார். பரத் வேலைக்குப் போனபிறகு தனியாக இருக்கும் மீராஜாஸ்மினுக்கு தூண்டில் போடுகிறார் லோக்கல் இன்ஸ்பெக்டர். ஒரு கட்டத்தில் நிலைமை விபரீதமாகிறது. பரத்தை கடத்தி வைக்கும் இன்ஸ்பெக்டர் 'கணவனை உயிரோடு பார்க்க வேண்டுமென்றால் என் ஆசைக்கு இசைந்து கொடு' என மிரட்ட, பரத் - மீராஜாஸ்மின் நிலை....

MeeraJasmine2.jpg

மூன்றாம் கிளையாக சிறைக்கைதியான பரத் தற்கொலைக்கு முயல்வதும், அதற்கு ஜெயிலில் தரும் கொடுந்தண்டனைகளுமாக போகிறது இன்னொரு ட்ராக்.

இப்படி திடுக் திடுக், படக் படக், தடக் தடக்காக போகும் மூன்று கதைகளின் முடிச்சுகளை கிளைமாக்ஸில் அவிழப்பதற்குள் கட்டுண்ட உணர்வு நமக்கு.

பரத்திற்கு எத்தனை வேடம் என்ற ஒரு சஸ்பென்ஸை வைத்துக்கொண்டு கதையில் கண்கட்டி வித்தைக் காட்டியிருக்கிறார் இயக்குனர்.

நேபாளி, ரொமான்ஸ் மன்னன், சிறைக்கைதி என தீபாவளி டிரிபிள் ஷாட்டாக பிண்ணியிருக்கிறார் பரத். ஒவ்வொரு கேரக்டருக்குமான பாடிலாங்வேஜில் காட்டியிருக்கும் வித்தியாசத்திற்கு தாராளமாக தட்டலாம் கைகளை.

விருந்துக்கு வந்த மருமகனை வெறும் வயிற்றுடன் திருப்பி வைத்த கதைதான் மீராஜாஸ்மினுக்கும். இன்ஸ்பெக்டரின் பாலியல் தொந்தரவுக்கு ஆளாகும் சூழ்நிலையில் மட்டும் லைட் தீனி கிடைத்திருக்கிறது நடிப்பிற்கு. மற்றபடி பச்.

இந்த இடத்தில் இத்தனை மணிக்கு இவரை கொலை செய்யப்போகிறேன் என சொல்லிவிட்டு கொலை செய்யும் 'கைதியின் டைரி' காலத்து யோசனைக்கான அவசியம் ஏனென்று தெரியவில்லை.

நேபாளி பாத்திரத்தில் வாதம் வந்தவர்போல பேசுவது எதற்காக? கொலை செய்யும் முறைகளை ஆய்வு ரீதியாக விளக்கும் அத்தியாவசியம் ஏன்? தனிமை சிறையில் கடும் பாதுகாப்பிலிருந்த பரத் ஜெயிலரை மிக எளிதாக கொல்வது எப்படி? என அடுத்தடுத்து எழும் கேள்விகளுக்கு பதில் தெரிவதற்கு முன்பே படம் முடிந்துவிடுகிறது.

barath.jpg

தன்னை அடையாளம் கண்டுபிடிக்க வரும் போலீஸை பரத் ஒரே போனில் திசை திருப்புவது போன்ற ஐடியாக்கள் படத்தின் விறுவிறுப்புக்கு கைக்கொடுக்கிறது. மீராஜாஸ்மின் - பரத் சம்மந்தப்பட்ட காதல் காட்சிகளிளெல்லாம் நமத்துப்போன சிந்தனைகள்.

கேரக்டர்களுக்கு ஏற்றவாறு வெவ்வேறு வகையான பின்னணி இசையைக்கொடுத்து தன்னை நிருபித்திருக்கும் ஸ்ரீகாந்த் தேவாவுக்கு பாராட்டுக்கள். ஒளிப்பதிவில் நேர்த்தியை காட்டியிருக்கும் மதி, நேபாளியின் உழைப்பாளிகளில் முக்கியமானவர்.

தேவையற்ற இழுவைகள் படத்தில் பல இடங்களில் இருக்கிறது. இவற்றையெல்லாம் தவிர்ததிருந்தால் திடமானவனாக இருந்திருப்பான் இந்த 'நேபாளி'

http://tamil.cinesouth.com/scopes/reviews/new/nepali.shtml

  • 1 month later...
  • கருத்துக்கள உறவுகள்

தமிழ்ப் படங்களுக்கு தமிழ்ப் பெயர் சூட்டினால் வரிவிலக்கு என்று கலைஞர் அரசு அறிவித்ததினால் எல்லாப் படங்களும் தமிழ்ப் பெயரைச் சூட்டினார்கள். இப்படத்தில் பெரும்பாலன எழுத்துக்கட்டங்கள் ஆங்கிலத்திலே வருகிறது. தமிழில் எழுதப்படவில்லை.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.