Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பாக்.,சீனாவிடமிருந்து ஆயுதங்களை இலங்கை கொள்வனவு செய்வதை நாம் அறிவோம். மன்மோகன் சிங்

Featured Replies

பாக்.மற்றும் சீனாவிடமிருந்து ஆயுதங்களை இலங்கை கொள்வனவு செய்து வருகின்றது. இதனை நாம் அறிவோம். தமிழக மீனவர் மீதான தாக்குதலை நிறுத்த வேண்டும் என்று இலங்கை அரசை கேட்டுக் கொண்டுள்ளோம் என்று பாரதப் பிரதமர் தெரிவித்துள்ளார். ம.தி.மு.கழகத்தின் செயலாளர் வைகோ நேற்று முன்தினம் மன்மோகன் சிங்கை சந்தித்து பேச்சு வார்த்தை நடத்தினார். இந்தச் சந்திப்பின் போதே பிரதமர் மன்மோகன் சிங்க தெரிவித்துள்ளார்.

இலங்கைக்கு ஆயுத உதவி செய்வதை நிறுத்த வேண்டும் என்று வைகோ எழுதிய கடிதத்தினை நினைவு கூர்ந்த பிரதமர், இலங்கைக்கு இந்தியா ஆயுதங்களை வழங்கவில்லை என்று தெரிவித்தார்.

இலங்கை இராணுவத் தளபதிகளும் அமைச்சர்களும் இந்தியா ஆயுதங்களை வழங்குவதாக கூறியுள்ளானரே என வைகோ கேட்ட போது அது தவறான தகவல், அதில் உண்மையில்லை என்று பதிலளித்தார்.

அப்படியானால் அங்குள்ள மக்களை ஏமாற்றுவதற்காகவா இலங்கை அதிகாரிகள் அவ்வாறு கூறுகின்றனர்? வைகோ கேள்வி எழுப்பினார்.

பாக். மற்றும சீனாவிடமிருந்து இலங்கை ஆயுதங்களை கொள்வனவு செய்து வருகின்றது. அதனை நாம் அறிவோம். தமிழக மீனவர்கள் மீதான தாக்குதலை நிறுத்த வேண்டும் என்று இலங்கை அரசிடம் கேட்டுள்ளோம். 'வடக்கு கிழக்கு மாகாணங்கள் தமிழர்களின் பூர்வீக தாயகம். அது ஒரே பகுதியாக இணைக்கபட வேண்டும் என்ற இந்திய-இலங்கை ஒப்பந்தத்தில் உள்ள விதிகளுக்கு மாறாக கிழக்குமாகாணத்தில் தனியாகத் தேர்தல் நடத்துவது அனைத்துலக சமூகத்தை ஏமாற்றுவதற்கான வடக்கு மாகாணத்தோடு நாங்கள் சேர்ந்து இருக்க விருப்பமில்லை என்று கிழக்கில் உள்ளவர்கள் கருதுவதாக ஒரு பொய்ப் பிரசாரத்தை மேற்கொள்வதற்காக இராணுவத்தைக் கொண்டு ஒரு மோசடித் தேர்தலை நடத்தி உலகத்தை ஏமாற்ற சிங்கள அரசு முயற்சிக்கிறது'. என்று இச்சந்திப்பில் வைகோ சுட்டிக் காடடியுள்ளார். அப்போது 13 வது சட்டத்திருத்தத்தைப் பற்றிச் சொல்கிறார்களே? என மன்மோகன் சிங் வினவ

அதைத் தமிழர்கள் எப்போதோ நிராகரித்து விட்டார்கள். அந்த 13 வது திருத்தம் தமிழர்களுக்கு நீதி வழங்காது' என்று வைகோ தெரிவிதுள்ளார். மேலும் 'இப்போது உள்ள சூழ்நிலையில், இலங்கை அரசுதான் தாக்குதல் நடத்தி வருகிறது. அவர்கள்தான் போர் நிறுத்தம் செய்ய வேண்டும். அவ்வாறு போர் நிறுத்தத்தை அறிவிக்கச் சொல்லி இந்தியா வற்புறுத்த வேண்டும்'. என்று வைகோ கோரிய போது 'வெளிவிவகார அமைச்சருடன் இது குறித்து விவாதிக்கிறேன்' எனபதிலிறுத்துள்ளார்.

நன்றி வீரகேசரி

வழமையாக ஈழத்து பிரச்சினை பற்றி பேசுவதானால் சந்திப்பை ஏற்படுத்தாமல் வந்த மன்மோகன் அவர்கள்... வைகோவை ஈழத்தமிழர் சம்பந்தமாக பேச சம்மதித்தது எண்டது இந்திய கொள்கை மாற்றமாக கொள்ள முடியாது..... ஆனால் தமிழக தமிழர்களின் ஈழத்தமிழர் பால் ஏற்பட்ட பரிதாபமும் அவர்கள் மீது அதிகரித்து வரும் அன்பெழிச்சியும் அதிகரித்து விட்டது என்பதை இந்திய தலைமை அரசு தெரிந்து குடைச்சலுக்குள்ளாகி இருக்கிறது என்பது புரிகிறது....!

இதன் பெருமை தமிழகத்து தமிழரையே சாரும்...

தயாவினது கருத்து சரியானெதென்பதே எனது கருத்து.

தமிழக மக்கள் ஈழமக்கள் மீது கொண்டிருக்கும் ஆதரவையும் உணர்வையும் இனியும் அடக்க முடியாது என்பதனை அறிந்த பின்னரே இப்படி சாலக்கண்ணீர்....

  • கருத்துக்கள உறவுகள்

அறிந்து என்ன செய்யப் போகிறீர்கள் ? நீங்களும் அவங்களிட்ட ஆயுதம் வாங்கப் போறீங்களா ?

சிறிலங்காவை தன்னால் எதுவுமே செய்ய முடியவில்லை என்ற அங்கலாய்ப்புத்தான். ஆனாலும் ஒரு பொம்புளப் புள்ளய துணிஞ்சு ஜெயிலுக்கு அனுப்பி நளினிய சந்திக்க வைச்சு பெரிய சாதன புரிஞசிட்டாங்கப்பா.

இறைவன்!

அந்த பொம்மணாட்டியை அனுப்பினதில இருந்த விசயத்தை விட காட்டின பிலிம்தான் பெருசா கிடக்கு.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.