Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சத்தியராஜ்யை எதிர்ப்பவன் தமிழனே அல்ல (குமுதம்)

Featured Replies

ஒகேனக்கல் பிரச்னையின் போது சத்யராஜ் பேசிய பேச்சுக்கள் சர்ச்சையைக் கிளப்பி யிருக்கின்றன. திரையுலகத்தினரின் உண்ணாவிரதம் குறித்தும் சத்யராஜ், ரஜினி பற்றியும் இயக்குநர் சீமானிடம் பேசினோம்.

உண்ணாவிரத மேடையில் சத்யராஜ் மிகவும் ஆவேசமாகப் பேசியதற்கு கண்டனங்கள் எழுந்திருக்கிறதே அவர் பேசியது சரியா?

‘‘சத்யராஜ் வீரத்தமிழன். தன்னுடைய இனம் வஞ்சிக்கப்படுகிறது, உரிமை மறுக்கப்படுகிறது என்ற ஆதங்கத்தைச் சொன்னார். அவருடைய உருவ பொம்மையை எரிப்பவர்கள் தமிழனாகவே இருக்கமுடியாது.’’

‘‘ஒட்டுமொத்த தமிழ்த் திரையுலகமும் போராடியபோதும், ரஜினியை முன்னிறுத்தியே இப்போராட்டம் நடந்து முடிந்தது போலத் தெரிகிறதே. ஏன் ஒருவருக்கு மட்டும் இந்த முன்னிலை, முக்கியத்துவம். மற்றவர்களும்தானே போராடினார்கள்?’’‘‘

அப்படியரு சூழ்நிலை உருவாகவே இல்லை. ஆயிரம் பேர் இருந்தாலும் ஊடகங்கள் ரஜினி முகத்தை மட்டும் காட்டின. அவர் அசைவுகளைக் காட்டுகிறது. பத்திரிகைகளிலும்கூட அடுக்கடுக்காக அவருடைய படங்கள்தாம்.

அது திரைப்பட விழா அல்ல. ஒரு உணர்வுப்பூர்வமான போராட்டம். உரிமைப்பிரச்னை. ஒரு அறப்போரில் ஒருவரை மட்டுமே முன்னிலைப்படுத்துவதை யாருமே விரும்பமாட்டார்கள்.’’

இம்முறை தமிழ் உணர்வு அதிகமுள்ளவர்களைவிட மற்றவர்களுக்கே முக்கியத்துவம் தரப்பட்டதன் பின்னணி என்ன?

‘‘வேற்று மொழியைச் சார்ந்த, உணர்வால் தமிழர்களானவர்கள் தமிழருக்காக குரல் கொடுக்கும்போது தான் இன்னும் அதிகம் கூர்ந்து கவனிக்கப்படுகிறது. இது பாராட்டுக் குரியது தானே. ரஜினி பேசுகிறார் என்பது தானே சிறப்பு. கர்நாடக மண்ணில் பிறந்து, தமிழ்நாட்டுக்காக பெரியார் போராடவில்லையா? அதுபோலதான் இதுவும்.’’

தமிழ் மக்களுக்கு ஆதரவாக குரல் கொடுத்ததன் மூலம் ரஜினி தற்போது தனித்துவிடப்பட்ட மனிதராக மாறிவிட்டது போல தெரிகிறதே. ‘கர்நாடகம் சென்றால் என்னை தமிழன் என்கிறார்கள். இங்கே கர்நாடக ஆள் என்கிறார்கள். நான் எங்குதான் செல்வது?’ என்று ரஜினி முன்பு கூறியது போலவே மீண்டும் ரஜினிக்கு நடந்திருக்கிறதா?

‘‘ரஜினிகாந்தை தனிமனிதர் என்று நீங்கள்தான் சொல்கிறீர்கள். அவருக்குப் பின்னால்தான் கோடான கோடி ரசிகர்கள் இருக்கிறார்கள். அவருக்கு மூன்று மாநிலங்கள் இருக்கிறதே. ஒகேனக்கல் வேண்டுமா?, ரஜினிகாந்த் வேண்டுமா? என்று கேட்டால், ரஜினிதான் வேண்டும் என்பார்கள் தமிழ்நாட்டு மக்கள். அவர்மீது அவ்வளவு அன்பாகவும், பைத்தியமாகவும், வெறியாகவும்தான் இருக்கிறார்கள். எனக்குத் தெரிந்து அவர் தனித்து இல்லை.’’

தமிழனின் உணர்வை சத்யராஜ் தனது பேச்சில் பிரதிபலித்தாலும், மிகவும் ஆபாசமாகப் பேசினார் என்ற தார்மீக குற்றச்சாட்டை ஏற்றுக்கொள்கிறீர்களா?

‘‘அவர் என்ன ஆபாச வார்த்தைகள் பேசினார். நீங்களே சொல்லுங்கள். ‘போடாங்கோ’ என்று பாடல் வந்ததே. ‘போடாங்கோ’ விற்கு என்ன அர்த்தம். அதை ஏன் நீங்கள் அனுமதித்தீர்கள்? ‘போடாங்கொய்யால’ என பாடல் வருகிறது. இது என்ன? அடுத்ததாக ‘டுபுக்கு’ என்ற வார்த்தை அதிகம் வருகிறது. இதற்கு என்ன அர்த்தம்? அதைச் சொல்லுங்கள். இதையெல்லாம் காது குளிர கேட்டு ரசித்துவிட்டு, சத்யராஜ் ஆபாசமாய் பேசுகிறார் என்பது அபத்தம். அது ஒரு தமிழனின் உணர்ச்சி வேகம்.’’.

_ இரா.ரவிஷங்கர்_

நல்ல பதில்

சிலர் பாராளுமன்றங்களிலேயே..கன்னாபி

ன்னா என்று பேசுகிறார்கள்.. ஒரு உணர்வெழுச்சிப் போராட்டத்தில் சத்யராஜ் தனது ஆதங்கத்தை.. கோபத்தை வெளிப்படுத்தியது என்ன தவறு...அவரென்ன கதிரையை தூக்கி யாரையாவுத அடித்தாரா என்ன?

  • கருத்துக்கள உறவுகள்

மேற்குலகில் குறிப்பாக சினிமாவிலும் ரிவி நிகழ்ச்சிகளிலும் இத்தகைய வார்த்தைகள் சாதாரணமாகப் பேசப்படுகின்றன. அவற்றைப் பற்றியெல்லாம் இங்கு சர்ச்சை செய்வதேயில்லை. நாம்தான் இவைபற்றிப் பெரிதாக அலட்டிக் கொள்கிறோம். எல்லோருக்கும் மிக நாகரீகமான தமிழில் தமது உணர்வுகளை வெளிப்படுத்த முடியாது. அதற்காக அவர்கள் வாய்மூடி மௌனிகளாக இருக்கவேண்டுமென்பதில்லை. யாரையும் தனிப்பட வைது தாக்காமல் பொதுவான விடயங்களில் கொஞ்சம் வெளிப்படையாகப் பேசுவதால் தவறொன்றுமில்லை. பாமரத் தமிழிலும் அழகு இருக்கிறது.

  • கருத்துக்கள உறவுகள்

பாமரத்தமிழில் ஒரு விடயத்தை கூறும் போது அந்த விடயம் பலருக்கு சென்றடையும் என்பது உண்மை.சத்தியராஜ் சரியாகவே பேசியுள்ளார்.

அண்றைய சத்தியராஜ் அவர்களின் பேச்சுக்கு பிறகு நான் அவரின் ரசிகன்...!

Edited by தயா

சத்தியராஜ் பேச்சு பலருக்கு சவுக்கடி!

அவர் பேச வேண்டிய இடத்தில் பேசியிருக்கிறார்.

அனைவரையும் பக்கத்தில் வைத்துக் கொண்டு பேசியது

பலரது முகங்களை கறுக்க வைத்தது என்னவோ உண்மைதான்.

ஒக்கனேகல் பிரச்சனையில்

ஈழத் தமிழர் சார்பில் குரல் கொடுக்கச் சொன்ன விதம்!

அவருக்கிருந்த தில் !!

யாருக்குமில்லேப்பா?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.