Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

புலிகளுடனான யுத்ததில் கொல்லப்பட்ட 1500 இந்திய சிப்பாய்களுக்கு நினைவுத் தூபி

Featured Replies

இலங்கையில் விடுதலைப் புலிகளுடனான மோதலில் கொல்லப்பட்ட 1500 இந்திய அமைதிப் படையினரின் நினைவாக நாடாளுமன்ற வளவில் அமைக்கப்பட்டு வரும் நினைவுத் தூபியை வெகு விரைவில் திறந்து வைக்கப்படவுள்ளது.

மே மாதம் 22ம் திகதி அல்லது சார்க் உச்சிமாநாட்டுக்காக இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் இலங்கைக்கான விஜயம் மேற்கொள்ளும் போது இது திறந்து வைக்கப்படலாம் எனத் தெரிவிக்கப்படுகின்றது.

மிகச் சிறந்த முறையில் நிர்மாணக்ககப்பட்டு வரும் இந்த நினைவுத் தூபியில் இந்திய அமைதிப் படையைச் சேர்ந்த 1,500 பேரின் பெயர்கள் பொறிக்கப்பட்டுள்ளன.

இலங்கைக் கடற்படையே இதனை அமைக்கும் பொறுப்பை முன்னெடுக்கின்றது.

விடுதலைப் புலிகளுடனான மோதல்கலில் கொல்லப்பட்ட இந்திய அமைதிப் படைக்கு இலங்கை உரிய மரியாதை அளிக்க வில்லையென இந்திய இராணுவ வட்டாரங்கள் பல வருடங்களாக அதிருப்தி வெளியிட்டு வந்தமை குறிப்பிடத்தக்கது.

இலங்கையின் ஐக்கியத்தைக் காப்பாற்றுவதற்கு உதவிய இந்தியப் பாதுகாப்புப் படையினருக்கான நினைவுச் சின்னம் இதுவென இலங்கை இராணுவ அதிகாரியொருவர் குறிப்பட்டுள்ளார்.

மஹிந்த இந்த நினைவுச் சின்னம் உருவாக்கப்பட வேண்டுமமென்பது குறித்த மிகவும் உறுதியாகக் காணப்பட்டார். 20 வருடங்கள் கடந்து விட்டன. நாங்கள் நினைவுச் சின்னம் உருவாக்குவது குறித்த உறுதிமொழியை இன்னமும் நிறைவேற்றவில்லை. அது நீண்டு கொண்டே செல்கின்றது. இந்தியப் படையினர் எமக்காக உயிர்த் தியாகத்தைப் புரிந்தவர்கள் என அவர் நினைவுபடுத்தி வந்தார். என்றும் அந்த அதிகாரி தெரிவித்துள்ளார்.

இந்திய படையினருக்கு நினைவுத் தூபியை ஏற்படுத்தும் பணிகள் ஆறு மாதத்திற்கு முன்னர் ஆரம்பமாகின. இன்னும் இரண்டு வாரங்களில் அது முடிவடைந்து விடுமெனவும் அவர் குறிப்பிட்டார்.

இலங்கையர்கள் தற்போது இந்திய அமைதிப்படையின் நடவடிக்கைகளைப் பாரட்டுகின்றனர் எனவும் அவர் தெரிவிதுள்ளர்ர்.

எனினும், அவர்கள் யுத்தத்தில் ஈடுபட்டு மடிந்து கொண்டிருந்த வேளை சிங்கள,பௌத்த தேசியவாதிகள் அவர்களைக் கடுமையாக விமர்சித்து வந்தனர். இந்திய அமைதிப்படையின் பிரசன்னம் இலங்கையின் இறைமைக்குக் குந்தகம் ஏற்படுத்துகின்றனது என அவர்கள் குறிப்பட்டனர்.

எமது மக்கள் இந்தியப் படையினரின் பணிளை தற்போது உணர்ந்துள்ளனர். இலங்கையைப் பிளவுபடாமல் வைத்திருக்கவே அவர்கள் மரணித்தனர். இந்தத் தியாத்தை நாம் மறக்க முடியாது. இன்று இதற்காககப் பலர் பாராட்டுகின்றனர் என்றும் அதிகாரி தெரிவித்துள்ளார்.

இலங்கையில் பணியாற்றிய இந்திய இராணுவ அதிகாரி லெப்.ஜெனரல் அசோக் மேத்தா பல வருடங்கள் கழிந்த பின்னர் இப்பணி நடைபெறுகிறது எனவும் இது வரவேற்கத்தக்க ஒன்றேன்றும் குறிப்பிட்டுள்ளார்.

நன்றி சுடர் ஒளி

அண்மையில் பத்திரிகையாளர் சந்திப்பொன்றில் கருத்து வழங்கிய படையினரின் சட்டத்தரணிகள், இந்திய இராணுத்தினரின் படுகொலைகளுடன் ஒப்பிடும்போது மூதூர் மற்றும் திருக்கோணமலை படுகொலைகள் சிறியவை எனத் தெரிவித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்திய ராணுவத்தால் கொல்லப்பட்ட எழாயிரத்துக்கும் மேற்பட்ட தமிழ்மக்களையும் போராளிகளையும் நினைவு கூர்ந்து நினைவுத் தூபிகள் ஈழத்திலும் ஈழத்தமிழன் புலம் பெயர்ந்து வாழும் நாடுகளிலும் கட்டியிருக்க வேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

Posted on : Tue Apr 29 9:05:00 2008

நாடாளுமன்ற வளாகத்தினுள் இந்தியச் சிப்பாய்களுக்குக் கட்டப்படும் நினைவுத்தூபி விரைவில் திறக்கப்படும்

இலங்கையில் விடுதலைப் புலிகளுடன் மோதலில் ஈடுபட்ட வேளை கொல்லப்பட்ட இந்திய அமைதிப் படையினரின் நினைவாக நாடாளுமன்ற வளவில் அமைக்கப்பட்டுவரும் நினைவுத்தூபி வெகு விரைவில் திறந்துவைக்கப்படவுள்ளது.

மே மாதம் 22 ஆம் திகதி அல்லது சார்க் உச்சி மாநாட்டுக்காக இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளும்போது இது திறந்துவைக்கப்படலாம் எனத் தெரிவிக்கப்படுகின்றது.

மிகுந்த நுட்பங்களுடன் நிர்மாணிக்கப்பட்டுவரும் இந்த நினைவுத்தூபியில் இந்திய அமைதிப் படையைச் சேர்ந்த 1,500 பேரின் பெயர்கள் பொறிக்கப்பட்டுள்ளன.

இலங்கைக் கடற்படையே இதனை அமைக்கும் பொறுப்பை முன்னெடுக்கின்றது.

விடுதலைப் புலிகளுடனான மோதல்களில் கொல்லப்பட்ட இந்திய அமைதிப்படைக்கு இலங்கை உரிய மரியாதை அளிக்கவில்லையென இந்திய இராணுவ வட்டாரங்கள் பல வருடங்களாக அதிருப்தி வெளியிட்டு வந்தமை குறிப்பிடத்தக்கது.

இலங்கையின் ஐக்கியத்தைக் காப்பாற்றுவதற்கு உதவிய இந்தியப் பாதுகாப்புப் படையினருக்கான நினைவுச் சின்னம் இதுவென இலங்கை இராணுவ அதிகாரியொருவர் குறிப்பிட்டுள்ளார்.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இந்த நினைவுச்சின்னம் உருவாக்கப்படவேண்டுமென்பது குறித்து மிகவும் உறுதியாகக் காணப்பட்டார். 20 வருடங்கள் கடந்துவிட்டன. நாங்கள் நினைவுச்சின்னம் உருவாக்குவது குறித்த உறுதிமொழியை இன்னமும் நிறைவேற்றவில்லை. அது நீண்டுகொண்டே செல்கின்றது. இந்தியப் படையினர் எமக்காக உயர்ந்த தியாகத்தைப் புரிந்தவர்கள் என அவர் நினைவுபடுத்தி வந்தார் என்றும் அந்த அதிகாரி தெரிவித்துள்ளார்.

இந்திய அமைதிப்படையினருக்கு நினைவுத் தூபியை ஏற்படுத்தும் பணிகள் ஆறு மாதத்திற்கு முன்னர் ஆரம்பமாகின. இன்னும் இரண்டுவாரங்களில் அது முடிவடைந்து விடுமெனவும் அவர் குறிப்பிட்டார்.

இலங்கையில் பணியாற்றிய இந்திய இராணுவ அதிகாரி லெப்.ஜெனரல் அசோக்மேத்தா பல வருடங்கள் கழிந்த பின்னர் இப்பணி நடைபெறுகிறது எனவும் இது வரவேற்கத்தக்க ஒன்றென்றும் குறிப்பிட்டுள்ளார்.

http://www.uthayan.com/

  • கருத்துக்கள உறவுகள்

இதுகளோட இலங்கைக் கடற்படையால கொல்லப்படுற தமிழக மீனவர்களுக்கும் ஒரு தூபியைக் கச்சதீவில கட்டி அதுக்கு மேல ஒண்டொண்டாக் கல்லடுக்கிறதுக்கு இடமும் வச்சால் நல்லது.

மகிழ்ச்சி..

கட்டுற தூபியை யாழ்ப்பாணத்திலையும் கட்டுங்கோ....! புலிகளின்( தமிழரின் ஒருமித்த பலத்தின்) வெற்றியின் அடையாளமாக இருக்கட்டும்...!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.