Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

துவிச்சக்கர வண்டியில் வந்த புலிகள் இன்று விமானத்தில் வருகின்றார்கள்.

Featured Replies

விடுதலைப் புலிகள் அமைப்பு உருவாக்கப்பட்டு சுமார் 30 வருடங்கள் கடந்து விட்டன. இந்நிலையில் அந்த இயக்கம் அதன் பல்வேறு பயங்கரவாத தாக்குதல் நடவடிக்கைகளை தரை மூலமும் கடல்மார்க்கங்களின் மேற்கொண்டு விட்ட நிலையில் கடந்த காலங்களில் அதன் தாக்குதல்களை வான் பரப்பிலும் மேற்கொள்ள ஆரம்பித்தது. இதற்காக வான்புலிகள் எனப்படும் விமானப் படையணியையும் புலிகள் இயக்கம் உருவாக்கியது. இதைத் தொடாந்து சிறியரக விமானிகள் மூலம் கட்டுநாயக்கா விமான நிலையம் சார்ந்த விமானப்படைமுகாம், யாழப்பாணம், மயிலிட்டி கடற்படை முகாம், கொலன்னாவ பெற்றறோலிய களஞ்சிய நிலையம், முத்துராஜவெல எரிவாயு களஞசியம், அனுராதபுரம் விமானப்படை முகாம், மணலாறு இராணுவ பாதுகாப்பு நிலைகள் ஆகிய படையினர் தரப்பு முகாம்கள் மற்றும் பொருளாதரா மத்திய நிலையங்கள் மீது தாக்குதல்களை புலிகள் இயக்கத்தின் வான் புலிகள் அணியினர் நடத்தியுள்ளனர்.

இவ்வாறு புலிகள் இயக்கம் தோன்றிய சுமார் 30 ஆண்டு காலப்பகுதியில் ஆகாயம் மூலம் பயங்கரவாதத் தாக்குதல்களை நடத்தக்கூடிய அதிபயங்கரவாத இயக்கமாக உருவெடுத்துள்ளது.

புலிகள் இயக்கத் தலைவர் இயக்கத்தின் ஆரம்ப காலகட்டங்களில் துவிச்சக்கர வண்டியில் சென்று பயங்கரவாத் தாக்குதல்களை நடத்துவிக்க ஆரம்பித்து இன்று விமானங்கள் மூலம் இயக்கத்;தின் பயங்கரவாதத்தை வளர்த்துவிட்டார். இன்று அவருடைய வான்:புலிகள் எனப்படும் ஆகாய மூலப்பயங்கரவாதிகள் விமானத்தாக்குதல்களை நடத்தும் அளவுக்கு பிரபாகரன் தனது இயக்கத்தின் பயங்கரவாதத் தாக்குதல் முறைகளை மாற்றிவிட்டார்.

இன்று உலகம் முழுவதும் பலவேறு பயங்கரவாத அமைப்புகளும் விடுதலை அமைப்புகளும் இயங்கி வருகின்றன. ஆனால், பயங்கரவாதத் தாக்குதல்களுக்காக தனியான விமானப் படையணி அணியை உருவாக்கி இவ்வாறு விமானத் தாக்குதல்கைளை நடத்திவரும் ஒரே ஒரு சர்வதேச பயங்கரவாத அமைப்பு புலிகள் இயக்கம் ஒன்றேயாகும்.

உலகில் இயங்கும் பயங்கரவாத அமைப்புகளில் முன்னணியில் உள்ளதும் முதற் தரமானதுமாகக் கருதப்படும் தலிபான் அமைப்பின் தலைவர் ஒசாமா பின்லேடனிடம் கூட தாக்குல் விமானமோ அல்லது விமானப்டையணியோ கிடையாது. பாதுகாப்புப் புலனாய்வுப் பிரிவின் அறிக்கைகளுக்கேற்ப புலிகள் அமைப்பு தற்போது சுமார் பத்து வருடங்களுக்கு முன்னரே இவாவாறு விமானப்படையணியை உருவாக்கி விமானப்படைப்பலத்தைப் பெற்றுள்ளதாக தெரியவந்துள்ளது.

இந்த வகையில் புலிகள் இயக்கம் விமானப்படையணியை உருவாக்கியுள்ளதை நிரூபிக்கும் முதல் நிகழ்வு 1998 இல் நிகழ்ந்தது. 1998 நவம்பர் 27 ம் திகதி புலிகள் இயக்கம் அதன் மாவீரர்க்ள தினத்தைக் கொண்டாடிய பொழுதே முதன் முதலாக புலிகளின் விமானம் பகிரங்கமாக வானில் பறக்கவிடப்பட்டது.

முல்லைத்தீவு முள்ளியவளையில் நிகழ்ந்த மாவீரர் நினைவு தின நிகழ்வின்போது இயக்கத் தலைவர் பிரபாகரன் அதில் கலந்து கொண்டு சுடரேற்றிய வேளையில் புலிகள் இயக்கத்தின் விமானம் முதன் முதலாக வானில் பறந்து மலர்களைத் தூவியது. இதைத் தொடர்ந்து புலிகள் இயக்கத்தின் வானோலியாகிய புலிகளின்; குரல் வானோலியும் தமிழ் நெற் இணையதளமும் முதன் முதலாக புலிகளி;டம் உள்ள விமானம் பற்றியும் விமானப்படை பற்றயும் வெளி உலகத்துக்கு அறிவித்துப் பிரசாரம் செய்தன. தொடர்ந்து சுமார் 9 வருடங்களின் பின்னர் புலிகள் இயக்கத்தின் வான் புலிகள் படையணியினா அதன் முதலாவது விமானத்தாக்குதலை 2007 மார்ச் 26ம் திகதி கட்டுநாயக்கா விமானநிலைய விமானப்டை முகாம் மீது மேற்கொண்டது.

உலகில் பயங்கரவாத அமைப்பு ஒன்றால் மேற்கொள்ளபட்ட முதலாவது விமானத் தாக்குதலாக அது அமைந்தது.

(04-05-08 லங்காதீப)

நன்றி தினக்குரல்

வான் படை எண்டா அவ்வளவு கலக்கமோ...??

தமிழரின் வளர்ச்சியை இப்படி எழுதுகிறார்கள். ரெம்ப பொறாமை. என்ன செய்வது, இரவில் கொஞ்சம் கலக்கந்தான்.

  • கருத்துக்கள உறவுகள்

லக்கா தீபக்காரருக்கு யாரோ வயிற்றில் புளியை கரைத்து விட்டார்கள். :lol:

ஏன்டா இவ்வளவுகாலமும் பயகரவாதிகள் பயங்கரவாதிகள் எண்டு சொல்லி சொல்லியே இருந்திங்கள்.. அவங்களும் வளந்துட்டாங்கள்.. நீங்கள் சீரழிஞ்சு போட்டியல்

இப்ப கூட திருந்துறதா காணம்... இப்பவும் பயங்கரவாதிகளெண்டுதானே சொல்லுறியல்...

அப்பிடி பார்த்தா நீங்கள் இனும் வளரேல்ல எண்டுதான் தெரியுது... அதுக்காக அவங்கள் வளரமாட்டாங்கள் எண்டு இல்லைத்தானே?

சும்மமா சோக்கடிக்காதேங்கோ...

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.