Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பிள்ளயானின் முதலமைச்சர் கனவிற்கு ஆப்பு வைக்கும் தீவிர முயற்சியில் தமிழ் அமைச்சர்!!!

Featured Replies

டாக்டர்.எம்.பி.பி.எஸ் வசூல்ராஜாவின் முதலமைச்சர் கவனவிற்கு ஆப்பு பிள்ளையானின் முதலமைச்சர் பதவிவை பறித்து ...............

தொடர்ந்து வாசிக்க.......................

http://isoorya.blogspot.com/2008/05/blog-post_9002.html

யார் டக்கிளஸோ? கீ கீ

ஹிஸ்புல்லா முதலமைச்சராவதற்கான சந்தர்ப்பங்கள் மிக அதிகம்.

அரசுடன் இணைந்தள்ள முஸ்லிம் அமைச்சர்களும் அதனையே வலியுறுத்துவதாகவும் தகவல்.

வன்முறைகளைக் கட்டவிழ்த்து விட்டு மக்களை அச்சுறுத்தி 12,13 வயதுத் தவ்வல்கள் கூட வாக்களித்த அதிசயத்தை நிகழ்த்தியும் திருகுதாளங்கள் புரிந்த பில்லேயானுக்கு கோவிந்தா கோவிந்தா!

  • கருத்துக்கள உறவுகள்

கிழக்கு மாகாண சபை முதலமைச்சர் ஜனாதிபதியினால் நியமிக்கப்படுவார் பதவியேற்றதன் பின்னர் ஆளுநர் நியமனம்

வீரகேசரி நாளேடு - கிழக்கு மாகாண சபைக்கு முதலமைச்சர் நியமிக்கப்பட்டதன் பின்னர் கிழக்கு மாகாண சபையும் ஏனைய மாகாண சபைகளைப் போல இயங்கும். கிழக்கு மாகாண சபைமுதலமைச்சரை தெரிவு செய்வதற்கான அதிகாரம் ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ளதுடன் இவ்வாரத்திற்குள் முதலமைச்சர் நியமிக்கப்படுவார் என்று உள்ளூராட்சி மற்றும் மாகாண சபைகள் அமைச்சர் ஜனக்க பண்டார தென்னகோன் தெரிவித்தார்.

கிழக்கு மாகாண முதலமைச்சர் பதவியேற்றதன் பின்னரே மாகாணத்திற்கான ஆளுநர் நியமிக்கப்படுவார். பெரும்பாலும் இம்மாததிற்குள் கிழக்கு மாகாண சபைக்கான கூட்டத்தொடர் ஆரம்பிக்கப்படும் என்றும் அவர் சொன்னார்.

கிழக்கு மாகாண சபைக்கான முதலமைச்சர் நியமனம் தொடர்பில் கருத்து தெரிவித்தபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் கூறியதாவது; கிழக்கு மாகாணத்தில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி சார்பாக ஏ.எல்.எம்.ஏ ஹிஸ்புல்லா, பிள்ளையான் என்றழைக்கப்படும் சிவநேசதுரை சந்திரகாந்தன் ஆகியோரின் பெயர்களும் ஐக்கிய தேசியக்கட்சி சார்பில் ரவூப் ஹக்கீம் பெயரும், மக்கள் விடுதலை முன்னணி சார்பில் தயாபத்திரனவின் பெயர்களும் சிபாரிசு செய்யப்பட்டிருந்தன.

இந்நிலையில் கிழக்கு மாகாண சபைத்தேர்தலில் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி வெற்றிப்பெற்றமையினால் கிழக்கு மாகாண முதலமைச்சராக முன்னணியிலிருந்தே ஒருவர் நியமிக்கப்படவுள்ளார். ஏற்கனவே அறிவிக்கப்பட்டதை போல அதிகூடிய விருப்பு வாக்குகள் பெற்றவரே முதலமைச்சராக நியமிக்கப்படுவார் அந்த நியமனம் ஜனாதிபதியினால் மேற்கொள்ளப்படுவதுடன் அவர் ஜனாதிபதி முன்னிலையில் சத்தியபிரமாணம் செய்துக்கொள்வார்.

கிழக்கு மாகாண முதலமைச்சர் சத்தியபிரமாண வைபவம் பிரமாண்டமான முறையில் கொழும்பில் இடம்பெறவிருப்பதனால் அதற்கான ஏற்பாடுகளை உள்ளூராட்சி மற்றும் மாகாண சபைகள் அமைச்சு மேற்கொண்டு வருகின்றது. கிழக்கு மாகாண சபைக்காக கடந்த வருடந்த வரவுசெலவு திட்டத்தில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளமையினால் நிதி ஒதுக்கீடு செய்வதில் பிரச்சினைகள் இல்லை.

  • கருத்துக்கள உறவுகள்

பிள்ளையான் கூடுதலான வாக்குகளை பெற்றுள்ளதால் பிள்ளையான் முதலமைச்சராகும் சாத்தியமுண்டு. இதன் மூலம் முஸ்லிம்களை தமிழருடன் மோதவிடும் சாத்தியமுண்டு.மகிந்தவுக்கு ஒரு கல்லில் இரு மாங்காய்.

யார் அதிக விருப்பு வாக்குகளை பெருகிறார்களோ அவருக்கே முதலமைச்சர் பதவி என்று முதலில் கூறிய மகிந்தவின் அரசு இப்போது எந்த இனத்தவர் கூடுதலான ஆசனங்களை பெற்றுள்ளார்கலோ அவருக்கே முதல்வர் பதவி என்று நிமல் சிறிபாலசில்வா பீபீசி க்கு கூறியுள்ளார். அப்படி பார்த்தால் அத்தாவுலாவுக்கே அந்தபதவி. எது எப்படியோ இருவரில் ஒருவருக்கு ஆப்பு என்பதுமட்டும் உறுதி.

கருணாவை முட்டாள் ஆக்கினார்கள் தற்போது பிள்ளையானையும் அதை விட நிசந்தன் என்பவர் தான் தற்போது இராணுவ பிரிவுக்கு பொறுப்பு அது பிள்ளையானுக்கு ஆப்பு வைப்பதுக்காக்வே ஆனால் இந்தியா என்ற ஒரு கொடாரி என்ன செய்யும் என்று நினைக்கிறிங்கள் யாருக்கு கொடுக்க சொல்லும் அமைச்சுபதவியை?

  • கருத்துக்கள உறவுகள்

முதலமைச்சர் பதவி தனக்குக் கிடைப்பதற்கான

சந்தர்ப்பம் அதிகம் என்கிறார் பிள்ளையான்

"கிழக்கு மாகாண சபைத் தேர்தலின் முடிவுகளின்படி மட்டு. மாவட்டத்தில் அதிகளவிலான வாக்குகளை எனக்கு மக்கள் அளித்திருக்கிறார்கள். அந்த வகையில் முதலமைச்சர் பதவி எனக்குக் கிடைப்பதற்கான சந்தர்ப்பம் மிக அதிகமாகக் காணப்படுகிறது.''

இவ்வாறு கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் ஆளுங்கட்சி சார்பாகப் போட்டியிட்டு வெற்றியீட்டி விருப்பு வாக்குகளில் முதலிடம் பிடித்த தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் வேட்பாளர் குழுத் தலைவர் சிவநேசதுரை சந்திரகாந்தன் (பிள்ளையான்) நம்பிக்கை வெளியிட்டார்.

""இந்த விடயம் தொடர்பில் நாங்கள் எல்லோரும் இதயசுத்தியுடன் ஒன்றுகூடி கலந்தாலோசித்த பிற்பாடு காலத்திற்கேற்றவாறு முடிவு எடுப்போம். அந்த அடிப்படையில் இதில் நிச்சயமாக எங்களுக்குச் சார்பானதொரு முடிவு வரும் என்று நாங்கள் காத்திருக்கின்றோம்'' என்றும் பிள்ளையான் குறிப்பிட்டார்.

பி.பி.ஸி. தமிழோசைக்கு கிழக்கு மாகாண சபைத் தேர்தல் முடிவுகள் தொடர்பாக நேற்றிரவு வழங்கிய செவ்வியிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.

""தேர்தலில் வன்முறைகள் மற்றும் முறைகேடுகள் என்பன நடந்தன எனக்கூறி சில இடங்களில் மறுவாக்குப்பதிவு நடத்தவேண்டும் எனக்கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அவ்வாறு மறுவாக்குப் பதிவு இடம்பெறுமானால் அதை நீங்கள் முழு மனதோடு ஏற்றுப் பங்கேற்பீர்களா என்று பி.பி.ஸி. செய்தியாளர் கேட்டதற்கு,

""என்னையும் எனது கட்சியையும் பொறுத்தமட்டில் அப்படி முறைகேடுகள் நடந்ததாகத் தெரியவில்லை. அப்படி நடந்திருந்தால் ஒரு சாரார்தான் அதிகப்படியான ஆசனங்களைப் பெற்றிருக்கவேண்டும். எதிர்பார்த்ததைவிட எதிர்க்கட்சியினர் அதிக ஆசனங்களைப் பெற்றிருப்பதை மகிழ்ச்சியான விடயமாகத்தான் நான் பார்க்கின்றேன். இதனால், இங்கு மற்றுமொரு தேர்தல் நடத்துவதற்கான வாய்ப்புகள் இல்லை'' என்றார்.

http://www.sudaroli.com/pages/news/today/13.htm

  • கருத்துக்கள உறவுகள்

இதனால், இங்கு மற்றுமொரு தேர்தல் நடத்துவதற்கான வாய்ப்புகள் இல்லை''

அதுதானே கள்ள வாக்கு போடுவது எவ்வளவு கஸ்டம் என்று பிள்ளையானுக்கு தெரியாதா என்ன? :rolleyes:

ஜிகாத் தலைவர் ஹிஸ்புல்லா முதலமைச்சரா...?? எதுவும் பொருத்தமாக இல்லையே..?

புலிகள் பெயரால் ஒரு கொலை விழுந்து மேலோக பதவிக்கு ஹிஸ்புல்லா போகப்போவது மட்டும் உறுதி....!!! அண்ணன் பிள்ளயான் எண்டா யார் எண்டு காட்ட வேண்டாமா...?

Edited by தயா

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

முதலமைச்சர் பிள்ளையான் வாழ்க வாழ்க.... :rolleyes::wub::lol:

கிழக்கு மாகாண சபைக்கு முதலமைச்சர் நியமிக்கப்பட்டதன் பின்னர் கிழக்கு மாகாண சபையும் ஏனைய மாகாண சபைகளைப் போல இயங்கும். கிழக்கு மாகாண சபைமுதலமைச்சரை தெரிவு செய்வதற்கான அதிகாரம் ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ளதுடன் இவ்வாரத்திற்குள் முதலமைச்சர் நியமிக்கப்படுவார் என்று உள்ளூராட்சி மற்றும் மாகாண சபைகள் அமைச்சர் ஜனக்க பண்டார தென்னகோன் தெரிவித்தார்.

கிழக்கு மாகாண முதலமைச்சர் பதவியேற்றதன் பின்னரே மாகாணத்திற்கான ஆளுநர் நியமிக்கப்படுவார். பெரும்பாலும் இம்மாததிற்குள் கிழக்கு மாகாண சபைக்கான கூட்டத்தொடர் ஆரம்பிக்கப்படும் என்றும் அவர் சொன்னார்.

கிழக்கு மாகாண சபைக்கான முதலமைச்சர் நியமனம் தொடர்பில் கருத்து தெரிவித்தபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் கூறியதாவது; கிழக்கு மாகாணத்தில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி சார்பாக ஏ.எல்.எம்.ஏ ஹிஸ்புல்லாஇ பிள்ளையான் என்றழைக்கப்படும் சிவநேசதுரை சந்திரகாந்தன் ஆகியோரின் பெயர்களும் ஐக்கிய தேசியக்கட்சி சார்பில் ரவூப் ஹக்கீம் பெயரும்இ மக்கள் விடுதலை முன்னணி சார்பில் தயாபத்திரனவின் பெயர்களும் சிபாரிசு செய்யப்பட்டிருந்தன.

இந்நிலையில் கிழக்கு மாகாண சபைத்தேர்தலில் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி வெற்றிப்பெற்றமையினால் கிழக்கு மாகாண முதலமைச்சராக முன்னணியிலிருந்தே ஒருவர் நியமிக்கப்படவுள்ளார். ஏற்கனவே அறிவிக்கப்பட்டதை போல அதிகூடிய விருப்பு வாக்குகள் பெற்றவரே முதலமைச்சராக நியமிக்கப்படுவார் அந்த நியமனம் ஜனாதிபதியினால் மேற்கொள்ளப்படுவதுடன் அவர் ஜனாதிபதி முன்னிலையில் சத்தியபிரமாணம் செய்துக்கொள்வார்.

கிழக்கு மாகாண முதலமைச்சர் சத்தியபிரமாண வைபவம் பிரமாண்டமான முறையில் கொழும்பில் இடம்பெறவிருப்பதனால் அதற்கான ஏற்பாடுகளை உள்ளூராட்சி மற்றும் மாகாண சபைகள் அமைச்சு மேற்கொண்டு வருகின்றது. கிழக்கு மாகாண சபைக்காக கடந்த வருடாந்த வரவுசெலவு திட்டத்தில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளமையினால் நிதி ஒதுக்கீடு செய்வதில் பிரச்சினைகள் இல்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

  • கருத்துக்கள உறவுகள்

அப்ப எல்லாருமாச் சேர்ந்து ஒரு குரங்கை(உண்மையாகவுமே அவனப் பார்த்தல் குரங்கு மாதிரித்தானே கிடக்கு ?!!!) முதலமைச்சராக்கப் பாக்கிறியள் ? அப்பத்தானே குரங்காட்டிக்கு( மடையன் மகிந்த) ஆட்டுவிக்கிறது சுலபம் !!!!!

ஆடுடா ராமா ஆடுடா !!!!!!!!!!!!

:D உந்தப் பிள்ளையான் கதையைப் பிறகு பாக்கலாம். உந்த ஜிகாத் காரனுக்கு **** போல கிடக்கு ! ஆரும் விஷயம் தெரிந்த அக்கள் எதாவது செய்யுங்கோவன் !!!!!

இதுதானையா சனநாயக கோமளித்தனம் எண்டு சொல்லுறது.. சனநாயகத்தைப் பற்றி அறியாத எருமைகளிடம் நாட்டின் தலைவியை கொடுத்துட்டு போயிட்டானுகள் வெள்ளைகாரங்கள்.... அதனால வந்த வினை இது.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.