Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஒருவன் அல்லது ஒருத்தி ஒருத்தரை காதலிக்கும்போது அந்தக் காதலை யார் யாரிடம் எல்லாம் கட்டாயம் சொல்லவேணும்?

இப்ப நீங்கள் ஒருத்தரை காதலிச்சால் அந்தக் காதலை நீங்கள் யார் யாரிடம் எல்லாம் கட்டாயம் சொல்லவே 26 members have voted

  1. 1. இப்ப நீங்கள் ஒருத்தரை காதலிச்சால் அந்தக் காதலை நீங்கள் யார் யாரிடம் எல்லாம் கட்டாயம் சொல்லவேணும்?

    • காதலிக்கப்படுபவரிடம் மட்டும்
      11
    • காதலிக்கப்படுபவரிடமும் அவர் பெற்றோரிடமும்
      0
    • காதலிக்கப்படுபவர் + அவர் பெற்றோர் + மற்றும் குடும்ப அங்கத்தவர்களிடம்
      2
    • மேற்கூறிய அனைத்தும் மற்றும் காதலிக்கப்படுபவரின் நண்பர்களிடமும்
      0
    • மேற்கூறிய அனைத்தும் மற்றும் போலீசாரிடமும்
      1
    • மேற்கூறிய அனைத்தும் மற்றும் சமயத் தலைவரிடமும்
      0
    • போலீசாரிடம் மட்டும்
      6
    • காதலிக்கப்படுவரின் நண்பர்களிடம் மட்டும்
      0
    • காதலிக்கப்படுபவரை காதலிப்பவர்களிடம் மட்டும்
      3
    • தெருவில போறவன் வாறவன் எல்லாருக்கும் சொல்லவேணும்
      3

Please sign in or register to vote in this poll.

Featured Replies

அனைவருக்கும் இனிய வணக்கங்கள்,

திரும்பவும் ஒரு சின்னக் கலந்துரையாடல். உங்கட எண்ணங்களச் சொல்லுங்கோ.

இந்தக்காலத்தில ஒருவரை காதலிக்கிறது எண்டால் அது லேசுப்பட்ட வேலை இல்லை எண்டு காதலித்து பார்த்தவர்களுக்கு தெரியும். முதலில ஒருவரைக் காதலித்து அவரிடம் ஐ லவ் யூ எண்டு சொல்ல முன்னம்... வேறு பலரிடம் அனுமதிகள் பெறவேண்டி இருக்கிது.

உங்களுக்கு காதல் அனுபவம் இருந்தால் நீங்கள் ஒருவரை காதலித்தபோது அதை யார் யாருக்கு எல்லாம் சொல்லி இருந்தீங்கள் (அதாவது உங்கட காதல் சமூக அங்கீகாரம் பெறப்படுவதற்கு யார் யார் காலில் விழுந்தீங்கள்.. ) எண்டு கொஞ்சம் சொல்லுங்கோ.

இந்தக்காலத்தில எங்கட காதல் வெற்றி பெறுவதற்கு நாம காதலிப்பவரிடம் போய் ஐ லவ் யூ எண்டு சொல்லிறத விட (செருப்படி விழுந்தால் அதைத் தாங்கிக்கொள்ள முதலில் மனப்பக்குவம் வரவேண்டும்..) மற்றவர்களிடம் - அதாவது சமூகம் எமது காதலை ஏற்றுக்கொள்ள செய்யவேண்டிய முயற்சிகள் எண்டும் சிலது இருக்கிதோ?

காதலிப்பவர்களை தீண்டத்தகாதவர்களாகவும், ஏதோ கூடாதவேலைகள் செய்பவர்களாகவும், பொறுக்கிகளாகவும், கெட்டவர்களாகவும், இப்படி எல்லாம் பலவிதமான முகங்களுடன் பார்க்கும் தன்மை எங்கட சமூகத்தில இருக்கிது அதான் திரும்பவும் ஒரு ஆராய்ச்சி.

இதைப்பற்றி விரிவாக பிறகு எண்ட எண்ணங்களச் சொல்லிறன்.

நன்றி! வணக்கம்!

பி/கு: இந்தக்கருத்தாடல் தோழர் நெடுக்காலபோவான் அவர்களுக்கு சமர்ப்பணம்.

  • Replies 57
  • Views 10.2k
  • Created
  • Last Reply

முதல்ல அந்தப் காதலிக்கப்படுபவர்...! அவரிட்ட சொல்லாம வேற யாரிட்டையும் சொல்லக்கூடாது..! பிறகு அந்த காதலின் வெற்றியை பொறுத்து சொல்ல வேண்டியவர்களிடம் சொல்லிக்கொள்ளலாம் திருமணத்துக்கு..!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

முதல்ல அந்தப் காதலிக்கப்படுபவர்...! அவரிட்ட சொல்லாம வேற யாரிட்டையும் சொல்லக்கூடாது..! பிறகு அந்த காதலின் வெற்றியை பொறுத்து சொல்ல வேண்டியவர்களிடம் சொல்லிக்கொள்ளலாம் திருமணத்துக்கு..!

**லீ** அவர்களின் கருத்தே எனது கருத்தும், காதலிக்கிறானோ/ளோ என்று தெள்ளத் தெளிவாய் அறிந்து அது உறுதியான பின் பெற்றோருக்குத் தெரியப்படுத்தலாம். அதுதான் காதலுக்கு பலம் :o

Edited by Thamilthangai

நல்ல முயற்ச்சி முரளி அண்ணை....அதுசரி யாரிட்டையோ செருப்பால நல்லா வேண்டியிருக்கிறியள் போல... கிகீகிகீ. :o:huh::lol::lol::)

முதல்ல அந்தப் காதலிக்கப்படுபவர்...! அவரிட்ட சொல்லாம வேற யாரிட்டையும் சொல்லக்கூடாது..! பிறகு அந்த காதலின் வெற்றியை பொறுத்து சொல்ல வேண்டியவர்களிடம் சொல்லிக்கொள்ளலாம் திருமணத்துக்கு..!

இதையே நானும் சொல்ல நினைத்தேன்.

நாம் காதலிப்பவரிடம் சொல்லாமல், ஊருக்கெல்லாம் சொல்வது அவரை அவமதிப்பது போல். யார் காதலித்தாலும், இறுதியில் இருவரும் காதலித்ததாக தானே ஊர் சொல்லும்.

முதலில் அவரவர் மனதிடம் சொல்ல வேண்டும்.

அது உறுதியான பின்னர் காதலிப்பவரிடம் சொல்ல வேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

காதலிப்பவரிடம் நேரடியாக சொல்வது தான் சரி. ஆனாலும் நடைமுறையில் நண்பர்கள் மூலமே பல காதலர்கள் இணைக்கபட்டார்கள் அல்லது இணைக்கப்படுகிறார்கள் என்பதை நாம் பாடசாலை நாட்களில் இருந்து பார்க்கிறோம்.

ஆனாலும் நடைமுறையில் நண்பர்கள் மூலமே பல காதலர்கள் இணைக்கபட்டார்கள் அல்லது இணைக்கப்படுகிறார்கள் என்பதை நாம் பாடசாலை நாட்களில் இருந்து பார்க்கிறோம்.

இது இருவரும் விரும்பும் நேரத்தில் மட்டும் தானே?

  • கருத்துக்கள உறவுகள்

இது இருவரும் விரும்பும் நேரத்தில் மட்டும் தானே?

நிச்சயமாக தூயா. தூதுவிடுதல் அல்லது செய்தியை பரிமாறல் என்று கூறலாம். அதாவது காதலன்/காதலி தங்களது விருப்பத்தை நண்பர்கள் மூலம் தெரியப்படுத்தல் எமது கலாச்சாரத்தில் நிறையவே நடந்ததை பார்த்துள்ளோம் இல்லையா?

காதலிப்பவரிடம் நேரடியாக சொல்வது தான் சரி. ஆனாலும் நடைமுறையில் நண்பர்கள் மூலமே பல காதலர்கள் இணைக்கபட்டார்கள் அல்லது இணைக்கப்படுகிறார்கள் என்பதை நாம் பாடசாலை நாட்களில் இருந்து பார்க்கிறோம்.

இருக்கலாம்..ஆனால் எப்பொது அது சரிவராது....! அந்த காலத்தில் அது பரவாயில்லை...ஆணும் பெண்ணும் கதைப்பதே கடினம்....அப்ப நண்பர்கள் தேவைப்பட்டார்கள்..! இப்ப நிலமை மாறி விட்டது...! நேரடியாக அணுகுவது நல்லது..!

லீ சொல்வதில் உண்மை இருக்கின்றது.

நீங்கள் காதலிபவர் ஏற்றுக்கொள்ளும் போது, மற்றவர்களுக்கு தெரிந்தால் பரவாயில்லை.

ஆனால்

காதலிப்பவர் ஏற்றுக்கொள்ளாத போது மற்றவர்களுக்கு தெரிவது இருவருக்கும் நல்லதல்ல.

பலர் காதலில் வன்முறையில் இறங்குவதே நண்பர்கள் தன்னை பற்றி என்ன நினைப்பார்கள் எனும் காரணத்திற்காகவே.

  • கருத்துக்கள உறவுகள்

நான் பொலிஸ் என்று போட்டிருக்கன். ஏனென்றால்.. இப்ப எல்லாம் சுற்றித்திரியும் வரை காதலிச்சிட்டு திடீரென்று காதலிமார் / காதலன்மார் தலைமறைவாகிடினம்.

எம் எஸ் என்னை புளக் பண்ணிடினம். மொபைல் போன் சிம்மை மாத்திடினம். அற்றஸ்ஸை விட்டு ஓடிடினம்..! போன் நம்பரை மாத்திடினம்.. அல்லது போன் நம்பர மறைச்சு அடிப்பினம்.. இருக்கிற இடத்தையே மாத்தி இந்தியா,ஐரோப்பா, கனடா, அவுஸ்திரேலியா.. நியூசிலாந்து.. போன்ற இடங்களுக்கும் ஓடிடினம். :huh:

ஆனபடியா.. பொலிஸட்ட சொல்லி வைச்சிட்டா.. தலைமறைவாறவையைக் கண்டுபிடிக்கலாம்.

ஆனால் ஒன்று சொல்லுறன் கேளுங்கோ.. காதலிமார் வீட்ட சொல்லாம இருக்கினம் என்றால்.. உங்களை ஏமாத்த ஒரு சந்தர்ப்பத்தையும் வைச்சிட்டு இருக்கினம் என்றதை மறந்திடாதேங்கோ. அந்த வகையில.. பொலிஸிலயாவது சொல்லி வையுங்க.

இல்ல.. உங்களை நடுத்தெருவில விட்டிட்டு.. அவையள்.. தலைமறைவாகி.. உல்லாசம இன்னொருத்தன் கூட வாழ்ந்திட்டு இருப்பினம்..! நீங்க.. தாடியும் தண்ணியுமா.. நீங்களா உங்கள் காதலியின் பேச்சை நம்பி உங்கள் காதலை வீட்ட சொல்லி இருந்தா அது ஊருக்குத் தெரிஞ்சிருந்தா.. அதன் பரிகாசப் பார்வைகள் கொல்ல.. (Don't care என்று இருக்கிறவங்கள இந்தப் பரிகாசங்கள் ஒன்றும் செய்யாது.. sensitive ஆன ஆக்கள் என்றால் பாவங்கள்). வாழ வேண்டி இருக்கும்..! :lol::o

Edited by nedukkalapoovan

நெடுக்ஸ் நீங்க தானா அது? நான் நினைச்சேன் நீங்களா இருக்கும் என்று..கிகிகிகி

  • கருத்துக்கள உறவுகள்

நெடுக்ஸ் நீங்க தானா அது? நான் நினைச்சேன் நீங்களா இருக்கும் என்று..கிகிகிகி

நம்ப தங்கையாச்சே அண்ணாட குணம் தெரியாம இருக்குமா..! ஆனால் நான் ஒரு வாக்குத்தான் போட்டேன். கள்ள வாக்கு எதுவும் போடல்ல. என்னைப் போல இன்னொருவரும் போட்டிருக்கிறார். யாரவர்..??! :o

Edited by nedukkalapoovan

நம்ப தங்கையாச்சே அண்ணாட குணம் தெரியாம இருக்குமா..! ஆனால் நான் ஒரு வாக்குத்தான் போட்டேன். கள்ள வாக்கு எதுவும் போடல்ல. என்னைப் போல இன்னொருவரும் போட்டிருக்கிறார். யாரவர்..??! :huh:

உங்கள போல தைரியம் எல்லாருக்கும் வருமா?

எனக்கு ஒரு ஆளில சந்தேகம் இருக்கு...உங்களுக்கும் தெரியும் தானே ;) :lol::o

  • தொடங்கியவர்

நான் பொலிஸ் என்று போட்டிருக்கன். ஏனென்றால்.. இப்ப எல்லாம் சுற்றித்திரியும் வரை காதலிச்சிட்டு திடீரென்று காதலிமார் / காதலன்மார் தலைமறைவாகிடினம்.

எம் எஸ் என்னை புளக் பண்ணிடினம். மொபைல் போன் சிம்மை மாத்திடினம். அற்றஸ்ஸை விட்டு ஓடிடினம்..! போன் நம்பரை மாத்திடினம்.. அல்லது போன் நம்பர மறைச்சு அடிப்பினம்.. இருக்கிற இடத்தையே மாத்தி இந்தியா,ஐரோப்பா, கனடா, அவுஸ்திரேலியா.. நியூசிலாந்து.. போன்ற இடங்களுக்கும் ஓடிடினம். :wub:

ஆனபடியா.. பொலிஸட்ட சொல்லி வைச்சிட்டா.. தலைமறைவாறவையைக் கண்டுபிடிக்கலாம்.

ஆனால் ஒன்று சொல்லுறன் கேளுங்கோ.. காதலிமார் வீட்ட சொல்லாம இருக்கினம் என்றால்.. உங்களை ஏமாத்த ஒரு சந்தர்ப்பத்தையும் வைச்சிட்டு இருக்கினம் என்றதை மறந்திடாதேங்கோ. அந்த வகையில.. பொலிஸிலயாவது சொல்லி வையுங்க.

இல்ல.. உங்களை நடுத்தெருவில விட்டிட்டு.. அவையள்.. தலைமறைவாகி.. உல்லாசம இன்னொருத்தன் கூட வாழ்ந்திட்டு இருப்பினம்..! நீங்க.. தாடியும் தண்ணியுமா.. நீங்களா உங்கள் காதலியின் பேச்சை நம்பி உங்கள் காதலை வீட்ட சொல்லி இருந்தா அது ஊருக்குத் தெரிஞ்சிருந்தா.. அதன் பரிகாசப் பார்வைகள் கொல்ல.. (Don't care என்று இருக்கிறவங்கள இந்தப் பரிகாசங்கள் ஒன்றும் செய்யாது.. sensitive ஆன ஆக்கள் என்றால் பாவங்கள்). வாழ வேண்டி இருக்கும்..! :lol::wub:

நீங்கள் இதை பகிடியாக எழுதி இருந்தாலும் நீங்கள் சொன்ன கருத்துக்களில நிறைய அர்த்தம் இருக்கிது நெடுக்காலபோவான்.

எண்டாலும்.. இப்படி ஏமாற்றுபவர்களை காதலித்தது காதலித்தவரின் தவறே... காதலிக்கப்பட்டவரின் தவறு எண்டு சொல்ல ஏலாது.

மேலும்..

காதலிற்கு நம்பிக்கையும் தேவைதானே?

உண்மையான அன்பு இருந்து இருந்தால் இப்படி ஏமாற்றமாட்டார்கள் நெடுக்காலபோவான். ஏமாற்றுபவர்களுக்கு உண்மையான அன்பு இல்லை. எனவேதான் ஏமாற்றுகின்றார்கள்.

உண்மையான அன்பு இருந்து இருந்தால் இப்படி ஏமாற்றமாட்டார்கள் நெடுக்காலபோவான். ஏமாற்றுபவர்களுக்கு உண்மையான அன்பு இல்லை. எனவேதான் ஏமாற்றுகின்றார்கள்.

ஆமாம், உண்மையான அன்பு இருந்தால் ஏமாற்றமாட்டார்கள். ஆனால் உண்மையான அன்பை காதலர்களிடம் எதிர்பார்ப்பது தவறு. :wub: சுயனலத்திற்காக அவர்கள் தமது காதலை விட்டு விலத்தவும் கூடும்.

சோ நானும் பொலிஸ் இடம் தான் முதலில் சொல்வேன் :wub::lol:

  • தொடங்கியவர்

காதலில் நம்பிக்கை இல்லை எண்டால் போலிசில சொல்லிறதுதான் நல்ல விசயமா எனக்கும் தெரியுது. ஏன் எண்டால் நம்பிக்கை இல்லாமல் காதலிச்சுபோட்டு கடைசியில பிரச்சனைப்படேக்க கடைசியில போறது போலிசிட்டதானே? ஹிஹி.

ஆனா நீங்கள் போலிசிட்டபோய் சொல்ல போலிஸ்காரன் உங்கட காதலரை லவ் பண்ணத் துவங்கினால் என்ன செய்யுறது?

  • கருத்துக்கள உறவுகள்

நான் இன்னும் வாக்கை செலுத்த இல்லை. ஒரே குளப்பமப்பா..! :wub:

ஒருதலைப்பட்சமா காதலித்தால் முதலில நண்பர் வட்டாரத்தில "போட்டு வைக்க" வேணும். முன்பதிவு செய்யுறது காதலுக்கு மிக அவசியம். :lol:

எதிர்த் தரப்பும் மசியும்போல தென்பட்டால் உங்கள் வாக்கை உடனே செலுத்தாமல் கொஞ்சம் சொல்லுற மாதிரியும் சொல்லாமலும் இழுத்தடிச்சு அவர் வாயால் முடிந்தால் வர வைக்க வேணும். ஏலாமல் போனால் நாமளே சொல்லவேண்டியதுதான். எல்லாத்துக்கும் கால நிர்ணயம் அவசியம். அவக்கெண்டு சொல்லவும் கூடாது. ஜவ்வு மாதிரி இழுக்கவும் கூடாது. :wub:

மேலதிக ஆலோசனைகளுக்கு தனிமடலில் தொடர்பு கொள்ளவும்..! :(

  • தொடங்கியவர்

இஞ்ச நிறையப் பேருக்கு காதல் செய்யப்படுபவர விட போலீசுக் காரனிலையும், தெருவில போறவனிலையும்தான் நம்பிக்கை அதிகமா இருக்கிது போல. :wub:

முரளி ..காவல்துறையிடம் சொல்வதிலும் பார்க்க பார்க்க வக்கீலிடம் சொல்லலாம் என்று சொல்வார்கள் போலிருக்கிறது..! எதுக்கும் வக்கீலுக்கும் ஒரு வாக்கு போட இணைப்பு கொடுங்கோ..!

காவல்துறையிடம் இதை சொல்லி அடி வாங்காமல் இருந்தால் சரி தான் ;)

ஆனா நீங்கள் போலிசிட்டபோய் சொல்ல போலிஸ்காரன் உங்கட காதலரை லவ் பண்ணத் துவங்கினால் என்ன செய்யுறது?

ஓ அப்படியும் நடக்கும் என்ன.... ம்ம்ம் அதுதானே காதல்... ஒரு தடவையில் பலரை காதலிப்பார்கள்...

அப்படி நடந்தால் அவர்களை பார்த்து "எங்கிருந்தாலும் வாழ்க" என்று பாடிவிட்டு வர வேண்டியதுதான். :):):D

  • கருத்துக்கள உறவுகள்

இந்தத் தலைப்பைப் பார்த்தபோது இதயம் படத்தில் வந்த பாடல்தான் ஞாபகத்தில் வந்தது.

பூங்கொடிதான் பூத்ததம்மா

பொன்வண்டுதான் பாத்ததம்மா

பாட்டெடுக்க தாமதிக்க

வாடைக்காற்று பூப்பறித்து

போனதம்மா

பூங்கொடிதான் பூத்ததம்மா

பொன்வண்டுதான் பாத்ததம்மா

ஆசைக்கு தாழ்போட்டு அடைத்தென்ன லாபம்

அதுதானே குடம்தன்னில் எரிகின்ற தீபம்

மனதோடு திரைபோட்டு மறைக்கின்ற மோகம்

மழை நீரை பொழியாமல் இருக்கின்ற மேகம்

சிலருக்கு சிலநேரம் துணிச்சல்கள் பிறக்காது

துணிச்சல்கள் பிறக்காமல் கதவுகள் திறக்காது.

காட்டாத காதலெல்லாம் மீட்டாத வீணையைப்போல்.

ஓ ஓ ஓ ஓ ஓ ஓ ஓ

பூங்கொடிதான் பூத்ததம்மா

பொன்வண்டுதான் பாத்ததம்மா

பாட்டெடுக்க தாமதிக்க

வாடைக்காற்று பூப்பறித்து

போனதம்மா

பூங்கொடிதான் பூத்ததம்மா

பொன்வண்டுதான் பாத்ததம்மா

தாய்கூட அழுகின்ற பிள்ளைக்குத்தானே

பசியென்று பரிவோடு பாலூட்ட வருவாள்

உன்வீட்டுக் கண்ணாடி ஆனாலும் கூட

முன்வந்து நின்றால்தான் முகம் காட்டும் இங்கே

மனதுக்குள் பலகோடி நினைவுகள் இருந்தாலும்

உதடுகள் திறந்தால்தான் உதவிகள் பெறக்கூடும்

கோழைக்குக் காதலென்ன ஊமைக்குப் பாடலென்னா

ஓ ஓ ஓ ஓ ஓ ஓ ஓ

பூங்கொடிதான் பூத்ததம்மா

பொன்வண்டுதான் பாத்ததம்மா

பாட்டெடுக்க தாமதிக்க

வாடைக்காற்று பூப்பறித்து

போனதம்மா

பூங்கொடிதான் பூத்ததம்மா

பொன்வண்டுதான் பாத்ததம்மா

பூங்கொடிதான் பூத்ததம்மா

பொன்வண்டுதான் பாத்ததம்மா

கட்டாயம் பொலிசிலை சொல்ல வேணும். இதயத்தை தொலைத்தவர்களுக்கு கட்டாயம் பொலிஸ் காவல்தரும்.

முதலில் காதலரிடம் சொல்லணும் பின்பு பெண்களா இருந்தால் நீங்கள் காதலிக்கிறது தெரியாம உங்களுக்கு பின்னால் திரிகிற ஆண்களிடம் சொல்லிடுங்க . நீங்க எதுவுமே சொல்லாமல் இருந்தால் அவர்கள் ஒருவித நம்பிக்கையில் இருந்து விடுவார்கள் . இறுதி நேரத்தில் தெரியும் போது அவர்கள் தாடியோடு தான் அலய வேண்டி வரும் அந்த பாவம் எல்லாம் நம்மைத்தான்ச்சாரும் . ஆண்களூம் இப்படி செய்கிறது தான் நல்லது என நினைக்கிறன் :D

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.