Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

காமத்தை வென்றவர் யார்?

Featured Replies

சிவமயம்

திருச்சிற்றம்பலம்

காமதகனர்

"பூதப் படையுடைப் புண்ணியரே! புறஞ்சொற்கள் நும்மேல்

ஏதப்பட எழுகின்றனவால்! இளையாளொடு உம்மைக்

காதற் படுப்பான் கணைதொட்ட காமனைக் கண்மலராற்

சேதப் படுத்திட்ட காரணம் நீர்இறை செப்புமினே"

- சேரமான்் பெருமாள் நாயனார்

உலகில் வரும் கேடுகளை ஊன்றிக் கவனித்தால் அவற்றிற்கு அடிப்படைக் காரணம் காமமே என்பது புலப்படும்.

காமமே கொலைகட்கெல்லாம் காரணம், கண்ணோடாத

காமமே களவுக்கெல்லாம் காரணம், கூற்றும் அஞ்சும்

காமமே கள்ளுண்டற்கும் காரணம், ஆதலாலே

காமமே நரகபூமி காணியாக் கொடுப்பதாகும்.

என்று காமத்தின் தன்மையைத் திருவிளையாடற்புராணம் தொகுத்துரைக்கின்றது.

  • தொடங்கியவர்

"மணிநகையாரே தெய்வம், வாக்கு உபதேசம், கொங்கைத்

துணைகுரு பீடம், பாதத்துணை வருடுவதே பூசை

அணைவது முத்தி... காமன் ஆகமங்கள் என்றான்"

என்றபடி காமன் ஆகமங்களில் வல்லவர்களே உலகில் அதிகம். காமனை வெல்லுவதென்பது எளிதான காரியமல்லவே. காமத்தையும் காலத்தையும் வெல்லும் ஆற்றல் நாம் பெறவேண்டுமாயின் அவற்றை வென்ற சிவபெருமானுடைய பெருங்கருணைக்கு ஆளாக வேண்டும்.

  • தொடங்கியவர்

காமதகனம் பற்றி வடமொழி லிங்கபுராணம் விரிவாகப் பேசுகின்றது.

சூரபன்மாதியரின் கொடுமையால் தீமையின் வலிமை மிகுந்து உலகம் அல்லலுற்றது. அவுணர்களை அழிக்க இறைவனைப் பணிந்து பரவினர் நல்லோர். கயிலையில் மோன மூர்த்தியாக - யோகியாக - தட்சிணாமூர்த்தியாக அமர்ந்து நால்வர்க்கு அறம் பொருள் இன்பம் வீடு பற்றி சொல்லாமற் சொல்லும் குருமூர்த்தியாக எழுந்திருளியிருந்தார் சிவபெருமான். இமவான் மகளாக அவதரித்து உமையம்மையார் பெருமானைத் திருமணம் புரிந்து கொள்ளக் கடுந்தவம் இயற்றி வந்தாள். இவர்கள் திருமணம் நிகழ்ந்து ஒரு குமாரன் தோன்றி அசுரர்களை அழித்தாக வேண்டும். யோகியாய் விளங்கும் இறைவன் போகியாக மாற வேண்டும். அவருக்கு உமையம்மைபால் மனம் செல்ல வேண்டும். ஆம் அவருக்கு காமம் வரவேண்டும்! என் செய்வது விண்ணோர் கூடினர். இந்திரன் காமனை அழைத்துச் சிவபெருமான் மீது மலரம்பு தொடுக்கப் பணித்தனன். மன்மதன் அஞ்சினான். இந்திரனால் அழிவதை விடச் சிவபெருமானால் உய்வடைவது உயர்வு தரும் எனத் துணிந்தான். சிவபெருமான் மீது மலர்க்கணைகளைத் தொடுத்தான். சிவபெருமான் மோனங்கலைந்து கண் திறந்தார். நெற்றிக்கண் வீழ்த்தது. மன்மதன் சாம்பலானான். காமன் மலர்களைத் தானே சிவன்மீது செலுத்தினான்! கல்லெறிந்த சாக்கியருக்குக் கதியளித்த கண்ணுதற் கடவுள் மலர் எறிந்த மன்மதனை மாய்த்துவிட்டார்! என்ன நியாயம்! ஆம், மன்மதன் மலர் எய்திய போதிலும் அவன் உள்ளம் பக்தியால் அதனைச் செய்யவில்லை. சாக்கியர் கல்லெறிந்த போதிலும் அவர் உள்ளம் சிவபெருமான் மீது கனிந்து பக்தி மிகுந்திருந்தது. செயலை விட நோக்கம் தான் முக்கியம். ஆதலால் தான் மன்மதன் கதி அவ்வாறாயிற்று. மன்மதன் பாணம் மாதேவனை மயக்கிவிடவில்லை என்பது ஈண்டு கருதத்தக்கது. தனது அமர காதலனை மன்மதன் மாய்ந்தது கண்டு இரதிதேவி புலம்பினாள். இறைவனைப் பலவாறு துதித்துப் பரவினாள். தனக்கு மாங்கல்ய பிச்சை அருள வேண்டினாள். சிவபெருமானும் அவள் நிலைக்கு இரங்கி, அருவமாய் தன் தொழில் செய்யுமாறு மன்மதனைப் பணித்து உயிரளித்து அருள்புரிந்தார்.

  • கருத்துக்கள உறவுகள்

ஆறுமுகநாவலர் ஐயா அவர்களே,

பூலோகத்தில் காமத்தை வென்றவர் கண்டிலர் கண்டவர் வென்றிலர்.

  • கருத்துக்கள உறவுகள்

" இல்லறத்தில் பிரமச்சரியம்" என்று காந்தியடிகள் விவரித்துள்ளார்.அதாவது ஒரு ஆண், தனியான ஒரு இடத்தில் ஒரு பெண்ணின் பக்கத்தில் படுத்திருந்தாலும் அவளை தொடாமலேயே எடுக்கும் ஒரு வகையான யோக பயிற்சி.

காமம் எந்தமேதையயும் முட்டாளாக்கி கொழுந்து விட்டு எரியத்துண்டும் ஒர் உணர்வு. கிடைக்காத பெண்ணுக்கே ஏங்குகின்ற உலகத்தில் கிடைத்த கிடைத்த பெண்ணை அனுபவிக்காமல் இருக்க எடுக்கும் பயிற்சி "இல்லறத்தில் பிராச்சரியம்" என்பார்கள். சித்தர்கள் இதனை "இச்சா பத்தியம்" என்கிறார்கள்.பரமகம்சர், காந்தியடிகள்,விவேகனந்தர் போன்றோர் வாழ்ந்திருக்கிறார்கள்.

தமிழகத்தில் பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் அவர்கள் பெண்வாடையில்லாமல் வாழ்ந்தவர்.இவர் உடம்பின் சுக்கிலத்தை உடம்புக்குள்ளேயே வைத்திருந்து மீண்டும் ரத்தத்திலேயே கலந்து விடுமாறு செய்யும் யோகத்தை மேற்கொண்டிருந்தார். ஆனால் ஒன்று இப்படியான பிரமச்சாரிகள் நீண்ட காலம் வாழ்வதில்லை.

  • கருத்துக்கள உறவுகள்

இங்கே ஒரு விடயத்தைக் கவனிக்கவேண்டும். சிவன் மன்மதனை எரித்த கதையில் அவரது நெற்றியிலிருந்து தெறித்த ஆறு பொறிகளும் கார்த்திகைப் பொய்கையில் கார்த்திகேயனை உருவாக்கிவிட்டன. ஆக மொத்தத்தில் மன்மதனின் மலரம்பு என்ன நோக்கத்திற்காக வீசப்பட்டதோ அது நிறைவேறிவிட்டது. சிவன் காமனைத்தான் எரித்தார். காமத்தை எரிக்கவில்லை. காமத்தினால் விழைந்த குழந்தையைப் பார்வதியின் கையில் கொடுத்தார்.

அந்தக் குழந்தையை உருவாக்க அவருக்குக் காமமும் அருகே பார்வதியும் தேவைப்பட்டிருக்கின்றது. ஆகக் கடவுளுக்கும் காமம்தான் குழந்தையை உருவாக்க உதவியிருக்கிறது.

மலையில் ஏறி மாவிளக்குகள் ஏற்றி வணங்கினாலும் காமமில்லாமல் பிள்ளை பெற முடியாது என்னும் தத்துவம் இதன்மூலம் தெளிவாகின்றது.

  • தொடங்கியவர்

இதற்கான விளக்கம் இதுவல்ல தொடர்ந்து படியுங்கள்..........

kamathakanar.jpg

"எரிபுனை நமது நோக்கால் இறந்தநின் உடலம் நீறாய்

விரைவொடு போயிற்றன்றே வேண்டினள் இரதியன்னாட்

குருவமாய் இருத்தியேனை உம்பரோ டிம்பர்க்கெல்லாம்

அருவினை யாகியுன்றன் அரசியல் புரிதி என்றான்"

என்று இந்நிகழ்ச்சியைக் கந்தபுராணம் பேசும். இரதியின் வேண்டுகோளுக்கு இரங்கி, மன்மதனைக் கிருஷ்ணாவதாரத்தில் பிரத்யும்னனாகத் திருமால் பெற்றெடுப்பார் என்றருள் புரிந்தார் சிவபெருமான் என வடமொழிப்புராணம் பேசும். காம பாணத்தை விட உமையின் தவமே இறைவனது மோனங்கலையக் காரணமாயிற்று. பார்வதி தன்தவத்தினாலேயே சிவபெருமானை அடையப் பெற்றார் என்று குமாரசம்பவம் விளக்குகின்றது. சிவபெருமான் உமையை மணந்தருளினார்.

எந்த நெற்றிக் கண்ணிலிருந்து காமனை எரித்த நெருப்புத் தோன்றியதோ, அதே நெற்றிக் கண்ணிலிருந்து ஆறு தீப்பொறிகள் தோன்றி அறுமுகச் செவ்வேளாகி, பார்வதி பாலனாகி - பூவுலகில் அசுரர்களை மாய்த்து அமரர் இடரும் அவுணர் உயிரும் அழிய அருள் புரிந்ததைக் கந்தபுராணம் விரிவாகக் கூறும்.

Edited by ArumugaNavalar

  • தொடங்கியவர்

காமனை எரித்த இறைவனைக் காமதகன மூர்த்தி என்று போற்றுகிறோம். இதில் சில தத்துவங்கள் பொதிந்துள்ளன. இறைவனும் இறைவியும் பிரிந்திருந்த நிலையில் உலகுயிர்கள் செயலிழந்து கிடந்தன என்னும்போது அவனன்றி ஓர் அணுவும் அசையாது என்ற உண்மை புலப்படும். இறைவி மலைமகளாய் அவதரித்துத் தவம் இயற்றினாள் இறைவனை மணக்க, இறைவனோ தட்சிணாமூர்த்தி ஆக யோக நிலையில் இருந்தார்.

ஒரு சிறந்த கணவனை அடையப் பெண்ணும்

ஒரு சிறந்த மனைவியைப் பெற ஆணும் அருந்தவம் இயற்ற வேண்டும்.

தவத்தினாலேயே கணவனுக்குத் தகுந்த மனைவியும் மனைவிக்குத் தகுந்த கணவனும் வாய்க்கும் என்ற தத்துவமும் இதில் வெளிப்படுகின்றது. காமதகனம் நடைபெற்ற பிறகே குமாரசம்பவம் ஏற்பட்டது என்பது காமம் நீங்கித் த்வயோகத்தால் பிள்ளை பெறுவதே சிறப்புடையது என்பதனைப் புலப்படுத்தும்.

  • தொடங்கியவர்

ma64_kamadahana.jpg

பழமையான நூல்களில் காட்டப்பட்டுள்ள காமதகனர் கோலம். அருகில் மன்மதனும் ரதியும்.

  • கருத்துக்கள உறவுகள்

காளிதாசன் குமாரசம்பவத்தைப் பக்திரசம் சொட்டச் சொட்ட எழுதவில்லை. சிருங்கார ரசமே அதி;ல் விரவிக் கிடக்கின்றது என்பர்.

உதாரணத்திற்கு மேற்குறித்த பார்வதியின் தவத்தின் அழகை அவன் பின்வருமாறு விளக்குகிறான்:

மழையில் நனைந்தபடி தவமியற்றும் பார்வதியின் கண்ணிமைகளில் விழுந்த மழைத்துளியானது நொடிப்பொழுதில் உருண்டு அவளின் அழகிய இதழ்களினூடாகத் தடித்து விம்மிய முலைகளில் விழுந்து சிதறும். அங்கிருந்து அது அவளின் மூன்றாய் மடிக்கப்பட்ட வயிற்றுப்பகுதியினூடாக உருண்டோடி நாபிக் கமலத்துள்ச் சென்று மறையும். என்கிறான்.

ஒரு மழைத்துளியின் போக்கிற்கே இத்தனை வர்ணனை. காவியம் முழுக்க எத்தனையுண்டோ நானறியேன். குமாரசம்பவம் மிக அழகிய காவியம். முடிந்தால் அதுபற்றி இங்கு எழுதுங்கள்.

சினும் பார்வதியும் இணைந்திருந்த நிலையை விளக்க அவன் அதை வார்த்தையும் அர்த்தமும் இணைந்திருக்கும் நிலைக்கு ஒப்பிடுகிறான்.

காமமில்லவிட்டால் இந்த இணைவு எதற்கு?

ஆக உலகத்து மானிடர்க்கு இறைவனதும் இறைவியினதும் காமக்கலப்பின் அழகு காட்டப்பட்டு அதன் முக்கியத்துவம் குமார சம்பவத்தில் கவிஞனால் வெளிப்படுத்தப்படுகின்றது.

  • தொடங்கியவர்

தமிழ் கந்தபுராணம் படியுங்கள் அதில் எந்த ரசம் இருக்கிறது என்றுத் தெரியும்.

  • கருத்துக்கள உறவுகள்

இந்தப் பொய் கந்தப் புராணத்திலும் இல்லையென்பார்கள். அதையா என்னைப்படிக்கச் சொல்கிறீர்கள். சரி. கிடைக்கும் போது படிக்கிறேன். திகட சக்கரம் திகழ்தசக்கரமெனப் பிரிக்கப்படவேண்டுமெனறு கச்சியப்ப சிவாச்சாரியார் வாதிட்டதையும். பூபாள ராகத்தில் இசைத்துப் பாடக்கூடிய கதிரவன் கிரணக் கையால் கடவுளைத் தொழுவான்... என்ற அழகிய பாடலையும் இன்னும் ஒரு சில பாடல்களையும் தவிர எனக்கு வேறு அதிகம் தெரியாது. முடிந்தால் கந்தப் புராணத்திலுள்ள அழகிய செய்யுள்களை இங்கே பதிவு செய்யுங்கள். பிரயோசனமாயிருக்கும்.

  • தொடங்கியவர்

அவசியம் பிரசுரம் செய்கிறேன் நண்பரே!

காமமே கொலைகட்கெல்லாம் காரணம், கண்ணோடாத

காமமே களவுக்கெல்லாம் காரணம், கூற்றும் அஞ்சும்

காமமே கள்ளுண்டற்கும் காரணம், ஆதலாலே

காமமே நரகபூமி காணியாக் கொடுப்பதாகும்

கருத்துடன் உடன்பாடு இல்லை. ஆனால் பாட்டு நல்லா இருக்கிது சுவாமிகள்..

  • தொடங்கியவர்

இன்று பல கொலைகளுக்கு காரணம் மண் ஆசை, பெண் ஆசை (காமம்). பொன் ஆசை(பொருள்) ஆகிய மூன்று காரணங்களுக்குத் தான். அதில் அதிகம் கொலைகள் நடப்பது காமத்தினால் தான். தினசரி நாளிதழ்களைப் பார்த்தாலே உண்மை புரியும்.

  • கருத்துக்கள உறவுகள்

தூமகேது புவிக்கெனத் தோன்றிய

வாமமேகலை மங்கையரால் வரும்

காமமில்லையெனில் கடுங்கேடெனும்

நாமமில்லை நரகமுமில்லையே

கம்பராமாயணம் - அயோத்தியாகாண்டம் - வசிட்டர் ராமனுக்கு அரசியலறம் கூறுதல்

  • தொடங்கியவர்

காமக் கட்டுப்பாடு

14 காரட் தங்கத்தை விட உயர்ந்த தர தங்கத்தை நகை செய்து அணியாதே என்கிறது தங்கக் கட்டுப்பாட்டு விதி. அதிகமான பிள்ளைகளைப் பெறாதே என்கிறது குடும்பக் கட்டுப்பாட்டு விதி. 30 ஏக்கருக்கு மேல் விளைநிலம் வைத்துக் கொள்ளாதே என்கிறது உச்ச வரம்புக் கட்டுப்பாட்டு விதி. இன்னும்பல கட்டுப்பாட்டு விதிகளிருக்கலாம். அவ்விதிகளை மீறுபவருக்குத் தண்டனையும் உண்டு. அவற்றைச் சில பல அரசியற் கட்சிகளும் ஆதரிக்கின்றன. காமக்கட்டுப்பாடு என்பதொன்று. அதுவே மக்கள் மக்களராய் வாழ உதவுது, ஆகலின் அக்கட்டுப்பாடு ஏனைய கட்டுப்பாடுகளை விட மிகவும் அவசியமானது.

காமம் கட்டுப்படுவதா? அன்றா? சாத்தன் ஒரு யெளவன புருஷன். அவனது குடும்பத்தில் அவனுக்குத் தங்கைமார், தமக்கைமார், புத்திரிமார் முதலிய பெண்டிர் இருக்கின்றனர். அடிக்கடி அவரைச் சந்திக்கிறான், அவரோடு அளவளாவுகிறான் அவன். அவன் ஒழுங்கீனனாயிருந்தாலுங் கூட அவரைச் சிறிதுங் காமக்கண்கொண்டு பாரான். சாத்தியும் ஒரு குடும்பப்பெண். அவளும் தன் தமையன் தம்பியாதியோரை அக்கண்கொண்டு பார்ப்பதில்லை. காமம் பொல்லாதது, ஆயினுங் கட்டுக்கடங்குவதே என்பது அதனால் தெரிகிறது. காமம் இயற்கையுணர்ச்சி, அதனைக் கட்டுப்படுத்தக் கூடாது, முடியாது எனப் பேசித்திரிபவன் சம்சயத்துக் கிடமாவான்.

  • தொடங்கியவர்

மண் பெண் பொன் என ஆசைகள் மூன்று. ஆண் எனவும் ஓராசை சொல்லப்படவில்லை. 'கண்டுகேட்டுண்டுயிர்த் துற்றறியுமைம்புலனு மொண்டொடிக் கண்ணே யுள' என்றார் திருவள்ளுவர். அவ்வனுபவம் பெண்டிர்க்கு ஆடவரிடம் உண்டு என அவர் பாடிலர். அதனால் பெண்டிர் கலியாணஞ் செய்து கொள்வதற்கு முன் காதலென்ற பேராலும், கலியாணம் ஆன பிறகு கணவன் ஆண்டுக்கணக்கில் வெளியூர் சென்று பிரிந்திருக்குங் காலத்தில் மறைந்த வெறியாலும், இள விதவையராய் விட்டால் அடங்காமையாலும் வரம்பழிந்து மானங்கெடமாட்டார் என்பது தெரிகிறது. கலியாண மாகாத பெண்கள் காதலை இலட்சியமாக வைத்து மகாநாடுகள் கூட்டிக் காதல்மண உரிமைத் தீர்மானம் போட்டனர், இளவிதவைகள் மகாநாடுகள் கூட்டி இரண்டாவது மூன்றாவது ஆடவரோடு வாழ்க்கை யொப்பந்தஞ் செய்து கொள்ளும் உரிமைத்தீர்மானம் போட்டனர் என்ற செய்திகள் பத்திரிகைகளில் வந்திருக்கின்றனவா? பொதுவாகப் பெண்டிருள்ளம் லஜ்ஜைக் கிடமானது. அ·தவர்பால் காமத்தைத் தலைதூக்க விடாது. 'இவ் விஷயத்தில் பெண்களை விட ஆடவரே பெரிய குற்றவாளிகள். காமத்தினால் கண்மண் தெரியாது போகும் ஆடவன் ---', 'ஆடவன் பெண்ணின் நன்மையைக் கோருவதானால் தன்னை அடக்கிக் கொள்ளட்டும். வலிய வந்து இழுப்பது அவளல்ல, அவனேயாகையால் உண்மையில் குற்றவாளி அவனே', 'ஆடவனைப் போல் பெண்ணுக்கு அவ்வளவு சிற்றின்பப் பைத்தியம் உண்டென்று நான் எண்ணவில்லை. புலன்களை அடக்குதல் அவனைவிட அவளுக்குச் சுலபம்', 'என்னிடமுள்ள ஆதாரங்க ளெல்லாம் பெண்ணைவிட ஆணுக்கே தன் ஆசைகளை அடக்கும் சக்தி குறைவு என்பதைக் காட்டுகின்றன' என்றார் காந்தியார். அத்தகைய பெண்ணுலகிற்குப் பரிந்து பேசச் சில ஆடவர் தலைப்பட்டிருக் கின்றனர். காதல் மணமே சிறந்தது. பல பெண்கள் தம் பெண்ணியலிலிருந்து நழுவுவதற்கு அதுவே காரணம். ஆயினும் கலியாணம் ஆகாத காலத்தும், கணவன் பிரிந்திருக்குங் காலத்தும், இளமையில் வைதவ்வியம் அடைந்த காலத்தும் தம் பிறப்புரிமையாகிய அச்சம், நாணம், மடம், பயிர்ப்பு என்னும் பெண்ணியல்பால் மேம்பட்டு உத்தமிகளாய் வாழ்ந்து வரும் பெண்ணரசிகள் இலட்சோப லட்சமாக இன்றும் உள்ளனர்.

  • தொடங்கியவர்

'ஒருவன் தன் மிருக விச்சைகளை முழுதும் அடக்கியாகிவிட்டால் அவனுக்குத் தெரியாமலே வீரியம் போவதற்கு இடமில்லாமற் போய்விடவும், போகவிச்சையினால் கூடுதல் அறவே நின்று போகும். அப்பொழுதுபிள்ளை வேண்டுமென்ற ஆசை பிறக்கையில் மட்டுமே கலவி நடக்கும். இல்லற பிரமசரியம் எனப்படுவது இதுவே. அதாவது, இந்த விதியின்படி நடப்பவன் இல்லறத்தி லிருப்பினும் சுகபோகத்தில் சிறிது ஈடுபடாதவன் நிலையை எய்தி, அவனுக்குச் சிறிதும் குறையாத மகிமை பெற்றிருப்பான். ஏனெனில் இவன் பிள்ளையைக் கருதியின்றி வெறும் சிற்றின்பத்திற்காகக் கலவி புரியவே மாட்டான்' என்றார் காந்தியார். கணவன் மனைவியை மாத்திரங் காமக்கண்கொண்டு பார்க்கலாம். அதுவும் அவர் சொன்ன பிரமசரிய விரதத்துக்குப் பங்கமில்லாமலிருக்க வேண்டும். அதுவே குடும்ப வாழ்க்கை, இல்லற வாழ்க்கை, அக் குடும்பங்களே நாட்டில் மிக வேண்டும். மிகுவிப்பது காமக் கட்டுப்பாடொன்றே.

அவ் வாழ்க்கைக்குப் பிரதிகூலங்களே இப்போது அதிகங் காணப்படுகின்றன. வீசிய நடை, ஆடம்பர வுடை, மமதையைப் புலப்படுத்தும் பாவனை, சுவையும் மணமும் ஏற்பட்டால் எதனையுந் தின்னும் ஆசை, புகையை யுறிஞ்சி யூதி யுமிழ்தல், கலவி நிர்வாணப் படங்களைக் கண்டு களித்தல், ஆண் பெண் அணைப்புக் கேற்ற இசைப் பாடல்களைக் கேட்டு மகிழ்தல், காமக்கதைப் புத்தகங்களைப் படித்துப்பூரித்தல், ஸினிமாக்களில் நடன்நடிகளின் அணைப்புக்களைக்கண்டு ஏங்குதல் முதலியன காமத்தைக் கட்டுப்படுத்த உதவாமல் காந்தியார் சொன்ன பிரமசரியத்தைச் சிதைக்கவே உதவுகின்றன. அவை நன்மக்கட்குத் தேவையா?

  • தொடங்கியவர்

அவற்றுள் புலாலுணவு மாத்திரம் சில விலங்கு பறவைகளிடமுண்டு. மற்றவையெல்லாம் மனிதரிடமே யுள்ளன. அவை அவருக்கு எவ்வகையில் கெளரவம் அளிப்பன?

மிருகங்கள் காமத்தாற்கூடிக் குட்டி போடுகின்றன. அக்குட்டிகள் தாய்ப் பெட்டைகளின் பராமரிப்பில் வளர்கின்றன. அதுபோற் பெற்ற ஆண் இவனெனத் தெரியாமல் பிள்ளைகளைப் பெற்றுத் தோளி லொன்றும், இடுப்பி லொன்றும், கைப்பிடியி லொன்றுமாகச் சுமந்து திரியும் தாய்ப் பெண்கள் மனித வர்க்கத்திலுமுளர். மனித சமுகத்திற்கு அது மானக் கேடு. காமக் கட்டுப்பாடின்மையே அதற்குக் காரணம்.

காம மிகுதி மிருக வியல்பு என்று சொல்லப்படுகிறது. ஆனாலும் அவற்றிடம் இயற்கைக் கட்டுப்பாடு உண்டு. 'மிருகங்கள் விதியை மீறுவதே இல்லை. மனிதனுக்கு மீறவோ, கட்டுப்படவோ - இடமிருப்பதால் மீரும் பெரும் பிழையைச் செய்து வந்திருக்கிறான்' என்றார் காந்தியார். ஆடவர் கட்டுப்பாட்டை மீறுவதே பெரும்பான்மை என்பது அதனால் தெரிகிறது. பெண்டிற் பெரும்பாலும் அடக்க முடையாரென்பதுந் தெரியலாயிற்று. அவர் பொருட்டாயின் கலியாணம் என்பதே வேண்டாம். ஆடவர் கட்டுக் கடங்காத காரணத்தால் அவர்பொருட்டே கலியாணம் மனிதவர்க்கத்துள் உளதாயிற்று. கலியாணத்தின் நோக்கமே காந்தியார் சொன்னபடி ஆடவன் காமத்தைக் கண்ட விடத்திற் செல்லவிடாமற் கட்டுப்படுத்தி மனைவியுடன் பிரமசரிய விரதத்தில் வாழ்வது என்பது தான் அவன் கலியாணத்தாற் கொண்ட மனைவியும் அவனுக்கு அவள் வயிற்றிற் பிறந்த பிள்ளைகளும் அவன் பொறுப்பில், மேற் பார்வையில் இருந்து வருவர். கலியாணத்தின் அந்த நோக்கம் இப்போது போயிற்று. அதுவுங் காம விளையாட்டுக்கா மென்ப தாயிற்று.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

காமத்தை வென்றவர் யார்?

காஞ்சி கோமணக்கொடி ரெட்டையர்கள் :):D

  • தொடங்கியவர்

காமக் கட்டுப்பாட்டுக்கு பிரதிகூலங்களாயுள்ளன சில சொல்லப்பட்டன. அவையும் அவை போன்றவையும் மாறவேண்டும். அனுகூலமான சூழ்நிலைகள் வேண்டுமட்டில் அமைய வேண்டும். 'கற்பவை', 'இலங்கு நூல்' எனத் திருவள்ளுவர் வரையறுத்த நூற் பயிற்சியே மிக வேண்டும் 'எல்லா மதங்களுமே காமத்தை மனிதனது பெரும் பகையென்று கருதுகின்றன; கோபமும் துவேஷமும் அடுத்தபடியில் இருப்பவையே. இவை காமத்திலிருந்தே விளைவதாக கீதை கூறுகிறது' என்றார் காந்தியார். அதன்படி சமய நெறி நிற்றல் என்ற அறம் பரவுதற்கு இடம் தரப்பட வேண்டும். 'இப் புலனடக்கம் கடவுள் அருள் இருந்தாலல்லது நமக்குக் கைவராது' என்றும் அவர் சொன்னார். அதில் இரட்டை எதிர்மறை யிருக்கின்றது. காமக்கட்டுப்பாட்டுக்கு மிகவும் இன்றியமையாதது ஈசுரோபாசனையால் அவனருளைப் பெறுதல் என்பது புலனாம்.

  • கருத்துக்கள உறவுகள்

காஞ்சி கோமணக் கொடி இரட்டையர்கள் என்று சொல்ல வேண்டிய அவசியமில்லை. காஞ்சி காமகோடி பீடத்து ரெட்டையர்கள் என்றே சொல்லலாம. அதுவே மிகப் பொருத்தமாயிருக்கிறது.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

காஞ்சி கோமணக் கொடி இரட்டையர்கள் என்று சொல்ல வேண்டிய அவசியமில்லை. காஞ்சி காமகோடி பீடத்து ரெட்டையர்கள் என்றே சொல்லலாம. அதுவே மிகப் பொருத்தமாயிருக்கிறது.

அவர்கள் தான் காமகேடிகளாயிற்றே :) இந்துக்களின் காவலர்கள் என இந்திய அரசின் முதல் குடிமகன் பிரதமர் என பலரும் நின்று கொண்டிருக்க இந்த இரட்டை உட்கார்ந்து கொண்டு நடத்திய கூத்துகள் அடுக்குமா?

இந்த இரட்டைகள் பெட்டைகளுடன் நடத்திய காமக்களியாட்டம் பற்றி செய்திகள் வெளிவந்து சந்தி சிரித்தது.

  • தொடங்கியவர்

ஞானிகளும் காமத்தை வெல்லாவிட்டால் அனைவராலும் எள்ளி நகையாடப்படுவார்கள். :(

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.