Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

hybrid முளையம் சட்ட அங்கீகாரம் பெறுகிறது.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

_44670185_hybrid_embryo_466.gif

பிற விலங்கு முட்டையில் (மாடுகளின் முட்டை) இருந்து மனித முளையத்தை உருவாக்கும் உயிரியல் தொழில்நுட்ப முறை மாதிரி வரைபடம்.

hybrid embyro (கலப்பு முளையம்) எனப்படும் வேறு இன விலங்கின் முட்டையில் இருந்து ஆய்வுசாலை முறையின் கீழ் அதன் கருவை அகற்றிவிட்டு அதற்குப் பதிலாக மனித கலக்கருவை அதனுள் செலுத்தி அதனை முளையமாக வளர்த்து அவற்றிலிருந்து மூளை, இதயம், தோல் போன்ற முக்கியமான உறுப்புக்களுக்குரிய இழையங்கள் மற்றும் இழையங்கள் உட்பட பலவற்றை மாற்று அறுவைச் சிகிச்சைகளுக்கும் இதர நோய்களுக்கு எதிரான சிகிச்சை நோக்கங்களுக்காகவும் மற்றும் மூலவுயிர்க்கல ஆய்வுகளுக்காகவும் பாவிக்கும் நோக்கில் உற்பத்தி செய்ய பிரித்தானிய சட்டவாக்க சபையான அதன் நாடாளுமன்றம் அங்கீகாரம் அளித்துள்ளது.

உலகில் hybrid embyro உருவாக்கத்துக்கு எதிராக கிறிஸ்தவ மற்றும் மதம் சார் அமைப்புக்கள் கடும் எதிர்ப்புத் தெரிவித்து வரும் நிலையிலும் மனித முட்டைக்கு ஆய்வுசாலைகளில் கடும் தட்டுப்பாடு எழுந்துள்ள நிலையிலும்.. மனித முளையங்கள் இவ்வாய்வின் பின் அழிக்கப்படுவது குறித்தும் சர்ச்சைகள் இருந்து வந்துள்ள நிலையிலும் பிரித்தானிய அரசின் இச்சட்டவாக்கம் உலகுக்கு முன்மாதிரியாக அமைகின்றது..!

இந்த அனுமதி உயிரியல் தொழில்நுட்பத்துறையில் மருத்துவரீதியான முளையவியல் மற்றும் உறுப்புக்களின் ஆக்கம் தொடர்பான ஆய்வுகளில் குறிப்பிடத்தக்க வளர்ச்சியை எட்ட உதவும். இருப்பினும்...

இந்த வகையில் மனிதக் குழந்தையை உருவாக்க அனுமதிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

source: http://kuruvikal.blogspot.com/

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எனக்கு ஒரு சந்தேகம் இந்த முளையம் என்ன வடிவில் உருப்பெறும் மனிதவடிவிலா? அல்லது மாடு வடிவிலா? அல்லது இரண்டும் கலந்த வடிவிலா? அல்லது இதயம், இழயம் என தனித்தனியாக வளரமுடியுமா? இந்த சந்தேகத்தை குருவியால்தான் போக்க முடியும் , குருவிதான் யாழ்பக்கம் பறப்பதில்லையே யாரிடம் கேட்பது?

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

எனக்கு ஒரு சந்தேகம் இந்த முளையம் என்ன வடிவில் உருப்பெறும் மனிதவடிவிலா? அல்லது மாடு வடிவிலா? அல்லது இரண்டும் கலந்த வடிவிலா? அல்லது இதயம், இழயம் என தனித்தனியாக வளரமுடியுமா? இந்த சந்தேகத்தை குருவியால்தான் போக்க முடியும் , குருவிதான் யாழ்பக்கம் பறப்பதில்லையே யாரிடம் கேட்பது?

இதற்கு விடை சொல்ல குருவி அவசியம் இல்லை என்று நினைக்கிறன்.

முளையத்தில் மாட்டு முட்டையின் குழியவுரு (cytoplasm) மட்டுமே மாட்டின் பங்கில் பாவிக்கப்படுகிறது. மனிதனின் இருமடிய நிலைக் கரு மாட்டின் முட்டையுள் செலுத்தப்பட்டு மனித முளையமே உருவாக்கப்படும்.

கருவில் உள்ள நிறமூர்த்தங்களில் உள்ள டி என் ஏ யே முளையத்தின் இயல்புகளைத் தீர்மானிக்கப் போகிறது. எனவே முளையம் முழு விருத்தி காணின் மனித உருவிலேயே அமையும்..!

உண்மையில் இங்கு அவர்கள் மூலவுயிர்ப்படைகலங்கள் வரை கலப்பு நுகம் என்ற தனிக்கலத்தை விருத்தி செய்து அதன் பின்னர் குறித்த மூலவுயிர்க்கலங்களை மனித அங்கங்களின் இழையப்பகுதிக்குள் செலுத்தி.. நோயால் பாதிக்கப்பட்ட பகுதிகளை சீர்செய்கின்றனர்.

அண்மைய மூலவுயிர்க்கல ஆய்வின் கீழ் இதயத்தில் உள்ள வால்வுகளை உருவாக்கி இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மூலவுயிர்க்கலங்களில் இருந்து புறத்தோற் படை.. இடைத்தோற்படை மற்றும் அகத்தோற்படை என்று 3 பிதாரன கலவகைகள் உருவாகி அவற்றில் இருந்து தனித்துவமான இழையங்கள் (பல கலங்கள் இணைந்த உருவாகும் நிலை) உருவாகி அவை அனைத்தும் இணையும் போது அங்கம் உருவாக்கப்படும்.

முட்டையின் பிளவு சுயாதீனமானதன்றி தூண்டப்பட்ட பிளவாக இருப்பதால்.. முட்டையின் குழியவுரு பிளவுத்தளத்தில் செய்யும் செல்வாக்கு குறைக்கப்பட்டிருக்கும்.

இங்கு அனைத்துமே இயற்கையினதே. மனிதன் செய்வது.. ஒன்றை இன்னொன்றுக்குள் புகுத்துவது மட்டுமே. இது கடவுளின் (இயற்கையின்) படைப்புக் கொள்கைக்கு எதிரானதல்ல. மனிதன் எதனையும் படைக்கவில்லை. ஒன்றை இன்னொன்றுக்குள் இடமாற்றி வளர்க்கிறான் அவ்வளவும் தான்..!

இங்கு முட்டை விந்து என்ற நிலை இல்லை. முட்டை விந்து என்ற நிலை இல்லாததால்.. இக்கலங்களில் இருந்து உருவாகும் முளையம் பிரதான கரு எங்கிருந்து பெறப்பட்டதோ அவ்வகை இயல்பைக் காண்பிக்கும். முட்டையும் விந்தும் கருக்கட்டும் போதே மாறல்கள் உருவாகின்றன. அவைதான் கூர்ப்புக்கு வழி வகுக்கின்றன..! :)

Edited by nedukkalapoovan

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

சுடுவதில் சுகம் ஒரு பேப்பரில் நெடுக்காலை போவானின் இந்தக் கட்டுரையை சுட்டுப் போட்டிட்டு நன்றிகள் குருவிகள் என்று வேறு ஒருவரின் பெரை போட்டிருக்கிறாங்கள் பாவிகள் :unsure::lol:

http://www.orupaper.com/files/issues/94/K_...n_pages__30.pdf

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சுடுவதில் சுகம் ஒரு பேப்பரில் நெடுக்காலை போவானின் இந்தக் கட்டுரையை சுட்டுப் போட்டிட்டு நன்றிகள் குருவிகள் என்று வேறு ஒருவரின் பெரை போட்டிருக்கிறாங்கள் பாவிகள் :lol::D

http://www.orupaper.com/files/issues/94/K_...n_pages__30.pdf

அவர்கள் இத்தடவை அனுமதி கேட்டுத்தான் போட்டார்கள். குருவிகளின் வலைப்பூவில் இருந்ததால் அவரின் பெயரைக் குறிப்பிட்டுள்ளார்கள். அதுதான் பொருத்தமானதும் கூட. குருவிகளின் வலைப்பூவில் அவரின் அனுமதியோடு அவரின் நுளைவுச் சொல்லுடன் நானும் பதிவுகளை இடுறனான்..! :)

நன்றி சாத்திரி அவர்களே. உங்களின் அக்கறைக்கு...! :lol:

-------------

இருந்தாலும் இன்னோர் இடத்தில் சுட்ட செய்தியில்... சில வசனங்களை மாற்றிவிட்டு.. மூலம் பிபிசி என்று சொல்லியும் போட்டுள்ளனர்..! பிபிசி/தமிழில் இச்செய்தி இடம்பெற்றதாகத் தெரியவில்லை. பிபிசி என்பது ஆங்கில செய்தி சேவைக்குரிய தளம். அங்கு செய்திகளைப் பெறுவது தவறல்ல. ஆனால் அது தமிழில் இருந்தது என்பது ஏற்கக் கூடியதல்ல.

இருப்பினும் எம்மக்களுக்கு செய்திகள் தாய் தமிழில் கொண்டு செல்லப்படுகிறது என்பதில் இவற்றில் அதிகம் நுணுக்கம் பார்க்க வேண்டும் என்றதில்லை..! மன்னிக்கலாம்..! :lol:

தொற்றுக்களைத் தடுக்கும் புதிய மருந்து: http://www.orupaper.com/files/issues/94/K_...n_pages__43.pdf

இதே செய்தி இப்படி இங்குண்டு: http://kuruvikal.blogspot.com/2008/05/mrsa-superbug.html

(அவர்கள் விட்ட பிழை ஒன்றே அவர்களைக் காட்டிக் கொடுத்தது. அதாவது.. உயிரியற் பெயரீட்டுக்குரிய பெயர்கள் அச்சில் விடப்படும் போது சரிவு எழுத்துக்களில் அமைய வேண்டும் என்பது உயிரியல் பெயரீட்டின் விதி. அதைக் குருவிகள் தனது பதிவில் கடைப்பிடித்திருந்தார். ஆனால் ஒரு பேப்பர் தவறிவிட்டது. வசனங்களை மாற்றி அமைப்பது போல அதனையும் செய்துவிட்டது..! எதிர்காலத்தில் கவனிக்கவும்..! மக்களுக்கு செய்திகள் சரியான வடிவத்தில் போக வேண்டும் என்பதில் அவதானம் வேண்டும்..!)

இவற்றையும் அவர்களின்(ஒரு பேப்பர்) தாழ்மையான புதிய அணுகுமுறையும் கருத்தில் கொண்டு எதிர்காலத்தில் எம்மிடம் அனுமதி பெறாமலே செய்திகளைப் போட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதற்கு முக்கியமாக குருவிகளிடம் அனுமதி பெறப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது. அவர்களும் (ஒரு பேப்பர்) எதிர்காலத்தில் கூடிய அளவு வெளிப்படையாக நடந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கலாம்..! மற்றும்படி அவர்களின் தமிழில் அறிவியல் செய்திகளை மக்களிடம் கொண்டு செல்ல வேண்டும் என்ற அக்கறையை நிச்சயம் பாராட்ட வேண்டும். அப்போதுதான் தமிழ் மொழிக்கும் அறிவியற் சொல்லாடல் வளம் அதிகரிக்கும் அறிவியலில் மொழியின் பயன்பாடு நிலைக்கும். :)

வாசகர்களுக்கு: வாசகர்கள் மத்தியில் குறிப்பிட்ட துறைகளில் மிகவும் பரீட்சயமானவர்கள் இருப்பார்கள். அவர்கள் எமது மொழிபெயர்ப்புக்களில் அல்லது ஆக்கங்களில் இடம்பெற்றிருக்கக் கூடிய தவறுகளை.. அல்லது செய்ய வேண்டிய திருத்தங்களைச் சுட்டிக்காட்டுவதும் எதிர்பார்க்கப்படுகிறது. சில சந்தர்ப்பங்களில் எம்மை அறியாமலே தவறுகள் இடம்பெற்றிருக்கலாம். அவை திருத்தப்பட வாசகர்கள் உதவ வேண்டும். அது வாசகர்களின் அறிவியல் அறிவுத்திறனை மட்டும் காட்டாது.. மக்களுக்கு சரியான தகவல்கள் போவதை உறுதி செய்ய உதவும்..! :unsure:

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஐயோ நெடுக்கு சாமி!

எங்களுக்கு யார் குத்தினாலும் அரிசியானால் சரி என்பதே தற்போதைய நிலைப்பாடு :lol:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஐயோ நெடுக்கு சாமி!

எங்களுக்கு யார் குத்தினாலும் அரிசியானால் சரி என்பதே தற்போதைய நிலைப்பாடு :unsure:

இது தற்போதைய நிலைப்பாடல்ல.. தமிழர்களின் பாரம்பரிய நிலைப்பாடு.

எவனோ.. குத்துவான். நாங்கள் வறுகி உண்ணுவம் என்று காத்திரிக்கும் சோம்பேறித்தனம் என்று கூடச் சொல்லலாம் அல்லவா..??! தமிழர்கள் சுயமா முன்னேறாமல் இருக்க இதுவும் ஒரு காரணம்..! அடுத்தவன்ர வாயைப் பார்த்திட்டு இருக்கிறது..! :unsure::lol:

நாங்கள் எதிர்பார்க்கிறது.. மக்களிடம் அறிவியல் அறிவைப் பெறுவதில் ஆர்வம் வளர வேண்டும்.. அதில் அவர்களின் சுய பங்களிப்புக்கள் அதிகரிக்க வேண்டும் என்பது. ஆங்கில இலவசப் பத்திரிகைகளை எடுத்தால் அறிவியல் என்பது குறைந்தது இரண்டு மூன்று பக்கங்களை அலங்கரிக்கும். ஆனால்.. எம்மவர்களின் நிலை.. நகைக்கடை, சினிமா விளம்பரங்களாகத்தான் இருக்கிறது..! :lol:

Edited by nedukkalapoovan

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.