Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

கிழக்கில் புலிகளின் நிலைகளைக் கண்டறிவதில் சவால்களை எதிர்கொள்ளும் சிங்களப் படை

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கிழக்கில் இருந்து விலகிச் சென்ற ஜெயந்தன் படையணியை புலிகளின் தலைமைப்பீடம் மீண்டும் கிழக்கிற்கு அனுப்பி வருவது உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் மட்டக்களப்பிலும், திருகோணமலையிலும், அம்பாறையிலும் தாக்குதல்கள் தீவிரமடைந்துள்ளன. கிழக்கு மாகாணசபைத் தேர்தல் காலத்தில் பாதுகாப்பு என்றுமில்லாதவாறு பலப்படுத்தப் பட்டிருந்தது. ஆனால், தேர்தல் முடிந்த மறுநாள் 11 ஆம் திகதி மட்டக்களப்பு அரசடியிலும், 16 ஆம் திகதி நாவற்குடாவிலும், 20 ஆம் திகதி அரசடியிலும் வைத்து தலா ஒவ்வொரு பொலிஸார் என மொத்தம் மூன்று பொலிஸார் சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளனர். அதுவும் பாதுகாப்பு பலப்படுத்தப் பட்டிருந்த நிலையில்!

அதேநேரம், வன்னியில் அப்பாவிப் பொதுமக்கள் மீது தாக்கதல்கள் நடத்தப்பட்டு பலியெடுக்கும் படலம் தெடர்வதை தடுத்து நிறுத்துவதற்காக தென்னிலங்கையிலும் தாக்குதல்களை நடத்த வேண்டியதொரு நிலை புலிகளுக்கு விரும்பியோ விரும்பாமலோ ஏற்பட்டிருப்பது யாவரும் அறிந்த உண்மையே.

மேலதிகமாக விபரம்:

http://www.swissmurasam.info

அடி முடி தேடிய கதைதான். தமிழர் இல்லாத இடங்களிலேயே புலிகள் இருக்கும்போது, தமிழரின் பிரதேசத்தில் புலிகள் இருக்க மாட்டார்களா?

  • கருத்துக்கள உறவுகள்

" எங்கும் செல்வோம், எதிலும் வெல்வோம் " - ஜெயந்தன் படையணி !

Edited by ragunathan

அடமழை பெய்தாத்தான் பயிர் வளரும்...

  • கருத்துக்கள உறவுகள்

புலிகளின் மிகச்சிறந்த படையணிகளில் ஒன்று தான் ஜெயந்தன் படையணி. அவர்கள் தற்போது ஒருங்கிணைக்கப்பட்டு மிக வேகமாக முன்னேறி வருகிறார்கள். ரகு சொன்னது போல் ஜெயந்தன் படையணிக்கு நிகர் அவர்களே.

காடுகளில் சண்டை பிடிப்பதுக்கும் இவர்கள் தேர்ச்சி பெற்றவர்கள்......

  • கருத்துக்கள உறவுகள்

:icon_mrgreen: ஜயசிக்குறு எதிர்ச் சமரிலும், ஒயாத அலைகள் நான்கிலும், முக்கியமாக ஆனையிறவு பெருஞ் சமரிலும் புலிகளின் அதிரடித் தாக்குதல் அணிகளில் ஒன்றாகச் செயற்பட்டதுதான் இந்த ஜெயந்தன் படையணி. பின்னர் கருணாவினை கிழக்கிலிருந்து அகற்றும் கொமாண்டோ ரகத் தாக்குதலிலும் பங்கு கொண்டு வெற்றி வாகை சூடியது.

அவர்களின் தாரக மந்திரமே " எங்கும் செல்வோம், எதிலும் வெல்வோம் " என்பது.

  • கருத்துக்கள உறவுகள்
:icon_mrgreen: மறைந்த மாமனிதர் சிவராம் தாரகி, இந்த ஜெயந்தன் படையணியின் கருணாவைக் கிழக்கிலிருந்து அகற்றும் நடவடிக்கை பற்றி ஒரு கட்டுரை வரைந்திருந்தார். அதில் களங்களில் மிக வேகமாக முன்னேறி எதிரிக்கு சுதாரிக்கக் கூட நேரம் வழங்காமல் அவர்களை நிலை குலையச் செய்து அழிக்கும் தாக்குதல் உத்தியை வன்னிக்கு 4 வருடங்களாக சென்றிருக்காத கருணா அறிந்திருக்கவில்லை என்றும், அவ்வாறான ஒரு தாக்குதலில்த்தான் கருணா துண்டைக் காணோம் துணியை காணோம் என்று ஓட வேண்டி வந்தது என்றும் குறிப்பிட்டிருந்தார். அன்று அந்தத் தாக்குதலை நடத்தியது இந்த "ஜெயந்தன் படையணிதான் !

ஏற்கனவே அம்பாறை மாவட்டத்தின் கஞ்சிக்குச்சாறு காட்டில் நிலைகொண்டு அம்பாறை மாவட்டத்திலும் சிங்கள மாவட்டங்களிலும் தாக்குதலை மேற்கொண்டு எதிரிக்கு தலையிடியைக் கொடுத்து வருகிறது சாள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணியின் ஒரு அணி. ஜெயந்தன் படையணியும் தென்தமிழீழத்தில் தனது செயற்பாட்டை மீளத் தொடக்கினால் படையினர் கடுமையான நெருக்கடிகளை எதிர்நோக்க வேண்டியிருக்கும். விடுதலைப் புலிகளின் தாக்குதல்கள் கிழக்கில் அதிகரிக்குமிடத்து வடக்கிலிருந்து மேலதிக படையினரை கிழக்கிற்கு நகர்த்த வேண்டிய தேவை படைத்தரப்பிற்கு கட்டாயம் ஏற்படும்.

  • கருத்துக்கள உறவுகள்

:) புலிகளின் சகல தாக்குதல் அணிகளும் கிழக்கிற்கு வந்தேயாக வேண்டும். அங்கு மிகப்பெரிய மண் மீட்புப் போரொன்று காத்திருக்கிறது.

அடமழை பெய்தாத்தான் பயிர் வளரும்...

சூராவளி !

நீங்கள் எந்த அடமழையைச் சொல்லுறீங்கள் ?

நீங்கள் நினைக்கும் அதே அடமழைதான் ரகுநாதன்....

Edited by Sooravali

  • கருத்துக்கள உறவுகள்

நீங்கள் எந்த அடமழையைச் சொல்லுறீங்கள் ?

ஸெல் மழை தானே :) .

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.