Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

மன்னாரில் நான்கு முனை முன்நகர்வுகள் முறியடிப்பு: 20 படையினர் பலி. பல படையினர் காயம்.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

மன்னாரில் நான்கு முனை முன்நகர்வுகள் முறியடிப்பு: 20 படையினர் பலி. பல படையினர் காயம்.

[ திங்கட்கிழமை, 09 யூன் 2008, 02:11.31 AM GMT +05:30 ] [ புதினம் ]

மன்னார் மாவட்டம் பெரியமடுப் பகுதியில் நான்கு முனைளில் சிறிலங்காப் படையினர் மேற்கொண்ட முன்நகர்வுகள் தமிழீழ விடுதலைப் புலிகளால் முறியடிக்கப்பட்டுள்ளன. இதில் 20-க்கும் அதிகமான படையினர் கொல்லப்பட்டுள்ளதுடன் பெரும் தொகையான படையினர் படுகாயமடைந்துள்ளனர்.

பெரியமடுப் பகுதி ஊடாக நேற்று ஞாயிற்றுக்கிழமை முற்பகல் 10:00 மணி தொடக்கம் சிறிலங்காப் படையினர் முன்நகர்வுகளை மேற்கொண்டனர்.

படையினரின் பின்தளங்களில் இருந்து ஆட்லெறி எறிகணை மற்றும் பல்குழல் வெடிகணைத் தாக்குதல்கள் நடத்த, டாங்கிப் படையினரின் உக்கிர தாக்குதலுக்கு மத்தியில் படையினர் முன்நர்வுகளை மேற்கொண்டனர்.

பெரியமடு இடதுகரை குளக்கட்டுப் பக்கமாக முன்னேறிய படையினர் மீது 8:00 மணி நேரம் விடுதலைப் புலிகள் உக்கிர தாக்குதலை நடத்தினர்.

இதில் விடுதலைப் புலிகளின் பொறிவெடியிலும் மிதிவெடியிலும் சிக்கியும், ஒருங்கிணைத்த மோட்டார் எறிகணைத்தாக்குதலில் சிக்கியும், எதிர்த்தாக்குதலிலும் படையினர் பலத்த இழப்புக்களுடன் முன்நகர்வு முயற்சிகளைக் கைவிட்டனர்.

அதேநேரம், மன்னார் பெரியமடுக்குளத்திற்குத் தென்பக்கமாக சிறிலங்காப் படையினருக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையில் உக்கிர எதிர்த்தாக்குதல் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது.

அப்பகுதி ஊடாக முன்நகர முயற்சித்த படையினரை விடுதலைப் புலிகள் தடுத்து நிறுத்திப் படையினருக்குப் பலத்த இழப்புக்களை ஏற்படுத்தி வருகின்றனர்.

இதனிடையே பாலம்பிட்டியில் இருந்து பெரியமடு நோக்கிய முதன்மை வீதி ஊடாகவும் சிறிலங்காப் படையினர் டாங்கிகளின் பலத்த தாக்குதலுடனும் எறிகணைச் சூட்டாதரவுடனும் முன்நகர்வினை மேற்கொண்டுள்ளனர்.

படையினரின் முன்நகர்வுகளுக்கு எதிராக விடுதலைப் புலிகள் தீவிர எதிர்த்தாக்குதலை நடத்திப் படையினருக்குப் பாரிய உயிரிழப்புக்களை ஏற்படுத்தியுள்ளனர்.

தற்போதும் இருமுனைகளில் தாக்குதல் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது.

இத்தாக்குதல்களில் இதுவரை 20-க்கும் அதிகமான படையினர் கொல்லப்பட்டுள்ளதுடன் பெரும் தொகையான படையினர் படுகாயமடைந்துள்ளனர்.

படுகாயமடைந்த பெருமளவிலான படையினரைப் பின்தளங்களில் இருந்து பலமுறை வான்படையின் உலங்குவானூர்திகளில் ஏற்றிச் சென்றுள்ளனர்.

tamilwin.com

  • கருத்துக்கள உறவுகள்

திங்கள் கிழமை நல்லாத்தான் ஆரம்பிச்சிருக்குது.

மன்னாரில் படையினரின் பெருமெடுப்பிலான முன்நகர்வு முறியடிப்பு: 15 படையினர் பலி- 40 பேர் காயம்

[திங்கட்கிழமை, 09 யூன் 2008, 08:29 பி.ப ஈழம்] [வவுனியாவிலிருந்து த.சுகுணன்]

மன்னாரில் சிறிலங்காப் படையினர் மேற்கொண்ட பெருமெடுப்பிலான முன்நகர்வு தமிழீழ விடுதலைப் புலிகளால் முறியடிக்கப்பட்டுள்ளது. இதில் 15 படையினர் கொல்லப்பட்டுள்ளதுடன் 40 பேர் காயமடைந்துள்ளனர் என்று தமிழீழ விடுதலைப் புலிகளின் இராணுவப் பேச்சாளர் இராசையா இளந்திரையன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் "புதினம்" இணையத்தளத்திற்கு அவர் மேலும் கூறியுள்ளதாவது:

மன்னார் ஆலங்குளத்தில் இருந்து இன்று திங்கட்கிழமை அதிகாலை 5:30 மணிக்கு செறிவான எறிகணைச் சூட்டாதரவுடன் வட்டக்கண்டல் நோக்கி சிறிலங்காப் படையினர் பாரியளவில் முன்நகர்வுத் தாக்குதலை நடத்தினர்.

இம் முன்நகர்வுத் தாக்குதலுக்கு எதிரான முறியடிப்புத் தாக்குதல் விடுதலைப் புலிகளால் தீவிரமாக நடத்தப்பட்டது.

முற்பகல் 10:00 மணிவரை நடைபெற்ற தீவிர முறியடிப்புத் தாக்குதலில் படையினர் இழப்புக்களுடன் பின்வாங்கி ஓடிவிட்டனர்.

இதில் 15 சிறிலங்காப் படையினர் கொல்லப்பட்டுள்ளனர். 40 படையினர் காயமடைந்துள்ளனர் என்றார் அவர்.

புதினம்

  • கருத்துக்கள உறவுகள்

திங்கள் கிழமை நல்லாத்தான் ஆரம்பிச்சிருக்குது.

:rolleyes::rolleyes:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இல‌ங்கை‌யி‌ல் கடு‌ம் மோத‌ல்: 35 படை‌யின‌ர் ப‌லி- பல‌ர் படுகாய‌ம்!

திங்கள், 9 ஜூன் 2008( 13:31 IST )

இல‌ங்கை‌யி‌ல் த‌மி‌‌ழீழ ‌விடுதலை‌ப் பு‌லிகளு‌க்கு‌ம் ‌சி‌றில‌ங்க‌ப் படை‌யினரு‌க்கு‌ம் இடை‌யி‌ல் நட‌‌ந்த கடு‌ம் மோத‌லி‌ல் 35‌க்கு‌ம் மே‌ற்ப‌ட்ட படை‌யின‌ர் கொ‌ல்ல‌ப்ப‌ட்டு‌ள்ளதுட‌ன், பல‌ர் படுகாயமடை‌ந்து‌ள்ளன‌ர்.

இல‌ங்கை‌யி‌ல் ம‌ன்னா‌ர், மணலாறு பகு‌திக‌ளி‌ல் உ‌ள்ள த‌மி‌ழீழ ‌விடுதலை‌ப் பு‌லிக‌ளி‌ன் ‌‌நிலைக‌‌ளி‌ன் ‌மீது நே‌ற்று அ‌திகாலை முத‌ல் ‌சி‌றில‌ங்க‌ப் படை‌யின‌ர் தா‌க்குத‌ல் நட‌த்‌தி வரு‌கி‌ன்றன‌ர். படை‌யின‌ரி‌ன் மு‌ன்நக‌ர்வு முய‌‌‌ற்‌‌சிகளை கடு‌ம் எ‌தி‌ர்‌த்தா‌க்குத‌ல் மூல‌ம் ‌விடுதலை‌ப் பு‌லிக‌ள் தடு‌த்து வரு‌கி‌ன்றன‌ர்.

மனனா‌ர் மாவ‌ட்ட‌த்‌தி‌ல் நே‌ற்று காலை 10 ம‌ணி முத‌ல் பெ‌ரியமடு, பால‌ம்‌பி‌ட்டி, பெ‌ரியமடு‌க்குள‌ம், இடதுகரை குள‌க்க‌ட்டு ஆ‌கிய நா‌ன்கு இட‌ங்க‌ளி‌ல் இரு‌ந்து ‌சி‌றில‌ங்க‌ப் படை‌யின‌ர் மு‌ன்நக‌ர்வு முய‌ற்‌சிகளை மே‌ற்கொ‌ண்டு‌ள்ளன‌ர்.

இத‌ற்கு எ‌திராக ‌விடுதலை‌ப் பு‌லிக‌‌ள் நட‌த்‌திய எ‌தி‌ர்‌த்தா‌க்குத‌லி‌ல் இதுவரை 20‌க்கு‌ம் மே‌ற்ப‌ட்ட படை‌யின‌ர் கொ‌ல்ல‌ப்ப‌ட்டு‌ள்ளதுட‌ன், பல‌ர் படுகாயமடை‌ந்து‌ள்ளதாகவு‌‌ம

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.