Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தசாவதாரம் விமர்சனம்

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தசாவதாரம் விமர்சனம்

எவராவது தசாவதாரம் விமர்சனங்களை இங்கே பதியுங்கள். அல்லது உங்கள் விமர்சனத்தையாவது எழுதுங்கள். நான் பார்த்துவிட்டேன் கமல் ஏமாற்றவில்லை 10 தடவை பார்க்கலாம்,

தசவதாரம்

இது முற்றுமுழுதாக கமலின் பொறுமையை பறை சாற்றும் பாரிய காவியம்....

இது முற்றுமுழுதாக கமலின் பொறுமையை(ஒப்பனைக்கு அவ்வளவு நேரமாம்) பறை சாற்றும் பாரிய(120க்கு மேலாக செலவாம்.. ) காவியம்....

வழமையான கமலின் குழப்பமான வசன நடை...

தெலுங்கு இந்தி ஆங்கில வார்த்தைக்கலப்புகள் அதிகமாக...

திரைக்கதைக் கட்டுமானம் நேர்த்தியில்லை...

பலவிடயங்கள் ஏன் சொல்லப்பட்டது..பல காட்சிகள் ஏன் சேர்க்க்பபட்டது..இதனால் என்ன சொல்ல முயன்றிருக்கிறார்கள் எதுவும் பார்த்துமுடித்தவர்களுக்கு தெரியவில்லை..

பிரமாண்டம் என்ற வார்த்தை மட்டும் சுனாமியாகவும்.. கமலின் பத்து அவதாரங்களாகவும் எஞ்சியிருப்பதாகவே தோணுகிறது...

இனி படத்தின் நல்லவிடயங்கள் சில

ஒளிப்பதிவு..தொழில்நுட்பம்..சி

நல்ல படம்...! அனைவரும் பார்க்க வேண்டிய படம்.. விமர்சனங்கள் தேவையான அளவுக்கு வலைப்பூக்களில் உள்ளது ..! போய்ப் பாருங்கள்..

  • கருத்துக்கள உறவுகள்

தசாவதாரம் பார்க்கிற ஆவலில இருக்கிறவர்கள் நீங்கள் வசிக்கும் நாடுகளில் நடைபெறவுள்ள பொங்குதமிழ் நிகழ்வுகளிலும் ஆர்வம் காட்டி கலந்து கொள்வது ஒவ்வொருவரினதும் கடமையாகும்.

  • கருத்துக்கள உறவுகள்

தசாவதாரம் பார்க்கிற ஆவலில இருக்கிறவர்கள் நீங்கள் வசிக்கும் நாடுகளில் நடைபெறவுள்ள பொங்குதமிழ் நிகழ்வுகளிலும் ஆர்வம் காட்டி கலந்து கொள்வது ஒவ்வொருவரினதும் கடமையாகும்.

சகரும் கலந்து கொள்ள வேண்டும்

ஆறு மாத குழந்தைக்கு ஆறடி உயரத்தில் ஜிப்பா தைத்த மாதிரி, பொருந்தாத பிரமாண்டம்! பத்து வேடங்களில் நடித்து விட வேண்டும் என்ற ஆர்வத்தை, கமல் தனது திரைக்கதையிலும் காட்டியிருந்தால் அவரை நிஜமான அவதார புருஷராகவே கொண்டாடியிருக்கலாம்! பட், பில்டிங் ஸ்டிராங்...பேஸ்மெண்ட் ரொம்ம்ம்ம்ப வீக் சாமி!

12 நூற்றாண்டில் துவங்குகிறது கதை. சிதம்பரம் கோவிந்தராஜர் சிலையை அங்கிருந்து அப்புறப்படுத்த நினைக்கும் குலோத்துங்க சோழன், அதற்கு தடையாக இருக்கும் ரங்கராஜன் நம்பியை கழு மரத்தில் ஏற்றி சித்ரவதை செய்கிறார். இந்த வைணவ, சைவ மோதலில் கோவிந்தராஜர் சிலையோடு ஜல சமாதியாகிறார் நம்பி. அடுத்தடுத்த நூற்றாண்டுகளுக்குள் பயணித்து மேலும் பட்ஜெட்டை எகிற வைக்காமல் நேரடியாக 21-ம் நூற்றாண்டுக்கு பயணிக்கிறது கதை.

அமெரிக்க விஞ்ஞானியான கமல் கோடிக்கணக்கான உயிர்களை அழிக்கும் வைரஸ் ஒன்றை கண்டுபிடிக்கிறார். அதை தீவிரவாதிகளிடம் விற்க முயல்கிறார் விஞ்ஞானிகளின் தலைவர். இதை தடுக்க நினைக்கிறார் கமல். இந்த களேபரத்தில் தவறுதலாக இந்தியாவுக்கு வந்து விடுகிறது வைரஸ். அதை துரத்திக் கொண்டு பின்னாலே வரும் விஞ்ஞானி கமலும், வில்லன் கமலும் மோதிக்கொள்கிறார்கள். கதையை நகர்த்திச் செல்லும் மிச்ச சொச்ச கேரக்டர்களிலும் கமலே நடிக்க, இதுதான் கதை என்று புரிந்து கொள்வதற்குள் நம்மை இருந்த இடத்திலேயே வைத்து சப்பாத்தி போடுகிறார் கமல்!

முகத்தில் மாஸ்கை மாட்டி (உபயம்- ஹவ் டு மேக்கிங் தசாவதாரம்) அதன் மேல் மேக்கப் போட்டுக் கொள்ளும் கமலால், குரலில் மட்டுமே வித்யாசத்தை வெளிப்படுத்த முடிகிறது. எக்ஸ்பிரஷன்களை வெளிக்காட்ட வேண்டிய பகுதிகள், இறுக்கமான பேஸ்ட்டுக்குள்! என்ன செய்வார் அவர்? ஹையோடா! ஆனாலும் அமெரிக்க ஜனாதிபதி புஷ், பூவராகவன், பலராம் நாயுடு வேடங்கள் பிரமிக்க வைக்கின்றன. உயரத்தை குறுக்கிக் கொண்டு பாட்டியாக வருகிற கமலை லாங்-ஷாட்டிலேயே காட்டியிருக்கலாம். குளோஸ்-அப்புக்கு வரும்போதெல்லாம் குய்யோ முறையோ என்று அலறுகின்றன குழந்தைகள்.

12-ம் நூற்றாண்டில் வருகிற அசின் பரிதாபப்பட வைக்கிறார். 21 -ம் நூற்றாண்டு அசின் கோபப்பட வைக்கிறார். சூழ்நிலையை புரிந்து கொள்ளாமல் அவர் 'பெருமாளே பெருமாளே' என்று தவிப்பதும், ஓடுகிற ரயிலில் உள்ளே கூட போகாமல் படியில் தொங்கிக் கொண்டே அவர் விவாதிப்பதும் எரிச்சல்! அமெரிக்க வில்லன் கிரித் ப்ளட்சரை விட்டு விட்டு, விஞ்ஞானி கோவிந்தாவை தேடிப் போகும் பலராம் நாயுடு சிரிப்பு போலீஸ் மட்டுமல்ல. ஒட்டுமொத்த காவல் துறையையே நகைப்புக்கு இடமாக்கும் போலீசும் கூட!

கமலின் வசனங்களில் பிளேடின் கூர்மை! அழகிய சிங்கர் பற்றி அவர் அடிக்கும் கமெண்ட் பலரை கோபப்படுத்தக் கூடும்! பூவராகவன் கேரக்டர் பேசும் வசனங்களில் எரிமலை வெடிக்கிறது.

தொழில்நுட்ப விஷயங்களில் ஹாலிவுட் படங்களுக்கு சவால் விட்டிருக்கிறார்கள். கமலின் பத்து அவதாரங்களுக்கு இணையாக உயர்ந்து நிற்கிறார் ஒளிப்பதிவாளர் ரவிவர்மன். அதிலும் அந்த ஓப்பனிங் காட்சி இந்திய திரைப்பட வரலாற்றின் மணி மகுடம்! வெல்டன் ரவிவர்மன். சுனாமி காட்சியில் ரவிவர்மன் கேமிராவும், கிராபிக்ஸ் தொழில் நுட்பமும் இணைந்து ஒரு மாயாஜாலத்தையே காட்டியிருக்கிறது.

அதிலும் கமலின் முதுகில் கொக்கியை மாட்டும் அந்த காட்சி கிராபிக்ஸ் என்றாலும் பயங்கரம். பாடல்களில் 'கல்லை மட்டும்' அற்புதம்! 'முகுந்தா முகுந்தா' இனிமை! ஹிமேஷ் இசை கொண்டாட வைக்கிற அதே நேரத்தில் தேவி ஸ்ரீ பிரசாத்தின் பின்னணி இசையில் பெரிய விசேஷம் இல்லை!

கோடிக்கணக்கான பணத்தை அள்ளி அள்ளி இரைத்திருக்கிறார் தயாரிப்பாளர் ரவிச்சந்திரன். அதை முறையான கதையிலும், விறுவிறுப்பான திரைக்கதையிலும் பயன்படுத்தியிருந்தால், காலத்தால் அழிக்க முடியாத ஒரு படத்தை தந்திருக்க முடியும்! என்ன செய்வது? கமல், திரையுலகத்திற்கு வைக்கிற ஒவ்வொரு பூச்செண்டும், தயாரிப்பாளரின் பணத்திற்கு வைக்கிற மலர் வளையமாகவே மாறி விடுகிறதே!

நன்றி தமிழ் சினிமா

Edited by vikadakavi

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

pg3.jpg

த்து வேடங்களில் கமல் நடிக்க, 70 கோடி செலவில் ஹாலிவுட்டுக்குச் சவால் விடும் வகையில் வந்திருக்கிறது தசாவதாரம்.

முதல் காட்சியே பிரமிக்க வைக்கிறது.சென்னையிலிருந்து கடலைப் பார்த்திருக்கிறோம். கடலிலிருந்து சென்னையைப் பார்த்திருக்கிறோமா?கடலிலிருந்து மேலாகப் பறந்து வந்து கழுகுப் பார்வையில் சென்னையைப் பார்ப்பது தமிழ் சினிமாவுக்கு புதுசு. அத்துடன் நிற்காமல் அந்தப்பார்வை அப்படியே கடந்து போய் சோழர்கால சிவ வைஷ்ணவ பிரச்னையின் நடுவே சென்று நிற்பது அதைவிட புதுசு.

சோழர் காலத்து கோபம் கொண்ட வைணவ இளைஞன், அமெரிக்க ஜனாதிபதி ஜார்ஜ் புஷ்,மனநிலை தவறிய வயது முதிர்ந்த பாட்டி,ஜப்பானிய கராத்தே மாஸ்டர்,பஞ்சாபி கஜல் பாடகன், நியாயத்திற்காகப் போராடும் தலித் இளைஞன், கத்தி, துப்பாக்கியுடன் கொலை வெறியுடன் சுற்றும் அமெரிக்கன், எட்டு அடி உயரத்தில் அப்பாவியாய்ப் பேசும் முஸ்லிம் இளைஞன், நவீன யுகத்தின் துடிப்பான சைன்டிஸ்ட், இழுத்து இழுத்துத் தமிழ் பேசும் கூர் மூக்கு தெலுங்கு உளவுத்துறை அதிகாரி என்று வெவ்வேறு வாசனை உள்ள பாத்திரங்கள்.

தசாவதாரங்களுக்கும் உலக நாயகன் கமல் கடுமையாய் உழைத்திருப்பது தெரிகிறது.

இஸ்லாமும் கிறிஸ்துவமும் அடி பதிக்காத காலத்தில் சிதம்பரத்தில் நடந்த சைவ வைணவ மோதலுடன் படம் ஆரம்பிக்கும்போதே ஒரு பிரமிப்புத் தோன்றி விடுகிறது.

கோவிலில் உள்ள ரங்கநாதரின் சிலையைப் பெயர்த்து கடலில் வீச சைவ மன்னன் ஏற்பாடு செய்ய, புயலாய்ப் புறப்-பட்டு எதிரிகளை துவம்சம் செய்யும் கமலிடம், `ஓம் நமசிவாய என்று சொன்னால், உயிர்ப்பிச்சை; இல்லாவிட்டால் சிலையுடன் கட்டிக் கடலில் வீசப்படுவாய்'என்று சோழமன்னன் எச்சரிக்க, கமலின் குடும்பத்தினரும் `சொல்லிவிடுங்கள்' என்று கண்ணீர் விட, `ஓம் என்று' கம்பீரக் குரலில் கமல் ஆரம்பிக்க, என்னநடக்குமோ, ஏது ஆகுமோ என்று சீட்டு நுனிக்கு அனைவரும் வர, ``நமோ நாராயணாய'' என்று முடிப்பதா கட்டும், கொக்கி மாட்டி ரத்தம் வழியத் தூக்கியபோதும் துதிப்பதாகட்டும், கடலுக்குள் சிலையோடு கட்டப்பட்டு மடிவதாகட்டும்... காட்சி யமைப்பும், கமலின் நடிப்பும், ரவிவர்மனின் ஒளிப்பதிவும்,தேவி ஸ்ரீபிரசாத்தின் அலாதியான ரீரெக்கார்டிங்கும் தணிகாசலத்தின் எடிட்டிங்கும் நம்மை அந்தக் காலத்திற்கேஅழைத்துச் சென்றுவிடுகின்றன.அந்த பிரமிப்பிலிருந்து விடுபட நாட்களாகும்.

வைஷ்ணவ நம்பி கதாபாத்திரத்தை வைத்து தமிழில் ஒரு முழுநீள திரைப்படத்தையே தயாரித்திருக்கலாம்.வழக்கமாய

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தசாவதாரம் என்ற குருவி பார்ட் - 2 விமர்ச்சனம் !

ஏகப்பட்ட எதிர்பார்ப்பு ... கமல் பத்து வேடத்துல நடிக்கிறார் , எழுபது கோடி பொருட் செலவு ... இருந்தாலும் எப்பவும் போல மற்ற எல்லா படங்களையும் போல இது ஒரு சாதா தமிழ் படம் தான் .

இப்படி எக்க சக்கமா செலவு பண்ணி 'உலக தரம்' வாய்ந்த படம் கொடுக்க மெனக்கெடும் நடிகரோ அல்லது டயரடக்கரோ எதற்காக கமலுக்கு பத்து கதா பாத்திரம் கொடுக்க வேண்டும். கமலை தவிர வேற யாருக்கும் நடிக்க வராதா???... சும்மா எல்லாத்தையும் நாமே செய்வோம்-தர வெட்டி பெருமைய தவிர வேறொன்றும் இல்லை.

உதாரணம், படம் முடிவில் கடைசியாக உணர்ச்சிவச பட்டு பேசும் தொன்நூத்தி அஞ்சு வயசு பாட்டி மனம் உருகும் பேச்சு கூட - அந்த பாட்டி கமல் தான் என்பதால் அந்த கட்சி மனதை சற்றும் பாதிக்கவில்லை. அதுவே மற்றொரு உண்மையான தொன்நூத்தி அஞ்சு வயசு பாட்டியா இருந்தால் நம்மிடம் அது ஏற்படுத்தும் உணர்ச்சிகள மிகவும் அதிகமாக இருந்திருக்கும்.

படத்தில் வரும் மற்றொரு பாட்டி - அசின். அவர் சதா லொட லொட என்று பேசி-கொன்றிருக்கிறார். அவர் வரும் பேச்சுகள் சலிப்பை தருகின்றன.

கமல் அமரிக்காவில் அம்பது அடுக்கு மாடி கட்டிடத்தில் இருந்து குதிக்க்றார்; விழும்பொழுது சரக்கு ஏற்றி செல்லும் லாரி மேல் விழுகிறார். அந்த சரக்குடன் அவர் விமானத்தில் சரக்கு ஏற்றப்படும் பகுதியில் ஏற்றபடுகிறார். கேபின் பிரஷர், ஆக்சிஜன் எதுவும் இல்லாமல் அதிலிலேயே அமெரிக்கா வில் இருந்து இந்திய வரை பயணிக்கிறார். பின்னர் அவர் வில்லனிடம் இருந்து தப்பிக்க முயற்சி செய்து ஓடும் பொழுது, பாலத்தில் இருந்து குதிக்கிறார். மீண்டும் அவர் விழும் இடம் - மற்றொரு லாரி. அப்புறம் அவர் வில்லனால் வண்டியில் துரத்தப்படும் பொழுது, தள்ளு வண்டியில் பயணிக்கிறார். அந்தோ பரிதாபம், எப்பவும் போல, தள்ளு வண்டி சென்றவுடன் ரயில் வே கேட் பூட்டபடுகிறது. வில்லன் ஆவலுடம் காத்திருக்க, கமல் அசின் மற்றும் சாமி சிலை உடன் ஓடும் ரயிலில் தொற்றுகிறார். பின் ஓடும் ரயிலில் இருந்து குதிக்கிறார். மற்றொரு முறை கமல் அசினுடன் மோட்டார் பைக்கில் பயணிக்க, அது மோதி லாரிக்கு அட்டையில் பயணம் செய்கிறார். நான் குருவி படம் பாக்குற தேட்டருக்கு வந்துட்ட்னானு ஒரு நிமிஷம் எனக்கு டவுட் ஆய்டிச்சு.

படத்தில் ஒரு காட்சியில் கமல் குரங்கை வைத்து ஆராய்ச்சி செய்கிறார். எனது பக்கத்து சீட் குழந்தை அதன் அம்மாவிடம் "அம்மா இந்த குரங்கும் கமலாமா?" என்று கேட்டதை கேட்டு அரங்கமே சிரித்தது .

அமெரிக்காவில் ஒருவர், கமல் கண்டுபிடிக்கும் விச மருந்து திட்டத்தை வாங்க லஞ்சம் கொடுக்கிறார். அங்கும் லஞ்சம் பெட்டியில் வைத்து கட்டு கட்டாக அமெரிக்க டாலராக கொடுக்க படுகிறது !!!

நூறு பேர் சேர்ந்து அசினை கற்பழிக்க முயல்வது, அவர்களை கமல் பந்தாடுவது, லிப்ட் டில் கமல் வைத்த்ருக்கும் பெட்டியை மற்றொருவர் தவறுதலாக அவருக்கே தெரியாமல் எடுத்து செல்லுவது , வில்லன் கமல் நூறு கிலோ மீட்டர் ஓடினாலும், பைக், கார் எல்லாவற்றை ஒட்டி மோதினாலும், நூறு மாடியில் இருந்து குதித்தாலும் அனாயசம்க எந்த அடியும் இல்லாமல் - முக்கியமா சன் கிளாஸ் கூட கீழே விழுகாமல் ஜாலியாக அடுத்த அடிக்கு ரெடி ஆவது ....இப்படி எந்த வகையிலும் இது மற்ற மசாலா படங்களுக்கு கொஞ்சமும் குறைவில்லாமல் கடுப்படிக்கிறது .

அதுவும் வில்லன் கமல் - அபோகாளிப்டோ - காட்சிகளை நினைவு படுத்துகிறார். ஓடி ஓடி விஞ்ஞானி கமலை துரத்துகிறார். தான் செத்தாலும் பரவாயில்லை என, விரட்டுகிறார்.

விஞ்ஞானி கமல்: "இந்த மருந்து தப்பி கொஞ்சம் சூட இருக்கு. அத கொஞ்சம் குளிரான எடத்துல வைக்கணும். எதாவது ஐடியா கொடேன்

பெண்: பிரிஜ்ள வச்சிடலாமே .

விஞ்ஞானி கமல்: வெறி குட் ஐடியா.

மொத அஞ்சு பத்து நிமிசம் மட்டும் படம் சூப்பருங்க !

அப்புறம் தெலுகு மாதிரி தமிழ் பேசும் கமல் கலக்கல்.

அப்புறம் ஒரு கமல் முஸ்லீம், ஒரு கமல் சீக், ஒரு கமல் ஹிந்து, ஒரு கமல் கிறிஸ்டியன் ...இப்படி மத நல்லிணக்க மேட்டர் வேற. அப்புறம் ஜார்ஜ் புஷ் அமெரிக்காவில் காரில் பயணம் செய்யும் பொழுது ரோட்டில் ரெண்டு பக்கமும் மக்கள் கூட்டமாக நின்று அவருக்காக கை அசைக்கிறார்கள். ஜார்ஜ் புசுக்கு நம்ம ஊர் கலாச்சாரம் கூட கற்று கொடுக்கப்பட்டு விட்டது ...

இப்படி பத்து கமல் இருக்குரதாலா, எல்லா கமலுக்கும் ஜோடியா, மொத்தம் பத்து பொண்ணுங்க இருந்தா படம் நல்லா இருந்திருக்கும் !!

http://manvettiyan.blogspot.com/2008/06/2.html

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.