Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நாளேட்டின் பக்கத்தில் நனையும் ஓர் பொழுதில்……….

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

நாளேட்டின் பக்கத்தில் நனையும் ஓர் பொழுதில்……….

அதிகாலைப் பனியில் அரைறாத்தல் பாணுக்காய் ஆலாய் பறந்த அந்த அம்மையாரின் காலம் அது. கூப்பன் அரிசியில் அரைநேரக் கஞ்சியும் மரவள்ளிக் கிழங்கும் மக்கள் உயிர்வாழ ஒத்துழைப்புச் செய்தன. பத்தாம் வகுப்பு சித்தியடைந்தபின் தொடர்ந்து படிக்க வேண்டுமென்ற எனது ஆசை நிறைவேறப்படாமல் வீட்டு நிலமை. காரணம் எங்கள் ஊர் பாடசாலைகளில் உயர்தர வகுப்பு ஆரம்பிக்கப் படவில்லை. நகரப் பள்ளிக்குச் சென்றுவருவதும் கடினம். எனக்கோ எப்படியாவது மேலே படித்து ஓர் ஆசிரியையாக வரவேண்டுமென்ற கனவு. ஏப்படியோ முயற்சி செய்து ஓர் நகரப் பாடசாலையில் அனுமதி கிடைத்து விட்டது. ஆனாலும் விடுதியில் தங்கிப் படிக்க வசதியில்லை. எனவே அதிபர் ஆசிரியர்கள் உதவியுடன் என்னைப் போல் எதிர்காலக் கனவுகளுடன் நான்கு மாணவிகள் ஒன்று சேர்ந்து தங்கிப் படிக்க இடம் தேடினோம். இறுதியில் பாடசாலைக்கு அண்மையில் ஒர் அம்மாவும் மகளும் வசிக்கும் ஒர் பெரிய வீடு உள்ள அதே வளவினுள் இரண்டு அறைகள் சமையலறை குளியலறை போன்ற வசதிகளுடன் ஓர் அவுட் கவுஸ். நான்கு பேரும் வாடகையைப் பங்கிட்டு கொடுப்பதென்றும் அனைவரும் சேர்ந்து கமைத்து சாப்பிட்டு பள்ளிப் படிப்பை தொடர்வதென்றும் முடிவாகியது. அந்த அம்மா நாள் பார்த்து பால் காய்ச்சி எம்மை குடிவர அனுமதி கொடுத்து திறப்பைக் கையளித்தார். நால்வரும் எமது பெட்டி படுக்கை ஓர் மண்ணெண்ணை அடுப்பு சகிதம் கதவைத் திறந்து எந்தக் காலை முன்வைத்தோம் என்று எமக்கு நினைவுமில்லை கவலையுமில்லை. நேரம் மதியத்தை அண்மித்துக் கொண்டிருந்தது. அந்த அம்மாவுக்கு அழகிய ஒரேமகள். பள்ளிப் படிப்பை முடித்து விட்டு கல்யாண நாளுக்காய் காத்திருந்தாள். ஏமக்கு முன்பின் அறிமுகமில்லாத அந்தப் பெண் எமது குடியிருப்புக்கு விஜயம் செய்திருந்தார். ஆம் பால் காய்ச்சும் அந்த வைபவத்திற்குத்தான் அவர் வந்திருக்கிறார் என்று எமக்கு விளங்கியது. அவரை உபசரித்து இருக்கச் சொல்ல கதிரைஇல்லை. எனவே வாசல் படியில் அனைவரும் அமர்ந்து பெயர்களைப் பரிமாறிக் கொண்டோம். சம்பிரதாயமாக ஏதேதோ கதைத்தோம். எங்களில் யாரோ ஒருவர் மெதுவாக சமையலறைக்குச் சென்று குக்கரைப் பற்ற வைத்து சோஸ்பென் ஒன்றில் நீரை கொதிக்க வைத்து விட்டு வந்தார். சற்று நேரத்துக்கு ஒருவராக ஒவ்வொருவரும் போய் அடுப்பு எரிகிறதா என்று பரிசோதித்துக் கொண்டோம். நேரமோ ஓடிக்கொண்டிருந்தது.அந்த அக்கா உள்ளே எட்டிப் பார்ப்பதும் எம்முடன் உரையாடுவதுமாக இருந்தார். நேரம் ஓடிக் கொண்டிருந்ததே ஒழிய பால் இன்னும் வந்தபாடில்லை. காரணம் உங்களுக்கு விளங்கியிருக்கும். அடுப்பில் காய்ந்து கொண்டிருந்தது தண்ணீர்தானே ஒழிய பால் இல்லை.அந்த புதிய இடத்தில் எங்கு போய் பால் பெறுவது எப்படிப் பெறுவது என்று எதுவுமே எமக்குத் தெரியாது. இதுவரை அம்மா அப்பாவின் நிழலில் இருந்து இப்பதான் வெளி உலகத்தைப் பார்க்கத் தொடங்கி இருக்கிறோம். தண்ணீர் வற்ற வற்ற புதுத் தண்ணீர் ஊற்றி விட்டோம். அந்த அக்காவும் என்ன நினைத்தாரே தெரியாது. இறுதியில் “நான் போயிற்றுவாறன்”என்று சொல்லிப் பார்த்தார்.அதற்கும் நாங்கள் அசைவதாகஇல்லை.அவர் விடைபெறும் பொழுது அசடு வழிய தலையை அசைத்து விடை கொடுத்தோம். அதற்குமேல் ஏதாவது சொல்லவோ செய்யவோ எமக்கு வயதும் அனுபவமும் போதவில்லை. அதன் பின் அந்த அக்கா திருமணமாகிப் போகும்வரை எம்முடன் புன்னகையை மட்டும் பரிமாறிக் கொள்வார். இருந்தும் அம்மாவிடம் எம்மைப் போட்டுக் கொடுக்கவில்லை என்று மட்டும் எமக்கு விளங்கியது. அன்று பால் இல்லாமல் நடைபெற்ற பால் காய்ச்சம் வைபவம் இன்றும் மனதில் பசுமையாய். தினமும் பால் காச்சும் பொழுதெல்லாம் மனதில் காயும் அந்த இளமைக்கால நினைவலைகளின் ஈரம் காயாமல்.இன்னுமொரு நாளேட்டின் பக்கத்தில் நனையும்வரை………

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் கண்மணி .........

அருமையான ஒரு கதை ...சோகத்திலும் ஒரு சுவை .

பழைய நினைவுகளை மீட்டி ,கதை, கவிதை சொல்வதில் மிகவும் சிறப்பானவர்.

..கதை சொல்லும் பாங்கே தனி .உங்கள் ஆக்கங்கள் மேலும் வர என் வாழ்த்துக்கள் .

நன்றி வணக்கம் .

நிலாமதி

ம்ம்..கண்மனி அக்கா தங்களின் நாளேட்டின் ஒரு பக்கத்தை சுவைக்க கிடைத்தது..மகிழ்ச்சி.. :lol: ஒவ்வொருவரின் நாளேடிலும் இப்படி பல பக்கங்கள்..உங்கள் நாளேட்டு பக்கங்கள் கொஞ்சம் வித்தியாசமாக தான் இருக்கிறது..தொடர்ந்து தங்களின் நாளேட்டின் பக்கங்களை வாசிக்க ஆவலுடன்.. :lol:

அப்ப நான் வரட்டா!!

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

என் நாளேட்டின் பக்கத்தில் நனைந்து என்னுடன் கருத்துக் களத்தில் தலை துவட்டிய நிலாமதி யமுனா இருவருக்கும் கண்மணியின் நன்றிகள்

  • கருத்துக்கள உறவுகள்

கண்மணியக்கா நிங்கள் பாலே இல்லாமல் பால் காச்சி இருக்கிறிங்கள். நான் பசு மாடே இல்லாமல் பால் கறந்து குடிச்சிருக்கிறன் எப்பியெண்டு யோசிக்கிறீங்களா?? பனை மரத்திலைதான் :lol::lol:

எப்படியோ அந்த அக்கவை மீளவும் நீங்கள் பார்த்தால் உங்கள் நினைவுகளுக்கு ஒரு உயிரோட்டமாய் இருக்கும் காவலூர் கண்மணி.. சுவையான அனுபவம் தொடர தொடர்ந்து எழுதுங்கள் உங்கள் அனுபங்களில் நனைய ஆவல்....

Edited by ithayanila

பதிவிற்கு வாழ்த்துக்கள்.

:) அதுசரி எனக்கொரு சந்தேகம். பால் காய்ச்சுவதற்கே இவ்வளவு பிரைச்சினைப்பட்ட நீங்கள், எப்படி எல்லோரும் சேர்ந்த சமைப்பது என்று முடிவெடுத்தீர்கள்?? :( இப்பவே கண்ணைக் கட்டுதே :(:(

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

என் நாளேட்டின் பக்கத்தில் நனைந்த சாத்திரி இதயநிலா வசம்பு அனைவருக்கும் நன்றிகள்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.