Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

க‌ச்ச‌த்‌தீவை ‌மீ‌ட்க வேறுபாடுகளை மறப்போம்: - கருணாநிதி

Featured Replies

சென்னை (ஏஜென்சி) சனிக்கிழமை

'கச்சத்தீவை மீட்க, அரசியல் வேறுபாடுகளை கடந்து அனைவரும் ஒருமித்து குரல் எழுப்ப வேண்டும்' எ‌ன்று முதலமை‌ச்ச‌ர் கருணா‌நி‌தி வே‌ண்டுகோ‌ள் ‌விடு‌த்து‌ள்ளா‌ர்.

தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினால் சுட்டுக்கொல்லப்படுவதை கண்டித்து திமுக சார்பில் மாநிலம் முழுவதும் இன்று உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறுகிறது.

சென்னையில் சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை அருகே இ‌ன்று ‌உ‌ண்ணா‌விரத‌‌ப் போராட்டத்தை தொடங்கி வைத்து முதலமை‌ச்ச‌ர் கருணா‌நி‌தி பேசியதாவது:

இந்தியாவைச் சேர்ந்த மீனவர்கள் மீன்பிடிக்கச் சென்று, திரும்பி வராமல் போவதற்கு இலங்கை ராணுவம் அவர்களை கொன்று குவிப்பதே காரணம். இதனை தடுத்து நிறுத்த நாம் எடுத்த முயற்சிகள் ஒன்று, இரண்டு அல்ல.

மீனவர்களுக்கு இன்றைக்கு ஏற்படுகின்ற தீமைகளுக்கு கச்சத் தீவை திமுக விட்டுக்கொடுத்தது தான் காரணம் என்று சிலர் தற்போது பேசத் தொடங்கியிருக்கிறார்கள்.

1974ம் ஆண்டு பிரதமராக இருந்த இந்திரா காந்தி ஒரு உடன்பாட்டின் மூலம் ‌இலங்கைக்கு கச்சத்தீவை விட்டுக்கொடுக்கும் முடிவை எடுத்தபோது அதனை நாம் ஏற்கவில்லை. கச்சத்தீவை விட்டுத்தர முடியாது என்று சட்டசபையிலேயே தீர்மானம் இயற்றி மத்திய அரசுக்கு அனுப்பியிருக்கிறோம்.

தமிழக மக்களின் உரிமைகளுக்கும், உணர்வுகளுக்கும் மதிப்பளித்து கச்சத்தீவை ‌இலங்கைக்கு விட்டுத் தரும் முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று நாம் அந்த தீர்மானத்திலே வலியுறுத்தி இருக்கிறோம்.

தமிழக மக்கள் மட்டுமன்றி பல்வேறு அரசியல் கட்சிகளும் கச்சத்தீவுக்காக தொடர்ந்து குரல் கொடுத்து வந்திருக்கிறார்கள்.

1991ம் ஆண்டு அதிமுக ஆட்சியில் கச்சத்தீவை மீட்டே தீருவோம் என்று அப்போது முதல்வராக இருந்த ஜெயலலிதாவும் கூறியிருக்கிறார்.

த‌‌மிழக‌த்த‌ி‌ன் வாழ்வாதாரமாக திகழும் இந்த கச்சத்தீவு பிரச்சனையில் அனைவரும் ஒன்றாக இருக்கிறோம் என்பதை எடுத்துக்காட்டவே இதனை இங்கு கூறுகிறேன்.

இலங்கை அரசுடன் கச்சத்தீவு உடன்பாடு ஏற்பட்டாலும், அதன் மீதான தமிழக மக்களின் உரிமைகள் நிலைநாட்டப்பட்டன. அங்கு நடைபெறும் தேவாலய திருவிழாவில் இந்திய மீனவர்கள் கலந்துகொள்ளும் உரிமை, கச்சத்தீவில் மீனவர்கள் வலை காயப்போடும் உரிமை போன்ற உரிமைகள் அந்த ஒப்பந்தத்தில் நிலைநாட்டப்பட்டன.

ஆனால்இ 1976ம் ஆண்டு எமர்ஜென்சி காலத்தின்போது இரு நாட்டு அதிகாரிகளுக்கும் இடையே நடந்த கடிதப்போக்குவரத்து காரணமாகவே அந்த உரிமைகள் பறிபோய் விட்டன.

எனவே பறிபோன உரிமைகளை மீண்டும் பெற்றுத்தர வேண்டும் என்று நாம் மத்திய அரசை வலியுறுத்துகிறோம்.

அவ்வாறு கச்சத்தீவில் நமக்குள்ள உரிமைகளை பெற்றுத் தரத்தவறினால் கச்சத்தீவே மீண்டும் எங்களுக்கு வேண்டும் என்று கேட்கும் நிலை உருவாகும்.

இந்த பிரச்சனையில் கட்சி வேறுபாடுகளையும், அரசியல் மாறுபாடுகளையும் கடந்து நாம் அனைவரும் ஒருமித்து குரல் எழுப்ப வேண்டும்.

அந்த வகையில் இன்று பட்டினிக்குரலாக நாம் நம்முடைய வேதனைகளையும், கண்டனத்தையும் தெரிவிக்கிறோம். இந்தக் குரலுக்கு நிச்சயம் வெற்றி கிடைக்கும். இவ்வாறு அவர் கூறினார்.

நன்றி யாகூதமிழ் (மூலம் - வெப்துனியா)

இவர் என்ன கத்தினாலும் இவர்களுடைய எஜமானர்களுக்கு கேட்காது.ஈழத்தில் அமைதி திரும்ப வேண்டும் என்று கூட சட்டம் நிறைவேற்றினீர்கள் என்ன நடந்தது.நீங்கள் நிறைவேற்றிய பின் தான் ஆயுதமும் பணமும் கூடுதலாக உங்களுடைய எஜமானர்கள் கொடுத்தார்கள்.உண்ணாவிரதம் முடிந்தால் சாப்பிட்டு தூங்குவதை செய்யுங்கள்.பட திரைகதை வசனம் எழுதாமல்.

இவரின் கொள்கையை பாருங்கள் தமிழ் நாட்டு தமிழர்கள்களை சுட்டால் மட்டுந்தான் உண்ணாவிரதம் இருப்பாராம்.நல்ல கொள்கை இறுதிவரை கடைப்பிடியுங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

சிங்கள கடற்படையின் கைகளில் சிக்கி அல்லலுறும் தமிழக மீனவரின் பிரச்சினையை ஓரம்கட்டிவிட்டு சச்சதீவுக்கு யார் சொந்தம் என்ற விவகாரத்துக்கு முன்னுரிமை கொடுப்பதனால் கலைஞர் முன்பே ஆக்கிய சோற்றை திரும்பவும் உலையில்போடுகிறார். கச்சதீவு பிரச்சினையை தனது அரசியல் முதலீடாக்கி அதைவைத்து தமிழக மக்களை முறுக்கேற்றி அவர்களை உண்ணாவிரதம் கடையடைப்பு போராட்டங்களுக்கு அழைப்பது மட்டும்தான் கலைஞரின் இப்போதைய திட்டம் என்பது வெளிப்படையாகவே புரிகிறது.

  • கருத்துக்கள உறவுகள்

கேவலத்திலும் கேவலம்... மத்திய ஆட்சி அந்தரத்தில் தொங்குது. இவரிட்டை 30 எம்.பி. மார் இருக்கினம். அதைவைத்துக்கொண்டு காரியத்தை சாதிக்க முடியேல்ல. :) இலங்கை அவனிட்ட போவன் இவனிட்ட போவன் எண்டு சொல்லியே இந்தியாவிட்டை காரியத்தை சாதிக்குது. இவருக்கு அந்த அரசியலெல்லாம் தெரியேல்ல. இலவச ரி.வி. செருப்பு, துடைப்பம் எண்டு தமிழ்நாட்டில அரசியல் பண்ணுறார், தமிழ் மக்களின்ர பிணத்தின் மேல நிண்டுகொண்டு.

இப்ப மீனவர்கள் ஆயுதம் கேட்கினமாம். சூடு எத்தினை நாளில அடங்குது எண்டு பார்ப்பம். :)

சேரக்கூடாதவர்களுடன் தமிழன் கூட்டுச்சேர்ந்தான்!

வரக்கூடாத காங்கிரஸ் ஆட்சி வந்தது!

நடக்ககூடாத அநியாயங்கள் நடந்தது,

நாதியற்றவனாக தமிழன் தினமும் செத்து தொலைகிறான்!

உண்ணா நோன்பு இருந்து கழுவக்கூடிய பாவமா இவர்கள் செய்திருப்பது!

நாற்காலி போதையும், நாடாளும் ஆசையும், நாள்தோறும் நீர் போடும் வேடமும், நாடே அறியும் நடு எழும்பு அற்றவரே!

இச்சை தீர்த்துக்கொள்ள என டெல்லிக்கு கச்சை கழற்றி தந்தவரே!

முதலில் உங்கள் கச்சையை மீட்க முயற்சி செய்யுங்கள்.

கச்சத்தீவை பற்றி பிறகு பார்த்துக்கொள்ளலாம்.

ரொம்ப பழசாகிவிட்ட உங்கள் அரசியல் ஸ்டன்டுகள்

இப்போதெல்லாம் பார்க்கையில் கோமாளித்தனமாக இருக்கிறது!

Edited by vettri-vel

அவரும் தன்ர பெயர் தமிழ்நாட்டிலை நிலைக்க வேணுமெண்டு ஏதேதோ செய்யப் பார்க்கிறார். பாவம் முடியேல்லை. இருக்கிற கொஞ்சக் காலத்தையும் நிம்மதியாக் கழிப்பம் எண்டில்லாமல் வினையைத் தூக்கித் தலையிலை வைக்கிறார். கடைசியிலை, மிக மோசமான அரசியல்வாதிகளிலை முதலிடத்தைப் பிடிக்கப் போகிறார். :lol::lol::lol:

உவராலை எங்களுக்கு ஒண்டும் ஆகப் போறதில்லை. அவரைப் பற்றிக் கதைத்து வீணா ஏன் உங்கட நேரத்தை விரயமாக்கிறீர்கள்?

Edited by சுசிதா

  • கருத்துக்கள உறவுகள்

[

ரொம்ப பழசாகிவிட்ட உங்கள் அரசியல் ஸ்டன்டுகள்

இப்போதெல்லாம் பார்க்கையில் கோமாளித்தனமாக இருக்கிறது!

உண்மைதான்

யாரும் சீரியசாக எடுத்ததாக தெரியவில்லை

மத்திய அரசிலிருந்து ஒரு துரும்புகூட திரும்பிப்பார்க்கவில்லை

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.