Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

சிறிலங்காவுக்கான படைத்துறை உதவிகளை நிறுத்த இஸ்ரேல் தீர்மானம்

Featured Replies

சிறிலங்காவுக்கான படைத்துறை உதவிகளை நிறுத்த இஸ்ரேல் தீர்மானம்

[செவ்வாய்க்கிழமை, 29 யூலை 2008, 07:57 மு.ப ஈழம்] [அ.அருணாசலம்]

ஈரானுடன் நெருக்கமான உறவுகளை சிறிலங்கா அரசு ஏற்படுத்தி வருவதனால் அதற்கான படைத்துறை உதவிகளை நிறுத்த இஸ்ரேல் தீர்மானித்துள்ளதாக கொழும்பு ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.

இது தொடர்பில் அதில் மேலும் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:

ஈரான் அரசுடன் சிறிலங்கா அரசு மேற்கொண்டு வரும் நெருக்கமான உறவுகளை அடுத்து சிறிலங்காவுக்கான படைத்துறை உதவிகளை இஸ்ரேல் நிறுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதற்கு அமைய இஸ்ரேலின் படைத்துறை உற்பத்தி நிறுவனம் (The Israeli Military Industrial Complex) சிறிலங்காவுக்கான படைத்துறை ஆயுதங்கள் மற்றும் தொழில்நுட்ப உதவிகளை நிறுத்தியுள்ளது.

அண்மைக்காலமாக சிறிலங்காவுக்கு உதவிகளை வழங்கிவரும் நாடுகளில் ஈரான் முதல் இடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

சிறிலங்காவில் பொருளாதார முதலீடுகள் படைத்துறை உதவிகளை அது மேற்கொண்டு வருகின்றது.

மகிந்த ராஜபக்சவினால் ஈரானுடன் கொண்டுள்ள உறவை மறைக்க முடியவில்லை. அது வெளிப்படையான ஒன்று. சிறிலங்கா அரசின் இந்த புதிய உறவு இஸ்ரேலுக்கு அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

சிறிலங்கா அரசிடம் உள்ள இஸ்ரேலின் நவீன ஆயுதங்களின் தொழில்நுட்பத்தை ஈரான் அறிந்து கொள்ளலாம் என்ற அச்சம் இஸ்ரேல் அரசிற்கு ஏற்பட்டுள்ளது. சிறிலங்கா அரசிற்கு இஸ்ரேல் நீண்டகாலமாக கனரக ஆயுதங்களை விநியோகித்து வந்தது குறிப்பிடத்தக்கது.

இதனிடையே கொழும்புக்கான ஆயுத விநியோகத்தை இஸ்ரேல் அதிகாரபூர்வமாக நிறுத்தியுள்ள போதும், ஏற்கனவே வழங்கிய ஆயுதங்களுக்கான உதிரிப்பாகங்களை தொடர்ந்து வழங்கும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதினம்

  • கருத்துக்கள உறவுகள்

ஈரானுக்கும் இலங்கைக்குமிடையிலான நெருக்கமான உறவு குறித்து இஸ்ரேல் அச்சம்

ஈரானுக்கும் இலங்கைக்குமிடையிலான இராணுவ ரீதியான உறவுகள் குறித்து அமெரிக்கா, இஸ்ரேல், இந்தியா ஆகிய நாடுகள் தீவிர கவனம் செலுத்தியுள்ளதாக அறிக்கை ஒன்றை மேற்கோள்காட்டி கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

ஈரானுக்கும் இலங்கைக்குமிடையில் ஏற்பட்டிருக்கும் நெருக்கமான உறவு காரணமாக, இஸ்ரேலிய இராணுவ தொழிற்சாலையிலிருந்து இலங்கைக்கு இராணுவ தொழில்நுட்பங்களும், ஆயுத தளபாடங்களும் ஏற்றுமதி செய்யப்படுவது இரத்துச் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரியவருகிறது.

ஈரான் தற்போது இலங்கையின் பொருளாதார மற்றும் பாதுகாப்புத் துறையில் பிரதான முதலீட்டாளராக மாறியுள்ளதாகவும், இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால், ஈரான் ஜனாதிபதி மஹ்மூத் அஹமதி நிஜாத்துடனான உறவை மறைக்க முடியவில்லை எனவும் அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இஸ்ரேல் இலங்கைக்கு வழங்கும் புதிய இராணுவ தொழில்நுட்பங்கள் மற்றும் ஆயுத தளபாடங்கள் குறித்து இலங்கையிடமிருந்து ஈரான் தகவல்களைப் பெற்றுக் கொள்ளும் என இஸ்ரேல் அஞ்சுவதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

"இஸ்ரேல் நீண்ட காலமாக இலங்கைக்கு இராணுவ தொழில்நுட்பங்களை விநியோகிக்கும் முக்கிய நாடாக இருந்துவருகிறது. வருடாந்தம் இரு நாடுகளுக்குமிடையிலும் நூறு மில்லியன் அமெரிக்க டொலர்களுக்கு இராணுவ கொடுக்கல்வாங்கல்கள் இடம்பெறுகின்றன. இஸ்ரேல் இலங்கைக்கு கிபீர் விமானம், புதிய கடற்படை உபகரணங்கள், ஆளில்லா விமானம், எறிகணை கப்பல்கள் உள்ளிட்ட பல்வேறு இராணுவத் தளபாடங்களை விநியோகித்துள்ளது" எனவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இஸ்ரேல் இலங்கைக்கான இராணுவத் தளபாட விநியோகத்தை உத்தியோகபூர்வமாக நிறுத்தியுள்ளபோதும், ஏற்கனவே விநியோகித்துள்ள இராணுவத் தளபாடங்களுக்கான உதிரிப் பாகங்களை தொடர்ந்தும் வழங்கும் எனவும், தனியார் நிறுவனங்கள் மிக நவீன இராணுவ தளபாடங்களை தொடர்ந்தும் தடையின்றி இலங்கைக்கு விநியோகிக்கும் எனவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இலங்கைக்கும் ஈரானுக்குமிடையில் 2004 ஆம் ஆண்டு முதல் நெருக்கமான உறவுகள் தொடர்ந்துவருகின்றன. ஈரான் இலங்கையின் பொருளாதாரத் துறையில் சுமார் அரை பில்லியன் அமெரிக்க டொலர்களை முதலிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

-இலங்கா தகவல் நிறுவனம்

  • கருத்துக்கள உறவுகள்

ஈரான் அரசுடன் இலங்கை அரசு மேற்கொண்டுவரும் நெருக்கமான உறவுகளை அடுத்து இலங்கைக்கான படைத்துறை உதவிகளை இஸ்ரேல் நிறுத்தியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. கொழும்பு ஆங் கில நாளேடு ஒன்று நேற்று இந்தத் தக வலை வெளியிட்டது.

அந்தச் செய்தியின் விவரம் வருமாறு:

இஸ்ரேலின் படைத்துறை உற்பத்தி நிறுவனம் (tடஞு டிண்ணூச்ஞுடூடி ட்டிடூடிtச்ணூதூ டிணஞீதண்tணூடிச்டூ ஞிணிட்ணீடூஞுது) இலங்கைக்கான படைத்துறை ஆயுதங்கள் மற்றும் தொழில்நுட்ப உதவிகளை நிறுத்தியுள்ளது.

அண்மைக்காலமாக இலங்கைக்கு உதவிகளை வழங்கிவரும் நாடுகளில் ஈரான் முதல் இடத்தில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

இலங்கையில் பொருளாதார முதலீடுகள், படைத்துறை உதவிகளை அது மேற்கொண்டு வருகின்றது.

மஹிந்த ராஜபக்ஷ ஈரானுடன் கொண்டுள்ள உறவை மறைக்க முடியவில்லை. அது வெளிப்படையான ஒன்று. அரசின் இந்தப் புதிய உறவு இஸ்ரேலுக்கு அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

இலங்கை அரசிடம் உள்ள இஸ்ரேலின் நவீன ஆயுதங்களின் தொழில்நுட்பத்தை ஈரான் அறிந்து கொள்ளலாம் என்ற அச்சம் இஸ்ரேல் அரசிற்கு ஏற்பட்டுள்ளது. இலங்கை அரசுக்கு இஸ்ரேல் நீண்டகாலமாக கனரக ஆயுதங்களை விநியோகித்து வந்தமை குறிப்பிடத்தக்கது.

இதனிடையே கொழும்புக்கான ஆயுத விநியோகத்தை இஸ்ரேல் அதிகார பூர்வமாக நிறுத்தியுள்ள போதும் ஏற்கனவே வழங்கிய ஆயுதங்களுக்கான உதிரிப்பாகங்களைத் தொடர்ந்து வழங்கும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது

http://www.uthayan.com/

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.