Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஆடி அமாவாசை: பக்தர்கள் புனித நீராடினர்

Featured Replies

ஒவ்வொரு மாதமும் அமாவாசை தினம் வந்தாலும், ஆடி அமாவாசை என்பது மிகவும் முக்கியத்துவம் பெற்றதாகும்.

ஆடி அமாவாசையன்று ஆற்றங்கரைகளில் அமர்ந்து முன்னோர்கள், மூதாதையர்களுக்கு தர்ப்பணம் செய்தால் குடும்ப கஷ்டங்கள் தீரும் என்பது ஐதீகம்.

இன்று ஆடி அமாவாசை என்பதால், தமிழகத்தின் முக்கிய நகரங்களில் நதிக் கரைகளில் லட்சக்கணக்கானோர் அதிகாலை முதற்கொண்டே குழுமி, புனித நீராடியதுடன் தர்ப்பணமும் கொடுத்தனர்.

ஈரோடு மாவட்டத்தில் பவானி, காவிரி, அமிர்தநதி ஆகிய ஆறுகள் கூடும் முக்கூடல் சங்கமமாக உள்ள பவானி கூடுதுறையில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்து தர்ப்பணம் கொடுத்தனர்.

கூடுதுறையில் உள்ள சங்கமேஸ்வரர் கோயிலில் அவர்கள் சாமிதரிசனம் செய்தனர்.

இன்று மாலை சூரிய கிரகணம் ஏற்படுவதால் கோவில்களின் நடைகள் அடைக்கப்படுகின்றன. எனவே பவானியில் இன்று காலையிலேயே ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து சாமிதரிசனம் செய்தனர். பக்தர்களின் வருகையையொட்டி காவல்துறையினர் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்திருந்தனர்.

இதேபோல திருச்சி, தஞ்சை, நாகை போன்ற காவிரிக் கரையோரங்களிலும் ஏராளமான மக்கள் கூடி தர்ப்பணம் கொடுத்தனர்.

திருநெல்வேலி மாவட்டம் பாபநாசம் உள்ளிட்ட தாமிரபரணி ஆறு பாயும் கரையோர மக்களும் ஆடி அமாவாசை தினத்தையொட்டி முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தனர்.

பாபநாசத்தில் உள்ள சொரிமுத்தையானார் கோயில், தூத்துக்குடி மாவட்டம் ஏரலில் உள்ள சேர்மன் அருணாசல சுவாமி கோயிலிலும் லட்சக்கணக்கானோர் கூடி ஆற்றில் புனித நீராடியதுடன் சாமி தரிசனம் செய்தனர்.

பக்தர்களின் வசதிக்காக சிறப்புப் பேருந்து வசதிகள் செய்யப்பட்டிருந்தன. சுகாதார வசதிகளும், பாதுகாப்பு ஏற்பாடுகளையும் அந்தந்த மாவட்ட நிர்வாகத்துடன் இணைந்து காவல்துறையினர் செய்திருந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அட ஆடி அமாவாசை பற்றி முன்பே தெரியாமல் போச்சுதே அம்மாவின் தலையில் கல்லையாவது தூக்கி போட்டு கொன்று விட்டு விரதம் பிடிச்சு இருபேன்...

  • கருத்துக்கள உறவுகள்

அட ஆடி அமாவாசை பற்றி முன்பே தெரியாமல் போச்சுதே அம்மாவின் தலையில் கல்லையாவது தூக்கி போட்டு கொன்று விட்டு விரதம் பிடிச்சு இருபேன்...

அப்பாவின் தலையில்தான் கல்லைப் போடணும் :lol:

  • கருத்துக்கள உறவுகள்

அட ஆடி அமாவாசை பற்றி முன்பே தெரியாமல் போச்சுதே அம்மாவின் தலையில் கல்லையாவது தூக்கி போட்டு கொன்று விட்டு விரதம் பிடிச்சு இருபேன்...

:o:lol::lol:

அப்பாவின் தலையில்தான் கல்லைப் போடணும் :lol:
  • கருத்துக்கள உறவுகள்

ஆடி அமாவாசை

ஆடி அமாவாசை இந்து சமயத்தவர்களுக்கு மிகவும் புனிதமும் சிறப்பானதுமான தினமாகும். ஆடி மாதத்தில் வருகின்ற அமாவாசை ஆடி அமாவாசை விரதம் எனச் சிறப்புப் பெறுகின்றது. வானவியல் கணிப்பின் படி சூரியனும் சந்திரனும் ஒரே இராசியிற் கூடுகின்ற போதுள்ள காலம் அமாவாசை ஆகும். சூரியனைப் "பிதிர் காரகன்" என்கிறோம். சந்திரனை "மாதுர் காரகன்" என்கிறோம். எனவே சூரியனும் சந்திரனும் எமது பிதா மாதாக்களாகிய வழிபடு தெய்வங்களாகும்.

சூரிய பகவான் ஆண்மை, ஆற்றல், வீரம் என்பவற்றை எல்லாம் எமக்குத் தரவல்லவர். சந்திரன் எமது மனதுக்கு அதிபதியானவர். இதனால் மகிழ்ச்சி, தெளிவான தெளிந்த அறிவு, இன்பம், உற்சாகம் என்பவற்றை எல்லாம் தரவல்லவர். இத்தகைய பெருமைகளை எல்லாம் தருகின்ற சூரிய, சந்திரனை தந்தை, தாய் இழந்தவர்கள் அமாவாசை, பூரணை தினங்களில் வழிபாடு செய்வர்.

ஆடி அமாவாசை தினத்தில் அதிகாலை நித்திரை விட்டெழுந்து தீர்த்தம் ஆடி, பின்னர் சிவாலய தரிசனம், பிதிர்தர்ப்பணம், அன்னதானம் செய்தல் என்பன முக்கியத்துவம் பெறுகின்றன.

பிதிர் தேவர்களை சிரத்தையோடு வழிபாடு செய்து சிரார்த்தம் செய்வதால் பிதிர்களின் தோஷங்களில் இருந்து நீக்க முறலாம் என்பது இந்துக்களின் நம்பிக்கை. யாழ்ப்பாணத்து மக்கள் புரதான காலம் தொடக்கம் கீரிமலை நகுலேஸ்வரத்தில் தீர்த்தமாடுவார்கள். மட்டக்களப்பு வாழ் மக்களுக்கு மாமாங்கப் பிள்ளையார் கோவில் அமிர்தகழியில் தீர்த்தமாடுவர். திருகோணமலை வாழ் மக்களுக்கு கோணேஸ்வரர் ஆலயத்தில் தீர்த்தமாடி பிதுர் கடனைச் செலுத்துவர். ஆடி அமாவாசை காலத்தில் கடல் தீர்த்தம் ஆடுதல் பாவத்தைப் போக்கி விமோசனத்தை தருகின்றது.

சித்திரா பௌர்ணமி

சித்திரா பௌர்ணமி எனப்படுவது சித்திரை மாதத்தில் வரும் பௌர்ணமி தினத்தன்று சைவ மக்களால் அநுட்டிக்கப்படும் ஒரு விரத நாளாகும்.

இந்நாளில் சைவர்கள் விரதமிருந்து கோயில்களிலும் ஏனைய புனித இடங்களிலும் கஞ்சி காய்ச்சி சித்திர புத்திரனார் கதை படித்து எல்லோருக்கும் கஞ்சி வார்ப்பர். இந்நாளில் முன்னோர் பொங்கல் வைத்துப் பூச்சொரிந்து குரவைக் கூத்தாடி வசந்த விழாவைக் கொண்டாடினர். காலப்போக்கில் இதை சிவனுடைய சிறப்பு விழாவாகவும் இறந்த அன்னையரின் பிதிர்த் தினமாகவும் அனுட்டிக்க ஆரம்பித்தனர்.

தாய் உயிருடன் இல்லாத ஆண்கள் அனைவரும் காலையில் எழுந்து நீர் நிலைகளுக்குச் சென்று நீராடி இறந்த தாயாரை நினைத்து தர்ப்பணம் பண்ணுவர். பின் வீட்டிற்கு வந்து, தாயார் படத்திற்ற்கு உணவு படைத்து பின்னர் குடும்பத்துடன் உணவு உண்பர். பொதுவாக தாயார் இறந்த ஆண்டுத் திவசம் (முதலாம் ஆண்டு) முடியும் வரை இவ்விரதம் அநுட்டிக்கக் கூடாது என்பர். பெண்கள் தர்ப்பணம் பண்ணாது இவ்விரதத்தை அநுட்டிப்பர்.

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஆடிஅமவாசையின் மகிமை தெரியாதவர் இங்கிட்ட கருத்தை நினைத்து அழுவதா?சிரிப்பதா?

  • கருத்துக்கள உறவுகள்

ஆடிஅமவாசையின் மகிமை தெரியாதவர் இங்கிட்ட கருத்தை நினைத்து அழுவதா?சிரிப்பதா?

உங்களுக்கு இப்போது எதை செய்ய தோன்றுகின்றதோ..... அதை செய்யுங்கள்.

பின்பு எல்லா கள உறவுகளும் ஒன்று அழுவதா அன்றி சிரிப்பதா என்று ஒரு வாக்கு தேர்தலை நடாத்தி கூடிய வாக்குகள் எதற்கு கிடைக்கின்றனவோ என பார்த்து இரண்டில் ஒன்றை செய்வோம்.

நீங்கள் அது மட்டும் பொறுத்திருக்க வேண்டியதில்லை..... உங்களுக்கு தோன்றுவதை செய்யுங்கள்.

இப்படியான கேள்விகள் உங்களுக்கு எழும்போதெல்லாம் இங்கே இணையுங்கள்......

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.