Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

மனித உரிமை மீறல் சம்பவங்களின் சூத்திரதாரிகளுக்கு அமெரிக்கா ஒருபோதும் பாதுகாப்பு வழங்ஙகாது: அந்நாட்டு அரசு அதிகாரி தெரிவிப்பு

Featured Replies

மனித உரிமை மீறல் சம்பவங்களின் சூத்திரதாரிகளுக்கு அமெரிக்கா ஒருபோதும் பாதுகாப்பு வழங்ஙகாது: அந்நாட்டு அரசு அதிகாரி தெரிவிப்பு

[வெள்ளிக்கிழமை, 08 ஓகஸ்ட் 2008, 02:07 மு.ப ஈழம்] [ப.சண்முகம்பிள்ளை]

உலக நாடுகளில் இடம்பெறும் மனித உரிமை மீறல் சம்பவங்களின் சூத்திரதாரிகளுக்கு அமெரிக்கா நிச்சயமாக பாதுகாப்பான இடமாக அமையாது. அவர்களைக் கைதுசெய்து இந்த நாட்டைவிட்டு வெளியேற்றும் என்று அமெரிக்கா உள்துறை அமைச்சின் குடிவரவு மற்றும் சுங்கத் திணைக்களத்தின் உதவிச் செயலாளர் ஜூலி மயர்ஸ் தெரிவித்துள்ளார்.

நியூயோர்க்கில் வெளிநாட்டு ஊடகவியலாளர்கள் மத்தியில் பேசுகையில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்:

வெளிநாடுகளில் மனித உரிமை மீறல் சம்பவங்களில் ஈடுபட்டுவிட்டு அமெரிக்காவில் வந்து ஒளிந்திருந்த பலரை நாம் இவ்வாறு கைது செய்து நாட்டை விட்டு வெளியேற்றியுள்ளோம்.

இந்தப் பணியை செய்வதற்கென 2004 ஆம் ஆண்டு அமைக்கப்பட்ட சிறப்பு அமைப்பு இதுவரை 238 பேரை இவ்வாறு அடையாளம் கண்டு அமெரிக்காவை விட்டு வெளியேற்றியுள்ளது.

வெளிநாடுகளில் இடம்பெறும் பாரதூரமான மனித உரிமை மீறல் சம்பவங்களுடன் தொடர்புடைய தனிப்பட்ட நபர்கள் தண்டனையிலிருந்து தப்பித்துக்கொள்வதற்காக அமெரிக்காவுக்கு வந்து விசா விண்ணப்பித்துவிட்டு ஒளிந்திருக்கிறார்கள். இவர்களுக்கு அமெரிக்கா நிச்சயம் பாதுகாப்பான இடமாக அமையாது.

இவ்வாறு அடையாளம் காணப்படும் குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு அவர்களுக்கு எதிராக அமெரிக்க நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்படும். அதற்கான ஆதாரங்களை எமது அரசின் பிரதிநிதிகள் குறிப்பிட்ட நாடுகளுக்குச் சென்று திரட்டுவதற்கு நாம் ஏற்பாடு செய்துள்ளோம்.

அவ்வாறு எமது பிரதிநிதிகள் வரும்போது பாதிக்கப்பட்ட மக்கள் பயப்படாமல் முன்வந்து சாட்சியமளித்து ஆதாரங்களை வலுப்படுத்தவேண்டும்.

சிலவேளைகளில், பல ஆண்டுகளுக்கு முன்னர் இடம்பெற்ற குற்றங்களுக்கு தண்டனை கொடுப்பதில் ஆதாரங்கள் இல்லாத சிக்கல்கள் எழலாம். மக்கள் முன்வந்து உதவினால் இப்படியான குற்றவாளிகளை தண்டிக்கலாம்.

தற்போது எமது அரசு 88 நாடுகளைச் சேர்ந்த சுமார் 1,000 பேர் தொடர்பான விசாரணைகளை மேற்கொண்டுவருகிறது. இவர்களில் பலர் போர்க்குற்றம் புரிந்தவர்கள், இனச்சுத்திகரிப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டவர்கள் என்று குற்றம்சாட்டப்பட்டுள்ளனர்.

இவ்வாறு முன்னர் அமெரிக்காவில் கைது செய்யப்பட்டு தண்டிக்கப்பட்டவர்களில் முக்கியமானவர்கள்:

ஆஜர்ன்டீனாவின் இராணு அதிகாரி மேஜர் ஏர்னஸ்டோ பரீரோ. தனது நாட்டில் எந்த குற்றமும் புரியவில்லை என்று குறிப்பிட்டு அமெரிக்க விசா பெறுவதற்கு முயற்சி செய்த இவர், 2004 ஆம் ஆண்டில் அமெரிக்காவுக்கு வந்தார். ஆனால், அமெரிக்க அதிகாரிகள் மேற்கொண்ட விசாரணைகளின்படி 1984 ஆம் ஆண்டு முதல் 1987 ஆம் ஆண்டு வரை இவர் கடத்தல் மற்றம் பாரிய குற்றங்களை செய்தார் என்ற குற்றச்சாட்டின் பேரில் ஆர்ஜன்டீனாவில் சிறை வாசம் அனுபவித்தவர். இவருக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டு அமெரி்க்காவை விட்டு திருப்பி அனுப்பப்பட்டார்.

ஏழு முஸ்லிம்கள் கொலையுடன் தொடர்புடையவர் என்ற சந்தேகத்தின் பேரில் குரோசிய பாதுகாப்புச் சபையில் அதிகாரி போசோ ஜொசிபெவிக் கைது செய்யப்பட்டு, குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டு அமெரிக்காவை விட்டு வெளியேற்றப்பட்டார்.

பொஸ்னியாவில் முஸ்லிம் அகதிகள் படுகொலையுடன் தொடர்புடைய இராணுவ அதிகாரி ரட்டகோ மஸ்லென்ஜக் உண்மைக்குப் புறம்பான தகவல்களை தனது அமெரிக்கா விசா விண்ணப்பத்தில் வழங்கி நாட்டுக்குள் நுழைய முனைந்தார். அவர் தொடர்பாக தக்க விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு, குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டு நாட்டை விட்டு வெளியேற்றப்பட்டார்.

இவ்வாறு அவர் தனது உரையில் குறிப்பிட்டார்.

சிறிலங்கா அரசில் அங்கம் வகிக்கும் - அமெரிக்க குடியுரிமை கொண்ட - அரச தலைவர் ஆலோசகர் பசில் ராஜபக்ச, பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச, இராணுவத் தளபதி சரத் பொன்சேகா ஆகியோருக்கு எதிராக அமெரிக்காவில் உள்ள இனச்சுத்திகரிப்புக்கு எதிரான தமிழ்மக்கள் அமைப்பு அந்நாட்டில் சட்ட நடவடிக்கை எடுக்கவுள்ளதாக அண்மையில் அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

புதினமஈ

  • கருத்துக்கள உறவுகள்

அப்படிப் பார்த்தால்.. ஜப்பான் மீது அணுகுண்டு வீசியவர்கள்.. வியட்நாம் மீது இரசாயனக் குண்டு வீசியவர்கள்.. ஈரான் மீது ஈராக் மூலம் ஏவுகணை வீசியவர்கள்.. சோமாலியா மீது குண்டு மழை பொழிந்தவர்கள்.. சேர்பியா மீது குண்டு மழை பொழிந்தவர்கள்.. ஈராக் மீது குண்டு மழை பொழிந்தவர்கள்.. ஆப்கானிஸ்தானில் குண்டாய் கொட்டுபவர்கள் எல்லாம் அமெரிக்க பிரஜைகளாக.. அமெரிக்க அரசுத் தலைவர்களாக பத்திரமாக இருக்கிறார்களே. அதெப்படி. அமெரிக்க குண்டுகள் மனிதர்களை தாக்குவதில்லை.. மிருகங்களையா தாக்குகிறது.

உலகெங்கும் அரசுகளுக்கு அமெரிக்கா அளிக்கும் ஆயுத உதவி மூலம்.. இழக்கப்பட்ட மனித உரிமைகளுக்கு யார் பொறுப்பு..??! அவர்களையும் அமெரிக்கா நீதியின் முன் நிறுத்துமா..???! :icon_idea::unsure:

அண்மையில் ருவாண்டாப் படுகொலைகளில் பிரான்சின் பங்கு வெளிப்படுத்தப்பட்டும்.. உலக மனித உரிமை அமைப்புக்கள் மற்றும் மனித உரிமை பற்றி குளறும் நாடுகள் ஏன்.. மெளனம் காக்கின்றன..! :(:o

உலக நாடுகளில் இடம்பெறும் மனித உரிமை மீறல் சம்பவங்களின் சூத்திரதாரிகளுக்கு அமெரிக்கா நிச்சயமாக பாதுகாப்பான இடமாக அமையாது. அவர்களைக் கைதுசெய்து இந்த நாட்டைவிட்டு வெளியேற்றும் என்று அமெரிக்கா உள்துறை அமைச்சின் குடிவரவு மற்றும் சுங்கத் திணைக்களத்தின் உதவிச் செயலாளர் ஜூலி மயர்ஸ் தெரிவித்துள்ளார்.

மேலும் விளக்கமாக சொன்னால் இதனால் வெள்ளைப்பிள்ளைகளுக்கோ அமெரிக்காவுக்கோ இலாபம் இருக்குமானல் அந்த சூத்திரதாரிகளுக்கு அமெரிக்கா மேலும் ஆயுதம் வழங்கும்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.