Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஒலிம்பிக் குத்துச்சண்டை: அகில்குமார் போராடி வெற்றி!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ஒலிம்பிக் குத்துச்சண்டை: அகில்குமார் போராடி வெற்றி!

வெள்ளி, 15 ஆகஸ்ட் 2008( 18:21 IST )

ஒலிம்பிக் குத்துச்சண்டைப் போட்டியில் காலிறுதிக்கு முந்தைய சுற்று வெற்றியை இந்திய மக்களுக்கு சுதந்திர தினப் பரிசாக அளிப்பேன் என்று நம்பிக்கை தெரிவித்திருந்த இந்திய வீரர் அகில்குமார், இன்று உலக சாம்பியன் செர்ஜியை போராடி வென்றார்.

சற்றுமுன் நடந்து முடிந்த (இந்திய நேரப்படி மாலை 6 மணி) 54 கிலோ பான்டம்வெயிட் 2வது சுற்றுப் போட்டியில், ரஷ்யாவைச் சேர்ந்த செர்ஜி வோடோப்யனோவ் உடன் மோதிய அகில்குமார் மொத்தமுள்ள 4 ரவுண்டுகளின் முடிவில் 9-9 என்ற புள்ளிகளுடன் சமநிலையில் இருந்தார்.

போட்டி நடுவர்களின் முடிவே வெற்றியாளரை நிர்ணயிக்கும் என்ற நிலையில், அகில்குமார் வெற்றி பெற்றதாக நடுவர்கள் அறிவித்தனர். இதனை சற்றும் எதிர்பார்க்காத உலக சாம்பியன் செர்ஜி, குத்துச்சண்டை அரங்கிலேயே கண்ணீர் விட்டார்.

முன்னதாக இப்போட்டியின் முதல் ரவுண்டில் 1-2 என்ற புள்ளிக்கணக்கில் பின்தங்கிய அகில்குமார், 2வது ரவுண்டின் முடிவிலும் 4-6 என்ற புள்ளிக்கணக்கில் மேலும் பின்தங்கினார்.

மூன்றாவது ரவுண்டில் அபாரமாக விளையாடி 3 புள்ளிகளை பெற்றாலும், மொத்த புள்ளி அடிப்படையில் 8-7 என்ற புள்ளிக்கணக்கில் அகில் சற்றே பின்தங்கியிருந்தார்.

இந்நிலையில் வெற்றியை நிர்ணயிக்கும் இறுதி ரவுண்டில் இரு வீரர்களுமே காளைகளைப் போல் ஆவேசமாக மோதிக் கொண்டனர். இந்த ரவுண்டில் ரஷ்ய வீரர் ஒரு புள்ளியும், அகில்குமார் 2 புள்ளியும் பெற்றதால் இருவரும் 9 புள்ளிகளுடன் சமநிலையை எட்டினர்.

முடிவில் போட்டி நடுவர்கள் அகில்குமார் வெற்றி பெற்றதாக அறிவித்தனர். இந்தியாவின் 62வது சுதந்திர தினம் இன்று நாடு முழுவதும் விமரிசையாக கொண்டாடப்பட்ட நிலையில் அகில்குமாரின் வெற்றி மேலும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

http://tamil.webdunia.com/sports/olympic20...080815009_1.htm

  • கருத்துக்கள உறவுகள்

தங்கபதக்கம் நீங்கள் சொன்னது போல் கொடுக்கப்படவில்லையே? இது அரை இறுதி, கால் இறுதி ஆட்டமா?

  • கருத்துக்கள உறவுகள்

அகில்குமாரின் தன்னம்பிக்கை பாரட்டத்தக்கது, பார்சிலோனா ஒலிம்பிக்கில் பிளை வெயிற் குத்துச்சண்டயில் கலந்து கொள்ள சென்ற இலங்கை குத்துச்சண்டை வீரர் "காய்ஞ்ஞ மாடு கம்பில விழுந்த மாதிரி அளவுக்கதிகமாக உண்டு 2 கிலோ அதிகமானதால் (51 +2கிலோ)தகுதிசுற்றுகளிலே கூட கலந்து கொள்ள முடியாமல் நாடு திரும்பினார்.அவருக்கு முதலிலேயே தெரிந்திருக்கலாம் தேவையில்லாமல் ஏன் அடி வாங்குவான் பதக்கம்தான் கிடைக்கப்போறதில்லையேயெண்டு.

தன்ற நாட்டுக்கதான் வன்னி இருக்கெண்டு சொல்லிக்கொண்டு,வன்னில அங்க பிடிக்கிறம் இங்க பிடிக்கிறம் எண்டதை எதோ பெரிய உலக சாதனை மாதிரி சொல்லித்திரியத்தான் சிங்களவன் லாயக்கு.

  • கருத்துக்கள உறவுகள்

மனிதனை மனிதன் மோதவிட்டு.. வன்முறையை விளையாட்டாக்கி மகிழும் மனப்பாங்கைக் கருத்தில் கொண்டு.. மல்யுத்தம்.. குத்துச் சண்டை போன்ற விளையாட்டுக்களை ஒலிம்பிக் போன்ற புராதனத்தனம் நிறைந்த போட்டிகளிலாவது அவற்றைத் தடை செய்ய வேண்டும்.

மனித சமூகத்திடம் இருந்து இவ்வாறான வன்முறைகள் ரீதியான போட்டிகள் அடையாளமின்றி அருகின் வரவேற்கத்தக்கதே..! :D:D

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மனிதனை மனிதன் மோதவிட்டு.. வன்முறையை விளையாட்டாக்கி மகிழும் மனப்பாங்கைக் கருத்தில் கொண்டு.. மல்யுத்தம்.. குத்துச் சண்டை போன்ற விளையாட்டுக்களை ஒலிம்பிக் போன்ற புராதனத்தனம் நிறைந்த போட்டிகளிலா அவை தடை செய்ய வேண்டும்.

மனித சமூகத்திடம் இருந்து இவ்வாறான வன்முறைகள் ரீதியான போட்டிகள் அடையாளமின்றி அருகின் வரவேற்கத்தக்கதே..! :huh::D

தேவர்கள் , முனிவர்கள் , அசுரர்கள் காலத்திலிருந்தே இப்படியான விளையாட்டுக்கள் இருக்கின்றன.அவற்றையெல்லாம் நிறுத்த முடியாது :D கிரிக்கெட்,உதைபந்தாட்டம் மற்றும் வியாபாரரீதியான விளையாட்டுக்களுக்கெல்லாம் பயிற்சி எனும் போர்வையில் சித்திரவதை செய்யப்படுகின்றார்கள்.

அதனால் எத்தனையோ வீரர்கள் மாரடைப்பினாலும் இதர வருத்தங்களினாலும் மரணமடைந்துள்ளனர்.அப்போது எங்கே போனது உங்கள் வேதாந்தம்? :D

  • கருத்துக்கள உறவுகள்

வியாபார ரீதியாக அனைத்து விளையாட்டுக்களும் வந்து விட்டன. இதனால் மனிதாபிமானம் மலையேறி விட்டது. உ+ம் எப்படியான ஒரு குத்து சண்டைவீரர் முகமட் அலி. கடைசியில் அவர் எப்படி ஒலிம்பிக் பந்தத்தை கையை நடுங்கி நடுங்கி ஏற்றியது அனைவரது நெஞ்சையும் பிழிந்து இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை. போட்டியாளர்கள் தெரிந்தோ தெரியாமலோ இப்படியாக நிர்ப்பந்திக்கப்படுகிறார்க

மனிதனை மனிதன் மோதவிட்டு.. வன்முறையை விளையாட்டாக்கி மகிழும் மனப்பாங்கைக் கருத்தில் கொண்டு.. மல்யுத்தம்.. குத்துச் சண்டை போன்ற விளையாட்டுக்களை ஒலிம்பிக் போன்ற புராதனத்தனம் நிறைந்த போட்டிகளிலாவது அவற்றைத் தடை செய்ய வேண்டும்.

மனித சமூகத்திடம் இருந்து இவ்வாறான வன்முறைகள் ரீதியான போட்டிகள் அடையாளமின்றி அருகின் வரவேற்கத்தக்கதே..!

ஓ..அப்படியோ நெடுக்ஸ் தாத்..தா...ஆனா உங்க அவதாரில பூனையும்..எலியும் துரத்தி..துரத்தி சண்டை பிடிக்குது..து ஏன் தாத்தா..??..அதையும் இல்லாம செய்வோமா..மா..!! :(

ஒம்..மிருக சமுகத்திடம் இவ்வாறான வன்முறைகளை ஏற்படுத்துவதை..நானும் கண்டிக்கிறேன்..(உது எப்படி இருக்கு தாத்தா).. :lol:

இந்த அவதாரை பார்க்கிற..என்ன மாதிரி கொழந்தைகள் எல்லாம் இப்படி செய்ய வெளிகிட்டா..என்ன ஆகிறது இதையும் கொஞ்சம் யோசியுங்கோ என்ன..(நான் சும்மா பகிடிக்கு தாத்தா..தா)..பிறகு என்னை துரத்திடாதையுங்கோ..கோ..!! :o

ஜம்மு பேபி பஞ் -

"கண்ணா வாழ்க்கையில விழுற ஒவ்வொரு குத்தும் தான் உனக்கு முத்து".. :rolleyes:

அப்ப நான் வரட்டா!!

தேவர்கள் , முனிவர்கள் , அசுரர்கள் காலத்திலிருந்தே இப்படியான விளையாட்டுக்கள் இருக்கின்றன.அவற்றையெல்லாம் நிறுத்த முடியாது கிரிக்கெட்,உதைபந்தாட்டம் மற்றும் வியாபாரரீதியான விளையாட்டுக்களுக்கெல்லாம் பயிற்சி எனும் போர்வையில் சித்திரவதை செய்யப்படுகின்றார்கள்.

அதனால் எத்தனையோ வீரர்கள் மாரடைப்பினாலும் இதர வருத்தங்களினாலும் மரணமடைந்துள்ளனர்.அப்போது எங்கே போனது உங்கள் வேதாந்தம்?

ஓமென்ன கு..சா தாத்தா..தா..நீங்க விடாதையுங்கோ நானும் உங்க பக்கம் தான்..ன்.. :lol: (உது எப்படி இருக்கு)..யாழ்கள புகழ் கு.சா தாத்தாவிற்கும் மற்றும் நெடுக்ஸ் தாத்தாவிற்கும் இடையே..யே..குத்து சண்டை நடைபெறும் என்பதனை எல்லாருக்கும் சந்தோஷத்துடன் அறிவித்து கொள்கிறேன்..ன்.. :D

கு.சா தாத்தா விடாதையுங்கோ..குத்துங்கோ..எங்?? நெடுக்ஸ் தாத்தா வாங்கோ...(இப்படி இரண்டு பேர் குத்து பட தள்ளி நின்று ரசிக்கிற சுகம் இருக்கே..)..ஆகா..கா...!! :(

போட்டியின்..நடுவரா யாரை போடலாம் எண்டு ஒருக்கா சொல்லுங்கோ..??..கவனம் கு.சா தாத்தா..தா ஏன் சொல்லுறன் எண்டா நெடுக்ஸ் தாத்தா..காதை கடித்தாலும் கடித்து போடுவார் அது தான்..ன்.. :(

அப்ப நான் வரட்டா!!

  • கருத்துக்கள உறவுகள்

ஓ..அப்படியோ நெடுக்ஸ் தாத்..தா...ஆனா உங்க அவதாரில பூனையும்..எலியும் துரத்தி..துரத்தி சண்டை பிடிக்குது..து ஏன் தாத்தா..??..அதையும் இல்லாம செய்வோமா..மா..!!

அது சண்டையில்ல.. ரொம்மும்.. ஜெரியும் ஒருவருக்கு ஒருவர் நாரிப்பிடிப்பாம். அதுதான் உடற்பயிற்சி செய்யுதுகள்..! அது தவறுதலா.. ஆக்களை ஆக்கள் தாக்கிப் போடுது. அவ்வளவும் தான்..! :rolleyes:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அகில் குமார் தோல்வி : இந்தியாவின் நம்பிக்கை தகர்ந்தது

பீஜிங் : பீஜிங் ஒலிம்பிக் குத்துச்சண்டை கால் இறுதிப்போட்டியில், இந்தியாவின் அகில்குமார் தோல்வி அடைந்ததை அடுத்து, இந்தியாவின் பதக்கக் கனவு தகர்ந்துள்ளது.

குத்துச்சண்டை காலிறுதிப் போட்டியில் வெற்றி பெற்று, அரையிறுதிப் போட்டியில் பங்கேற்றாலே வெண்கலப் பதக்கம் வழங்கப்படும். எனவே, நேற்று நடைபெற்ற 54 கிலோ எடைப் பிரிவு போட்டியில் மால்டோவா வீரர் கோஜன்வியா செஸ்ஸாவுடன் மோதிய இந்திய வீரர் அகில்குமார் வெற்றி பெற்றாலே போதும் என்ற எதிர்பார்ப்பு இந்திய மக்களிடையே நிலவியது. ஆனால், கோஜன்வியாவின் 10 புள்ளிகளுக்கு எதிராக அகில்குமார் 3 புள்ளிகளை மட்டுமே எடுக்க முடிந்ததால், அவர் தோல்வி அடைந்தார். இதனால் மற்றொரு பதக்கம் இந்தியாவிற்கு கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பு தகர்ந்தது. எனினும், குத்துச்சண்டை பிரிவில், இந்தியாவின் ஜிதேந்திர குமார் மற்றும் விஜேந்திர குமார் ஆகிய இருவரும் தமது பிரிவுகளில் காலிறுதிப் போட்டியில் மோத இருப்பதால், இந்தியா மேலும் பதக்கம் வெல்ல வாய்ப்புகள் இருப்பதாகத் தெரிகிறது.

http://www.kumudam.com/index.php

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.