Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கிளிநொச்சியில் மக்கள் படைக்கட்டுமான பயிற்சி: முதற்கட்டமாக ஆயிரம் பேர் இணைவு

Featured Replies

கிளிநொச்சியில் மக்கள் படைக்கட்டுமான பயிற்சி: முதற்கட்டமாக ஆயிரம் பேர் இணைவு

[திங்கட்கிழமை, 18 ஓகஸ்ட் 2008, 07:18 பி.ப ஈழம்] [வவுனியாவிலிருந்து த.சுகுணன்]

கிளிநொச்சியில் ஆயிரம் பேருக்கான மக்கள் படைக்கட்டுமான போர்ப் பயிற்சி இன்று திங்கட்கிழமை தொடங்கியுள்ளது.

தமிழர் தாயக நிலங்களை வல்வளைப்புச் செய்து தமிழ் மக்களை துயரநிலைக்கு ஆளாக்கிக்கொண்டிருக்கும் சிறிலங்காப் படைகளிடமிருந்து தாய்நிலத்தை காக்கவும் மீட்கவும் மக்கள் படை தயாராகி கொண்டிருக்கின்றது.

இதன் முதற்கட்டமாக இன்று திங்கட்கிழமை கிளிநொச்சியில் ஆயிரம் பேருக்கான மக்கள் கட்டுமானப் பயிற்சி தொடங்கப்பட்டுள்ளது.

இதில் அரச, அரச சார்பற்ற நிறுவனப் பணியாளர்கள், வணிகர்கள், கூட்டுறவாளர்கள் எனப் பெருமளவான மக்கள் ஈடுபட்டுள்ளனர்.

முன்னாள் போராளிகள் தாய் மண்ணை காக்கும் பணிக்காக வந்து இணையுமாறு விடுத்த வேண்டுகோளுக்கு அமைய பெருமளவானவர்கள் தம்மை மீள இணைத்து வருகின்றனர்.

சிறிலங்காப் படையினரின் வல்வளைப்பிலிருந்து தாய் மண்ணை காக்கவும் மீட்கவுமாக முன்னாள் போராளிகளை மீள வருமாறு தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல்துறை அவசரமான வேண்டுகோளினை விடுத்திருந்தது.

இந்த வேண்டுகோளுக்கு இணங்க பெருமளவான முன்னாள் போராளிகள் வட்ட கோட்டச் செயலகங்களில் தம்மை இணைத்து வருகின்றனர்.

இன்றைய நிகழ்வின் தொடக்கத்தில், தமிழீழ தேசியக் கொடியினை தமிழீழ நீதி நிர்வாகத்துறைப்

பொறுப்பாளர் பரா ஏற்றி வைக்க, தொடர்ந்து மக்களுக்கன மக்கள் கட்டுமானப் பயிற்சிகள் நடைபெற்றன.

நிகழ்வில் சிறப்புரையினை புலிகளின் குரல் நிறுவனப் பொறுப்பாளர் நா.தமிழன்பன் நிகழ்த்தினார்.

புதினம்

சிங்களப் படைகள் வன்னி மீது மேற்கொண்டுள்ள இந்த பாரிய வல்வளைப்பு முயற்சியை முறியடிக்க முழுவீச்சில் வன்னியில் மக்கள் தயாராகி வருகின்றனர். போராட்டத்திலிருந்து விலகியிருந்த முன்னாள் போராளிகளின் மீள்இணைவுகள் நடைபெற்றுவரும் அதேநேரத்தில் மக்கள் படைக்கட்டுமானத்திலும் மக்கள் இணைந்து சிங்களத்தின் ஏற்படுத்தியுள்ள இந்த பாரிய நெருக்கடியை உடைத்தெறிய தயாராகி வருகின்றனர்.

ஆனால் புலத்திலிருந்து இணையத் செய்தித் தளங்களில் எங்கடா புலிகள் பாய்ச்சலைத் தொடங்கி விட்டார்களா என்று நாள்தோறும் செய்தியைத் தேடித் திரியும் நாம் வன்னியில் ஏற்பட்டுள்ள இந்த பாரிய வல்வளைப்பு நெருக்கடிக்கு எதிராகவோ அல்லது அங்கு மக்களிற்கு ஏற்பட்டுள்ள அடிப்படைத்தேவைகளிற்கான நெருக்கடிகளைப் போக்குவதற்கோ என்னத்தை செய்கிறோம்? எதிரியை முறியடிக்க அயிரக்கணக்கில் கைககள் போராயுதங்களைப் பிடிக்கத் தயாராகின்றன. அந்த கரங்கள் ஏந்துவதற்கான ஆயுதங்கள் பெருமளவில் தேவைப் படுகின்றன. அவற்றிற்கான ரவைகள், கணைகள் தேவைப்படுகின்றன.

அவற்றை வழங்க வேண்டியவர்கள் யார்? யார்? புலத்திலிருந்கும் நாம் தான். எனவே எம்மால் முடிந்த உச்ச பங்களிப்பை வழங்குவோம். எமது பங்களிப்பை வழங்கி சிங்களத்தின் வன்னி மீதான முற்றுகைகயை முறியடிப்பது மாத்திரமல்ல முழுத் தாயகத்தையும் சிங்களத்திடமிருந்து மீட்க எமது தலைமைக்கு ஒத்துழைப்பு வழங்குவோம்.

சிறிலங்காப் படைகளுக்கு எதிராகப் போராடும் வலுவுள்ளவர்களுக்கான மக்கள் கட்டுமானப்பயிற்சி நேற்று கிளிநொச்சியில் ஆரம்பமாகியது.

கிளிநொச்சி நகரில் நடைபெற்ற இப்பயிற்சியில் வர்த்தகர்கள்இ நிறுவனங்களின் பணியாளர்கள்இ அரசபணியாளர்கள்இ சங்கங்களின் பணியாளர்கள்இ தமிழீழ மற்றும் அரசவங்கிகளின் பணியாளர்கள்இ போர்எழுச்சிக்குழு உறுப்பினர்கள்இ மற்றும் வர்த்தகப் பெருமக்கள் என ஆயிரத்திற்கும் மேற்பட்ட போராடவலுவுள்ள ஆண்களும் பெண்களும் கலந்துகொண்டனர்.

சிறிலங்கா இராணுவம் வன்னி மீதான ஆக்கிரமிப்பை முறியடித்து தமிழீழத்தை உருவாக்கும் முனைப்பில் தற்பொழுது வன்னியின் சகல இடங்களிலும் மக்கள் கட்டுமானப்பயிற்சி நடைபெற்றுவருகின்றது.

இப்பயிற்சியில் முன்னைய காலங்களில் மக்கள் கட்டுமானப்பயிற்சியின் போது ஆயுதப்பயிற்சிகளைப் பெற்றவர்களும் கலந்துகொண்டு தமது பயிற்சிகளை எடுத்துக்கொள்கின்றனர்.

செயலாளர் வேழமாலிதன் தலைமையில் இடம்பெற்ற இப்பயிற்சி ஆரம்பவைபவத்தில் தமிழீழத் தேசியக்கொடியினை நீதிநிர்வாகப்பொறுப்பாளர் பராஏற்றிவைத்ததுடன் பயிற்சிகள் ஆரம்பிக்கப்பட்டன. இந்நிகழ்வில் மக்கள் கட்டுமானப்பயிற்சியின் தேவைபற்றியும் மக்களின் பங்களிப்பு பற்றியும் புலிகளின் குரல் நிறுவனப் பொறுப்பாளர் நா.தமிழன்பன் கருத்துரையாற்றினார்.

வன்னியை ஆக்கிரமித்து நிற்கும் சிறிலங்காப் படைகளோடு வழிமறிப்புத்தாக்குதலில் ஈடுபடும் புலியணிகளோடும் சிறப்புப் பயிற்சி பெற்ற படையணிப்போராளிகளுக்கும் ஒத்துழைப்பும் நல்குவதற்காகவும் இம்மக்கள் கட்டுமானப்பயிற்சியில் போராவலுவுள்ளோர் இணைந்து பயிற்சிகளை மேற்கொண்டுள்ளனர்.

பயிற்சியில் கலந்துகொண்டவர்கள் 'சிங்களப் படைகளை கொல்வோம் தமிழீழத்தை மீட்போம்' என்ற கோசங்களையிட்டு உற்சாகத்துடன் ஆரம்பப் பயிற்சியினை ஆரம்பித்துள்ளனர்.

படங்கள் இணைப்பு

எங்கள் பகைவர் எங்கோ மறைவார்

இங்குள்ள தமிழர் ஒன்றாதல் கண்டே

மக்கள் படை கட்டுமானம் மகத்தான வெற்றி பெற மனமாற வாழ்த்துகிறேன்

தமிழர் படை வெல்லும்

உங்கள் தியாகங்களுக்கு நிச்சயம் வெற்றி கிடைக்கும்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

முள்ளிவாய்க்காலில் வசிக்கும் என் பள்ளி நண்பர்கள் உற்பட்ட எனக்குத் தெரிந்த 23 பேர் சென்ற வாரங்களில் இணைந்திருக்கின்றனர்

மக்கள் படை கட்டுமானம் மகத்தான வெற்றி பெற மனமாற வாழ்த்துகிறேன்

இதில் அரச, அரச சார்பற்ற நிறுவனப் பணியாளர்கள், வணிகர்கள், கூட்டுறவாளர்கள் எனப் பெருமளவான மக்கள் ஈடுபட்டுள்ளனர்.

புதினம்

நல்ல விடயம் தான் ஆனால் முதல்ல உந்த பொடிளின்ர படங்களை முகங்கள் தெரியத் தக்கமாதிரி போடுற கூத்தை நிப்பாட்ட பாருங்கோ பிறகு அவயள் தனிப்பட்ட விடயமாக இராணுவக் கட்டுப்பாட்டு பகுதிக்கு வரும் கோது சுகமாய் இருக்கும் போட்டு தள்ளுறதுக்கு

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.