Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

நாராயணன் குழுவினரின் இலங்கை வருகையும் அவர்களின் உள்நோக்கங்களும்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

நாராயணன் குழுவினரின் இலங்கை வருகையும் அவர்களின்; உள்நோக்கங்களும்

-தாயகத்திலிருந்து மு.திரு-

இக்கட்டுரையானது முற்றிலும் ஒரு அறிவியற் கண்ணோட்டத்திலேயே முன்வைக்கப்படுகின்றது.

விருப்பு வெறுப்புக்கு அப்பால் அரசியல் விஞ்ஞானத்தை அப்படியே யதார்த்தத்தில் கணித ரீதியாக கணக்குப் போட்டுப்பார்க்கும் ஓர் ஆய்வாகவே இது அமைகின்றது.

தேசிய இனப்பிரச்சினை என்பது எப்போதும் முதலாவது அர்த்தத்தில் ஒரு சர்வதேசப் பிரச்சனை ஆகும்.

சர்வதேசம் என்பதற்குரிய ஆங்கிலப்பதம் International என்பதாகும்.

இதன்படி International என்றால் தேசங்களுக்கிடையானதெனப் பொருள்படும்.

எனவே International Relations என்றால் தேசங்களுக்கிடையான உறவுகள் என்பதாகும்.

ஆகவே இரண்டிற்கு மேற்பட்ட நாடுகளுக்களுக்கிடையேயான உறவு தேசங்களுக்கிடையிலான உறவுகள் ஆகும்.

இவ்வாறு தேசங்களுக்கிடையிலான உறவு என்பது தமிழில் பிழையான மொழிபெயர்ப்பாக 'சர்வதேச உறவுகள்" எனப் பிரயோகிக்கப்படுகின்றது.

'சர்வ" என்ற வடமொழிப் பதத்திற்கு அர்த்தம் 'அனைத்து" என்பதாகும்.

உண்மையில் பல தேசங்களுக்கிடையேயான உறவு என்ற பதம் தான் 'சர்வதேச உறவு"

நாம் 'சர்வதேச உறவு" எனப் பிழையாக பிரயோகித்து பிழையான பொருள் கொண்டு விட்டோம்.

தற்போது சரியாகவே பண்பாட்டு உறவுகள் என்ற பதம் பிரயோகிக்கப்பட்டு வருகின்றது.

மேற்படி பண்பாட்டு உறவு என்ற அர்த்தத்திலான சர்வதேச உறவுகளையும் தாண்டி இன்று உலகம் பூகோளமயத்திற்குள் பிரவேசித்து விட்டது.

ஆதலால் இன்றைய நிலையில் ஒரு தேசிய இனப்பிரச்சினை என்பது ஒரே வேளையில் சர்வதேச பிரச்சனையாகவும், பூகோளப் பிரச்சினையாகவும் முப்பரிமாணம் கொண்டதாய் உள்ளது.

இந்த வகையில் தேசிய இனப்பிரச்சினையை சர்வதேச பிரச்சினையில் இருந்து பிரித்துப்பார்க்க முடியாது என்பதுடன் ஒரு தேசிய இனப்பிரச்சினையானது சர்வதேச அரசியலாலும் பூகோள அரசியலாலும் சுற்றிவளைக்கப்படும் ஒன்றாயும் உள்ளது.

எனவே, ஒடுக்கும் இனமா அல்லது ஒடுக்கப்படும் இனமா மேற்படி சர்வதேச அரசியலாலும் பூகோள அரசியலாலும் சுற்றி வளைக்கப்படுகிறது என்பதிலிருந்தே ஒரு தேசிய இனப்பிரச்சினைக்கான ஒரு தீர்வின் தன்மை தங்கியுள்ளது.

ஆதலால் இன்றைய இலங்கைத்தீவின் இனப்பிரச்சினையை அரசியல் மதிப்பீடு செய்யும்போது உள்நாட்டு - வெளிநாட்டு - பூகோள அரசியல் என்ற முப்பரிமானத்தில் நின்று நோக்க வேண்டியது அவசியமாகும்.

இந்த வகையில் ஆர்.கே. நாராயணன் தலைமையிலான இந்திய தூதுக்குழுவின் கொழும்பிற்கான 20.06.2008 திடீர் வருகையானது இனப்பிரச்சினை விவகாரத்தில் எத்தகைய முக்கியத்துவத்தை கொண்டுள்ளது என்பதை நுணுகி ஆராய்ந்து பொருள் கொள்ள வேண்டியது இராஜதந்திர அரசியலில் ஒரு தலையாய பக்கமாகும்.

மேற்படி இராஜதந்திரக்குழுவின் கொழும்பு விஜயம் ஒர் இராஐதந்திர பயிற்சியல்ல. இது ஓரு வகையில் ஓர் அரசியல் பிரகடனமாகவும், ஓர் அரசியல் - இராணுவ உள்ளோட்டமாகவும் காணப்படுகின்றது.

அதாவது, மகிந்த இராஜபக்ச தனது சொந்த அரசியல் நிகழ்ச்சி நிரலுடன் செயற்பட்டு வருகின்றார்.

அது இந்தியாவின் அரசியல் நிகழ்ச்சி நிரலுடன் முரண்படுகிறது.

மேற்படி இரு நிகழ்ச்சி நிரல்களுக்கும் இடையில் ஓர் அமைவு ஒழுங்கை காண்பது தான் மேற்படி நாராயணன் குழுவினரது விஜயத்தின் காரணமாகும்.

முதலில் மகிந்தவின் அரசியல் பலம் என்ன என்பதை எடை போடுவோம்.

1. உள்நாட்டில் இனவாத அடிப்படையிலாயினும் மக்களின் பேராதரவினை பெற்ற ஒரு தேர்ந்தெடுக்கப்பட்ட அரசினதும் அரசாங்கத்தினதும் தலைவர். அவர் மேற்கொள்;ளும் யுத்தத்தை இங்குள்ள மக்களில் 88 வீதத்தினர் ஆதரிக்கின்றனர். மொத்த மக்கள் தொகையின் வீத கணிப்பின்படி 30 வீதமான மக்களின் ஆதரவு மகிந்தவின் தற்போதைய யுத்தத்திற்கு கிடைக்கின்றது என்பது வெளிநாட்டு அரசுகளுக்கு அதிர்ச்சியூட்டும் விடயமாகும்.

2. இந்தியா - இலங்கை உறவு தொடர்பாக ஜே.ஆர்.ஜெயவர்த்தனா தேடி வைத்த முதுசம்தான் மகிந்தவின் வெளியுறவுக்கொள்கைக்கான முதலீடாகும். அதாவது, நட்பு நிலையில் காணப்பட்ட இந்தியப் பழந்தமிழர் உறவை பகைநிலைக்குத் தள்ளிய ஜே.ஆர். இலங்கை அரசுக்கும் இனவாதத்திற்கும் தேடிவைத்த முதுசொத்தாகும். இது மகிந்த அரசாங்கத்தின் வெளியுறவுக்கொள்கைக்கான முதற்தரப் பலமாய் அமைந்தது.

3. புலிகளுக்கு எதிரான யுத்தம் என்று கூறி இந்தியா அரசை இராணுவ ரீதியில் தனக்கு சேவை செய்யச் செய்யும் A1 நேர்கோட்டு உறவை மகிந்த வடிவமைத்தார்.

புலிகளை ஒடுக்குவதற்கு சீனாவிடம் உதவி பெறுவதற்கான இலங்கை - சீனா A2 உறவைக்காட்டி இந்தியாவிடம் பேரம் பேசும் நிலையை மகிந்த வளர்க்கும் பணியில் ஈடுபட்டார்.

இத்தகைய பேரம் பேசுவதற்கான உறவுக்கோட்பாட்டுக்கு A2 எனப் பெயர்.

அதாவது, புலிகளைக் சுற்றிவளைக்க இலங்கை - இந்திய உறவு என்ற A1 கோட்டையும் இலங்கை- சீனா- இந்தியா என்ற சுற்று வட்டத்தில் உருவாகும் A2 கோட்டையும் மகிந்த அரசாங்கம் தனது சுற்றிவளைப்புக்கான வெளியுறவுக்கொள்கை மூலாபாயமாக வரைந்தது.

A2 கோடானது இனப்பிரச்சனையின் பெயரால் இலங்கைத் தீவில் சீனா செல்வாக்;குப் பெறுவதை சாத்தியமாக்கியது. இந்த வகையில் A1, A2 கோடுகள் பல்கிப் பெருகி சர்வதேச வலைப்பின்னல் ஒன்றை வடிவமைக்கத் தொடங்கியது.

இத்தகைய வலைப்பின்னல் அமெரிக்கா தலைமையிலான மேற்குலகிற்கு எரிச்சலையும் சினத்தையும் ஏற்படுத்தின.

இந்த வகையில் புலிகளுக்கு எதிரான நிலைப்பாட்டை தானும் எடுப்பதன் மூலம் அமெரிக்கா தலைமையிலான மேற்குலகம் தானும் சர்வதேச வலைப்பின்னலில் ஒரு பங்காளியாகும் வியூகத்தை வகுத்தது.

இனப்பிரச்சினையில் சமஷ்டி அடிப்படையிலான தீர்வே தற்போது தமக்கு சாதகமானது எனக்கருதும் மேற்குலகம் புலிகளால் தாம் நெருக்கடிக்குள்ளாகிவிட்டதா

  • கருத்துக்கள உறவுகள்

:):D:D கந்தா ஏன் இந்த வம்புசேட்டை...எங்களுக்கு இப்ப தேவை திருகோணமலை துறைமுகத்தில என்ன நடந்ததுபற்றிய செய்தி தான்..உந்த அரசியல் விளக்கமும் வியாக்கியானமும் யாருக்கு தேவை.

அது சரி சேத விபரம் எதாவது தெறியுமோ?நான் இண்று வேலைக்கு போகாமல் செய்திகளை எதிர் பார்த்து ........... :D:D:D:D:D:D:D

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.