Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பெரும் ஆப்பாக வருகின்றது ஐரோப்பிய ஒன்றிய அறிக்கை

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

பெரும் ஆப்பாக வருகின்றது

ஐரோப்பிய ஒன்றிய அறிக்கை

28.08.2008

இலங்கை நிலைமை குறித்து நேரில் ஆராய்வதற்காக அண்மையில் இங்கு வந்திருந்த ஐரோப்பிய ஒன்றியப் பிரதிநிதிகள் குழுவின் நகல் அறிக்கை குறித்து ஐரோப்பிய ஒன்றியம் அடுத்த மாதம் நடுப்பகுதியில் ஆராயவிருக்கின்றது.

அதன் பின்னர் இந்த அறிக்கை ஐரோப்பிய ஒன்றியப் பரிசீலனைக்காக ஐரோப்பிய ஒன்றிய நாடாளுமன்றத்தின் முன் சமர்ப்பிக்கப்படும் என்று தெரிகின்றது.

அண்மையில் இலங்கை வந்திருந்த ஐரோப்பிய ஒன்றியப் பிரதிநிதிகள் குழு, இங்கிருந்து புறப்பட முன்னர் தனது அவதானிப்புகள் குறித்துப் பத்திரிகையாளர் மாநாடு ஒன்றில் மேலோட்டமாகத் தகவல் வெளியிட்டிருந்தது.

அப்போது அப்பிரதிநிதிகள் வெளியிட்ட தகவல்கள் அவற்றுக்குரிய இராஜதந்திர மொழியில் அளவீடு செய்து பார்த்தால் அவை, இலங்கை அரசுக்குக் கடும் பாதகமானவையாக அமைந்தன என்பதை அச்சமயமே ஊகித்தறிய முடிந்திருந்தது.

அதனால் இப்போது தூதுக்குழுவினர் ஐரோப்பிய ஒன்றியத்துக்குச் சமர்ப்பிக்க இருக்கும் இலங்கை அவதானிப்பு தொடர்பான அறிக்கை, இலங்கை அரசுக்கு மிகப் பாதிப்பானதாகவே அமையும் என்று பலரும் எதிர்பார்க்கின்றார்கள்.

எனவே, இந்த அறிக்கை, இறுதி செய்யப்பட்டு, அது ஐரோப்பிய ஒன்றியத்துக்குச் சமர்ப்பிக்கப்படும் சமயத்தில் அதை எதிர்ப்பதற்கான திட்டங்களை இலங்கை இப்போதே ஆரம்பித்து விட்டதாகக் கூறப்படுகின்றது.

இலங்கை நிலைமையை நேரில் கண்டறிவதற்காக ஐரோப்பிய நாடாளுமன்ற உறுப்பினர் றொபேர்ட் இவான்ஸ் தலைமையில் இங்கு வந்த ஐரோப்பிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் ஈழத் தமிழர்களுக்குப் பக்கச்சார்பானவர்கள் என்றும்

புலம்பெயர்ந்த நாடுகளில் வசிக்கும் ஈழத் தமிழர்களின் வாக்குகளில் ஐரோப்பிய நாடாளுமன்றப் பிரதிநிதித்துவத்துக்கான அவர்களது அரசியல் தலைவிதி தங்கியிருப்பதால் அவர்கள் ஈழத் தமிழருக்குச் சார்பாகவே ஒருதலைப்பட்சமாகவே செயற்படுகிறார்கள் என்றும்

இலங்கை அரசு குறிப்பிட்டு, அதன் மூலம் இலங்கைக்கு விஜயம் செய்த ஐரோப்பிய ஒன்றியப் பிரதிநிதிகளின் பக்கச்சார்பின்மையைக் கேள்விக்குள்ளாகி, இந்த விடயத்தைச் சமாளிக்கலாம் எனத் திட்டம் போடுகின்றது.

இந்தத் திட்டம் நிறைவேறுமா? இலங்கை நிலைமையைக் கண்டறிவதற்காகத் தான் அனுப்பிய பிரதிநிதிகள் குழுவின் நேர்மைத்திறம் குறித்து இலங்கை அரசு எழுப்பப்போகும் சந்தேகம் பற்றி ஐரோப்பிய ஒன்றியம் கவனத்தில் கொள்ளுமா? என்பவை நியாயமான, ஆழமான கேள்விகளாகும்.

எது, எப்படியென்றாலும், ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுக்கு இலங்கையிலிருந்து தைத்த ஆடைகள் போன்றவற்றை ஏற்றுமதி செய்வதற்கு விசேட, வரிவிலக்கு சலுகை வழங்கும் "ஜி. எஸ். பி. பிளஸ்' உதவித் திட்டத்தை இலங்கைக்குத் தொடர்ந்து வழங்குவதா என்ற ஐரோப்பிய ஒன்றியத்தின் முடிவில் தீர்மானத்தில் மேற்படி இலங்கைக்கு விஜயம் செய்த ஒன்றியத்தின் பிரதிநிதிகள் தமது விஜயம் குறித்தும் அவதானிப்புகள் குறித்தும் சமர்ப்பிக்கும் அறிக்கை முக்கிய இடத்தை வகிக்கும் என்பது உறுதி.

இந்த அறிக்கை, இலங்கை அரசுக்கு கொழும்பு நிர்வாகத்துக்கு பெரும் பாதிப்பாக அமைந்து, அதன் காரணமாக "ஜி.எஸ்.பி. பிளஸ்' விசேட வரிச் சலுகையை இலங்கை பறிகொடுக்குமானால் வருடாந்தம் பத்தாயிரம் கோடி ரூபாவுக்கான ஏற்றுமதி வாய்ப்பை நிரந்தரமாக இழக்கும் நிலைமை இலங்கைக்கு ஏற்பட்டுவிடும்.

பொதுவாக இந்த வரிச்சலுகையை ஒரு நாடு தொடர்ந்து பெற வேண்டுமானால் அது சில அடிப்படை விவகாரங்களைப் பூர்த்தி செய்யவேண்டும்.

அவற்றுள்

சுற்றுச் சூழல், தொழிலாளர் உரிமைகள், மனித உரிமைகள் போன்றவை தொடர்பான இருபத்தியேழு சர்வதேசப் பட்டயங்களை அந்த நாடு ஏற்றுக்கொண்டு, அதன்படி கடைப்பிடித்து ஒழுகவேண்டும் என்பது முக்கியமான கடப்பாட்டு விதியாகும்.

ஆனால் கொழும்பு அரசின் மனித உரிமைகள் பேணும் போக்கோ இன்று சந்தி சிரிக்கும் கேவல நிலைக்கு வந்துவிட்டது என்பது கண்கூடு.

இலங்கையில் ஆட்கடத்தல்கள், காணாமற் போகச் செய்தல், சட்டத்துக்கு முரணான படுகொலைகள் போன்றவை அச்சம் தரும் வகையில் அதிகரித்து மோசமான கட்டத்தை அடைந்திருக்கின்றமை சர்வதேசத்திடமிருந்து வர்த்தக சலுகைகளை இலங்கை தொடர்ந்து பெற்றுக்கொள்வதற்கு ஆப்பு வைத்துவிடும் என்பதை ஐரோப்பிய ஒன்றியப் பிரதிநிதிகள் ஏற்கனவே தமது இலங்கை விஜயத்தின்போது சூசகமாகச் சுட்டிக்காட்டியிருந்தனர்.

ஆனால் இந்த எச்சரிக்கையின் ஆழத்தைக் கொழும்பு நிர்வாகம் புரிந்து கொண்டதாகத் தெரியவில்லை. நாட்டில் மோசமடைந்து வரும் மனித உரிமை நிலைவரம் மேன்மை அடைவதற்கான வாய்ப்புகளே களத்தில் தென்படவில்லை.

அந்தப் பின்புலத்தில் ஐரோப்பிய ஒன்றியப் பிரதிநிதிகள் குழு சமர்ப்பித்துள்ள அறிக்கை ஐரோப்பிய நாடாளுமன்றத்துக்கு வரும்போது இலங்கைக்கு அது பெரும் ஆப்பாக அமையும் என்பது நிச்சயம்.

http://www.sudaroli.com/

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நன்றி செய்தி இணைப்பிற்க்கு கறுப்பி!

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கை அரசுக்கு ஆப்பாக அமையவேண்டும் இதுதான் எல்லோரது விருப்பமும்

  • கருத்துக்கள உறவுகள்

இணைப்புக்கு நன்றி சோதரி!!!

முதல்ல அவங்கள் எதையாவது இறக்கட்டும் அதுக்குப்பிறகு தான் தெரியும் அது ஆப்பா இல்லையாவெண்டு..

உவங்களை நம்ப ஏலாது, உந்த அறிக்கை வரமுன்னம் அவங்கட இன்னொரு கூட்டாளி யப்பான் பிரதிநிகள் போய் மைந்தவின்ர

இனப்பிரச்சனை கயாளும் முறையும் திறமையுமெண்டு புழுகி அறிக்கை விட்டு இருக்கிறங்கள்...

வேறயாரும் இலங்கைக்கு ஆப்படிக்கப் போறன்ங்களெண்டு எங்கட சனம் பாத்திருக்க அவங்கள் எங்களுக்கே ஆப்படிச்சுபோடுவாங்கள்.

அதிகம் எதிர்பார்த்தா ஏமாற்றம்தான் வரும்

நாங்களும் நம்ப நடந்து நம்பாமல் இருக்கப்பழகவேணும்....

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.