Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சுஜி குணபால என்பவரே விடுதலைப்புலிகளுக்கு விமானங்கள் மூன்றை பெற்றுக்கொடுத்துள்ளார்‍--ஒரு புலனாய்வு ரிப்போட்

Featured Replies

ஆயுத வர்த்தகம் தொடர்பில் 5 வருடங்களுக்கு முன்னர் தாய்லாந்தின் மெரையின் காவற்துறையினரால் கைதுசெய்யப்பட்ட சுஜி குணபால என்பவரே விடுதலைப்புலிகளுக்கு சிலின் 143 ரக இலகு ரக விமானங்கள் மூன்றை பெற்றுக்கொடுத்துள்ளதாக புலனாய்வுதுறையினருக்கு தற்போது தகவல்கள் கிடைத்துள்ளதாக செய்தி வெளியிடப்பட்டுள்ளது.

போர் நிறுத்த உடன்படிக்கை ஏற்பட்டு 18 மாதங்களில் பின்னர் கப்பல் ஒன்றின் மூலம் இந்த மூன்று விமானங்களையும் முல்லைத்தீவு பிரதேசத்திற்கு கொண்டு சென்றததாக குணபால தனது வாக்கு மூலத்தில் தெரிவித்துள்ளார் என அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுஜி குணபாலவின் தந்தை சிங்களவர் என்பதுடன் அவர் காவற்துறை சிப்பாயாக பணியாற்றினார். அவரது தாய் தமிழ் பெண் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விடுதலைப்புலிகளின் விசேட படைப்பிரிவு ஒன்றை ஆரம்பிக்க தேவையான ஸ்லோக் மற்றும் ஹெல்னர் என்டிகோச் கைத்துப்பாக்கி மற்றும் 45 ஆயிரம் தோட்டக்களை கொள்வனவு செய்ய முயன்ற போது சுஜி குணபால கைதுசெய்யப்பட்டார்.

இவருடன் மேலும் இரண்டு ஆயுத கடத்தல்காரர்களும் கைதுசெய்யப்பட்டனர். தாய்லாந்தில் பல மணிநேரங்கள் குணபாலவிடம் விசாரணைகளை நடத்தியதாகவும் அவர் விடுதலைப்புலிகளுக்கு விமானங்களை கொண்டு சென்றமை குறித்து கூறியதாகவும் புலானாய்வு பிரிவின் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

போர் நிறுத்த காலத்தின் போது குணபாலவுக்கு விமான கடவுச்சீட்டை அப்போதைய அரசின் அரசியல்வாதி ஒருவரே பெற்றுக்கொடுத்துள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக கூறும் அந்த செய்தி, இந்த சம்பவம் குறித்து அப்போதைய அரசாங்கத்தின் குறித்த புலனாய்வுதுறை அதிகாரி அறிக்கை ஒன்றையும் சமர்பித்துள்ளதாக கூறப்படுகிறது.

http://www.tamilskynews.com/index.php?opti...s&Itemid=50

Edited by தராக்கி

  • கருத்துக்கள உறவுகள்

தமிழீழ விடுதலைப் புலிகள் வான் தாக்குதல்களுக்குப் பயன்படுத்தும் ஸ்லின் 143 ரக விமானங்களை சுஜீ குணபால என்பவரே வழங்கியுள்ளதாகப் புலனாய்வுத்துறைத் தகவல்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

ஆயுதக் கடத்தல் விவகாரம் தொடர்பில் மெரயின் பொலிஸாரினால் ஒரு வருடத்திற்கு முன்னர் சுஜீ குணபால கைது செய்யப்பட்டிருந்தார் என மேலும் தெரிவிக்கப்படுகிறது. யுத்த நிறுத்த உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டு 18 மாதங்களின் பின்னர் மூன்று இலகு ரக விமானங்கள் கப்பல் மூலம் முல்லைத்தீவிற்கு அனுப்பி வைக்கப்பட்டதாக குணபால வாக்குமூலம் அளித்துள்ளார்.

சுஜீ குணபாலவின் தாய் தமிழ்ப் பெண் எனவும், தந்தை முன்னாள் பொலிஸ் கான்ஸ்டபிள் எனவும் விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது.

விடுதலைப் புலிகள் விசேட அதிரடிப்படையை நிறுவுவதற்குத் தேவையான ஆயுதங்களைக் கொள்வனவு செய்யச் சென்றிருந்தவேளை குணபால கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த சிங்கள நபருக்கு கடவுச்சீட்டு பெற்றுக் கொடுப்பதற்கு யுத்தநிறுத்த காலத்தில் ஆட்சி செய்த அரசாங்கப் பிரமுகர் ஒருவர் உதவி செய்துள்ளதாக மேலும் தெரிவிக்கப்படுகிறது.

இந்தத் தகவல்கள் தொடர்பாக குறித்த புலனாய்வுத் துறை அதிகாரி அப்போதைய அரசாங்கத்திற்கு அறிக்கை சமர்ப்பித்திருந்ததாகத் தெரியவருகிறது

http://www.tamilwin.com/view.php?2aaiE9XDb...G7fdd0eeFh2ggde

  • கருத்துக்கள உறவுகள்

so what???

  • கருத்துக்கள உறவுகள்

so what???

அது தானே ....... அது பறக்குது தானே .........

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.