Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வல்லமையின் குரல் நலிந்தால் வளவுக்குயில் பாடாது.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

வல்லமையின் குரல் நலிந்தால் வளவுக்குயில் பாடாது.

எழுச்சி கொள்க கவிஞர்களே!

தாயகமூச்சு எமக்கில்லையா?

ஆயிரம் தடைகளை ஆரும் போட்டாலென்ன?

உன்னிப் பெருமூச்செடுத்து உறவணைக்க எழுந்திடுக.

நோயுண்ணும் உடல் நலித்தும்,

பேயுண்ணும் உணர்வொழித்தும்,

தாய் நிலத்தின் வேதனையை - எம்

தோள் தாங்காதிருக்கும் பாழ்வாழ்வு எங்களது என

வரலாற்று பதிவேட்டில் பதிவிக்கப் போகிறோமா?

கூடாது... கூடவே கூடாது.

முற்றத்து மணற்பரப்பில்

முழுமதியின் எழிலொளியில்,

சுற்றம் சூழப் புற்பாய் போட்டமர்ந்து பேசி,

அடிவளவு மூலையிலே படர்ந்த

முல்லைச் சொதி மணக்கும்

கவளச் சோறெண்ணி,

ஏக்கங்களை மட்டுமே எமதாக்கி,

பனிநிலங்களில் உயிர் தொய்ய வாழ்கிறோமே....

விட்டுவிடுவோமா?

தாய்நிலத்தில் ஏறி நின்று அந்நியன் கூத்தாட

வாயொடுக்கி, மெய் நடுக்கி விதியென்று கிடந்திடவோ?....

புலம்பெயர்ந்து கிடந்தாலும் புலன் மாறக்கூடாது.

வலியென்று துடித்தாலும்,

'அம்மா" என்றழைத்து விழுந்து புரண்டாலும்

எமைத் தாங்கிப் பிடிக்கின்ற தாய்மடியைத்

தவிப்பெய்த விட்டிடவோ....

தமிழச்சாதியாய் தரணிக்குள் பிறப்பெடுத்தோம்?

வாகை சூழ்ந்திருக்கும்,

வன்னிமேனியிலே சோகம் படர்ந்திடுமோ?

வாயாரத் தமிழ் தொடுத்து வல்கவிகள் நல்கும் கவிமுரசுகளே!

காலம் எம் காலடியில் கைகட்டி நிற்கிறது.

வாழ்வை வனைய வல்லமைபூட்டி

எழுதுகோல்கள் எழுந்துதான் ஆகவேண்டும்.

இது காலக்கட்டளையும் கூட..

ஆவி துடித்திருக்கும் விழுதுகளின் ஓரவிழிக்கசிவில்

தாயை மீட்கின்ற பாதிப்பலமிருக்கும் சேதியைக் கூவி முழங்குக.

நிமிர்ந்த தானை செருக்கோடு தலைவன் வழி தொடருகையில்

மேதினி வாழ் தமிழின் போர் முரசங்கள் மேனி நுடங்குதல் ஆகாது.

சோகச் சுமை ஏந்தலும், ஓர்மக்குரல் அடைத்தலும்

எழுதுகோல் வல்லமைக்கு இழிவல்லவா...

வல்லமை நலிந்தால் வளவுக்குயில் பாடாது.

வசந்தம் தாய்மண்ணைத் தழுவி மகிழாது.

முற்றத்து மலர்களால் முகம் சிவக்கமுடியாது.

போர் மூசும் பேய்க்காற்றை எதிர்கொள்ளும் பலம் தர நாமுள்ளோம்.

அஞ்சற்க....என தாயக உறவுகள் நோக்கி

ஆயிரமாயிரம் கவி படைத்து எழுக எம் கவிஞர்களே.

இன்று,

காலக் கட்டளை ஈழத்தமிழரின் திறவுகோல்கள் அற்ற

இதயவாசல்களையும் இடித்துப் பெயர்த்துளது.

பழி சூழும் நிலை எங்கள் பரம்பரைக்கு வந்திடுமோ என

இதுவரை காலமும் விழிமூடி நடித்தோரும் வெம்பி எழுந்துளர்.

உப்புக் காற்றுரசும் ஊர்மடியின் நினைப்பூற,

நேற்றுவரை செக்கிழுத்தோரும் சீற்றத்தில் கனல்கின்றர்.

அள்ளிப்பிடித்திருக்கும் ஆவி ஓய்ந்தால் கொள்ளிக்குத்தன்னும்

குலந்தழைத்தமண் வேண்டுமென சொல்லித் துடிக்கின்ற

சொந்தங்களும் எழுந்துளர்.

பள்ளிக் காலத்தில் பதிவிட்ட சித்திரத்தை

சில்லுருட்டி விளையாடிய செம்பாட்டுப் புழுதிமண்ணை

கல்லுக்குத்தி வைத்த தேர்முட்டி மூலைகளை

எண்ணி மகிழ்வோரும் எழுச்சியுற்று விரிந்துள்ளர்

எனும் சேதிகள் எங்கள் சொந்தங்களைச் சென்றடைய வேண்டும்.

வல்லமையின் குரல் நலிந்தால் வளவுக்குயில் பாடாது.

வசந்தம் தாய்மண்ணைத் தழுவி மகிழாது.

முற்றத்து மலர்களால் முகம் சிவக்கமுடியாது.

நோயுண்ணும் உடல் நலித்தும்,

பேயுண்ணும் உணர்வொழித்தும்,

தாய் நிலத்தின் வேதனையை - எம்

தோள் தாங்காதிருக்கும் பாழ்வாழ்வு எங்களது என

வரலாற்று பதிவேட்டில் பதிவிக்கப் போகிறோமா?

கூடாது... கூடவே கூடாது.

Edited by valvaizagara

உணர்ச்சிபூர்வமாக இருக்கு..

அதிகாரத் திமிரோடு ஆணவக் கொதிப்போடு

பலிகாரச் சிங்களம் பல்லிடரைப் படறவிட

குஞ்சும்குருமனுமாய் நெஞ்சக் கதறலுமாய்

முற்றம் துறந்தலையும் தொப்புள் கொடித் துயரத்தை

விட்டுநிற்கும் குற்றத்தில் என்னசொல்லிப் பாடுவேன் யான்?

பூவாய் பிஞ்சாய் நலியும் உயிர்களங்கே

பசியாய் பிணியாய் தொடரும் துயரமங்கே

ரணமாய் களமாய் சிவக்கும் நிலங்களங்கே

ஈகையாய் தியாகமாய் கொழிக்கும் மக்களங்கே

அத்தனையும் விட்டுவந்து என்னசொல்லிப் பாடுவேன் யான்?

ஆண்டாண்டு காலமாய் அக்கினியுள் குளித்தெழும்பும்

தியாகக் கொழுந்துகளின் உணர்வுத் தகிப்பினிலே

அருகிருக்கத் தகுதியின்றி அந்நியமாய் வந்திங்கு

சேதித் தொகுப்புகளுள் சிந்தையற்றுத் திகைக்கின்ற

புகலிடத் தமிழனிவன் என்ன சொல்லி பாடுவேனோ?!

Edited by sOliyAn

  • கருத்துக்கள உறவுகள்

வல்லமையின் குரல் நலிந்தால் வளவுக்குயில் பாடாது.

வசந்தம் தாய்மண்ணைத் தழுவி மகிழாது.

முற்றத்து மலர்களால் முகம் சிவக்கமுடியாது.

நோயுண்ணும் உடல் நலித்தும்,

பேயுண்ணும் உணர்வொழித்தும்,

தாய் நிலத்தின் வேதனையை - எம்

தோள் தாங்காதிருக்கும் பாழ்வாழ்வு எங்களது என

வரலாற்று பதிவேட்டில் பதிவிக்கப் போகிறோமா?

கூடாது... கூடவே கூடாது.

பொங்கு தமிழ் என்று

சங்கெடுத்து முழங்கும்...

தங்கத்தமிழ் மகளே...

மௌனத்தை தட்டுகிறாய்

முழங்கினால் முக்குதென்பார்..

முட்டினால் பயங்கரவாதியென்பார்..

புலத்தில் வாழ்வதங்காய்..

புலன்களை அடக்கி..

அவதியம்மா..அவதி

ஈனப்பிறவியாய்..

மானம் விற்பவரும்..

தாய்த்தமிழ் மணமறந்து..

இழிவேலை செய்பவரும்..

கூடி நின்று சிரித்து..

இன்னல் படும் மக்கள் துயர்..

இன்னமும் கூட்டுகிறார்..

இரத்தம் துடிக்கிறது..

துண்டு துண்டாய் கூறு போட..

பயங்கரவாதியென்று

பட்டம்கட்டி விடுவாரென

அடக்கி வைத்திருக்கும் ஆத்திரத்தை

தட்டச்சில் காட்டி

தாகத்தை தீர்க்கின்றேன்!

  • கருத்துக்கள உறவுகள்

எழுதிக்கிழிக்க கவிஞர்களே

எம்மூச்சையே எம்மால்

இழுத்துவிடமுடியவில்லை

ஆயிரம் தடை தாண்டி ஆரையும் தாண்டியும்

உன்னிப்பெருமூச்செடுத்தும் உறைவை

அணைக்க முடியவில்லை

நோயுண்டு உடல்நலிந்தும்

பேயுண்டு உணர்வொழிந்தும்

தாய் நிலத்துவேதனையை

தோள் தாங்க நினைத்தவெனக்கு

பாழ்வாழ்வுமட்டுமல்ல

வரலாற்றுப் பதிவேட்டில்

பாவிஎன்கிற பட்டம்வேறு

கூடாது கூடாது என்றுதான் நினைத்தேன்

இனி கூடவும் மாட்டாது

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

புகலிடத் தமிழனிவன் என்ன சொல்லி பாடுவேனோ?!

பாடுதற்கா பஞ்சம் சோழியா?

பழந்தமிழர் காலத்திலே பாட்டெடுத்த புலவரெல்லாம்

நாவரசி, பூவரசி, போரரசி என்றெல்லாம் எத்தனையோ

வடிவுகளை எம்தமிழுக்கு தந்திருக்க

எம் அகச்சூழில் கருப்பிடித்த அன்னைக்காய் பாட்டெடுக்க

உன் கன்னல் தமிழுக்கு கடினம் என்ன சொல் கவிஞ!

Edited by valvaizagara

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பொங்கு தமிழ் என்று

சங்கெடுத்து முழங்கும்...

தங்கத்தமிழ் மகளே...

மௌனத்தை தட்டுகிறாய்

முழங்கினால் முக்குதென்பார்..

முட்டினால் பயங்கரவாதியென்பார்..

புலத்தில் வாழ்வதங்காய்..

புலன்களை அடக்கி..

அவதியம்மா..அவதி

ஈனப்பிறவியாய்..

மானம் விற்பவரும்..

தாய்த்தமிழ் மணமறந்து..

இழிவேலை செய்பவரும்..

கூடி நின்று சிரித்து..

இன்னல் படும் மக்கள் துயர்..

இன்னமும் கூட்டுகிறார்..

இரத்தம் துடிக்கிறது..

துண்டு துண்டாய் கூறு போட..

பயங்கரவாதியென்று

பட்டம்கட்டி விடுவாரென

அடக்கி வைத்திருக்கும் ஆத்திரத்தை

தட்டச்சில் காட்டி

தாகத்தை தீர்க்கின்றேன்!

தட்டச்சுத் தமிழ்க்கவிஞா!

உன் மெளனத்தைத் தட்டியதால்

உன் மனக்கதவம் திறப்பதைப் பார்.

முதற்தடவை நீ முழங்கில் முக்குதெனச் சொல்லி - உன்

புலன் முடக்கி போடுதல்

உன்மேல் மற்றோர் கொண்ட அச்சமே.

முடங்காதே வெளியே வா!

நீ அடக்கி வைத்திருப்பது ஆத்திரமல்ல,

அன்னை மண்ணிருக்கும் அடங்காப் பற்றை...

தூயா, தமிழ் சிறீ உங்களுடைய கருத்துகளுக்கு மனந்திறந்து நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

எழுதிக்கிழிக்க கவிஞர்களே

எம்மூச்சையே எம்மால்

இழுத்துவிடமுடியவில்லை

ஆயிரம் தடை தாண்டி ஆரையும் தாண்டியும்

உன்னிப்பெருமூச்செடுத்தும் உறைவை

அணைக்க முடியவில்லை

நோயுண்டு உடல்நலிந்தும்

பேயுண்டு உணர்வொழிந்தும்

தாய் நிலத்துவேதனையை

தோள் தாங்க நினைத்தவெனக்கு

பாழ்வாழ்வுமட்டுமல்ல

வரலாற்றுப் பதிவேட்டில்

பாவிஎன்கிற பட்டம்வேறு

கூடாது கூடாது என்றுதான் நினைத்தேன்

இனி கூடவும் மாட்டாது

பாழ் வாழ்வு வந்ததென்று

தோள் தாழ்ந்து போனதென்ன?

மாயங்கள் உண்மையென

மனம் சலித்துப் நிற்பதென்ன?

தாய் நிலத்தைப் பாராது,

தறுதலையாய் நீயிருப்பின்

பாவியெனும் பேருனக்கு படிந்துவிடும் நண்பா.

Edited by valvaizagara

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.