Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

யுத்த நடவடிக்கைகளில் வெளிநாட்டு படையினர் சம்பந்தப்படவில்லை - அரசாங்கம் அறிவிப்பு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

யுத்த நடவடிக்கைகளில் வெளிநாட்டு படையினர் சம்பந்தப்படவில்லை - அரசாங்கம் அறிவிப்பு

வீரகேசரி நாளேடு 9/11/2008 9:07:17 PM - இலங்கையில் நடைபெறும் யுத்த நடவடிக்கைகளில் இந்திய படையினரோ, வெளிநாட்டு படையினரோ சம்பந்தப்படவில்லை. எனினும், தேசிய பாதுகாப்பினைக் கருத்தில் கொண்டு அயல் நாடான இந்தியா அதிநவீன ராடர் கருவியை வழங்கியமையையிட்டு இந்தியாவுக்கு அரசாங்கம் நன்றியை தெரிவித்துக் கொள்கின்றது என்று அமைச்சரவைப் பேச்சாளரும் அமைச்சருமான அனுர பிரியதர்சன யாப்பா தெரிவித்தார்.

வன்னியிலிருந்து சர்வதேச தொண்டு நிறுவனங்களை வெளியேறுமாறு கோரப்பட்டமை தற்காலிக ஏற்பாடாகும். அப்பிரதேசத்தில் நிலைமை வழமைக்கு திரும்பியதன் பின்னர் பணிகளை மேற்கொள்வதற்கு தொண்டு நிறுவனங்களுக்கு இடமளிக்கப்படும் என்றும் அவர் சொன்னார். பாராளுமன்ற கட்டிடத் தொகுதியில் இன்று வியாழக்கிழமை நடைபெற்ற வாராந்த அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டில் செய்தியாளர் கேட்ட கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அங்கு அவர் தொடர்ந்து பதிலளிக்கையில் மேலும் கூறியதாவது:

படையினர் கிளிநொச்சியை அண்மித்து கொண்டிருப்பதனால் அங்கு வாழுகின்ற பொதுமக்களுக்கு ஏதாவது விபரீதங்கள் ஏற்பட்டுவிடுமோ என்ற அச்சம் தேசிய சர்வதேச ரீதியில் ஏற்பட்டுள்ளது. கடந்த கால படிப்பினைகளை கொண்டு மக்களை மீள குடியேற்றுதல் மற்றும் நலன்புரி விடயங்களில் அரசாங்கம் அவதானத்தை செலுத்தியுள்ளது.

முன்னெடுக்கப்படும் படை நடவடிக்கைகளுடன் வெளிநாட்டு படையினர் சம்பந்தப்பட்டிருக்கவில்லை. எனினும், தேசிய பாதுகாப்பை கருத்தில் கொண்டு இந்தியா அதிநவீன ராடர் கருவியை வழங்கியுள்ளது. அதற்காக இந்திய அரசாங்கத்திற்கு இலங்கை அரசாங்கம் தனது நன்றியை தெரிவித்துக்கொள்கின்றது.

இந்தியர் இருவர் காயமடைந்துள்ளனர். அவர்கள் படையினரா? இல்லையா? என்பது தொடர்பில் எதுவுமே தெரியாது. எனினும், ஒப்பந்த அடிப்படையில் சேவைக்கு அமர்த்தப்பட்டிருக்கின்றார்

  • கருத்துக்கள உறவுகள்

உண்மையிலேயே இவரெல்லாம் அமைச்சர்தானா?? யப்பா முடியேல்லை :lol::o:D

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எங்கப்பன் குதிருக்குள் இல்லை. :lol:

பொறிவைச்சது முயலுக்கா இருக்கலாம் அனா மாட்டுப்பட்டது நரி... அதுக்காக நரியைக்காட்டி இதுதான் முயலெண்டா? :lol::o:D

யுத்த நடவடிக்கையில் ஈடுபடவில்லை. ஈடுபடுபவர்களுக்கு தேவைப்படும் போது எல்லாம் பின்பக்கம் துடைத்து விட்டுக்கொன்டு இருக்கிறர்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

பொறிவைச்சது முயலுக்கா இருக்கலாம் அனா மாட்டுப்பட்டது நரி... அதுக்காக நரியைக்காட்டி இதுதான் முயலெண்டா? :lol::o:D

எப்ப தான் இவர்கள் உண்மை பேசியுள்ளார்கள் .

கிளிநொச்சியை அண்மித்து விட்டார்களாம். யப்பா யப்பா அளவுகடந்த சந்தோசப் படுகிறாரோ?

புலிகளின் இன்னுமொரு தாக்குதலில் வெளிநாட்டுபடையினர் இருப்பர் வெளிப்படையாகும் அப்போத இவர் எந்த முகத்தை வைத்தக்கொண்டு பேசப்போகின்றார்.

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியா இந்த அவசர அறிக்கையை விட்டு இந்தச் சங்கடமான சூழ்நிலையால் தமிழ்நாட்டில் ஏற்ப்டுள்ள தாக்கத்தைக் குறைக்குமாறு இலங்கையிடம் நெருக்குவாரங்களை ஏற்படுத்தியிருப்பதாக கொழும்புச் செய்திகள் தெரிவிக்கின்றன.

இந்தியாவின் இரகசிய தமிழின ஒழிப்பு இராணுவப் பிரிவில் நிறையத் தமிழர்களும் விசயம் சரிவர புரிய வைக்கப்படாது ஈடுபடுத்தப்படுவதாகவும் சில மூத்த அரசியல்வாதிகளும் கூட வேறு வழியின்றி இத்தகைய ராணுவ நடவடிக்கைகளுக்குத் தமது சம்மதத்தைத் தெரிவித்துத் தம் தலையில் தாமே மண்ணைப் போடும் வேலையில் ஈடுபட்டிருப்பதாகவும் குடிசார் தகவல்களை ஆதாரங்காட்டிச் சென்னைச் செய்திகள் தெரிவிக்கின்றன.

ஆரம்பத்திலிருந்தே இந்தியாவின் நேரடித் தலையீட்டை முகச் சுளிப்போடு அனுமதித்த ராஜபக்ஸ அரசு தருணம் பார்த்து இந்தியாவின் கபட நோக்கங்களை உலகறியச் செய்து அதற்குச் சர்வ தேச ரீதியில் பெரிய அவமானத்தை ஏற்படுத்திவிட வேண்டுமென்னும் நோக்கில் செயற்பட்டதாகவும், அதற்காகவே வவனியா போன்ற மிக இலகுவாகத் தாக்கப் படக்கூடிய இடங்களில் இந்திய ராணுவத்தினரை செயற்படவைத்ததாகவும் அச்செய்திகள் மேலும் தெரிவிக்கின்றன.

அதற்காகவே வவனியா போன்ற மிக இலகுவாகத் தாக்கப் படக்கூடிய இடங்களில் இந்திய ராணுவத்தினரை செயற்படவைத்ததாகவும் அச்செய்திகள் மேலும் தெரிவிக்கின்றன.

என்ன இலகான இலக்கு?... 10 பேர் தங்கட இன்னுயிரைத்த்ந்திருக்காங்க

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.