Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

கொழும்பு - புறநகர்ப் பகுதிகளில் காரணம் இன்றி தங்கியிருக்கும் தமிழர்கள் உடனடியாக‌ வெளியேற வேண்டும் - கோதபாய ராஜபக்ஷ

Featured Replies

காரணம் எதுவுமின்றி தலைநகர் கொழும்பில் தங்கியிருக்கும் பெரும் எண்ணிக்கையிலானோரினால் பாதுகாப்பிற்கு பாரிய அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக பாதுகாப்புச் செயலாளர் கோதபாய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

கடந்த ஆகஸ்ட் மாதத்தில் எவ்வித காரணமுமின்றி கொழும்பு காவற்துறைப் பிரிவில் அதிக எண்ணிக்கையிலானோர் தங்கியிருந்ததாகத் பாதுகாப்பு வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கடந்த ஆகஸ்ட் மாதம் 6950 பேர் எவ்வித காரணமும் இன்றி கொழும்பில் உள்ள தற்காலிக விடுதிகள் மற்றும் வீடுகளில் தங்கியிருந்ததாக பாதுகாப்புச் செயலாளர் சுட்டிக்காட்டியுள்ளார். இந்த நிலைமை வழமைக்கு மாறானது, உண்மையில் இவ்வாறான சூழ்நிலைகளின் காரணமாக நாட்டின் தேசிய பாதுகாப்புக்கு பாரிய அச்சுறுத்தல்கள் ஏற்படக் கூடும் என அவர் தெரிவித்துள்ளார்.

காரணமின்றி கொழும்பு மற்றம் புறநகர்ப் பகுதிகளில் தங்கியிருப்போர் மீண்டும் சொந்த இடங்களுக்குச் செல்ல வேண்டும் என அவர் உத்தரவிட்டுள்ளார். தமிழீழ விடுதலைப் புலிகளின் தற்கொலைப் போராளிகளிடமிருந்து பாதுகாத்துக் கொள்வதற்காக பாதுகாப்பு படையினர் இவ்வாறான பாதுகாப்பு கெடுபிடிகளை அமுல்படுத்த வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இவ்வாறான பாதுகாப்பு ஏற்பாடுகளுக்கு நாம் ஆயத்தமாக வேண்டும் எனவும், இதனை அடிப்படை மனித உரிமை மீறலாகக் கருதக்கூடாது எனவும் பாதுகாப்புச் செயலாளர் கோதபாய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

http://www.tamilskynews.com/index.php?opti...&Itemid=108

  • கருத்துக்கள உறவுகள்

வன்னில உள்ள மக்களை சொந்த இடங்களை விட்டு வா என்றீங்க.. இப்ப கொழும்பில உள்ளவையை சொந்த இடத்துக்குப் போ என்றீங்க. தமிழன் என்ன கருணா.. பிள்ளையான்.. டக்கிளஸ்.. ஆனந்த சங்கரி போல.. இழிச்ச வாயன் என்று நினைச்சிட்டுதோ.. ராஜபக்ச குடும்பம்..! :lol::icon_idea:

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

இதுக்கு அவங்கட கச்ச [உச்ச]நீதி மன்றம் என்ன சொல்ல போகுதோ?? :icon_idea::lol:

வெளிமாவட்டங்களைச் சேர்ந்தோர் தேவையில்லாமல் தலைநகரில் தங்கியிருக்கக் கூடாது – அரசாங்கம்

நியாயமான தேவையின்றி வெளிமாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் தலைநகர் கொழும்பில் தங்கியிருக்கக் கூடாதென இலங்கை அரசாங்கத்தை மேற்கோள்காட்டி ஏ.எப்.பீ. செய்திச் சேவை தகவல் வெளியிட்டுள்ளது.

அநாவசியமான முறையில் கொழும்பில் தங்கியிருக்கும் நபர்களினால் நாட்டின் பாதுகாப்பிற்கு குறிப்பாக தலைநகரின் பாதுகாப்பிற்குப் பாரிய அச்சுறுத்தல் காணப்படுவதாகப் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

கடந்த மாதத்தில் சுமார் 7000 பேர் நியாயமான காரணங்களின்றி தலைநகரில் உள்ள வீடுகள்இ விதிகள் மற்றும் வேறும் இடங்களில் தங்கிருந்ததாகச் சுட்டிக் காட்டியுள்ளார்.

தேவையில்லாமல் கொழும்பில் தங்கியிருப்போர் தங்களது சொந்த இடங்களுக்குத் திரும்ப வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.

இவ்வாறு தங்கியிருக்கும் சிவிலியன்களுடன் தமிழீழ விடுதலைப் புலிகள் கலந்து விடுவதனால் பாதுகாப்புக் கடமையில் ஈடுபட்டுள்ள படையினர் பல்வேறு அசௌகரியங்களை எதிர்நோக்குவதாக அவர் தெரிவித்துள்ளார்.

கடந்த வருடம் கொழும்பிலிருந்த தமிழர்கள் அகற்றப்பட்டபோது சர்வதேச ரீதியில் பாரிய அதிர்வுகள் ஏற்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

வெளிநாட்ல் அரசியல் தஞ்சம் அல்லது தொழில் வாய்ப்புக்களைப் பெற்றுக் கொள்ளும் நோக்கில் வடக்கு கிழக்குப் பகுதிகளைச் சேர்ந்த பெரும் எண்ணிக்கையிலான தமிழர்கள் கொழும்பிற்கு வருகை தருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

நன்றி தமிழ் வின்

ஒரு பொருளை வாங்கும் போது எவரும் தேவையில்லாதவற்றை வாங்குவதில்லை!

ஒரு உதவி செய்யும் போது கூட, நாம் சில தேவைகள் கருதியே அதை செய்கிறோம்!

அப்படி இருக்க, ஒருவர் தன் சொந்த இடத்தை விட்டு இடம்பெயர்ந்து, பல்வேறு அசௌகரியங்களிடையே வேறு ஒரு இடத்தில் வசிக்கிறார் என்றால், அது அவருக்கு எத்துனை தேவையானது என்பது சொல்லாமலே புரியும்!

பெரும்பாலும் கொழும்பில் வசிக்கும் அனைவருமே கொழும்பை சேர்ந்தவர்கள் அல்ல. இவர்கள் பெரும்பாலும் பின்வரும் தேவைகளை கருத்தில் கொண்டே இங்கு வசித்து வருகின்றனர்:

1) வேலைவாய்ப்பு

2) கல்வி

3) வியாபாரம்

4) மருத்துவ சிகிச்சை

5) வெளிநாட்டுப் பயணம்

6) பாதுகாப்பு (தமிழர்)

7) சொகுசு வாழ்க்கை

எனவே இவற்றில் எவை எவை தேவையற்ற தேவைகள் என்றும், எவை தேவையான தேவைகள் என்றும் அரசாங்கம் வகைப்பட்டியல் ஒன்றையும் அறிவிப்பது தற்போது தேவையாகின்றது!

Edited by சாணக்கியன்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

முதல் கோத்.....தாவை கொழும்பில் இருந்து மட்டுமல்ல இந்த உலகத்திலையே இருந்து தூக்கவேணும்.அவருக்கே தனக்கு ஆப்பு வந்திட்டு என்று விளங்கிட்டுது போல அதன் எல்லாரையும் துரத்துகிறார் ஆனால் எப்படியோ உனக்கு சங்குதானடி :icon_idea:

வெளிமாவட்டங்களைச் சேர்ந்தோர் தேவையில்லாமல் தலைநகரில் தங்கியிருக்கக் கூடாது – அரசாங்கம்

நியாயமான தேவையின்றி வெளிமாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் தலைநகர் கொழும்பில் தங்கியிருக்கக் கூடாதென இலங்கை அரசாங்கத்தை மேற்கோள்காட்டி ஏ.எப்.பீ. செய்திச் சேவை தகவல் வெளியிட்டுள்ளது.

அநாவசியமான முறையில் கொழும்பில் தங்கியிருக்கும் நபர்களினால் நாட்டின் பாதுகாப்பிற்கு குறிப்பாக தலைநகரின் பாதுகாப்பிற்குப் பாரிய அச்சுறுத்தல் காணப்படுவதாகப் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

கடந்த மாதத்தில் சுமார் 7000 பேர் நியாயமான காரணங்களின்றி தலைநகரில் உள்ள வீடுகள்இ விதிகள் மற்றும் வேறும் இடங்களில் தங்கிருந்ததாகச் சுட்டிக் காட்டியுள்ளார்.

தேவையில்லாமல் கொழும்பில் தங்கியிருப்போர் தங்களது சொந்த இடங்களுக்குத் திரும்ப வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.

இவ்வாறு தங்கியிருக்கும் சிவிலியன்களுடன் தமிழீழ விடுதலைப் புலிகள் கலந்து விடுவதனால் பாதுகாப்புக் கடமையில் ஈடுபட்டுள்ள படையினர் பல்வேறு அசௌகரியங்களை எதிர்நோக்குவதாக அவர் தெரிவித்துள்ளார்.

கடந்த வருடம் கொழும்பிலிருந்த தமிழர்கள் அகற்றப்பட்டபோது சர்வதேச ரீதியில் பாரிய அதிர்வுகள் ஏற்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

வெளிநாட்ல் அரசியல் தஞ்சம் அல்லது தொழில் வாய்ப்புக்களைப் பெற்றுக் கொள்ளும் நோக்கில் வடக்கு கிழக்குப் பகுதிகளைச் சேர்ந்த பெரும் எண்ணிக்கையிலான தமிழர்கள் கொழும்பிற்கு வருகை தருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

நன்றி தமிழ் வின்

என்ன இது போறபோக்கில் இலங்கையில் சிறிலங்கா அரசாங்கத்தால் கொழும்பை பாதுக்காக கொழும்பு மக்கள் முழுவதுமாக துடைத்து வெளிமாவட்டத்திற்கு எடுத்து அங்கு இருந்து தவத்தி எடுத்து தான் கொழும்பில் தங்கவைக்க போறார்கள் , அது மட்டுமல்ல வெளிநாட்டில் இருந்து வரும் வெளிநாட்டவரை உடனடியாக வந்த வந்த நாட்டுக்கு போகுமாறும் கொழும்பை தற்போது எப்படி பாதுகாப்பது என்று அரசாங்கம் திண்டாடுவதாகவும் அதனால் அனைவரையும் உரிய இடங்களுக்கு போகுமாறும் அரசாங்கம் தெரிவித்து உள்ளது, அதவது அரசாங்கம் வன்னியில் இருக்கும் சர்வதேச நிறுவனங்களுக்கு தெரிவித்தது போல், கொழும்பில் இருக்கும் அரசாங்கத்திற்கு புலிகள் மறைமுக எச்சரிக்கை விடுத்ததால் கொழும்புக்கு இந்த நிலை ஏற்பட்டு உள்ளது எனவே அரசாங்கத்தை சும்மா குறை சொல்லாது உடனடியாக் வெளிக்கிடவும் இது மகிந்தவின் அறிக்கை,,,,இது மகிந்தகாலம் தமிழர்கள் அனைவரும் கொழும்பில் இனி இருப்பது அவ்வளவு நல்லதில்ல ....

Edited by கிருபா

கோத்தாவிற்கு போர்பற்றிப் புளுகமுடியாத நிலை தொடர்ந்தும் தோல்விகள். மரணபயம் வந்துவிட்டது கோத்தாவிற்கு தெரியும் புலிகள் நினைத்தால் எவ்வளவுதான் பாதுகாப்பிருந்தாலும் எந்தவொரு கோட்டைக்குள்ளும்நுளைந்து தன்னைப்போட்டுவிடுவார்கள் என்று அதனால்தான் கொழும்பை மக்கள் இல்லாத சூனியபிரதேசமாக்கி தன்மரணத்தை சற்றுத்தள்ளிப்போட முயற்சி ஆனால் அது முடியாது.

கோத்தா கொழும்பு என்ன உன்வீட்டுச்சொத்தா???

  • கருத்துக்கள உறவுகள்

சரி சாணக்கியன், நீங்கள் என்ன தேவைக்காகக் கொழும்பில் இருக்கிறீர்கள் ?

கோத்தபாயவின் இந்தக் கருத்துக்கும், புலிகளின் செயற்பாடுகள் என்று நீங்கள் சில வேளைகளில் கண்டிக்கும் செயல்களுக்கும் ஏதாவது தொடர்பிருக்கலாம் என்று கருதுகிறீர்களா? அப்படியிருந்தால், அந்த விமர்சணத்தை வைத்தே நீங்கள் தப்பித்துக் கொள்ளலாம்.

முதல்ல கோத்தபாயவை அம்பாந்தோட்டைக்கு அல்லது அமெரிக்காவுக்கு விரட்டுங்கள்.

7) சொகுசு வாழ்க்கை

(/quote)

:)

அண்ணன் சாணக்கியன் சில கதையளை சொல்லிப் போட்டியள் வந்து கத்தப் போறாங்கள் பாருங்கோ !

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.