Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

புலிகளின் வானூர்திகளை சுட்டுவீழ்த்த மிக்-29 ரக வானூர்திகளை வாங்க சிறிலங்கா முடிவு

Featured Replies

தமிழீழ விடுதலைப் புலிகளின் வானூர்திகளை வேகமாக சென்று சுட்டுவீழ்த்துவதற்கு மிக்-29 ரக அதிவேக அதிரடி வானூர்திகளை இந்த வருடத்திற்குள் சிறிலங்கா அரசு கொள்வனவு செய்யவுள்ளதாக அறியவருகிறது.

இது தொடர்பில் தெரியவருவதாவது:

விடுதலைப் புலிகளின் வானூர்திகள் பறப்பில் ஈடுபடும்போது அவற்றை சுட்டுவீழ்த்தக்கூடிய வகையில் சிறிலங்கா வான் படையிடம் தற்போது எஃப்-7 ரக வானூர்திகள் உள்ளன.

ஆனால்இ சடுதியாக வன்னியிலிருந்து வரும் புலிகளின் வானூர்திகளை இந்த எஃப்-7 ரக வானூர்திகள் கலைத்துச்சென்று தாக்க முயற்சித்தாலும்இ கட்டுநாயக்கா வான்படைத்தளத்திலிருந்து இவை செல்லும் முன்னர் புலிகளின் வானூர்திகள் குறித்த இலக்கை தாக்கிவிடும் அபாயமே தற்போது நிலவுகின்றது.

ஆகவேஇ புலிகளின் வானூர்திகள் இலக்கை தாக்கும் முன்னர் - அரச கதுவீயில் (ராடரில்) அவை தென்பட்ட உடனேயே கொழும்பிலிருந்து வேகமாக சென்று அவற்றை தாக்குவதற்கு ஏதுவாக புதிய ரக வான் சமர் வானூர்திகளை கொள்வனவு செய்ய சிறிலங்கா அரசு தீர்மானித்துள்ளது.

இதன்பொருட்டுஇ மிக்-29 எனப்படும் அதிவேக அதிரடி வானூர்திகள் ஐந்தை இந்த ஆண்டுக்குள் தனது வான் படையில் இணைக்க சிறிலங்கா அரசு தீர்மானித்துள்ளது.

அமெரிக்காவின் எஃப்-15 மற்றும் எஃப்-16 ரக வானூர்திகளுக்கு போட்டியாக ரஷ்யாவால் தயாரிக்கப்பட்ட இந்த மிக்-29 ரக வானூர்தி ஒன்றின் விலை 12 முதல் 15 மில்லியன் அமெரிக்க டொலர்கள் ஆகும் என்று தெரிவிக்கபடுகின்றது.

நன்றி புதினம்

  • கருத்துக்கள உறவுகள்

ஆனால்இ சடுதியாக வன்னியிலிருந்து வரும் புலிகளின் வானூர்திகளை இந்த எஃப்-7 ரக வானூர்திகள் கலைத்துச்சென்று தாக்க முயற்சித்தாலும்இ கட்டுநாயக்கா வான்படைத்தளத்திலிருந்து இவை செல்லும் முன்னர் புலிகளின் வானூர்திகள் குறித்த இலக்கை தாக்கிவிடும் அபாயமே தற்போது நிலவுகின்றது.

அமெரிக்காவின் எஃப்-15 மற்றும் எஃப்-16 ரக வானூர்திகளுக்கு போட்டியாக ரஷ்யாவால் தயாரிக்கப்பட்ட இந்த மிக்-29 ரக வானூர்தி ஒன்றின் விலை 12 முதல் 15 மில்லியன் அமெரிக்க டொலர்கள் ஆகும் என்று தெரிவிக்கபடுகின்றது.

நன்றி புதினம்

என்ன வாங்கினாலும் , புலிகளின் தாக்குதல் உத்திகளை முன்னமே கணிப்பது கடினம் .

இதனை வாங்குவதன் மூலம் அரசில் உள்ள சிலரின் வங்கி கணக்கு தான் அதிகரிக்கும்.

காலையும் மாலையும் 24 மணித்தியாலமும் வானத்திலை ரோந்து விட்டால் ஒருவேளை புலிகளின் விமானத்தை பார்க்கவாவது செய்யலாம்...!

  • தொடங்கியவர்

முதலில் வான் புலிகள் இன்னும் சிலின்ல் தான் வந்து போகின்றார்களா என்று கண்டுபிடிக்க?

இது வியாபாரந்தானே. ரஷ்யாவிற்கு இலாபம். தொடர்ந்து உள்நுழைவதற்கு இந்தியாவிற்கு இலாபம். அது எப்படிப் பயன்படுகிறது என்று கணிப்பிட்டுப்பார்க்க அமெரிக்காவிற்கு இலாபம்.

  • கருத்துக்கள உறவுகள்

இதென்ன எறும்பை பிடிக்க யானையை வாங்கும் கதையாக உள்ளது. மிக் 29ன் உபயோகம் பற்றி இனிதான் ரஸ்யா , இலங்கையிடம் படிக்க உள்ளது. :icon_mrgreen:

6, 7, 8 நிமிடங்கள் எண்டு சும்மா புருடா விர்றங்கள், F7 ர வேகம் 2175 KMPH, MIG29 2445 KMPH, அதிகமான 270 KMPH தான் போய் புலிகளின்ர விமானத்தை சுட்டு விழுத்தலாமெண்டா யார்தான் நம்புவாங்கள்?...

ஆடத்தெரியாதவனுக்கு மேடை சரியில்லை...

  • கருத்துக்கள உறவுகள்

மிக்29 ரக விமானங்களை

வாங்க அரசு நடவடிக்கை

விடுதலைப் புலிகளின் விமானங்களை வேகமாகச் சென்று சுட்டுவீழ்த்துவதற்கு மிக்29 ரக அதிவேக விமானங்களை இந்த வருடத்திற்குள் அரசு கொள்வனவு செய்யத் திட்டமிட்டுள்ளது எனத் தெரிவிக்கப்படுகின்றது.

இதுதொடர்பில் தெரியவந்திருப்பவை வருமாறு:

விடுதலைப் புலிகளின் விமானங்கள் பறப்பில் ஈடுபடும்போது அவற்றை சுட்டுவீழ்த்தக்கூடிய வகையில் அரச வான் படையிடம் தற்போது எவ்7 ரக விமானங்கள் உள்ளன.

ஆனால், சடுதியாக வன்னியிலிருந்து வரும் புலிகளின் விமானங்களை இந்த எவ்7 ரக விமானங்கள் கலைத்துச் சென்று தாக்க முயற்சித்தாலும், கட்டுநாயக்கா வான்படைத்தளத்திலிருந்து இவை செல்லும் முன்னர் புலிகளின் விமானங்கள் குறித்த இலக்கைத் தாக்கிவிடும் அபாயமே தற்போது நிலவுகின்றது.

இந்நிலையில், புலிகளின் விமானங்கள் இலக்கைத் தாக்கும் முன்னர் அரச கருவியில் (ராடரில்) அவை தென்பட்ட உடனேயே கொழும்பிலிருந்து வேகமாகச் சென்று அவற்றைத் தாக்குவதற்கு ஏதுவாக புதிய ரக வான் சமர் விமானங்களை கொள்வனவு செய்ய அரசு தீர்மானித்துள்ளது.

இதன்பொருட்டு, மிக்29 எனப்படும் அதிவேக விமானங்கள் ஐந்தை இந்த ஆண்டுக்குள் தனது வான் படையில் இணைக்க அரசு தீர்மானித்துள்ளது.

அமெரிக்காவின் எவ்15 மற்றும் எவ்16 ரக விமானங்களுக்குப் போட்டியாக ரஷ்யாவால் தயாரிக்கப்பட்ட இந்த மிக்29 ரக விமானங்களை வாங்கவே நடவடிக்கை எடுக்கப்படுகின்றது எனக் கூறப்பட்டது.

http://www.sudaroli.com/

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இதென்ன எறும்பை பிடிக்க யானையை வாங்கும் கதையாக உள்ளது. மிக் 29ன் உபயோகம் பற்றி இனிதான் ரஸ்யா , இலங்கையிடம் படிக்க உள்ளது. :unsure:

ஏற்கனவே இஸ்ரேல் தனது டோரா படகை இலங்கையில் விட்டு சோதனை பண்ணுவதுபோல... அடி வாங்கினாலும் திருத்திப்போட்டு திரும்பகுடுத்து சோதிக்கிறாங்க... ரெம்ப நல்லவங்கள் போல கிடக்கு...

  • கருத்துக்கள உறவுகள்

இது நகைச்சுவைக்கல்ல. எதிரி ஏதோ ஒரு வகையில் பலமடைவது எம் போராட்டத்தை என்னும் காலப்படுத்தும்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.