Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இந்தியாவில் புலிகளின் தடையை நீடிப்பதற்கான காரணத்தை சமர்ப்பிக்குமாறு மத்திய அரசுக்கு நீதிமன்றம் அறிவுறுத்து

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இந்தியாவில் புலிகளின் தடையை நீடிப்பதற்கான காரணத்தை சமர்ப்பிக்குமாறு மத்திய அரசுக்கு நீதிமன்றம் அறிவுறுத்து

[ வியாழக்கிழமை, 18 செப்ரெம்பர் 2008, 01:11.36 PM GMT +05:30 ]

இந்தியாவில் தமிழீழ விடுதலைப் புலிகளின் தடையை மேலும் இரண்டு வருடங்களுக்கு நீடிப்பதாயின் அதற்கான காரணத்தைச் சமர்ப்பிக்குமாறு இந்திய மத்திய அரசாங்கத்திற்கு நீதிமன்றத்தினால் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தமிழீழ விடுதலைப்புலிகள் மீதான தடையை நீடிப்பது தொடர்பாக அமைப்பட்டிருக்கும் விசேட நீதிமன்றம் இந்த அறிவுறுத்தலை விடுத்துள்ளது.

நீதிமன்றுக்கு தலைமை வகிக்கும் நீதிபதி விக்ரம்ஜித் சென் , தமிழீழ விடுதலைப் புலிகளின் தடையை மேலும் இரு வருடங்களுக்கு நீடிக்க வேண்டுமாயின் நாளைய தினத்திற்குள் அதற்கான நியாயமான சான்றுகளைச் சமர்ப்பிக்குமாறு கேட்டுள்ளார்.

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு 1992 ம் ஆண்டு , இந்தியாவின் 1967 ம் ஆண்டின் சட்டரீதியற்ற நடவடிக்கைகளைக் கட்டுப்படுத்தும் சட்டத்தின் கீழ் தடை செய்யப்பட்டது.

இந்திய முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி கொலைசெய்யப்பட்டதன் பின்னரே இந்த தடை விதிக்கப்பட்டது.

இந்த தடை பின்னர் 2 வருடங்களுக்கு ஒரு முறை நீடிக்கப்பட்டு வருகிறது.

இதேவேளை விசேட நீதிமன்றில் விடுதலைப் புலிகள் தரப்பில் ஆஜரான சட்டத்தரணி , இந்தியாவின் இறைமைக்கும் சுயாதிபத்தியத்திற்கும் தடங்கல் இன்றி செயற்படுவதால் அந்த அமைப்பைத் தடை செய்ய முடியாது எனத் தெரிவித்தார்.

இந்தியாவின் நீதித்துறை எல்லைக்குள் இதற்கான வாய்ப்புகள் இல்லையென்றும் அவர் குறிப்பிட்டார்.

  • கருத்துக்கள உறவுகள்

தீர்ப்பு எல்லோருக்கும் தெரிந்ததுதானே..! :(

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தீர்ப்பு எல்லோருக்கும் தெரிந்ததுதானே..! :(

எந்த தீர்ப்பை சொல்கின்றீர்கள்? இன்றைய தீர்ப்iபாய அல்லது நாளைய தீர்ப்பையா?

  • கருத்துக்கள உறவுகள்

எந்த தீர்ப்பை சொல்கின்றீர்கள்? இன்றைய தீர்ப்iபாய அல்லது நாளைய தீர்ப்பையா?

புலிகள் தடை தொடர்பிலான வரப்போகும் இந்திய நீதிமன்றத் தீர்ப்பைச் சொன்னேன்..! :(

ஏதோ.... இந்த செய்தில்... கன உள்ளக்கிடக்கைகள்.... பின்னால் உள்ளது... :( :(

ஈழ மக்களை வழமைபோல பூச்சாண்டி காட்ட ஒரு நாடகம்... அவ்வளவுதான்.

  • கருத்துக்கள உறவுகள்

இதற்காக புலி ஊடுருவுகின்றார்கள், ஆயுதம் கடத்துகின்றார்கள் என்ற நாடகத்தை றோவினர் மேற்கொள்ளவிருக்கின்றனர் என்பதை அறியத் தருகின்றேன்

தங்களது நாடகத்திற்கு ஏற்ற களமாக நீதிமன்றம் பயன்படப்போகின்றது. :(

சொந்த மீனவர்களை முன்னம் காப்பாத்துங்கோ...

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தமிழீழ விடுதலைப் புலிகள் ஏன் இந்தியாவில் தடை செய்யப்பட வேண்டும் என்பது குறித்து மத்திய அரசு விளக்கமளிக்க வேண்டும் என விசேட நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதாக இந்தியாவின் இணையதளம் ஒன்று செய்தி வெளியிட்டள்ளது.

விடுதலைப் புலிகள் தடை செய்யப்பட வேண்டியதற்கான காரணிகளை முன்வைக்குமாறு விக்ரம்ஜித் சிங் தலைமையிலான நீதவான் குழு மத்திய அரசாங்கத்திற்கு உத்தரவு பிறப்பித்துள்ளது.

எதிர்வரும் வெள்ளிக்கிழமைக்கு முதல் விடுதலைப் புலிகளுக்கு எதிராக ஆதாரங்கள் நீதிமன்றில் சமர்ப்பிக்கப்பட வேண்டும் என கோரப்பட்டுள்ளது.

ஆதாரத்துடன், நியாயமான காரணிகள் முன்வைக்கப்பட்டால் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் மீதான தடை இன்னும் இரண்டு வருடங்களுக்கு நீடிக்கப்படும்.

1992ம் ஆண்டு முதல் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிராக தடை நீடிக்கப்பட்டு வருகின்றது.

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலை செய்யப்பட்டதனைத் தொடர்ந்து இந்த தடை அமுல்படுத்தப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

தமிழீழ விடுதலைப் புலிகள் இந்திய எல்லைக்குள் தமது போராட்டங்களை முன்னெடுக்காமையினால் அமைப்பை தடை செய்ய முடியாதென விடுதலைப் புலிகள் தரப்பில் வாதம் முன்வைக்கப்பட்டுள்ளது.

இந்தியாவின் இறைமைக்கு பங்கம் ஏற்படக்கூடிய எந்தவொரு செயற்பாட்டையும் விடுதலைப் புலிகள் மேற்கொள்ளவில்லை என மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்கிலோபல்நியுஸ்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.