Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

வரலாற்றில் வடக்கு எதிர்கொள்ளாத பேரவலத்தை எதிர்கொள்ளும் வன்னி மக்கள்:

Featured Replies

வரலாற்றில் வடக்கு எதிர்கொள்ளாத பேரவலத்தை எதிர்கொள்ளும் வன்னி மக்கள்:

மணலாறில் நிலைகொண்டுள்ள படையினர் மேற்கொண்டு வரும் தொடர் எறிகணை வீச்சினால் குமுழமுனை கிராம மக்கள் இடம்பெயர்ந்து வருவதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இடம்பெயரும் அப்பகுதி மக்கள் தற்போது முள்ளியவளை, முல்லைத்தீவு சிலாவத்தை, வற்றாப்பளைப், பகுதிகளில் தஞ்சமடைந்து வருகின்றனர். குமுழமுனை மகாவித்தியாலயம் தற்போது நீராவிப்பிட்டி கொக்குத்தொடுவாய் அரசினர் தமிழ் கலவன் பாடசாலையில் இயங்குவதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த நிலையில் தர்மபுரம், விசுவமடு, கண்டாவளை, புளியம்பொக்கணை, உடையார்கட்டு முதலான பகுதிகள் இடம்பெயர்ந்த மக்களால் நிரம்பி வழிகின்றன. மக்கள் வீதியோரங்களிலும், வயல்வெளிகளிலும், மரங்களின் கீழும் தங்கியுள்ளனர். ஏற்கனவே மன்னார் பகுதிகளிலிருந்து பல இடங்களில் இடம்பெயர்ந்து தங்கியிருந்து மீண்டும் மீண்டும் இடம்பெயர்ந்து கொண்டிருக்கும் மக்களின் அவலம் வரலாற்றில் பேரவலம் என மக்கள் தெரிவிக்கின்றனர். தொண்டு நிறுவனங்களும் வெளியேறியுள்ள நிலையில் அவர்களுக்கான உணவுத் தேவைகளையே சமாளிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. தற்போது மழைபெய்யுமாக இருந்தால் வயல்வெளிகளில் தங்கியுள்ள மக்கள் மழைவெள்ளத்தினால் பாரிய பாதிப்புகளுக்குள்ளாக வேண்டியேற்படும். மன்னார், முழங்காவில், பூனகரி, ஜெயபுரம், வன்னேரிக்குளம், அக்கராயன்குளம் உட்பட கிளிநொச்சியின் மேற்குப் பகுதிகளிலிருந்து இடம்பெயர்ந்த மக்களுடன் கிளிநொச்சி மையப்பகுதி மக்களும் இடம்பெயர்ந்து வருவதால் இடம்பெயர்ந்து செல்லும் இடங்களில் பாரிய இடநெருக்கடிகள் ஏற்பட்டுள்ளன.

தங்குமிட வசதிகள் இல்லாத காரணத்தினால் மக்கள் தங்களின் வீடுகளின் கூரைகள் கதவுகளையும் கழற்றிச் செல்வதாகவும் இவ்வாறு மக்கள் மீள தமது இருப்பிடங்களுக்குச் செல்லும் போது கிளைமோர்த் தாக்குதல்களில் கொல்லப்படுவதாகவும் கவலை வெளியிடப்பட்டுள்ளது.

சமாதானப் பேச்சுவார்த்தைக் காலத்தில் கடுமையான உழைப்பினூடாக கிளிநொச்சிப் பகுதிகளில் கட்டப்பட்ட புதிய வீடுகளும் இவ்வாறு அம்மக்களால் கழட்டிச் செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. கிளிநொச்சி முல்லைத்தீவு வீதியிலும் இடம்பெயரும் மக்களின் வாகனங்களால் நெரிசல் ஏற்பட்டுள்ளதோடு, பல வாகனங்கள் வீதி சீரின்மையால் வீதியோரங்களில் தடம்புரண்ட நிலையில் இருப்பதாகவும் அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இவ்வாறான பேரவலத்தை எதிர் கொண்டுள்ள மக்களுக்கு உணவுப்பொருட்களை ஏற்றிச் சென்ற அரச அதிபரின் சுமையூர்தித் தொடரணிக்கு ஓமந்தைச் சோதனைச் சாவடியில் படையினரால் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

கடந்த இரு நாட்களாக இச்சுமையூர்திகள் ஓமந்தையில் தரித்து நிற்கின்றன. எனினும் தாங்கள் கிளிநொச்சி முல்லைத்தீவு மாவட்டங்களுக்கு உணவுப்பொருள் தொடரணியை அனுப்பிவைத்துள்ளதாகவும், அரசசார்பற்ற தொண்டு நிறுவனங்கள் வன்னியிலிருந்து வெளியேறி விட்டுள்ள போதும் அரசாங்கம் வன்னி மக்களுக்கான சகல உதவிகளையும் மேற்கொண்டு வருவதாகவும் அரசாங்கம் அதன் ஊடகங்களில் தெரிவித்து வருகின்றமை குறிப்படத்தக்கது,

www.globaltamilnews.com

யாரை நோவது????????????

  • கருத்துக்கள உறவுகள்

புலம் பெயர் மக்களில் தான் கைகளில் தான் வன்னி மக்களின் வாழ்வு தங்கியுள்ளது." மனமுண்டால் இடமுண்டு."

  • கருத்துக்கள உறவுகள்

<_< வன்னிக்கான எல்லா விநியோகங்களையுமல்லவா அரசாங்கம் நிறுத்தியிருக்கிறது ?

சனத்தை யர்தான் காப்பாற்றுவது ? சனத்துக்கு உள்ளேயும் இருக்க ஏலாது, வவுனியாவுக்கும் வரமுடியாது!!!

சூடான், பர்மா எண்டு ஓடித்திரியும் சர்வதேசத்துக்கு எங்கட சனம் படுகிற பாடு மட்டும் ஏன் தெரியாமல்ப் போனது?

ஏன், நாங்கள் மனிதர்களில்லையா? எதுக்கு இந்தப் பாராமுகம் ?

மக்களுக்கு இதுவரை உதவிவந்த தமிழர் புணர்வாழ்வுக் கழக நிதிகளைக்கூட சில நாடுகள் முடக்கியிருக்கின்றன?!

யாரை நோவது?

நாம் இங்கு வந்ததால் வாழ்கிறோம், இன்னும் அங்கிருக்கும் எமது மக்கள் படும் துன்பம் சொல்லிலடங்காது!

உங்களின் கேள்விக்கான விடை போரியல் வெற்றியில்தான் தங்கியுள்ளது.... புலத்தில் உள்ளவர்களால் எதுக்கும் உதவமுடியும்....

யுக்திகள் இல்லாமல் இல்லை... மனம் வேண்டும்...

  • கருத்துக்கள உறவுகள்

உணவு, மருத்துவம், வீடு உற்பட்ட பல விடயங்களில் அம்மக்கள் மிகவும் அவதிப்படுகின்றார்கள். எந்த உதவிகளையும், இப்போதே செய்வதூடாகத் தான் அவர்களுக்குத் துணையாக நிற்கலாமே தவிர, எல்லாம் கை மீறிப் போன பின்னர் கவலைப்பட்டு எதுவும் ஆகாது. அந்த நிலை ஆகக் கூடாது என்றால் இன்றே துயர் துடைக்க உதவுங்கள்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.