Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஈழத் தமிழர் படுகொலைக்கு புதுடில்லியே மெளன சாட்சி: ஜெயலலிதா குற்றச்சாட்டு

Featured Replies

ஈழத் தமிழர் படுகொலைக்கு புதுடில்லியே மெளன சாட்சி: ஜெயலலிதா குற்றச்சாட்டு

[சனிக்கிழமை, 04 ஒக்ரோபர் 2008, 05:54 பி.ப ஈழம்] [புதினம் நிருபர்]

ஈழத் தமிழர் படுகொலைக்கு புதுடில்லியே மெளன சாட்சி என்பது மட்டுமல்ல, இந்தக் கொடூர செயல்கள் அனைத்திற்கும் கூட்டாளியாக இந்திய அரசு செயல்பட்டிருக்கின்றது என்று அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளர் ஜெ.ஜெயலலிதா குற்றம் சாட்டியுள்ளார்.

இது தொடர்பில் இன்று சனிக்கிழமை ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:

சிறிலங்கா இராணுவத்தினர் 100 பேருக்கு அண்மையில் அரியானா மாநிலத்தில் இந்திய இராணுவம் இரகசியமான முறையில் போர் பயிற்சி அளித்ததாக வந்துள்ள பத்திரிகை-தொலைக்காட்சி செய்தியைப்பார்த்து பெரும் அதிர்ச்சி அடைந்தேன்.

தொழில்நுட்ப ரீதியாகவும், போர்க்கள ஆற்றலிலும் வல்லமை பெற்றிருப்பதால், இந்திய இராணுவம் இத்தகைய பயிற்சியை சிறிலங்கா இராணுவத்திற்கு அளித்திருப்பதும், இந்திய அரசின் முழு ஆதரவோடும், ஒப்புதலோடும் இந்தப் பயிற்சி நடைபெற்றிருப்பதும் தெளிவாகின்றது.

சிறிலங்கா இராணுவத்திற்கு இந்தியா ஆயுதங்களை வழங்குகிறது என்றும், மிக நவீன இராணுவ ராடர் கருவிகளை வழங்கி, இந்திய இராணுவம் அந்த ராடர் கருவிகளை தந்தது என்றும் அண்மையில் பல ஊடகங்களில் செய்திகள் வெளிவந்தன. இத்தகைய செய்திகளை இந்திய அரசு மறுக்கவில்லை.

பிரதமரின் மூத்த உதவியாளர்கள் சிலரும், இந்திய இராணுவத்தின் மூத்த அதிகாரிகள் சிலரும் சிறிலங்காவுக்குச் சென்று வந்தனர் என்ற செய்தியையும் பத்திரிகைகள் வெளியிட்டன. அதையும் இந்திய அரசு மறுக்கவில்லை.

சிறிலங்கா இராணுவத்திற்கு இந்திய மண்ணில் பயிற்சி அளிக்கப்பட்ட செய்தியையும் ஊடகங்கள் திறம்பட கண்டுபிடித்து மக்கள் பார்வைக்குக் கொண்டு வந்துள்ளன.

ஒரு நாட்டு இராணுவம் மற்றொரு நாட்டுப் படையினருக்கு பயிற்சி அளிப்பது எங்குமே நடைபெறக் கூடியது தான். ஆனால், யாருக்கு எதிராக செயற்பட சிறிலங்கா இராணுவத்திற்கு இந்திய இராணுவம் பயிற்சி அளிக்கிறது என்பது தான் முக்கியமான கேள்வி.

இலங்கையில் இராணுவச் செயற்பாடுகள் அனைத்தும் தமிழர்களுக்கு எதிராகத்தான் அமைந்துள்ளன என்பது எல்லோருக்கும் நன்கு தெரியும். விடுதலைப் புலிகள் இயக்கத்தினர் மீது மட்டும் தான் தாக்குதல் நடத்துகின்றோம் என்று சிறிலங்கா அரசு பறை சாற்றலாம்.

ஆனால், ஒவ்வொரு நாளும் தமிழர் பகுதிகளில் மடிந்து கொண்டிருக்கும் தமிழ் மக்களைப் பற்றி வரும் செய்திகள், சிறிலங்கா இராணுவத்தின் தாக்குதலில் உயிரிழப்போர் விடுதலைப் புலிகள் மட்டும் அல்ல, அப்பாவி தமிழ் மக்களும் தான் என்ற உண்மையை உலகுக்குச் சொல்லுகின்றனவே!

இலங்கையில் தமிழர்கள் மீதான தாக்குதலுக்கு இந்திய ஆயுதங்களும், பயிற்சியும் பயன்படுத்தப்படுகின்றன என்பது தான் இந்தச் செய்திகள் அனைத்திலும் பொதிந்திருக்கும் உண்மை.

இந்தக் கொடுமை போதாது என்று சிறிலங்கா இராணுவம் தமிழக மீனவர்களையும் சுட்டுக்கொல்கின்றது. இந்திய அரசால் சிறிலங்காவுக்கு தாரை வார்க்கப்பட்ட கச்சதீவு பகுதியிலேயே இந்திய மீனவர் ஒருவரை சிறிலங்கா அரசு சுட்டுக்கொன்றது என்று அண்மையில் செய்தி வந்துள்ளது.

இந்தப் பிரச்சினையை சிறிலங்கா அரசின் கவனத்திற்கு எடுத்துச் சென்றிருப்பதாக இந்திய அரசு எப்போதும் தெரிவிக்கின்றதே தவிர, உருப்படியான நடவடிக்கை எதையும் இந்திய அரசு இதுவரை எடுக்கவில்லை. இந்த வேதனையான உண்மையை என்னவென்று சொல்வது?

இத்தனைப் படுகொலைகளையும் இந்திய அரசு வெறுமனே பார்த்துக் கொண்டிருக்கின்றது. அனைத்திற்கும் புதுடில்லியே மெளன சாட்சி என்பது மட்டும் அல்ல, இந்தக் கொடூர செயல்கள் அனைத்திற்கும் கூட்டாளியாக இந்திய அரசு செயல்பட்டிருக்கின்றது. ஆயுதங்களையும், ராடர் கருவிகளையும், பயிற்சியையும் சிறிலங்கா இராணுவத்திற்கு வழங்கியதன் மூலம், இந்த கோரச் சம்பவங்களின் முழு பங்குதாரராக இந்திய அரசு செயற்பட்டிருக்கின்றது.

மத்திய அமைச்சர்கள் என தமிழ்நாட்டுப் பிரதிநிதிகள் 10 பேரைக் கொண்ட இந்திய அரசு தான் இத்தகைய பழி பாவத்தில் பங்குபெற்றிருக்கின்றது. தி.மு.க-வை மிக இன்றியமையாத உறுப்பினராகக் கொண்ட மத்திய கூட்டணி அரசு தான் இந்தக் கொடுமைகளில் கூட்டாளியாகி இருக்கின்றது.

கூட்டணியில் இருந்து வெளியேறுவோம் என்று தி.மு.க. அறிவித்தால் மத்திய ஆட்சியே கவிழ்ந்து விடும். ஆனால், "தமிழினத் தலைவர்'' என்று தன்னைத் தானே சொல்லிக்கொள்ளும் கருணாநிதி, தமிழர்களின் நலன், பாதுகாப்பு, நல்வாழ்வு என்பன பற்றிய பேச்சு எழும்போதெல்லாம் பேச்சு, மூச்சற்றுப் போவார் வாய்மூடிக் கிடப்பார்.

தங்களைப் பற்றிய அக்கறை கருணாநிதிக்கு இல்லை என்பதை மக்கள் உணர வேண்டும். வரலாறு கண்டிராத விலைவாசி உயர்வைக்கட்டுப்படுத்த அவர் எதையும் செய்ய வில்லை. தமிழ்நாட்டில் சட்டம்-ஒழுங்கை நிலைநாட்ட கருணாநிதி எந்த முயற்சியும் மேற்கொள்ளவில்லை.

அமெரிக்காவின் தாசானு தாசராக உருமாறியுள்ள டொக்டர் மன்மோகன்சிங், தன் எஜமானிய நாட்டின் அதிபரிடம் இருந்து ஏதும் கற்றதாகத் தெரியவில்லை. நியூயோர்க் நகரின் இரட்டைக் கோபுர கட்டடங்கள் மீது பயங்கரவாதிகள் நடத்திய ஒரு தாக்குதல் காரணமாக, ஆப்கானிஸ்தான் என்ற ஒரு நாடே அமெரிக்காவால் சின்னாபின்னமாக்கப்பட்டிருப

இலங்கையுடன் இந்தியா கூட்டு ரோந்து போகக் கூடாது: கருணாநிதி

சென்னை: இலங்கை கடற்படையுடன் இந்திய கடற்படை கூட்டு ரோந்து செல்வது உகந்ததாக இருக்காது. எனவே இந்தத் திட்டத்தை கைவிட வேண்டும் என பிரதமர் மன்மோகன் சிங்குக்கு முதல்வர் கருணாநிதி கோரிக்கை விடுத்துள்ளார்.

கச்சத்தீவு பகுதியில் தமிழக மீனவர்கள் மீன்பிடிக்க செல்லும் போது இலங்கை கடற்படையினரால் தாக்கப்படும் சம்பவங்கள் அடிக்கடி நடைபெற்று வருகின்றன.

இலங்கை கடற்படையினரின் கண்மூடித்தனமான துப்பாக்கி சூட்டிற்கு ஏராளமான மீனவர்கள் பலியாகி வருகின்றனர். இதுதொடர்பாக சமீபத்தில் முதல்வர் கருணாநிதியை சந்தித்த தேசிய பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே. நாராயணன் இனி இலங்கை கடற் படையினர் இந்திய மீனவர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்த மாட்டார்கள் என்று இலங்கை உறுதி அளித்திருப்பதாக தெரிவித்தார்.

ஆனால் அந்த உறுதிமொழிக்கு கொஞ்சம் கூட மரியாதை இல்லை என்பதைப் போல கடந்த 28ம் தேதி இலங்கை கடற்படை மீண்டும் துப்பாக்கிச்சூடு நடத்தியதில் மதுரையைச் சேர்ந்த மீனவர் முருகன் கொல்லப்பட்டார்.

இந்த விவகாரம் குறித்து சமீபத்தில் வெளியுறவு அமைச்சர் பிரணாப் முகர்ஜி நியூயார்க்கில் இலங்கை வெளியுறவு அமைச்சர் ரோஹித பொகலகாமாவைச் சந்தித்த போது விவாதித்தார்.

தமிழக மீனவர்கள் தாக்கப்படுவதை தடுக்க இந்திய இலங்கை கடற்படை கூட்டு ரோந்து பணியை மேற் கொள்ளலாம் என்று இலங்கை அமைச்சர் யோசனை தெரிவித்ததாக செய்திகள் வெளியாகின.

இதற்கு மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கடும் கண்டனம் ெதரிவித்தார். இது தமிழக மீனவர்களுக்கு எதிரான நடவடிக்கை. எனவே இதை மேற்கொள்ளக் கூடாது என அவர் பிரதமருக்கு கோரிக்கை விடுத்தார். தமிழகத்தைச் ேசர்ந்த பல்வேறு கட்சிகளும் கூட இதை எதிர்த்தன.

தற்போது முதல்வர் கருணாநிதியும் இந்த யோசனைக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இதுகுறித்து பிரதமர் மன்மோகன் சிங்குக்கு அவர் கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.

அதில் இந்திய வெளியுறவு அமைச்சரும் இலங்கை வெளியுறவு அமைச்சரும் அண்மையில் நடத்திய ஆலோசனை யில் கூட்டு ரோந்து திட்டம் இலங்கையால் முன்வைக்கப்பட்டதாக செய்திகள் வெளிவந்துள்ளன.

இந்திய கடல் எல்லைப்பகுதியை வலுப்படுத்த வேண்டும் என்றும் அதற்கு இந்திய கடற்படையும் கடலோர காவல்படையும் தேவை யான அதிநவீன வசதிகள் மற்றும் கருவிகள் அளிக்கப்பட்டு வலுப் படுத்தப்பட வேண்டும் என்றும் நான் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறேன்.

கூட்டு ரோந்து திட்டம் குறித்து ஏற்கனவே விவாதிக்கப்பட்டு பல்வேறு காரணங்களால் அது நமக்கு சாதகமானது இல்லை என்று நிராகரிக்கப்பட்டது.

இந்த விஷயம் குறித்து தேசிய பாதுகாப்பு ஆலோசகருடன் முந்தைய தலைமைச் செயலாளர் மற்றும் தமிழக அரசின் உயரதிகாரிகள் விரிவாக விவாதித்து கூட்டு ரோந்து கூடாது என்பதற்கான காரணங்களை விளக்கியுள்ளார்கள்.

தேசிய பாதுகாப்பு ஆலோசகர் என்னை சந்தித்த போதும் கடற்படை மற்றும் கடலோர காவல்படைக்கு நவீன சாதனங்கள் மற்றும் கருவிகள் வழங்கப்பட்டு வலுப்படுத்தப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தினேன். எனவே அதனை உடனடியாக மேற்கொண்டால் நான் நன்றியுடையவனாக இருப்பேன்.

இந்த சமயத்தில் நான் ஏற்கனவே கூறியபடி கூட்டு ரோந்து என்பது தேவையற்றதாகும். எனவே இந்த விஷயத்தில் இலங்கை அரசின் கோரிக்கையை பரிசீலிக்க தேவையில்லை என்று கேட்டு கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.

http://thatstamil.oneindia.in/news/2008/10...-sri-lanka.html

இடதுசாரிகள் வைத்த நெருப்பு கொஞ்சம் எண்ணையை நாம் தான் ஊற்ற வேண்டும் பற்றி எரிவதற்கு மேலும் இம்மாதிரியான அறிக்கைகளை எதிர்பார்க்கின்றோம்.அப்போது தான் ஆட்சியில் இருப்பவர் அசைவார்

Edited by THEEPAN0007

நன்றி செல்வி. ஜெயலலிதா அவர்களே!!!

ஈழத்தமிழர் பற்றிய உங்களின் இந்த கரிசனை மேலும் மேலும் உரம் பெறவேண்டும் என்பது

சிங்கள அரச பயங்கரவாதத்தால் தினம் தினம் அல்லலுறும் தமிழர்களின் வேண்டுகோளும் விருப்பமும் ஆகும்

Edited by vettri-vel

  • கருத்துக்கள உறவுகள்

தான் தப்பிப்பதற்க்காக ஒரு அல்வா அவ்வளவுதான்[போராட்டத்தில் கலந்து கொள்ளாமல் விடும் ஒரு அறிக்கைதான்] இது :rolleyes:

ச...... நான் மாத்திரம் அங்க இருந்திருந்தா.. அம்மான்ர கால்ல விழுந்திருப்பன், அம்மாவும் உச்சி குளிர்ந்து..... தொடர்ந்தும் ஆதரவளிப்பா...

இதுக்கெல்லாம் சேர்த்துத்தான் கருணா நிதி பதில்சொல்லப்போறார் மாங்கொல்லையில... உக்காந்து யோசிப்பாங்களோ?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.