Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வசந்த கால கோலங்கள் .......

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

வசந்த கால கோலங்கள் .............

அந்த அமைதியான் கிராமத்தின் மைய பகுதியில் அமைந்து இருந்தது அந்த கலாசாலை மாணவர்களும் மாணவிகளும் ,எந்நேரமும் கல கலப்பாக இருக்கும் . ,காலை பொழுதினிலே ,பாடசாலை தொடங்கும் சமையத்தில் சிறு இறை வழிபாடுடன் ஆரம்பித்து அன்றைய காலை செய்தியுடன் ,அறிவித்தால் ஏதும் இருப்பின் அவற்றுடனும் .அதிபர் விடைபெறுவார் .உயர்வகுப்பில்

தாவாரவியல் வகுப்புக்கு சில மாதங்களாக ஆசிரியர் தற்காலிக அடிப்படையில் வந்து போனார்கள். இந்நிலையில் அதிபரின் அன்றைய செய்தி ,தாவரவியல் படிக்கும் மாணவருக்கு எதிர்பார்ப்புடன் கூடிய இனிப்பாக இருந்தது. அவர் ஒரு பெண்மணி என்றும் ,அயலிலுள்ள நகரத்தில் இருந்து வருபவர் என்றும் அறிவிக்க பட்டது .

மறு வாரம் திங்கள் கிழமை ,அவர் வந்தார் அமைதியான் ,அழகான் டீச்சர் செல்வி ,சாதனா ஷன்முகராஜா (கற்பனைபெயர் ).அந்த நாளின் மூன்றாவது பாடம் தாவரவியல் .மிஸ் சாதனா வுக்கு வணக்கம் செலுத்திய பின் மாணவ அறிமுகம், பின் அவர்களது ஆய்வு கூடம் ,பற்றிய விளக்கம் , இவை முடிய ,வகுப்பு பூக்களின் மகரந்த சேர்கை ...பூவினங்கள் ,வகை என்ற தலைப்பில் ஆரம்பிக்க பட்டது.

காலமும் ஓடிக்கொண்டு இருந்தது ,மாணவார்களும் ஆர்வமாக படித்தனர் .பாடசாலை முடிய அவர் பஸ் (பேரூந்து) வண்டியில் காத்திருந்து வீடு செல்வார். தினமும் அவர் வரவை அந்த வகுப்பு எதிர் பார்த்திருக்கும் ,அந்த பாடசாலையின் ஆசிரிய குழாமின் இளம் வயது டீச்சர் அவதான் . தினம் ஒரு கலர் ,அதே நிற பாதணி (செருப்பு) குடை .என்று நன்றாகவே அவதானித்தார்கள் . அந்த வகுப்பில்

வாசன் எனும் சீனிவாசனுக்கு மட்டும் தனி விருப்பு அந்த டீச்சரில் .பஸ் வண்டி வரும் வரை சில சமயம் அவருக்கு துணையாக ,பஸ் தரிப்பில் நிற்பான் ,தேர்வில் இரண்டாம் இடத்தில் அதிக புள்ளிகள் பெறுவான் . ஊக்கமானவன் ,பாட சந்தேகங்களும் கேட்டு தெரிந்து கொள்வான்.

வருட இறுதி ,பாட சாலை விடுமுறையும் விடப்போகிறது .அன்று வழக்கம் போல வாசன் பஸ் தரிப்பிடத்தில் ,நின்றான் . திடீரென ... டீச்சருக்கு அவவின் குடை ஆசிரியர் கூடும் இடத்தில் (..staff room .... ) விட்ட நினைவு வரவே ,அவனை எடுத்து வர சொன்னார் .அவன் ஓட்டமும் நடையுமாக எடுத்து வந்தான் ,அதை கொடுக்கும் போது அவவின் கையை பிடித்து ,டீச்சர் "" ஐ லவ் யு " என்று கூறி விட்டு ...அவிடம் அகன்று விடான் . அவர் திகைத்து விட்டார் .பஸின் நடத்துனர் ,பட்டணத்தின் பெயரை சொல்லி ஏறும்படி குரல் கேட்கவே ,,நினைவு திரும்பியவராய்.... தனது இருக்கையில் ஏறி அமர்ந்தார்.

அவர் எண்ணமெல்லாம் இந்த பையன் இப்படி கூறி விட்டான் ? இதற்கு நான் காரணமா ....இந்த சின்ன வயசில் ஏன் இந்த சலனம் . அழகான பெண்கள் வகுப்பில் இருக்க ஏன் இந்த பையன் ........இப்படி ? பருவ கோளாறா ? என் இளமையா ? .....மறு நாள் பாடசாலைக்கு அவன் வரவே இல்லை .....அதிபரிடம் சேதி போய்விடும் என்ற பயமோ ? இப்படியே விட்டால் .........அவன் மன நிலை குழம்பி வருட இறுதி பரீட்சை ..தவற விட்டுவிடுவானோ .? மூன்றாம் நாள் ...வந்தான் வாசன் . மத்திய இடை வேளை வாசனை கூப்பிட்டு அனுப்பினார் .டீச்சர் ...வாசன் .......அவனும் குற்ற உணர்வுடன் தயங்கி தயங்கி வரவே அவனை அன்போடு அணைத்து ....கவனமாக கேள் .வருட இறுதி சோதனை வருகிறது. கவனமாக படித்து முன்னேற வேண்டும் . .

மனதை அலை பாயவிடாதே ...தாய் இல்லாத உனக்கு .....நான் .....அம்மாவாக வர இருக்கிறேன் ..... என்றார் .

அப்போது தான் அவனுக்கு உறைத்தது .அவன் அப்பா பட்டணத்தில் வேலை பார்ப்பதும் வாரமொருமுறை வருவதும்; அப்பம்மாவுடன் வாழ்வதும். அப்பாவை எவ்வளவு வற்புறுத்தியும் இரண்டாம் தாரம் செய்யாமல் இருப்பது. ............ஆமாம் அவள் அவன் அப்பாவின் இரண்டாம் மனைவியாக ,வரவிருந்தாள். ...அவளது தனிப்பட்ட வாழ்வில் , பதிவு திருமணம் முடிந்த இரண்டாம் வாரம் ....கணவனை மோட்டார் வண்டி விபத்தில் பறி கொடுத்து இருந்தாள் என்பது யாருக்கும் தெரியாத ,....தனிபட்ட கதை.

Edited by nillamathy

  • கருத்துக்கள உறவுகள்

வசந்த கால கோலங்கள்.....கதை அழகு.

அழகு தரும் சலனம்

சலனம் தந்த தடுமாற்றம்

தடுமாற்றம் தந்த செய்தி

கதையாய் வந்ததும் அழகு அழகு...........

வாழ்த்துகள்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நிலாமதி அக்காவுக்கு

நாளுக்கு நாள் நீங்கள் கதை சொல்லும் விதம் மெருகேறிக்கொண்டே போகிறது. வாழ்த்துக்கள்

இளங்கவி

நல்ல கதை. கதையில் யதார்த்தம் தெரிகிறது... உண்மையில் நடந்த கதையோ அக்கா?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.