Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

தொடர்ந்தும் போரை நடத்தினால் கையை கட்டிக்கொண்டு சும்மா இருக்க முடியாது: தமிழ்நாடு முதல்வர் கருணாநிதி எச்சரிக்கை

Featured Replies

தொடர்ந்தும் போரை நடத்தினால் கையை கட்டிக்கொண்டு சும்மா இருக்க முடியாது: தமிழ்நாடு முதல்வர் கருணாநிதி எச்சரிக்கை

[செவ்வாய்க்கிழமை, 07 ஒக்ரோபர் 2008, 08:14 மு.ப ஈழம்] [புதினம் நிருபர்]

இலங்கைத் தமிழர்கள் பிரச்சினை தொடர்பான கோரிக்கைகளை இந்தியப் பிரதமர் மன்மோகன்சிங்கால் நிறைவேற்ற முடியாமல் போய்- சிறிலங்கா அரசாங்கமானது தொடர்ந்தும் கச்சைக்கட்டிக் கொண்டு போரை நடத்தினால் நாங்கள் கையைக் கட்டிக்கண்டு சும்மா இருக்க முடியாது என்று தமிழ்நாடு முதல்வர் கருணாநிதி கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

சென்னையில் நேற்று திங்கட்கிழமை நடைபெற்ற இலங்கைத் தமிழர் பிரச்சியில் தி.மு.க. நிலை தொடர்பான கொள்கை விளக்கப் பொதுக்கூட்டத்தில் தி.மு.க. தலைவரும் தமிழ்நாடு முதல்வருமான கருணாநிதி பேசியதாவது:

நீண்ட காலத்திற்கு பிறகு இலங்கை பிரச்சினை குறித்து பேசவேண்டிய, செயற்பட வேண்டிய உறுதி எடுக்க வேண்டிய, ஒரு சூழ்நிலை உருவாக்கப்பட்டிருக்கிறது. இந்த சூழ்நிலையை எந்த கோணங்களில் அணுகப்போகிறோம், அணுக இருக்கிறோம் என்ற நிலைகளை கடந்த இரண்டு நாட்களாக தலைமை கழகத்தின் சார்பில் நானும், பொதுச்செயலாளரும், கழக முன்னோடிகளும் அறிவாலயத்தில் அமர்ந்து சிந்தித்து அதனடிப்படையில் எடுக்கப்பட்ட முடிவுதான் இந்த கூட்டம்.

இந்த கூட்டத்திற்கான விளம்பரங்கள் செய்யப்பட்டு, உங்களை எல்லாம் சந்திப்பதற்கு முன்பு எதற்கும் மத்திய அரசோடு ஒரு வார்த்தை பேசிவிட்டு, நம்முடைய முடிவுகளை எடுக்கலாம் என்று கருதி மத்திய அரசுக்கு நம்முடைய நிலையை விளக்கி நாம் தமிழகத்திலே எத்தகைய தாங்கொணா துயரத்திற்கு ஆளாகியிருக்கிறோம் என்பதை எடுத்துச்சொல்லி, அவர்களுக்கு விளக்கம் அளித்து இதற்கு தக்கதோர் வழிகாண வேண்டும். தமிழர்களை இலங்கைத்தீவில் காப்பாற்றியாக வேண்டும் என்ற அபயக்குரலை இங்கே எழுப்புவதற்காக கூடியிருக்கிறோம்.

இன்றைக்கு போராட்டத்தை அறிவிக்கப்போகிறோம் என்று யாரும் கருத வேண்டாம். நமது ஆசைகள் நிராசைகளாகுமேயானால், நமது எதிர்பார்ப்பு நமக்கு ஏமாற்றத்தை தருமேயானால், அதைப்பற்றி நாம் ஆலோசிக்க வேண்டியவர்களாக இருக்கிறோம் என்பதை தவிர்த்திட நான் விரும்பவில்லை.

ஏனென்றால் இருப்பது ஒரு உயிர். அது போகப்போவது ஒருமுறை. அது நல்ல காரியத்திற்காக போகட்டுமே என்கின்ற பழமொழி இன்றைக்கெல்லாம் கேட்டுக்கேட்டு பழக்கமான ஒரு மொழி. அது கேட்டுக்கேட்டு பழக்கமாக இருந்தது மட்டும் போதாது. செயற்பட்ட மொழியாகவும் மாறிடும் ஒருநிலையை உருவாக்குவதற்கு சிறிலங்கா அரசும், சிறிலங்கா அரசுக்கு ஏதோ ஒரு வகையில் தங்களையும் அறியாமல் ஏமாற்றப்பட்டு இந்தியப் பேரரசு துணையாக மாறி வருவதை ஏற்றுக்கொள்ள முடியாது என்பதை அறிவிப்பதற்காகத்தான் இந்த கூட்டம்.

1956 ஆம் ஆண்டிலேயே இலங்கை பிரச்சினைக்கான குரல் தமிழகத்தில் இருந்தது. அந்த பிரச்சினைக்காக எடுக்கப்பட்ட தீர்மானத்தையும், அன்று சிதம்பரத்தில் 29.01.56 இல் நடைபெற்ற தி.மு.க. பொதுக்குழு கூட்டத்தில் நான் தான் முன்மொழிந்தேன். கழகத்தின் மூத்த தலைவர்களுள் ஒருவரான பொன்னம்பலனார் அதை வழிமொழிந்தார்.

எனவே நேற்று பெய்த மழையில் இன்றைக்கு முளைத்த காளான்கள் சில பேர் இந்த பிரச்சினையை எழுப்பிக்கொண்டு கூச்சலிடுகிறார்கள் என்று யாரும் சொல்ல முடியாது. என்றைக்கு இலங்கையில் இந்த பிரச்சினை உருவாயிற்றோ, அன்றைக்கே இந்த பிரச்சினைக்கு தக்கதோர் வழிகண்டு தமிழர்களின் உரிமைகளை காப்பாற்ற, தமிழர்களை யாரும் களங்கப்படுத்தாமல் இருக்க, தமிழுக்கு உரிய இடத்தை சிறிலங்கா அரசிலே பெற அன்றைக்கே போர் முழக்கம் ஆரம்பமாயிற்று.

தமிழகத்தில் வாழ்கின்ற தாய்தமிழகத்து தமிழர்கள் அனைவரும் இலங்கை வாழ் தமிழர்களின் இன்னலை போக்க நமது எல்லா ஆதரவையும் அளிக்கத்தான் இங்கே கூடியிருக்கிறோம் என்பதை மறக்கக்கூடாது. இதை ஒட்டுமொத்தமாக ஒரு தீர்மானமாக ஆக்கி நேற்றைய நாள் பிரதமர் மன்மோகன் சிங்கிற்கும், இந்திய அரசை நடத்துகின்ற தலைவர்களுக்கும், சோனியா காந்திக்கும் அனுப்பிவைத்தோம்.

அந்த தீர்மானத்திற்கு பலன் இல்லாமல் போகவில்லை. இன்று (நேற்று திங்கட்கிழமை) முற்பகல் 10:00 மணியளவில் மத்திய மந்திரி டி.ஆர்.பாலுவை பிரதமர் மன்மோகன்சிங் அழைத்து அவரிடத்தில் பேசி, நிலவரங்களை கேட்டறிந்து, எனது கடிதத்திற்கு, எனது வேண்டுகோளுக்கு உடனடியாக பதில் அளிக்கிறேன் என்று சொல்லி தொலைபேசி மூலமாக என்னை தொடர்பு கொண்டு பேசினார். இருக்கும் விவரங்களை எல்லாம் நான் விவரித்து சொன்னேன்.

எப்படி எல்லாம் கொடுமைப்படுத்தப்படுகிறார்க

ஆமா நான் ஏதாவது கனவு கண்டேனா ? அல்லது . . . .

ம் கதிரை ஆடப்போகின்றது என்றவுடன் வடிவேலுவும் அம்பாகிவிட்டார். . . .

டெல்லியில் இருக்கும் இலங்கை தூதரை வெளியுறவு அமைச்சுக்கு அழைத்து சிங்கள பயங்கரவாத அரசின் தமிழின சுத்திகரிப்புக்கு (Ethnic Cleansing)

கண்டனம் தெரிவிப்பதற்கு பதிலாக, திரு எம்.கே நாராயணனை அனுப்பி இனவாத சிறிலங்காவின் பிரதி தூதுவர் ஜி.ஜி.ஏ.டி.பாலித கனகொடவை சந்திக்கச்

செய்து குசலம் விசாரித்ததன் மூலம், ஆறு கோடி தமிழக மக்களையும் ஏமாளிகளாகவும் இளிச்சவாயர்களாகவுமே தொடர்ந்தும் மன்மோகன் சிங்கின் காங்கிரஸ்

அரசு நினைக்கிறது என்பது தெளிவாகிறது!

யார் இந்த நாராயணன்? ஈழத்தமிழர் இனப்படுகொலைகளுக்கு முக்கிய சூத்திரதாரியான திரு.நாராயணனை

இலங்கை தூதரகத்துக்கு அனுப்பி, அதே ஈழத்தமிழர்களின் படுகொலைகளுக்கு கவலை தெரிவிக்க வைப்பதை விட

ஏமாற்றுவேலை வேறு எதுவும் இருக்க முடியாது!!!

Edited by vettri-vel

ஆனால் தமிழகத்தில் ஏற்பட்டுள்ள உணர்வலைகள் நிச்சயம் தாக்கத்தை ஏற்படுத்தும்...எத்தனைக்காலம் தான் ஏமாற்றுவார்கள் என்று பார்க்கலாம்....

தமிழக தந்தி அலுவலகங்கள் நிரம்பி வழிகின்றன இது தமிழக மக்களிடையே நடத்தப்படும் கருத்துக்கணிப்பு போன்றது

  • கருத்துக்கள உறவுகள்

தமிழக உறவுகளிடம் எதிர்பார்த்தது இன்று நடந்து கொண்டிருக்கிறது அந்தவகையில் தமிழக உறவுகளுக்கு நன்றிகள் நன்றிகள்

ஆனால் தமிழகத்தில் ஏற்பட்டுள்ள உணர்வலைகள் நிச்சயம் தாக்கத்தை ஏற்படுத்தும்...எத்தனைக்காலம் தான் ஏமாற்றுவார்கள் என்று பார்க்கலாம்....

தமிழக தந்தி அலுவலகங்கள் நிரம்பி வழிகின்றன இது தமிழக மக்களிடையே நடத்தப்படும் கருத்துக்கணிப்பு போன்றது

தமிழக உறவுகளுக்கு எமது நன்றிகள்!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பழைய கால நினைவுகளை தற்போது நடக்கும் நிகழ்வுகள் நினைவுபடுத்துகின்றன ஆனால் விளைவுகள் பெரிய மாற்றங்களை கொண்டுவரும் என எதிர்பார்க்கலாம் :mellow: .

தமிழக உறவுகளுக்கு நன்றிகள் நன்றிகள்

தமிழக உறவுகளின் எழிர்ச்சி நம்பிக்கைதருவது... தைரியம் தருவது தான்........ ஆனாலும் வெறும் நன்றிகூறி இதை மறைக்க முடியாது... இது தெற்காசியாவிலே எமக்கு மாத்திரமுள்ள உறவு...

தொப்பிள் கொடியுறவு இது இருதரப்புக்கும் பொருந்தும்... உணருவோமாக உறவுகளே..!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.