Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஜானக பெரேராவின் உடலை கொண்டு செல்ல உலுங்குவானூர்தியை மறுத்தது மகிந்த அரசாங்கம்

Featured Replies

உயிரிழந்த இராணுவ உயர் அதிகாரியான மேஜர் ஜென்ரல் ஜானக பெரேராவுக்கு அரசாங்கம் உரிய மரியாதையை வழங்கவில்லையென ஐக்கிய தேசியக் கட்சி குற்றஞ்சாட்டியுள்ளது. உயிரிழந்த ஜானக பெரேரா மற்றும் அவருடைய மனைவியின் பூதவுடல்கள் மக்கள் அஞ்சலிக்காக அநுராதபுரம் எடுத்துச்செல்லப்படுகின்றன.

உலங்குவானூர்தி மூலம் அநுராதபுரத்துக்கு எடுத்துச்செல்வதற்காக இரண்டு பூதவுடல்களும் இரத்மலானை விமானநிலையத்துக்குக் கொண்டுசெல்லப்பட்டபோதும், பாதுகாப்பு அமைச்சிடமிருந்து அனுமதி கிடைக்கவில்லையெனக் கூறி இரண்டு பூதவுடல்களையும் விமானநிலையத்துக்குள் அனுமதிக்காமல் வீதியோரத்தில் வைத்திருப்பதாக ஐக்கிய தேசியக் கட்சி பாராளுமன்றத்தில் குற்றஞ்சாட்டியுள்ளது.

நண்பகல் வரை இருவரின் பூதவுடல்களை விமானநிலையத்துக்குள் கூட அனுமதிக்கவில்லையென ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் பாராளுமன்றத்தில் தெரிவித்தனர்.

உயர் பதவியிலிருந்த இராணுவ அதிகாரி ஒருவர் உயிரிழந்த பின்னர் கூட அரசாங்கம் உரிய மரியாதையை வழங்கவில்லையென எதிர்க்கட்சி குற்றஞ்சாட்டியுள்ளது.

இதேவேளை, உயிரிழந்த மேஜர் ஜென்ரல் ஜானக பெரேராவின் பூதவுடலை அநுராதபுரத்துக்கு எடுத்துச்செல்ல உலங்குவானூர்தி வசதிகளைச் செய்துகொடுக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்கவில்லையென ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கிரியல்ல தெரிவித்தார்.

ஜானக பெரேராவுக்கு உயிர் அச்சுறுத்தல் இருப்பதாகக் கூறி நீதிமன்றம் சென்றபோது அவருக்கு அச்சுறுத்தல் இல்லையென பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோதபாய, ஜானக பெரேராவுக்கு அச்சுறுத்தல் இல்லையெனக் கூறியிருந்ததாகவும், இதனால் நீதிமன்றம் பிழையாக வழிநடத்தப்பட்டிருப்பதாகவும

  • கருத்துக்கள உறவுகள்

தமிழனுக்கு செய்தவினை

எத்தனை பெற்றோர் இன்றும் தன்பிள்ளை உயிருடன் இருக்கிறதா??? இல்லையா என்றுகூட தெரியாமல்????

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பதவியில் இருக்குமட்டும் தான் மரியாதையை மண்ணாங்கட்டி எல்லாம் அதை விட்டு இறங்கினால் இந்த நிலைதான் என்னவென்றாலும் மகிந்த செய்தது பிழைதான் அவருக்கு இருபத்தொரு குண்டுகள் முழங்கி மரியாதையை வழங்காமல் ஒரு குண்டிலையே மரியாதையை கொடுத்தது தவறு தான் இனிமேலாவது பார்த்து நடவுங்கோ இன்னும் கனபேர் இருக்கினம் தானே பிள்ளையான் கருணா இப்படி பலபேர் உங்கள் வருங்கால பட்டியலில் உள்ளார்கள் தானே :o:lol:

  • கருத்துக்கள உறவுகள்

:o செத்த பிணத்தை வேற எங்க வைக்கிறது. வீட்டுக்க வைத்தா வீடே நாரிடாது ??

நல்ல மரியாதை ! உனக்கு இது தேவைதாண்டி !!!!!

  • கருத்துக்கள உறவுகள்

இது ஒட்டியிருக்கும் பலருக்கு பாடமாக அமையவேண்டும்

  • கருத்துக்கள உறவுகள்

வீரகேசரி நாளேடு - மேஜர் ஜெனரல் ஜானக பெரேராவின் பூதவுடலை அநுராதபுரம் கொண்டு செல்வதற்கு ஹெலிகொப்டரை வழங்குவதற்கு பிரதமர் மற்றும் விமானப்படைத் தளபதி ஆகியோரின் அனுமதி கிடைத்திருந்த போதிலும், இறுதி நேரத்தில் மேலிடம் அதற்கு மறுப்புத் தெரிவித்து விட்டது. இதனால் அவரது பூதவுடல் நாலரை மணித்தியாலங்களாக காலி வீதியில் காத்துக் கிடந்தது என்று ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க விசனம் தெரிவித்தார்.

நாட்டின் நன்மதிப்பைப் பெற்ற இராணுவத் தளபதியும் தேசிய வீரருமான ஜானக பெரேராவின் படுகொலைக்கு வழிவகுத்தது மட்டுமல்லாமல் அவரது பூதவுடலுக்கும் கூட அரசாங்கம் அவமானத்தை ஏற்படுத்தி விட்டது. இதுதான் இராணுவ வீரருக்கு கொடுக்கப்படுகின்ற கௌரவமா என்றும் அவர் கேள்வியெழுப்பினார்.

எதிர்க்கட்சி அலுவலகத்தில் இன்று மாலை இடம்பெற்ற விசேட செய்தியாளர் மாநாட்டிலேயே திஸ்ஸ அத்தநாயக்க எம்.பி. இதனைத் தெரிவித்தார். இங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது,

இந்நாட்டின் தேசிய வீரரான மேஜர் ஜெனரல் ஜானக பெரேரா திட்டமிடப்பட்ட வகையில் படுகொலை செய்யப்பட்டுள்ளார். இதன் பாரிய பொறுப்பு அரசாங்கத்தை சார்ந்திருக்கின்ற அதேவேளை அவரது பூதவுடலையும் அவமதிக்கும் வகையில் அரசாங்கம் நடந்து கொள்வதையிட்டு நாம் கவலையடைகிறோம்.

ஜானக பெரேராவின் இறுதிக் கிரியைகளை அநுராதபுரத்தில் மேற்கொள்ளவே ஐ.தே.க. ஏற்பாடுகளை மேற்கொண்டிருந்தது. ஆனால், அவரது குடும்பத்தாரின் வேண்டுகோளுக்கு அமைய ஜானக பெரேராவின் பூதவுடல் மக்கள் அஞ்சலிக்காக அநுராதபுரத்தில் வைக்கப்பட்டு கொழும்பில் இறுதிக் கிரியைகள் செய்வதற்கு நடவடிக்கை எடுத்தது.

இதன்படி இன்று காலை 9.00 மணியளவில் ஜானக பெரேராவின் பூதவுடலை அநுராதபுரத்திற்கு கொண்டு சென்றுவிட வேண்டும் என்ற நோக்கில் ஹெலிகொப்டர் வசதியை செய்து தருமாறு பிரதமர் ரட்ணசிறி விக்ரமநாயக்கவிடம் கோரினோம்.

பிரதமர் அனுமதி எமது கோரிக்கையை ஏற்றுக் கொண்ட பிரதமர், தான் இதற்கு உடன்படுவதாகவும் பூதவுடலை அநுராதபுரம் கொண்டு செல்வதற்கு வேண்டிய சகல தேவைகளையும் நிறைவேற்றித் தருவதாகவும் உறுதியளித்தார். அத்துடன் விமானப்படைத் தளபதியிடம் தான் இது குறித்து பேசுவதாகவும் கூறினார்.

இதன் பின்னர் விமானப்படைத் தளபதியும் ஹெலிகொப்டர் வழங்குவதற்கான ஒழுங்குகள் மேற்கொள்ளப்பட்டிருப்பதாக வாக்குறுதியளித்ததன் பேரில் ஜானக பெரேராவின் பூதவுடல் அநுராதபுரம் கொண்டு செல்வதற்காக இரத்மலானை விமான நிலையத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டது.

பூதவுடல் பிரதான வீதியில் ஆனாலும் ஜானக பெரேராவின் பூதவுடல் தாங்கிய பேழையை விமான நிலையத்துக்குள் எடுத்துச் சென்ற போது அங்குள்ள அதிகாரிகளால் அனுமதி மறுக்கப்பட்டது. இதனால் சுமார் நாலரை மணித்தியாலங்கள் ஜானக பெரேராவின் பூதவுடல் தாங்கிய பேழை காலி வீதியில் தரித்து நிற்க வேண்டிய நிலை ஏற்பட்டது. இந்த நடவடிக்கையானது தேசிய வீரர் ஒருவரின் பூதவுடலை அவமானப்படுத்தியதற்கு ஒப்பானதாகும்.

ஜானக பெரேராவின் உடலை கொண்டு செல்ல உலுங்குவானூர்தியை மறுத்தது மகிந்த அரசாங்கம்

[வியாழக்கிழமை, 09 ஒக்ரோபர் 2008, 08:22 மு.ப ஈழம்] [சி.கனகரத்தினம்]

சிறிலங்காவின் தலைநகர் கொழும்பில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்த அந்நாட்டு முன்னாள் படைத் தளபதி ஜானக பெரேராவின் உடலை உலங்குவானூர்தி மூலமாக அனுராதபுரத்திற்கு கொண்டு செல்வதற்கு மகிந்த அரசாங்கம் அனுமதி வழங்கவில்லை.

உலங்குவானூர்தி வழங்குவதாக வான்படை தளபதி ஐக்கிய தேசிய கட்சியின் பொதுச்செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்காவிடம் உறுதியளித்திருந்தார். இதனால் தனியார் மலர்ச்சாலை ஒன்றில் வைக்கப்பட்டிருந்த ஜானக பெரேராவின் உடல் அனுராதபுரத்திற்கு எடுத்து செல்லப்படுவதற்காக இரத்மலானை வானூர்தி நிலையத்திற்கு நேற்று புதன்கிழமை காலை எடுத்து செல்லப்பட்டது.

ஜானக பெரேராவின் உறவினர்களும் இரத்மலானை வானூர்தி நிலையத்திற்கு சென்றிருந்தனர்.

சுமார் நான்கு மணித்தியாலங்களாக அங்கு காத்திருந்த போதும் உலங்குவானூர்தி வழங்கப்படவில்லை. இதனால் ஏமாற்றமடைந்த நிலையில் அங்கிருந்து தரைவழியாக அனுராதபுரத்திற்கு ஜானகவின் உடல் கொண்டு செல்லப்பட்டது.

இதனிடையே ஜானகவின் உடலுடன் உறவினர்கள் இரத்மலானை வானூர்தி நிலையத்தில் காத்திருப்பதாக சிறிலங்கா நாடாளுமன்றம் நடைபெற்றுக் கொண்டிருந்தபோது ஐக்கிய தேசிய கட்சியின் பிரதம அமைப்பாளர் ஜோசப் மைக்கல் பெரேரா சபாநாயகர் வி.ஜே.மு லொக்கு பண்டாரவிடம் சிறப்புரிமை பிரச்சினை ஒன்றை எழுப்பி முறையிட்டார்.

உடனடியாக குறுக்கிட்டு, அதற்கு பதிலளித்த பிரதமர் ரட்ணசிறி விக்கிரமநாயக்க உலங்கு வானூர்தி வழங்குவதற்கான சாத்தியம் இருப்பதாகத்தான் வான் படை தளபதி கூறினாரே தவிர வழங்கப்படும் என்று அவரால் உறுதியளிக்கப்படவில்லை என தெரிவித்தார்.

இதனால் இருதரப்புக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. ஒரு படைத் தளபதிக்கு இறுதி நேரத்தில் அரசாங்கம் செய்யும் கைமாறு இதுதானா என்று ஜக்கிய தேசிய கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க சபாநாயகரை பார்த்து ஆவேசமாக கேள்வி எழுப்பினார்.

பிரதமரிடம் இருந்து உரிய பதில் கிடைக்காததால் விசனமடைந்த நிலையில் அவர் நாடாளுமன்றத்தை விட்டு வெளியேறிச் சென்றார்.

இந்த வாக்குவாதங்களை ஜே.வி.பி. மற்றும் விமல் வீரவன்ச தலைமையிலான தேசிய சுதந்திர முன்னணி உறுப்பினர்கள் அமைதியாக இருந்து அவதானித்தனர்.

புலிகளுக்கு எதிராக போரை நடத்துங்கள் என தினமும் கூச்சலிடும் ஜே.வி.பி. படுகொலை செய்யப்பட்ட படை தளபதி ஒருவரின் பூதவுடல் அரசாங்கத்தினால் அவமரியாதைக்கு உள்ளாக்கப்படும் நிலையில் மௌனமாக இருந்து வேடிக்கை பார்ப்பதா என்று ஜக்கிய தேசிய கட்சியின் பின்வரிசை நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆத்திரத்துடன் கேள்வி எழுப்பினர்.

இதேவேளை இந்த வாதப்பிரதி வாதங்கள் குறித்து செவிமடுக்காது தமது ஆசனங்களில் அமைதியாக இருந்தனர்.

புதினம்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.