Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

திருந்தி விட்டான் ஓர் தமிழன்......

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

திருந்தி விட்டான் ஓர் தமிழன்......

சிறு கதை....

கிருபாவும், ஜீவனுமாக அவசர அவசரமாக வெளிக்கிட்டுக் கொண்டிருக்க தொலைக்காட்ச்சியில் 6 மணி செய்தி தொடங்கும் சத்தம் கேட்க கிருபா...

'' ஜீவன் நேரமாச்சு பொம்பிள்ளைபோல வெளிக்கிடாம கெதியென்று வெளிக்கிடடா..'' என்று கிருபா அவனை அவசரப்படுத்தினான்.

'' மச்சான் தெரியும் தானே... நீ ஏன் அவசரப் படுகிறாய் எண்டு...அங்க போய் மூக்கு முட்ட குடிச்சுப் போடு பெட்டையளோடையும் சேட்டைவிட்டுட்டு... வந்து பிரண்டு கிடக்கிறத்துக்குத் தானே..'' என்றான் ஜீவன் சிரித்தபடி.

'' தெரிஞ்சாய் சரி..அனுபவிக்கத்தானே போறது வேற என்னத்துக்கு மச்சான் போறது சரி..சரி இறங்கு மச்சான்...'' என்று சொல்லியவண்ணம் கிருபா காரை நோக்கி நடக்க ஜீவனும் அவனைத் தொடர்ந்தான்.

அவர்கள் இருவரும் அவர்களின் நண்பன் சுதனின் மகனின் 1வது பிறந்தனாள் விழாவிற்கு சென்றுகொண்டிருந்தார்கள். போகும் வழியில் ஜீவன் கிருபாவைப் பார்த்து...

'' கிருபா நீ இப்படியே குடிச்சுகொண்டு திரிஞ்சா எப்ப கலியாணம் கட்டுறது...? ஊரில வன்னியில தானே உன்ர அம்மா அப்பா சகோதரங்களெல்லாம்...? அவர்களையெல்லாம் பாக்கிறனியோ..? ...'' என்று கேள்வி மேல் கெள்வி கேட்க..

'' டேய்...! நான் உழைக்கிற காசு என்னகே காணாது...., சில வேளை கொஞ்சம் அனுப்பிறனான்... மற்றப்படி நாடு நாட்டு மக்கள் என்று சிந்திக்க என்னக்கு நேரமில்லை மச்சான்...'' என்று கிருபா சொல்லவும்..

''இதுக்கெல்லாம் நேரமிருக்கு பெத்ததுகளையும் பிறந்த நாட்டைப் பர்றியும் நினைக்கத்தான் நேரமில்லை..'' என்றான் ஜீவன் கிருபாவைப் பார்த்து நக்கலாக..

'' சரி மச்சான் என்சோய் பண்ணிற மூட்டோடை போற பொழுது அதைக் கெடுக்காதே மச்சான்... சரி இடம் வந்திட்டு காரை அங்க பார்க் பண்ணு...'' என கிருபா சொல்ல ஜீவனும் காரை பார்க் பண்ணிவிட்டு மண்டபத்தி நோக்கி இருவரும் நடந்தார்கள்.

மண்டபத்தை இருவரும் அடைந்ததும் சுதன் இருவரையும் வரவேற்று அவனின் மாமன் மாமிக்கு அறிமுகப்படுத்தி வைத்தான்.

''உங்களுக்கு தெரியும் தானே..பிள்ளை பிறந்ததும் என்ர மனிசி சுகமில்லாமல் கிடந்ததும் அவளைப் பார்க்க என்றுதான் மாமி அவர்களை கூப்பிட்டனான்.. அவர்கள் போக முதல் மகனின் பிறந்த நாளும் வந்ததால ஒருக்காய் கொண்டாடிப்போட்டு அனுப்புவம் என்றுதான் மச்சான்....'' என்று சுதன் சொல்லி முடிக்கவும்...

''தெரியும் சுதன்.. நீ இவர்களை கூப்பிட்டது ஆனால் அவர்களை நாங்கள் பார்கவில்லைத் தானே.. என்ன எப்படி சுகமாய் இருக்கிறீங்களே...? '' என ஜீவன் வினவ..

'' ஓம் தம்பிமார் நீங்களெல்லாம் எப்படி..? என்னக்கு இந்தப் பார்ட்டி பங்சன் ஒன்றும் விருப்பமில்லை... எங்கடை சனங்கள் எல்லாம் தினம் தினம் செத்துக்கொண்டிருக்க நாங்கள் இதெல்லாம் கொண்டாடுகிறது கொஞ்சம் கூட விருப்பமில்லை...ஆனால் மகள் தான் விடாப்பிடியாய் நின்று நாங்கள் இலங்கை திரும்பி போறத்துக்கு முதல் இன சனங்களை ஒன்றாகக் காணலாம் என்று இதை வைக்கச் சொன்னவள்...எப்படியோ.. தம்பிமார் நீங்களெல்லாம் எங்கடை நாட்டை மறக்கேல்ல தானே..? '' என்றபடி கிருபாவை ஓர் மாதிரியாகப் பார்த்தார். காரணம் கிருபா வர முதலே 2 கான் பியர் குடித்திருந்தான் அந்த மணம் அவர் மூக்கை துளைத்திருக்க வேண்டும்.

பிறந்த நாள் கேக் எல்லாம் வெட்டிமுடிந்து, சிற்றுண்டி பரிமாற்றமும், பியர், விஸ்கி, பிராண்டி எல்லாம் பரிமாறிக்கொண்டிருக்கவும் கிருபா வழமைபோல் தனது சேட்டைகளெல்லாம் ஆரம்பித்து மூக்கு முட்ட குடித்துவிட்டு கையில் கோழிக்காலுடன் அங்குமிங்குமாக நடந்து திரிந்தவண்ணம் பெண்பிள்ளைகளை கிண்டல் பண்ணுவதுமாக நடந்து திரிந்ததையும் கிருபாவைப்போல் வேறு சில பெடியளும் இப்படியாகத் திரிந்ததையும் பார்த்த சுதனின் மாமனார் மிகவும் கோவமாக கவனித்துக்கொண்டிருந்தார்.

கிருபாவின் அட்டகாசம் தாங்க முடியாமல் ஜீவன் அவனை மேசைக்கு இழுத்துவந்து ...

''சரி மச்சான் காணும்... சாப்பாடு கொடுக்கிறாங்கள்.... சாப்பிடுவம் நேரமாச்சு போகவேணும் நாளைக்கு வேலையடா...'' என ஜீவன் சொன்னதை அரைகுறையாக காதில் போட்டவன் தலையை தொங்கப் போட்டவண்ணம்

''என்சோய் மச்சான் என்சோய்.. ..'' என்று உளறிய வண்னம் '' சரி..சரி.. எடுத்துகொண்டுவா...''என சொல்லவவும் ஜீவன் சாப்பட்டை எடுக்கப்போய் சாப்பாட்டை கொண்டுவந்து மேசையில் வைக்கவும் கிருபா அங்குமிங்குமாக சிதறியபடி ஒருவாறு சாப்பிட்டு முடிக்கவும் இதயெல்லாம் கோபமாக கவனித்துக்கொண்டிருந்தார் சுதனின் மாமா. சாப்பிடு முடிந்து சிறிது நேரம் செல்லவும் ஓரளவு போதை தெளியவும் அவன் சுதனின் மாமாவை நிமிர்ந்து பார்க்கவும் அவனுக்கு திடீரென வயிறு பிரட்டிக்கொண்டு வந்து அவனுக்கு முன்னால் இருந்த சுதனின் மாமாவில் வாந்தி எடுது விட்டான்.

இதுவரைக்கும் கோவத்தை அடக்கிக் கொண்டிருந்தவருக்கோ கோபம், ஆத்திரம் எல்லாம் மடை உடைத்த ஆற்றுவெள்ளம் போல் வார்த்தையாய் பெருக்கெடுத்தது...

'' அடப் பாவிகளா..ஏன்ரா இப்படி அனியாயம் செய்யிறியள்...! நாட்டில எங்கடை சனங்கள் ஒரு நேரச் சாப்பாட்டுக்கு வழியில்லாமல் தினம் தினம் சாகேக்கை நீங்களெல்லாம் ஏனடா இப்படி பழி செய்கிறீங்கள்...டேய் நீ இங்கை கொட்டி சிந்தின ஒவ்வொரு சோறும் இல்லாமல் தான் அங்க குழந்தைகள் நஞ்சுணவை தின்று செத்ததுகள், சாகுதுகள்...., நீ இங்கே திமிரில. குடிச்சுப்போட்டு..திண்டுபோட்

டு என்மேல் வாந்தியாய் எடுத்த சோறு அங்கே இரண்டு குழந்தைகளின் பசி போக்கியிருக்கும்.... தெரியுமாடா உனக்கு...?..'' என்று கிருபாவை பார்த்து திட்டிவிட்டு ஓவென்று அழத்தொடங்கிவிட்டார்.

அந்த இடம் ஒரே களபரமாகி சிலர் வந்து பெரியவரையும் அழைத்துக்கொண்டு போக ஜீவனும் கிருபாவை அழைத்துக்கொண்டு வீட்டுக்கு கிளம்பினான். வீட்டுக்கு வந்து கிருபாவை ஜீவன் கழுவிவிட்டு படுக்கைக்கு போகச்சொன்னதும் கிருபாவும் இன்னும் முழுதாக மயக்கம் தெளியாமல் படுக்கையில் போய் சரிந்தான்.

பெரியவர் சொல்லிப் பேசியதெல்லாம் அவன் நினைவுகளில் வந்து வந்து போகவும் தான் வாந்தியெடுத்த சோறு சில பிள்ளைகளின் உயிரைக்காப்பாற்றும் என்ற பெரியவரின் பேச்சு அவனை தூங்கவிடாமல் நெஞ்சை நெருடிக்கொண்டிருந்தது. தனது அம்மா, அப்பா தன்னில் பாசமான சகோதரங்கள் எல்லாரையும் நினைத்து ஒருகணம் அழுதுகொண்டே நித்திரையாகிவிட்டான்.

காலையில் எழுந்த கிருபாவுக்கு ஏதோ மனம் ஓர் பாரம் நீங்கியது போல தோன்ற காலைக்கடனை முடித்துவிட்டு முதல் வேலையாக தொலைபேசியை சுழற்றுகிறான் வெண்புறா நிறுவனத்துக்கு இன்று முதல் நாட்டு மக்களுக்காக தனது பங்களிப்பை கொடுப்பதற்கு. மேலும் தூங்கிக்கொண்டிருந்த தனது நண்பனை அழைத்து..

'' ஜீவா நான் ஒருக்காய் தமிழ் கடைக்கு போகவேணும் வன்னிக்கு அம்மாவுக்கு காசு அனுப்ப..'' என்று சொல்லிவிட்டுக் கிளம்பவும் ஜீவன் அவனை மறித்து...

'' என்ன மச்சான் ஒரேயடியாய் மாறிவிட்டாச்சுப் போல கிடக்கு...'' எனவும்

''மன்னிச்சிடு மச்சான்....ஏதோ தெரியாமல் இருந்திட்டன் இனி அப்படி நடக்காது..''என சொல்லிவிட்டுக் கிளம்பவும் ஜீவன் அவனைப்பார்த்து..

'' நாங்கள் தானை மச்சான் எங்கடை மக்களுக்கும், குடும்பத்துக்கும் உதவிசெய்யவேணும்..., ''எப்படியோ மாட்டுக்கு மாடு சொன்னால் கேட்காது மணிகட்டின மாடு சொன்னால்தான் கேட்கும் .. என்று சொல்வார்கள் என கிருபாவை பார்த்து ஜீவன் நக்கலாய் சொல்லி சிரிக்கவும் கிருபாவும் பதிலுக்கு அவனைப் பார்த்து மெதுவாகச் சிரித்துவிட்டு

''சரி...சரி.. போய் படு நீ.....'' என்றுவிட்டு தான் புதிதாய் பிறந்ததாய் நினைத்தவண்ணம் கிருபா வெளியே சென்றான்.

ஆக்கம்

இளங்கவி

''

  • கருத்துக்கள உறவுகள்

கதை நன்று.

இப்படி பலர் திருந்த இடமுண்டு திருந்தினால் நன்று. :lol:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

புத்தனுக்கு

ஒரு சிறு பொறி ( சம்பவம் ) தான் பல பேருக்கு வாழ்க்கையே மாற தூண்டு கோலாக அமைந்ததுண்டு. அப்படி சிலராவது மாறி நாட்டுக்கு நன்மை கிடைத்தால் சரி. ரசித்ததற்கு புத்தனுக்கு நன்றிகள்.

இளங்கவி

  • கருத்துக்கள உறவுகள்

இப்படி பலர் இருக்கிறார்கள் சம்பவமூலம் சிந்திக்க வைததமைக்கு நன்றி .நல்ல கதை.

வளர்க உங்கள் படைப்புகள் . அக்கா நிலாமதி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நிலாமதி அக்காவுக்கு

என் படைப்பு ஒரு சிறிதளவேனும் சிலர் மாறுவதற்கு தூண்டுகோலாக அமைந்தால் நல்லது. மேலும் கருத்துக்கு நன்றி அக்கா.

இளங்கவி

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல கருத்தைச் சொல்லிச் சென்றுள்ளீர்கள். வாழ்த்துக்கள்!!!

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

suvy க்கு

மிக்க நன்றி கருத்துச் சொன்னதற்கு.

இளங்கவி

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.