Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

3 நாட்களாக 150 அடி குழியில் தவிக்கும் சிறுவன் - மீட்பு முயற்சி தீவிரம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ஆக்ரா: 150 அடி ஆழமுடைய போர்வெல் குழியில் விழுந்த இரண்டு வயது சோனு என்கிற சிறுவனை பத்திரமாக மீட்க கடந்த 3 நாட்களாக தீவிர முயற்சியில் ராணுவம் ஈடுபட்டுள்ளது.

ஆக்ரா அருகே உள்ள ஷாம்ஷாபாத் என்ற இடத்தைச் சேர்ந்த சிறுவன் சோனு, வியாழக்கிழமை காலை 10 மணியளவில் தனது வீட்டுக்கு அருகில் விளையாடிக் கொண்டிருந்தபோது, 150 அடி ஆழ ஆழ்குழாய் குழியில் விழுந்து விட்டான்.

இதையடுத்து உடனடியாக ராணுவம் வரவழைக்கப்பட்டது. சிறுவன் விழுந்துள்ள குழிக்கு அருகே மிகப் பெரிய பள்ளம் தோண்டப்பட்டு வருகிறது. சிறுவனுக்கு மேலிருந்தபடி ஆக்சிஜன் அனுப்பி வருகின்றனர். டாக்டர்கள் குழு அங்கேயே முகாமிட்டு சிறுவனின் உடல் நிலையை கண்காணித்து வருகின்றனர். மேலிருந்தபடியே உணவும் அனுப்பப்பட்டு வருகிறது.

ஆனால் வியாழக்கிழமை மாலைக்கு மேல் சிறுவனிடமிருந்து எந்த குரலும் வரவில்லை. அவனுடைய தாயார் பலமுறை அழைத்தும் கூட அவனிடமிருந்து பதில் இல்லை. இதனால் மீட்புக் குழுவினர் கவலை அடைந்துள்ளனர்.

இதுவரை 60 அடி வரைக்கு மட்டுமே பள்ளம் தோண்டப்பட்டுள்ளது. பள்ளம் தோண்டும் பணி முடுக்கி விடப்பட்டுள்ளது. 3 நாட்களாகியும் மீட்பு முயற்சி இன்னும் முழுமை அடையாததால், மீட்புக் குழுவினர் கவலை அடைந்துள்ளனர்.

இதுகுறித்து ராணுவ அதிகாரி பூல்விந்தர் சிங் கூறுகையில், சிறுவனிடமிருந்து எந்த பதிலும் இல்லை. இந்த நிலையில் எந்த கருத்தையும் தெரிவிப்பது கடினம். தொடர்ந்து பள்ளம் தோண்டும் பணி நடந்து வருகிறது என்றார்.

சோனுவிடமிருந்து பதில் ஏதும் வராத நிலையில் மீட்புக் குழுவினர் நம்பிக்கையை கைவிடாமல் தொடர்ந்து தீவிர முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். ஒட்டுமொத்த கிராமும் சோனு பத்திரமாக மீட்கப்பட வேண்டும் என்ற பிரார்த்தனையில் ஈடுபட்டுள்ளது.

நன்றி தற்ஸ் தமிழ்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சிறுவன் தவிக்கிறான் தான் ஆனால் அவனை பெற்றவர்கள் இந்த மூன்று நாளும் எப்படி தவித்துகொண்டிருக்கிறார்கள் பாவம். அந்த தாயின் மனது படும் பாடு வார்த்தைகள் இல்லை சொல்வதற்கு :lol::lol::lol:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

150 அடி ஆழமான குழாய் கிணறை பதுகாப்பில்லாமல் திறந்து வைத்தவர்களை என்னவென்று சொல்வது . :icon_mrgreen:

  • கருத்துக்கள உறவுகள்

150 அடி ஆழமான குழாய் கிணறை பதுகாப்பில்லாமல் திறந்து வைத்தவர்களை என்னவென்று சொல்வது . :icon_mrgreen:

இப்பிடி முந்தியும் நடந்து வாசிச்சிருக்கிறன். ஒரு பெண் பிள்ளை விழுந்த பின்னர் அந்த குழிக்குப் பக்கத்தில சமாந்தரமா குழி தோண்டி பிள்ளையை மயங்கிய நிலையில மீட்டார்கள்.. :icon_mrgreen:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பாவம் இந்தப்பிள்ளை மீட்கப்படவேண்டும்

3 நாட்களாக 150 அடி குழியில் தவித்த சிறுவன் பிணமாக மீட்பு

திங்கள்கிழமை, அக்டோபர் 13, 2008

ஆக்ரா: 150 அடி ஆழ்குழாய் கிணற்றுக்குள் விழுந்த இரண்டு வயது சிறுவன் சோனு நான்கு நாட்களுக்கு பிறகு இன்று காலை பிணமாக மீட்கப்பட்டான். இதை பார்த்த குழந்தையின் தாய் கதறி துடித்தார்.

உத்தரபிரதேச மாநிலம் ஆக்ராவில் 150 அடி ஆழம் கொண்ட ஆழ்குழாய் கிணறுக்குள் சோனு என்ற இரண்டு வயது சிறுவன் கடந்த நான்கு தினங்களுக்கு முன் விழுந்தான்.

அந்த சிறுவனை உயிருடன் மீட்பதற்காக கடந்த 3 நாட்களாக தீவிர முயற்சி மேற்கொள்ளப்பட்டது. சிறுவன் தவறி விழுந்த ஆழ்குழாய் கிணற்றுக்கு அருகில் புதிதாக குழி தோண்டி அதன் வழியாக இணைப்பை ஏற்படுத்தி மீட்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.

இந்த முயற்சியில் ராணுவ வீரர்களும் ஈடுபடுத்தப்பட்டனர். எனினும் அந்த பகுதியில் பள்ளம் தோண்டும் போது தொடர்ந்து நிலச்சரிவு ஏற்பட்டு வந்ததால் மீட்பு நடவடிக்கைகள் தொடர்ந்து பாதிக்கப்பட்டு வந்தது.

இந்த நிலையில், மீட்புக்குழுவினர் இன்று காலை சிறுவன் சோனுவை மீட்டு வெளியே கொண்டு வந்தனர்.

உடனடியாக சோனு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டான். ஆனால், அவன் இறந்துவிட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர். இதை கேட்ட குழந்தையின் தாய் கதறித் துடித்தார். மீட்புக் குழுவினரும் சோகத்தில் ஆழ்ந்தனர்.

மூச்சுத்திணறல் ஏற்பட்டு சோனு இறந்திருக்க கூடும். எனினும் பிரேத பரிசோதனைக்குப் பிறகே காரணம் தெரிய வரும் என்றும் டாக்டர்கள் கூறினர்.

நான்கு நாட்களாக 150 அடி ஆழத்தில் உயிருக்காக போராடிய சிறுவன் சோனு இறந்த சம்பவம் ஆக்ராவில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

:) ஐய்யகோ
  • கருத்துக்கள உறவுகள்

3 நாட்களாக 150 அடி குழியில் தவித்த சிறுவன் பிணமாக மீட்பு

இந்த முயற்சியில் ராணுவ வீரர்களும் ஈடுபடுத்தப்பட்டனர். எனினும் அந்த பகுதியில் பள்ளம் தோண்டும் போது தொடர்ந்து நிலச்சரிவு ஏற்பட்டு வந்ததால் மீட்பு நடவடிக்கைகள் தொடர்ந்து பாதிக்கப்பட்டு வந்தது.

எப்போதும் நிலத்தை அகழும்போது கரையமைப்பு (shoring) செய்தபடிதானே கீழ்நோக்கிச் செல்வார்கள்? இது அந்த ராணுவப் பொறியாளர்களுக்குத் தெரியவில்லையா? :)

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எப்போதும் நிலத்தை அகழும்போது கரையமைப்பு (shoring) செய்தபடிதானே கீழ்நோக்கிச் செல்வார்கள்? இது அந்த ராணுவப் பொறியாளர்களுக்குத் தெரியவில்லையா? :)

டங்குவார் நீங்கள் சொன்னது சரிதான் ஆனால் இவர்கள் நிலத்தை அகழ்ந்தார்கள் என்று தான் கூறியிருக்கிறார்கள் ஆனால் எப்படி அகழப்பட்டது என்று கூறவில்லை. நிலத்தை அகழ்வதிலும் பல சிக்கல்கள் உள்ளன அந்த துளையின் அருகில் அகழும் போது அந்த துளை இடிந்து போகவும் வாய்ப்புள்ளது அத்தோடு கனரக இயந்திரங்களை பயன்படுத்துவதிலும் சிக்கல்கள் ஏற்பட்டிருக்கலாம் இதுவே துபாய் ஆக இருந்திருந்தால் சிறுவனை காப்பாற்றியிருக்கலாம் என்று நம்புகிறேன்.

  • கருத்துக்கள உறவுகள்

டங்குவார் நீங்கள் சொன்னது சரிதான் ஆனால் இவர்கள் நிலத்தை அகழ்ந்தார்கள் என்று தான் கூறியிருக்கிறார்கள் ஆனால் எப்படி அகழப்பட்டது என்று கூறவில்லை. நிலத்தை அகழ்வதிலும் பல சிக்கல்கள் உள்ளன அந்த துளையின் அருகில் அகழும் போது அந்த துளை இடிந்து போகவும் வாய்ப்புள்ளது அத்தோடு கனரக இயந்திரங்களை பயன்படுத்துவதிலும் சிக்கல்கள் ஏற்பட்டிருக்கலாம் இதுவே துபாய் ஆக இருந்திருந்தால் சிறுவனை காப்பாற்றியிருக்கலாம் என்று நம்புகிறேன்.

சுப்பண்ணை,

மண் உள்ள பகுதிக்குள் 5 அடி விட்டமுள்ள துளைப்பானை (Augur) இரும்பு சுற்றுச்சுவருடன் (Steel casing) உடன் பயன்படுத்தியிருக்கலாம். 150 அடி ஆழம் வரைக்கும் மண் இருந்திருக்க வாய்ப்பில்லை. ஒரு 30 அடி ஆழத்துக்குக் கீழ் பாறை இருந்திருக்கலாம். பாறைக்குள் குடைவது மிக அதிக காலம் பிடிக்கும். இதற்கு சிறிய அளவு வெடிப்பொருள்களைப் பயன்படுத்திக் கீழே குடைந்து சென்றிருக்கலாம். அருகில் இருந்த‌ கிணற்றின் திடத்தைப் பொறுத்து இது முடிவு செய்யப்படவேண்டியது. கீழே செல்லச் செல்ல இரும்பு சுற்றுச்சுவரும் இறக்கப்பட வேண்டும்.

பாறையில்லாத பட்சத்தில் (நம்புவது கஷ்டமாக உள்ளது) இரண்டு நாட்களில் இந்த மீட்பு சாத்தியப்பட்டிருக்கலாம்.

இன்னொரு வழியில், 150 அடி வரையில் 16" துளையிட்டு அங்கிருந்து மேல்நோக்கி (under-reaming) துளையைப் பெருப்பித்திருக்கலாம்.

  • கருத்துக்கள உறவுகள்

இவ்வாறான விபத்துகள் சம்பவிக்கும்போது குழிக்குள் விழுந்த நபர் தனது உடலளவு பருமனுக்கு சிறிது குறைவான விட்டமுள்ள இடம்வந்ததும் அந்த இடத்தில் ஆப்பு இறுக்கியதுபோல் சிக்கிக்கொள்வார். பின்னர் நாளாக ஆக ஆக தகுந்த ஆகாரமின்மையால் உடல் மெலிந்து இன்னும் அதிக ஆழத்தில் வீழ்வதற்கும் இறுதியில் கிணற்றின் அடியிலுள்ள தண்ணீரில் முழ்கி இறந்துபோகவும் வாய்ப்புண்டு. வீழ்ந்த இடத்திலிருந்து சுவாசித்த காற்றையே மீண்டும் மீண்டும் சுவாசிக்க நேரும்போது காற்றில் நச்சுத்தன்மை அதிகரித்தலாலும் - சுவாசத்து வேண்டிய காற்றோட்ட தடங்கல் அல்லது நெரிசல் காரணமாக சுவாச உறுப்புகள்(மூக்கு, வாய்) அடைக்கப்படுவதினால்கூட மரணம் சம்பவிக்கலாம். குழியில் விழும்போது பெரிய காயங்கள் ஏற்பட்டிருந்தால் அதிலேற்படும் அளவுக்கதிகமான இரத்தப்போக்கு காரணமாகவும் குறித்த நபர் முதலில் மயக்கமடைந்து இறுதியில் உதவி கிட்டாத நிலையில் இறந்தும் போகலாம். குழியின் ஆழம் 180 அடியென்று சொல்லப்பட்டிருந்தாலும் அதுபோன்ற ஒரு குழியை அகழ எடுக்கும் காலம் பெரும்பாலும் நிலத்தின் புவியியல் அமைப்பிலேயே தங்கியுள்ளது.

இவ்வாறான குழிகளை நில உரிமையாளரும், குழி அகழும் கம்பனியும் அகழும் இடத்தை தடைசெய்த பிரதேசமாக்கி உரிய அறிவித்தல் பலகைகளுடன் பாதுகாப்பு வேலிகளையிட்டு விபத்துகளைத் தடுப்பதும் அகழுமிடத்தின் புவியியல் தரவுகளை அவ்வப்போது சேகரித்து வைப்பதற்கான உத்தரவுகளை வழங்குவதும் அரசாங்கத்தின் கடமை. இன்று உலகின் பல பகுதிகளில் நடமாடும் நிலம் அகழும் தளங்கள் பாவனையிலுள்ளன. இவை பார்ப்பதற்கு பெரிய பாரம் தூக்கிகள் போன்று இருந்தாலும் அவற்றை இயங்கு நிலைக்கு தயார்ப்படுத்தி எடுக்கவே பல மணித்தியாலங்கள் தேவைப்படும். நிலையான தளங்களென்றால் சொல்லவே வேண்டாம் அவற்றிற்கு நாட்கணக்கில் காலம் தேவைப்படும்.

அதுவரைக்கும் உதவிக்காக போராடிக்கொண்டிருக்கும் சிறுவனின் உயிர் காத்திருக்குமா என்பது சந்தேகமே. விபத்துகள் நேரும்போது பாதிக்கப்பட்டவர்களை ஆபத்திலிருந்து காப்பாற்றுவதற்கான இறுதி வழிமுறை எவ்வளவு அவசியமோ அதுபோலவே அதற்கு தேவைப்படும் நேரம், அதுவரைக்கும் உயிருக்கு ஆபத்து ஏற்படாமலும் பாதிப்புகள் மேலும் அதிகரிக்காமலும் தவிர்க்கும் தற்காலிக உதவிகளை வழங்கும் ஒரு வழிமுறையும் மிக மிக அவசியம். ஒரு மீட்பு முயற்சி வெற்றியடைய மேற்குறித்தவை பரிசீலிக்கப்பட்டு விரைவாக நடைமுறைப்படுத்தப்பட வேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

வணங்காமுடி சொல்வதுபோல உடல் மெலிந்து கீழே விழுந்தாலோ அல்லது குருதிப்போக்கினாலோ இறக்கும் வாய்ப்புகள் அதிகம். பிராணவாயு கிடைப்பதற்கு மேலிருந்து வழி செய்யலாம். உணவு கீழே போனாலும் எப்படி உண்ணமுடியும் என்று தெரியவில்லை.

இப்படியான கிணறுகளில் உள்ளே விழுந்தால் சாவுக்கு மிக அருகில் இருக்கிறார் என்று கொள்ளவேண்டியதுதான். :)

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.