Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இலங்கை இனப்பிரச்சினைக்கு காரணம் கண்டுபிடிச்ச ரஜினி

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இலங்கை இனப்பிரச்சினைக்கு என்ன காரணம் என்று 2001ம் ஆண்டு நமது சூப்பர் இஸ்டாரு ரஜினிகாந் கண்டுபிடிச்சு சொல்லியிருந்தாரு. இதோ அது...

கிட்டடியில நடந்த சினிமா விழா ஒண்டில இலங்கை இனப்பிரச்சனை தொடர்பா ரஜனி சொன்ன விளக்கத்தைப் பாருங்கோ. அகிம்சையைப் பற்றி அவர் போதிக்கிறார். அப்படி எண்டா உவர் நடிக்கிற படங்களிலயும் அகிம்சையால பிரச்சனைய தீர்க்கலாம்தானே? பிறகு ஏன் படத்தில ஆக்களைப்போட்டு அடிக்கிறவர். எல்லாம் சொல்லுறதுக்கும், கதைக்கிறதுக்கும் நல்லாத்தான் இருக்கும். ஆனா நடைமுறையில உதெல்லாம் சரிப்பட்டு வராது எண்டது "சுப்பர்ஸ்டார்" எண்டு பெயரெடுத்த வெங்காயத்துக்கெல்லாம் தெரியாது. இனி அவற்ற பேச்சை வாசியுங்கோ.

'உங்களுக்கு சின்ன புராணக்கதை ஒன்று சொல்றேன். ஒரு நாள் சிவபெருமான் கிட்டே பார்வதி கேட்டாங்க, நாமே இரண்டு பேரும் எவ்ளோ காலம்தான் இதுமாதிரி மலை, குகை, சுடுகாட்டுல வாழ்ந்துகிட்டு இருக்கிறது. எனக்கு ஒரு அரண்மனை வேணும்னு கேட்டாங்க. சரின்னு சிவபெருமானும் பார்வதிக்கு ஒரு அழகான அரண்மனை கட்டிக் கொடுத்தாரு. அந்த அரண்மனைக்கு கிரகப் பிரவேசம் செய்யறதுக்கு இலங்கையிலேயிருந்து இராவணனை வரவழைச்சாங்க. இராவணன் வேதம் ஓதி, மந்திரம் சொன்னதுல மகிழ்ந்து போன பார்வதி, 'உனக்கு என்ன வேணும் கேள்"னு இராவணனைப் பார்த்துக் கேக்க, அவரு உடனே 'எனக்கு இந்த அரண்மனை வேணும்னாரு".

வரம் கொடுத்தாச்சு மீற முடியுமா? சரின்னு இராவணனுக்கே அந்த அரண்மனையைக் கொடுத்துட்ட பார்வதி; உடனே ஒரு சாபத்தையும் கொடுத்தாங்க. 'நீ எந்தப் பகுதியில் இருக்கிறீயோ அங்கே ஒரே எறஞ்சுகிட்டே (பிரச்சினையாக) இருக்கும்னாங்க..." அதுதான் தொடர்ந்துகிட்டே இருக்கு. இதுக்கு பரிகாரம்னு பார்த்தா ஒரே வழிதான் இருக்கு. அதுதான் 'அகிம்சை". இந்த அகிம்சை முறையைத் தேர்வு செய்தாலே போதும். இதுக்கா தான் அங்குள்ள (இலங்கை) புத்தபிட்சுகள் முயற்சி செய்து வருகிறார்கள்.

இதை எழுதியது யாழ்இணைய உறுப்பினர் விதுரன்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இப்படியெல்லாம் நினைப்பா அவருக்குத்தெரியேல இலங்கையில அகிம்சை கதைச்சா அடுத்தநாள் கதைச்சவனை புதைத்த இடத்தில் புல்லு முளைக்குமென்டு

இதுக்கா தான் அங்குள்ள (இலங்கை) புத்தபிட்சுகள் முயற்சி செய்து வருகிறார்கள்.

இந்திய மக்களின் மூளைச்சலவை செய்வதற்காக இலங்கை பணம் கொடுத்து செய்யும் விளம்பர கர்னாடக பத்திரிகை ஒன்றில் இலங்கை இனவெறி புத்தபிட்சுகள்(விகாரைகளுக்க

  • கருத்துக்கள உறவுகள்

2001 ஆண்டில் அப்படி சொல்லியிருக்கிறார்......தற்பொழ

தொடங்கீற்றங்கையா மீண்டும். அஜீத், அர்ஜீன் புரளி ஓயுதெண்ட நப்பாசையில் பெப்சிக்கு மீண்டும் ஒரு புரளியைக் கிளப்பி விட ஆசை வந்துவிட்டது போலும். இல்லையேல் 2001 இல் இடம்பெற்றதை 2008 இல் இணைக்கத் தோன்றுமா?? ரஜனிகாந்தின் 2001இல் இடம்பெற்ற அந்த பேச்சை நானும் ஒளிப்பதிவில் பார்த்துள்ளேன். அதில் அவர் கூறியது

"உங்களுக்கு சின்ன புராணக்கதை ஒன்று சொல்றேன். ஒரு நாள் சிவபெருமான் கிட்டே பார்வதி கேட்டாங்க நாமே இரண்டு பேரும் எவ்ளோ காலம்தான் இதுமாதிரி மலை, குகை, சுடுகாட்டுல வாழ்ந்துகிட்டு இருக்கிறது. எனக்கு ஒரு அரண்மனை வேணும்னு கேட்டாங்க. சரின்னு சிவபெருமானும் பார்வதிக்கு ஒரு அழகான அரண்மனை கட்டிக் கொடுத்தாரு. அந்த அரண்மனைக்கு கிரகப் பிரவேசம் செய்யறதுக்கு இலங்கையிலேயிருந்து இராவணனை வரவழைச்சாங்க. இராவணன் வேதம் ஓதி, மந்திரம் சொன்னதுல மகிழ்ந்து போன பார்வதி, "உனக்கு என்ன வேணும் கேள்"னு இராவணனைப் பார்த்துக் கேக்க, அவரு உடனே "எனக்கு இந்த அரண்மனை வேணும்னாரு". வரம் கொடுத்தாச்சு மீற முடியுமா? சரின்னு இராவணனுக்கே அந்த அரண்மனையைக் கொடுத்துட்ட பார்வதி; உடனே ஒரு சாபத்தையும் கொடுத்தாங்க. 'நீ எந்தப் பகுதியில் இருக்கிறீயோ அங்கே ஒரே எறஞ்சுகிட்டே (பிரச்சினையாக) இருக்கும்னாங்க..." அதுதான் தொடர்ந்துகிட்டே இருக்கு".

இது மட்டும் தான். ஆனால் பெப்சியோ அல்லது விதுரனோ புத்தபிட்சுகளை புகுத்தி விளையாடி உள்ளனர் . இதை நம்பி மறுபடியும் தமது பொன்னான கருத்துக்களை வழங்குகின்றார்கள் பல புத்திசாலிகள்.

Edited by Vasampu

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

என்ன வசம்பு அண்ணை உதுக்குப்போய் பெரிசாய் குழம்புறியள்?????

பழைய செய்தியை புதிசாய் கொண்டுவந்து ஒட்டுறதுதானே இஞ்சை இப்ப கொஞ்ச நாளாய் நடக்குது

கேட்பாருமில்லை?கண்டிப்பாருமில்லை? யாழ்களம் இப்ப ஒரு இளிச்சவாய் களமாய்ப்போச்சுது

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

திரு.வசம்பு மற்றும் திரு.குமாரசுவாமி இது நகைச்சுவைக்காக இணைக்கப்பட்டது. அதுதான் சிரிப்போம் சிறப்போம் பகுதியில் இணைக்கப்பட்டுள்ளது. இந்திய நடிகர்களுக்கு வால்பிடிக்கும் சிலருக்கு இது குடைந்தால் நான் ஒன்றும் செய்ய முடியாது.

என்ன வசம்பு அண்ணை உதுக்குப்போய் பெரிசாய் குழம்புறியள்?????

பழைய செய்தியை புதிசாய் கொண்டுவந்து ஒட்டுறதுதானே இஞ்சை இப்ப கொஞ்ச நாளாய் நடக்குது

கேட்பாருமில்லை?கண்டிப்பாருமில்லை? யாழ்களம் இப்ப ஒரு இளிச்சவாய் களமாய்ப்போச்சுது

கு.சா

பழைய செய்தியை மட்டுமா புகுத்துறாங்க. அதுக்குள்ள இல்லாததையும் பொல்லாததையும் புகுத்தியல்லவா விளையாடுறாங்க. இந்த விடயத்திலை களம் மட்டுமல்ல, அதற்கு சார்பாக கருத்தெழுதுவோரும் இளிச்சவாயர்கள் தான். என்றைக்கு இவர்கள் திருந்தப் போறார்களோ???????

திரு.வசம்பு மற்றும் திரு.குமாரசுவாமி இது நகைச்சுவைக்காக இணைக்கப்பட்டது. அதுதான் சிரிப்போம் சிறப்போம் பகுதியில் இணைக்கப்பட்டுள்ளது. இந்திய நடிகர்களுக்கு வால்பிடிக்கும் சிலருக்கு இது குடைந்தால் நான் ஒன்றும் செய்ய முடியாது.

அதுசரி இங்கே இணைப்பவர்கள் எல்லாம் அதையதை அந்தந்தப் பகுதிகளில் சரியாகத் தானே இணைக்கின்றீர்கள். உங்களைப் போன்றவர்களின் இணைப்புகளுக்கு பதிலளித்தவர்களின் கருத்துக்களை பார்த்தால், அவர்்கள் உங்களது இணைப்பை நகைச்சுவையாக எடுத்திருப்பது போலவா தெரிகின்றது. உண்மைகளைச் சுட்டிக் காட்டினால் நாங்கள் வால் பிடிக்கின்றோமென்றால், யாருக்கு வால் பிடிக்க தங்களின் இந்தப் பதிவு. உங்களைப் போன்றவர்களின் பதிவுகளை உண்மையென நம்பி பதில்க் கருத்துக்களை பதிவோரை முட்டாளாக்குவது உங்களுக்கு நகைச்்சுவையாகி விட்டதா?? இனியாவது முட்டாள்களானவர்கள் தெளிவு பெறட்டும்.

Edited by yarlpriya

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நல்லா குடையுது போல :rolleyes:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.