Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஒரு கோடியைத் தொடும் நிதி!

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சென்னை: இலங்கைத் தமிழர் நிவாரண நிதிக்கு தொடர்ந்து நிதி குவிந்து கொண்டிருக்கிறது. இன்று பிற்பகல் வரை இந்த நிதிக்கு ரூ. 88.86 லட்சம் நிதி சேர்ந்துள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.

இலங்கைத் தமிழர்களுக்கு நிவாரண உதவியாக நிதியுதவியை அளிக்குமாறு முதல்வர் கருணாநிதி கோரிக்கை விடுத்திருந்தார். தனது சொந்தப் பணத்திலிருந்து ரூ. 10 லட்சம் வழங்கி நேற்று இதை அவர் தொடங்கி வைத்தார்.

இதையடுத்து மாநில அமைச்சர்கள், திமுகவைச் சேர்ந்த மத்திய அமைச்சர்கள், எம்.பிக்கள், எம்.எல்.ஏக்கள் உள்ளிட்டோர் நிதியுதவி அளித்தனர்.

நேற்று ஒரே நாளில் ரூ. 26 லட்சம் அளவுக்கு நிதி சேர்ந்தது. இன்றும் காலை முதல் நிதி குவிந்து கொண்டிருக்கிறது.

தொழிலதிபர் எம்.ஏ.எம். ராமசாமி ரூ. 10 லட்சம் நிதியுதவி அளித்தார். அருணை பொறியியல் கல்லூரி சார்பாக இ.வி. குமரன், ரூ. 10 லட்சம் நிதியளித்தார்.

பெரியார் மணியம்மை அறிவியல் தொழில்நுட்பக் கழகம், பெரியார் அறக்கட்டளை, பெரியார் பொது பிரஸ் டிரஸ்ட் மற்றும் தனது சொந்தப் பொறுப்பில் ரூ. 9.5 லட்சம் நிதியை தி.க. தலைவர் கி.வீரமணி வழங்கினார்.

முன்னாள் எம்.எல்.ஏ நெப்போலியன், ஹோட்டல் சரவண பவன் அதிபர் மற்றும் ஊழியர்கள் சார்பில் தலா ரூ. 5 லட்சம் நிதியுதவி அளிக்கப்பட்டது.

நடிகர் விவேக் ரூ. 1 லட்சம் நிதியுதவி அளித்தார். தலைமைச் செயலக ஊழியர் சங்கம் சார்பில் ரூ. 1 லட்சம், நடிகை குஷ்பு, இயக்குநர் சுந்தர், பத்திரிக்கையாளர் மாலினி பார்த்தசாரதி ஆகியோர் தலா ரூ. 10,000 அளித்தனர்.

பாடலாசிரியர் வாலி, துணை சபாநாயகர் வி.பி.துரைசாமி, பிஷப் எஸ்றா சற்குணம் உள்ளிட்டோரும் நிதியுதவி அளித்தனர்.

இன்று மாலைக்குள் இந்த நிதி ரூ.1 கோடியைத் தொட்டுவிடும் என நம்புவதாக முதல்வர் தெரிவித்துள்ளார்.

http://vaanathinkeezhe.com/?p=142

பத்திரிக்கையாளர் மாலினி பார்த்தசாரதி ஆகியோர் தலா ரூ. 10,000 அளித்தனர்.

இவர்தானே இந்து நாளிதழில் தமிழ் தேசியத்தை கேவலமான கருத்தியலாக எழுதி அதன் மூலம் தமிழீழ விடுதலையை மோசமாக சித்திகரித்தவர்?

தமிழக மக்களின் எழுச்சியை நீர்த்து போக செய்வதற்கான நல்ல முறை காசு உதவி தாருங்கள் என கேட்பது. தமிழக முதல்வர் நன்றாகத் தான் நாடகம் போடுகின்றார்

இவர்தானே இந்து நாளிதழில் தமிழ் தேசியத்தை கேவலமான கருத்தியலாக எழுதி அதன் மூலம் தமிழீழ விடுதலையை மோசமாக சித்திகரித்தவர்?

தமிழக மக்களின் எழுச்சியை நீர்த்து போக செய்வதற்கான நல்ல முறை காசு உதவி தாருங்கள் என கேட்பது. தமிழக முதல்வர் நன்றாகத் தான் நாடகம் போடுகின்றார்

இதுவரை 1கோடிதான் சேர்ந்திருக்காம். இலங்கைக்கு ராடர் எல்லாம் குடுக்கினம் இந்திய அரசு. தமிழ்நாட்டு அரசுக்கு கொஞ்சம் நிதி கொடுத்தால் என்னவாம்? இதுவே மகிந்த கேட்டிருந்தால் கோடிக்கணக்கிலை தூக்கி குடுத்திருப்பினம்.

  • கருத்துக்கள உறவுகள்

பிரச்சினையை நல்லாவே திசை திருப்புகினம்..! மக்கள் மீதான தாக்குதலை நிறுத்தச் சொன்னால் காசு சேர்க்கினமாம். ஏன் சவப்பெட்டி வாங்கவோ?? :lol:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நாங்கள் கேட்டது குரல்.

பணமல்ல.

பணம்தான் தேவையென்றால் .............................

  • கருத்துக்கள உறவுகள்

இந்த நிதி சேகரிப்பு ஈழத்தமிழருக்கு உதவும் என்றால்... அதை வெளிப்படையாகவே சொல்லலாம். வன்னியில் அவதிப்படும் மக்களுக்கு ஒரு துளியும் இது சென்றடையப் போவதில்லை. வீணாக சிறிலங்கா அரசிடம் கொடுத்து ஏமாந்து விடாதீர்கள் அன்பர்களே!

ஐநாவேயே தடை செய்த இலங்கையரசு, உங்களை மதிக்குமா என்ன? அல்லது ஒரு நாடகம் ஆடும். புலிகள் தங்கள் பகுதிக்குள் அனுமதிக்கின்றார்கள் இல்லை... அது, இது என்று... எங்களுக்கு அது பழக்கப்பட்டுப் போனது. உங்களுக்குச் சிலவேளை புதிதாக இருக்கலாம்...

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இந்த உதவிப்பொருட்களை எடுத்து வந்து விநயோகிப்பதற்கு தமிழ்நாட்டு மக்கள் சில பேருக்காவது இலங்கை அரசாங்கமும் இந்திய மத்திய அரசும் வழி செய்து தரவேண்டும் என்று கேளுங்கள் உறவுகளே அப்பொழுது தான் நீங்கள் செய்யப்போகும் உதவி அல்லல்படும் மக்களுக்கும் கிடைக்கும் அவர்களின் நிலையையும் நீங்கள் அறிந்து கொள்ளலாம் உங்களுக்கும் அவர்களுக்கு உண்மையாக உதவி செய்த திருப்தி கிடைக்கும்.

  • கருத்துக்கள உறவுகள்
cartoon-l.gif
  • கருத்துக்கள உறவுகள்

என்ன பெயர் வைக்கலாம்

தமிழனின் உயிரின்மேல் ஒரு நாடகம்

தமிழரின் விதியின் மேல் ஒரு கூத்து

ஈழத்தமிழன் கெட்டதை தருகிறோம்

தமிழர் எல்லோரது தலையிலும் மிளகாய் அரைக்கிறோம்

என்னிடமா கேட்கிறாய் நீதி - இந்தா நிதி வாங்கிக்கொண்டு சா நீ

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

என்ன அழகான அரசியல் திருவிளயாடல்கள் எல்லம் அரங்கேறிக்கொன்ன்டு இருக்கின்றது. இவ்வளவும் ஈழ்த்த்மிழரினது அவலத்தில்...ஓ ஈழத்தமிழா ஓ ஈழத்தமிழா

இவர்களிடம் இருந்து விடிவை எதிர்பார்கின்றாயா நீ

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.