Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

13ஆவது திருத்தம் - வெறும் மாயமான் அம்பலப்படுத்துகிறார் கிழக்கு முதல்வர்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

13ஆவது திருத்தம் - வெறும் மாயமான் அம்பலப்படுத்துகிறார் கிழக்கு முதல்வர்

[25 நவம்பர் 2008, செவ்வாய்க்கிழமை 9:15 மு.ப இலங்கை]

இலங்கை இனப்பிரச்சினை விவகாரத்தில் இலங்கை அரசுத் தரப்பின் - சிங்களத் தலைமையின் - முகமூடியைக் கிழித்து அம்பலப்படுத்தியிருக்கின்றா

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

:-":-":-"அப்பிடி போடு...போடு...போடு

அசக்கி போடு கண்ணாலே..

இப்பிடி போடு .....போடு....போடு

இழுத்து போடு கையாலே :-":-":-"

அன்று தமிழ்க் கூட்டமைப்பு கூறியிருந்ததை இன்று பிள்ளையான், ஹிஸ்புல்லா தெரிவிப்பு

[25 - November - 2008]

* பாராட்டுகிறார் அரியநேத்திரன்

கே.பாலசுப்பிரமணியம், டிட்டோகுகன்

சர்வகட்சி பிரதிநிதிகள் குழுக் கூட்டத்திற்கு சென்று யாரோ ஒருவர் பிரசவிக்கும் குழந்தையை பதிவு செய்வதற்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஒருபோதும் தய?ராக இல்லையென தெரிவித்த கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட எம்.பி.யான பி.அரியநேத்திரன், கிழக்கு மாகாண சபைக்கு அரசாங்கம் எந்தவொரு அதிகாரத்தையும் வழங்கவில்லையென்ற உண்மையை தெரிவித்த கிழக்கு மாகாண சபை முதலமைச்சரான சிவநேசதுரை சந்திரகாந்தனுக்கும் (பிள்ளையான்) அந்த மாகாண சபையின் அமைச்சரான ஹிஸ்புல்லாவுக்கும் பாராட்டுகளை தெரிவித்து வரவேற்பதாகவும் கூறினார்.

பாராளுமன்றத்தில் நேற்று திங்கட்கிழமை நடைபெற்ற தொழில் முயற்சி அபிவிருத்தி, முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சுக்கான வரவு செலவுத் திட்ட நிதி ஒதுக்கீடுகள் மீதான குழுநிலை விவாதத்தில் பேசும்போதே அரியநேத்திரன் எம்.பி. இவ்வாறு கூறினார்.

அவர் இங்கு மேலும் பேசுகையில்;

இனப் பிரச்சினைக்கு தீர்வு காணப்படும் வரை வடக்கு, கிழக்கில் எந்த முதலீடும் சாத்தியமாகாது. நேற்று (ஞாயிற்றுக்கிழமை) நள்ளிரவு கிழக்கில் தொழில் முயற்சியில் ஈடுபட்ட மூவர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். இந்த நிலைமையில் தான் இன்று கிழக்கு இருக்கிறது.

அதிகாரம் கிடைத்ததும் பல்வேறு திட்டங்கள் முன்னெடுக்கப்படுமென கிழக்கு மாகாண சபைக்கான தேர்தல் பிரசாரங்களின் போது உறுதிமொழிகளை வழங்கியிருந்த அந்த மாகாண சபையின் முதலமைச்சரான பிள்ளையான் எனும் சிவநேசதுரை சந்திரகாந்தனும் அமைச்சரான ஹிஸ்புல்லாவும் 5 மாதங்களின் பின்னர் தங்களுக்கு எந்த அதிகாரமும் இல்லையென ஊடகங்களுக்கு தெரிவித்திருக்கின்றனர்.

13 ஆவது அரசியலமைப்பின் கீழான அதிகாரம் கூட தனக்கு கிடையாதென முதலமைச்சர் விசனம் தெரிவித்திருக்கும் அதேநேரம், பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவரை இடமாற்றம் செய்யும் அதிகாரம் கூட கிழக்கு மாகாண சபைக்கு கிடையாதென ஹிஸ்புல்லா தெரிவித்திருக்கிறார்.

இதேநேரம், வடக்கு கிழக்கு மாகாண சபைக்கு போட்டியிட்ட வரதராஜபெருமாள், காணி, பொலிஸ் உள்ளிட்ட பல அதிகாரங்கள் கிடைக்குமெனக் கூறி வெற்றியும் பெற்றார். எனினும் 18 மாதங்களின் பின்னர் "ஏன் இந்தப் பதவியை பொறுப்பேற்றேன்' என்று விசனித்து 1990 ஆம் ஆண்டு தனித் தமிழீழம் தான் ஒரே தீர்வு எனக் கூறி கொடியொன்றையும் நாட்டிவிட்டு இந்தியாவுக்கு வெளியேறி சென்றிருந்தார்.

இதேபோல் தான் இன்றையவர்களின் நிலைமையும். இதைத்தான் தமிழ் தேசியக் கூட்டமைப்பு தேர்தலின் போது அன்றே மக்களுக்கு யதார்த்த பூர்வமாக எடுத்துக் கூறியது. அன்று நாங்கள் கூறியதையே இன்று கிழக்கு மாகாண முதலமைச்சரும் அமைச்சர் ஹிஸ்புல்லாவும் கூறியிருக்கின்றனர். இதற்காக அவர்களுக்கு பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

இதேநேரம், முதலீடுகளுக்கென எந்த திட்டத்தினை முன்வைத்தாலும் இனப் பிரச்சினை தீர்க்கப்படாமல் அது பயனளிக்காது.

இனப்பிரச்சினைக்கான தீர்வு யோசனையை முன்வைப்பதற்கென ஜனாதிபதியால் நியமிக்கப்பட்ட சர்வகட்சி பிரதிநிதிகள் குழு இதுவரை 74 தடவைகள் கூடியுள்ளது. தற்போது, அந்தக் குழுவில் தமிழ் தேசியக் கூட்டமைப்பும் இணைத்துக் கொள்ளப்பட வேண்டுமென இந்தியா அழுத்தம் கொடுத்துள்ளது. எனினும் எமக்கு இதுவரை அவ்வாறான அழைப்புகள் எதுவும் வரவில்லை.

சர்வகட்சி பிரதிநிதிகள் குழு 74 தடவைகள் கூடியும் இதுவரை எந்தத் தீர்வும் எட்டப்படவில்லை. இந்த நிலையில் யாரோ குழந்தை பெற யாரோ பதிவு செய்வது போல, சர்வகட்சி பிரதிநிதிகள் குழுக் கூட்டத்தில் யாரோ பெறும் குழந்தையை பதிவு செய்ய தமிழ் தேசியக் கூட்டமைப்பு தயாராக இல்லை.

எவ்வாறாயினும், இந்தக் குழுக் கூட்டத்தில் கலந்து கொள்வது பற்றி எமது கட்சியே கூடி முடிவெடுக்கும்.

இதேநேரம், இதை "சர்வகட்சி' குழுவென்று கூற முடியாது. இது "சர்வசாட்சி' குழு. ஏனெனில் இதில் அரசாங்கம் கூறுவதற்கு தலையாட்டுபவர்களே இருக்கிறார்கள். இந்த அரசாங்கம் ஒருபுறம் இராணுவ நடவடிக்கைகள் மூலம் தமிழ் மக்களை அழித்துக் கொண்டு மறுபுறம் அரசியல் தீர்வு பற்றி பேசிக் கூட கபட நாடகமாடி வருகிறது.

மட்டக்களப்பில் சிங்கள வைத்தியர் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டமையை நாம் வன்மையாக கண்டிக்கிறோம். இதை செய்தது யாரென்ற உண்மை கண்டறியப்பட வேண்டும். கிழக்கு மீட்கப்பட்டு அங்கு ஜனநாயகம் நிலைநாட்டப்பட்டுவிட்டதாக அரசாங்கம் கூறுகின்ற போதிலும், அங்கு நாளாந்தம் மனிதப் படுகொலைகள் தொடர்ந்து கொண்டிருக்கின்றன. கடந்த 5 மாதங்களில் நூற்றுக்கும் மேற்பட்டோர் கொலை செய்யப்பட்டுள்ளதுடன், மேலும் கடத்தப்பட்டும் காணாமல் போயுமுள்ளனர் என்றார்.

-thinakural.com-

ஒவ்வொருவரும் தனித்தனியே அனுபவபட்டு அறிக்கைகள் தங்கள் ஏமாற்றத்தை அறிவித்துக்கொண்டு இருக்க காலம் காத்திருக்குமா? அதற்கிடையில் சிங்களம் தமிழன் இலங்கையில் இருந்த சுவடே இல்லாமல் அழித்து சிங்கள இனவெறிக்கு தீனிபோட்டுவிடுவான்?

இப்போதும் காலம் கடக்கவில்லை...எல்லாத்தமிழர்க

  • கருத்துக்கள உறவுகள்

பிள்ளையானுக்கு என்ன சிறீலங்கா உள்ள அனைத்து அரசியல்வாதிகளுக்கும் இந்த விடயம் எப்போதோ தெரியும். பிள்ளையான் ஒன்றும் பால்குடி பாப்பா அல்ல. அவர்கள் கள்ள வாக்குகள் மூலம் பெற்ற பதவியை அலங்கரித்துக் கொண்டிருப்பதால் மக்களை தம் பக்கம் கவர இப்படியான அறிக்கைகளை விடுகிறாரே தவிர.. உண்மையாக மக்களுக்கு அதிகாரம் பெற்றுக் கொடுப்பதல்ல இவர்களின் நோக்கம். தங்களின் இருப்பை பாதுகாத்துக் கொள்ள சிங்களப் பேரினவாதப் படையினரை உதவிக்கு வைத்திருக்கும் இவர்கள் உரிமையைப் பற்றிப் பேசுவது..??! :D:rolleyes::o

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

மாண்புமிகு முதலமைச்சர் 13வது திருத்தத் சட்டம் மூலம் ஏதாவது நல்லது செய்யலாம் என்று வெளிக்கிட்டாலும், அவரின் முன்னைய பங்காளியும் தற்போதைய பகையாளியுமான பாராளுமன்ற உறுப்பினர் விடுகிறார் இல்லையாம். மிகவும் நொந்துபோய் இருக்கிறார்..

  • கருத்துக்கள உறவுகள்

மட்டகளப்பில கண்ணடபடி வெடிக்குது யார் யாரை போடுறான் என்றே தெரியுதில்லை....

எதுக்கும் கொஞ்சம் ரெடியா இருப்பம் எண்டு பல்ரி அடிக்கிறார் பிள்ளையார்.

இவருக்கு மாலைபோட்டு நேந்துவிட்ட ஆடு மாதிரி கூட்டிகொண்டு சிங்களவன் போகும்போதே இவரின் முடிவு தெரிந்ததுதானே.

பிள்ளையானுக்கு என்ன சிறீலங்கா உள்ள அனைத்து அரசியல்வாதிகளுக்கும் இந்த விடயம் எப்போதோ தெரியும். பிள்ளையான் ஒன்றும் பால்குடி பாப்பா அல்ல. அவர்கள் கள்ள வாக்குகள் மூலம் பெற்ற பதவியை அலங்கரித்துக் கொண்டிருப்பதால் மக்களை தம் பக்கம் கவர இப்படியான அறிக்கைகளை விடுகிறாரே தவிர.. உண்மையாக மக்களுக்கு அதிகாரம் பெற்றுக் கொடுப்பதல்ல இவர்களின் நோக்கம். தங்களின் இருப்பை பாதுகாத்துக் கொள்ள சிங்களப் பேரினவாதப் படையினரை உதவிக்கு வைத்திருக்கும் இவர்கள் உரிமையைப் பற்றிப் பேசுவது..??! :lol::(:blink:

நான் அமெரிக்காவில் இருந்து கொண்டு ஜனநாயகம் பற்றி எழுதுவதை நீங்கள் வாசிப்பதில்லையா?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.