Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

களமுனையில் சிதறிக் கிடக்கும் படையினரின் சடலங்கள்..படம் இனைப்பு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ஆமிக்காறனும் காட்டிறான் தாங்கள் எடுத்தது எண்டு.

யாழ் களம் இப்ப அரச ஊடக மாக மாறி வருகிறது! நமது செய்திகளை அனைத்து சிங்கள ஊடகங்களும் இருட்டடிப்பு செய்கையில் ஜனநாயகத்தின் பெயரில் நாங்கள் மட்டும் நல்ல பிள்ளைகளாக நடப்பது சரியா? மேற்கண்ட படம் பல அரசதரப்பு ஊடகங்களில் வந்து விட்டது! இங்கும் அரச பரப்புரைக்கு இடமளித்த யாழ்கள நிர்வாகிகள் தயவு செய்து மாவீரர் மற்றும் போராட்டம் சம்பந்தப்பட்ட அனைத்து விடயங்களையும் உடன் அகற்றி விடுக! இரட்டை வேடம் போட எத்தனிக்கும் யாழ்களம் இனி சிந்தித்து செயலாற்ற வேண்டும்!

அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்த அளவு இல்லாவிட்டாலும் படங்கள் வெளியிடப்பட்டு விட்டன!

என்னதான் இருவரும் ஏட்டிக்கு போட்டியாக செயற்பட்டாலும், மக்களின் அவலங்களை மறைக்கிறதில ஒற்றுமையாக இருக்கினம்!

Edited by சாணக்கியன்

யாழ் களம் இப்ப அரச ஊடக மாக மாறி வருகிறது! நமது செய்திகளை அனைத்து சிங்கள ஊடகங்களும் இருட்டடிப்பு செய்கையில் ஜனநாயகத்தின் பெயரில் நாங்கள் மட்டும் நல்ல பிள்ளைகளாக நடப்பது சரியா? மேற்கண்ட படம் பல அரசதரப்பு ஊடகங்களில் வந்து விட்டது! இங்கும் அரச பரப்புரைக்கு இடமளித்த யாழ்கள நிர்வாகிகள் தயவு செய்து மாவீரர் மற்றும் போராட்டம் சம்பந்தப்பட்ட அனைத்து விடயங்களையும் உடன் அகற்றி விடுக! இரட்டை வேடம் போட எத்தனிக்கும் யாழ்களம் இனி சிந்தித்து செயலாற்ற வேண்டும்!

யாழ்களம் ஒரு ஊடகம் அல்ல... இது மக்களின் கருத்துக்களம்... மக்களின் கருத்துகளுக்கும் கேள்விகளுக்கும் பதில் அளிக்க முடியாவிட்டால் தனிப்பட்டவர்களையும், நிர்வாகத்தையும் தாக்குவதை விடுத்து பதிலளிக்க முடியாமைக்கான காரணம் குறித்து சிந்தித்து அது குறித்து தேடல்களில் ஈடுபடுவதே ஆக்கபூர்வமான செயற்பாடாக அமையும்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அங்க மழையிக்கையும் குளிருக்கையும் இருந்து நாட்டைக்காக்கிறார்கள் ஆனால் இஞ்ச புடுக்குப்பற்றியலோ

அரசின் பிரச்சாரங்கள் தான் அந்த 2 காணொளிகளும் அதில் வேறு கருத்தில்லை.

அடுக்கி வைக்கப்பட்ட ஆயுதங்களில் பெரும்பாலானவை அரசபடைகளின் சொந்த ஆயுதங்களாகக் கூட இருக்கலாம்.

அதே போல் பிடிக்கப்பட்டதாக கூறப்படும் பெண் போராளிகள் உண்மையாக இருக்கலாம் அல்லது பொய்யாக அரங்கேற்றப்பட்டதாக கூட இருக்கலாம். அல்லது குறைந்த பட்சம் அவர்கள் சொல்லும் கதைகள் பிரச்சார நோக்கில் சொல்லிக் கொடுக்கப்பட்டிருக்கலாம். இதிலும் எந்த மாற்றுக் கருத்து இல்லை.

இந்த பிரச்சார அணுகுமுறைகள் (ஆயுதங்களை கைப்பற்றியதாக, போராளிகளை பிடித்தாக உடலங்களை கைப்பற்றியதாக) வெளிவரும் படங்கள் காணொளிகள் அங்கீகாரம் உள்ள அரசின் பயங்கரவாதத்திற்கு எதிரான போர் என்ற கோசத்திற்கு பொருத்தமானது.

ஆனால்

-1- பொருளாதார தடை மருத்துவத்தடை என்பவற்றை விதித்து இன அழிப்பு செய்யும் பயங்கரவாத அரசை எதிர்கொள்ளும் தேசிய விடுதலைப் போராட்ட சக்திக்கு உரியது அல்ல.

-2- பேச்சுவார்த்தைகளை முறித்து யுத்தநிறுத்த உடன்படிக்கையை ஒரு தலைப்பட்சமாக கிழித்துவிட்டு ஆக்கிரமிப்பு யுத்தம் நடத்தும் அரச பயங்கரவாதத்திற்கு எதிராக தற்காப்பு சமர் புரியும் மற்றத்தரப்பிற்கு பொருத்தமற்ற அணுகுமுறை.

-3- மொத்தத்தில் சர்வதேச அங்கீகாரம் வேண்டி நிற்கும் ஒரு நியாயமான தேசிய விடுதலைப் போராட்டத்திற்கு பொருத்தமற்றது.

இவற்றுக்கு எதிர் வினையாக தேசிய விடுதலைக்கு போராடும் தரப்பும் கைப்பற்றப்பட்ட ஆயுதங்கள் உடலங்கள் அடையாள அட்டைப் படங்கள் காணொளிகள் விட்டால் போராட்டத்தின் திசை நோக்கம் மாறிவிட்டதா என்று தான் எண்ண வைக்கிறது. 2 ஆயுதம் தாங்கிய தரப்பும் ஒரே கொள்கையோடு போட்டிக்கு கூத்தாடுகின்றனவா என்று யோசிக்க வைக்கிறது.

இந்த எதிர்வினையான பிரச்சாரங்கள் (புலிகளால் வெளியிடப்படும் இப்படிப்பட்ட படங்கள் தமிழ்தேசிய தொலைக்காட்சி மூலம் வரும் காணொளிகள்) எதிரியின் பிரச்சாரத்தை வலுப்படுத்தி நியாயப்படுத்துகிறது. எமது நோக்கம் வேறு குறிக்கோள் வேறு என்றதை மறந்து எதிர்வினையில் இயங்கிக் கொண்டிருக்கிறோம்.

இந்தத் தவறை புலிகள் செய்தாலும் அது விமர்சிக்கப்பட வேண்டும் திருத்தப்பட வேண்டும்.

Edited by kurukaalapoovan

ஒம், ஓம் கருணாவுக்கு ஒரு கருத்திருக்கு, பிள்ளையானுக்கு ஒரு கருத்திருக்கு, டக்கிளசுக்கு ஒரு கருத்திருக்கு அவையும் தமிழர் தானே! கருத்தை நல்லா பரப்பங்கோ! ஊடகம் இல்லாட்டி ஏன் இஞ்சை செய்தி இணைப்பை போடுறியள்! மக்கள் கருத்தாம் மக்கள் கருத்து! மற்ற ஆக்களின்டை கருத்து கேட்டுதான் இப்ப இப்பிடி அலையிறம்!

நமக்கு இப்ப ஒரே இரு கருத்து அது தாயகம் ஒன்றை நமக்கு பெறுவது! அதற்கு தடையாக இருக்கும் அனைத்தும் இங்கு தடைசெய்யப்பட வேண்டம்!

தாயம் கிடைத்த பின் புடுங்குப்படுவம்!

இப்ப ஒரு குறியே நமக்கு பலம்!

  • கருத்துக்கள உறவுகள்

யாழ்களம் ஒரு ஊடகம் அல்ல... இது மக்களின் கருத்துக்களம்... மக்களின் கருத்துகளுக்கும் கேள்விகளுக்கும் பதில் அளிக்க முடியாவிட்டால் தனிப்பட்டவர்களையும், நிர்வாகத்தையும் தாக்குவதை விடுத்து பதிலளிக்க முடியாமைக்கான காரணம் குறித்து சிந்தித்து அது குறித்து தேடல்களில் ஈடுபடுவதே ஆக்கபூர்வமான செயற்பாடாக அமையும்.

மக்கிளன் கருத்துக்கள், கேள்விகள்??? யாரை மக்கள் என்கின்றீர். சிங்கத்தின் குகைக்குள் இருந்து, நாங்கள் இருபக்கமும் சாராத நடுநிலமைவாதிகள் என்போரையா? இவர்களுக்காக, இவர்களின் விதண்டாவாதங்களுக்கு நாங்கள் தேடுதல் என்ன என்ன கிளிக்கப் போகின்றோம்??

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கைப்பற்றப்பட்ட சிறிலங்கா படையினரின் ஏழு உடலங்களும் ஒப்படைப்பு

குஞ்சுப்பரந்தன் நோக்கிய சிறிலங்கா படையினரின் முன்நகர்வு கடந்த ஞாயிற்றுக்கிழமை தமிழீழ விடுதலைப் புலிகளால் முறியடிக்கப்பட்டதில் கைப்பற்றப்பட்ட படையினரின் ஏழு உடலங்களும் இன்று ஒப்படைக்கப்பட்டுள்ளன.

புதுக்குடியிருப்பில் அனைத்துலக செஞ்சிலுவைச் சங்கத்திடம் இந்த ஏழு உடலங்களையும் இன்று புதன்கிழமை விடுதலைப் புலிகள் ஒப்படைத்தனர். சிறிலங்காவிடம் ஒப்படைக்கப்படுவதற்காக உடலங்கள் வவுனியாவுக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளன.

http://www.sankathi.com/index.php?mact=New...nt01returnid=51

Edited by kuddipaiyan26

அவன் என்ன வேண்டும் என்றாலும் காட்டிவிட்டு போகட்டும். பரவாயில்லை. எல்லாம் ஒரு வேடிக்கையாக பார்ப்போம். நீங்கள் இணையத்தில் வந்து கருத்துப்போர் செய்து கிழிக்க தேவை இல்லை. தாயக போர் நிதி கொடு, தமிழர் ஒருங்கிணைப்பு குழு உங்கள் வீடு தேடி வந்தால் வீட்டுக்குள் நின்றுகொண்டு கதவை திறக்காது விடாதே. அல்லது திறந்து நூறு கதைபேசி விரட்டி அடிக்காதே, ஏதும் ஊர்வலம் என்றால் போ, இவை ஏதும் இல்லை என்றால் கணை மூடிக்கொண்டு , வாயை-காதை பொத்திகொண்டு இரு எல்லாம் நல்ல படி நடக்கும். என்ன தாயகம் தேசியம் பக்தி நடுநிலமை என்று படமா காட்டுகின்றீர்கள்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.