Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இலங்கைக்குப் போனது ஆயுதம்! மும்பையில் போனது மானம்!

Featured Replies

மும்பையில் தீவிரவாதிகள் மூன்று நாட்களாக நடத்திய தாக்குதலில் நிலைகுலைந்து கிடக்கிறது, மத்திய அரசு! பாகிஸ்தானில் இருந்து கப்பலில் வர்த்தக நகரமான மும்பையில் வந்திறங்கி இந்தியா மீது கிட்டத்தட்ட போர்த் தொடுத்திருக்கிறார்கள். பாகிஸ்தானின் பயிற்சிப் பெற்ற தீவிரவாதிகள் இவர்கள் என்று வழக்கம்போல் மத்திய அரசு சொல்லிவிட்டது.

அமெரிக்காவில் செப்டம்பர் 11 நடந்த இரட்டைக் கோபுரத் தாக்குதலுக்குப் பின் அதற்குக் காரணமாகச் சொல்லப்பட்ட ஒசாமாபின் லேடனைக் கொல்வதற்காக ஆப்கானிஸ்தானில் அமெரிக்கா நடத்திய உக்கிரத் தாக்குதலை யாரும் மறந்திருக்க முடியாது. அதற்கு உலக நாடுகள் மத்தியில் பல எதிர்ப்புகள் கிளம்பிய போதும் தீவிரவாதத்துக்கு எதிரான போர் என்று கிளம்பியது, அமெரிக்கா. இந்தியாவும் வல்லரசு ஆகும் என்று தனியார் பள்ளி, கல்லூரி விழாக்களில் பேசும் அப்துல் கலாம், இந்தியாவையும் அமெரிக்காவைப் போல் தீவிரவாதத்துக்கு எதிரான போரை நடத்தச் சொல்லலாமே?

பாகிஸ்தானில் தீவிரவாத முகாம்கள் இங்கெங்கு உள்ளன? என்று இந்திய உளவுத் துறைக்குத் தெரியவில்லை என்றால், அதைவிடக் கேவலம் வேறு எதுவும் இருக்க முடியாது. அந்தத் தீவிரவாத முகாம்களில் இருந்துதான் தீவிரவாதிகள் இந்தியாவுக்குள் நுழைகிறார்கள் என்கிறது, மத்திய அரசு. அப்படியென்றால், அந்த முகாம்களை ஏன் தாக்கக் கூடாது. தமிழர்களை அழிக்க சிங்கள அரசுக்கு ஆயுதம் கொடுக்கும் மத்திய அரசு, இந்தியனை அழிக்கும் தீவிரவாதிகளை இதுவரையிலும் எதுவும் செய்ததில்லையே ஏன்?

காங்கிரஸ்காரர்கள் அதிலும் தமிழக காங்கிரஸ்காரர்கள் விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரனைக் கைது செய்ய வேண்டும் என்று கத்திக் கொண்டேதான் இருக்கிறார்கள். ராஜிவ்காந்தியைக் கொன்றவர் பிரபாகரனாம். சரி, ஆயிரக்கணக்கான இந்தியர்களை கொன்று குவித்த தாவூத் இப்ராஹிம் பதுங்கியிருப்பது பாகிஸ்தானில் தானே? புலிகளை அழிக்க சிங்கள அரசிற்கு ஆயுதம் தருகிறோம் என்கிறார்கள் இந்தக் காங்கிரஸ்காரர்கள். பிரபாகரனைப் பிடித்தால் இந்தியாவிடம் ஒப்படைக்க வேண்டுமாம. அப்படியென்றால், தாவூத் இப்ராஹிமைப் பிடிக்க யாருக்கு ஆயுதம் தரப்போகிறார்கள். பாராளுமன்றத்திலும் தாஜ் ஹோட்டலிலும் நடந்த தாக்குதலில் உயிரிழந்த நம் வீரர்கள், அப்பாவி மக்கள் ஆகியோரின் சார்பில் கேட்கப்படும் இந்தக் கேள்விக்கு காங்கிரஸ் அரசிடம் ஏதாவது பதிலிருக்குமா?

வழக்கம் போல் அத்வானி போன்ற பா.ஜ.க.வினர் பொடா சட்டம் இருந்திருந்தால் இப்படியொரு சம்பவம் நடந்திருக்காது என்று சொல்வார்கள். இந்தியாவில் பொடா சட்டம் இருந்தால் பாகிஸ்தானில் இருந்து அந்தக் கப்பல் கிளம்பியிருக்காது என்று இல.கணேசன் கூட இங்கு பிரஸ் மீட் கொடுப்பார்கள். இதே பா.ஜ.க., ஆட்சியில் அதுவும் பொடா சட்டம் அமலில் இருந்த சமயத்தில் பாராளுமன்றத்தின் மீதே தாக்குதல் நடத்தினார்கள். இப்படியே பொடா சட்டத்தில் யார், யார்யெல்லாம் கைது செய்யப்பட்டார்கள்? வைகோவையும் பழ.நெடுமாறனையும் தான் என்பதை யாரும் மறந்திருக்க முடியாது. பாகிஸ்தான் தீவிரவாதிகளுக்கு எதிரான கார்கில் போரில் பெற்ற வெற்றியை கொண்டாடிக் கொண்டே இந்தியா மீது புனிதப் போர் நடக்கிறது என்று சொன்ன பர்வேஸ் முஸாரஃபை அழைத்து வந்து விருந்து வைத்தவர்களும், இதே பா.ஜ.க.,தான். முகமது அலி ஜின்னாவை இந்தியாவில் துரோகி என்கிற அத்வானி, பாகிஸ்தான் போனால் தியாகி என்பார்.

இந்தியாவில் எங்கு குண்டு வெடித்தாலும் அதற்குக் காரணம் என்று இஸ்லாம் சகோதரர்கள் மீது பலிபோடுவது வி.எச்.பி.,யின் அணுகுமுறை. ஆனால் மலேகான் குண்டு வெடிப்புக்குக் காரணமான இந்துத் தீவிரவாதிகள் (முஸ்லிம் தீவிரவாதி இருக்கும் போது, இந்துத் தீவிரவாதி இருக்கக் கூடாதா?) மீது நடவடிக்கை எடுக்கக் கூடாது என்கிறார்கள். ஏன் பொடா சட்டம் எல்லாம் இஸ்லாம் சகோதரர்கள் மீது மட்டும்தான் பாயுமா?

இன்னொரு முக்கியமான விடயம் என்னவென்றால், செப்டம்பர் 11 நடந்த இரட்டை கோபுரம் தாக்குதலில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்தாலும், ஒரே ஒரு சடலத்தைக் கூட, ஒரே ஒரு சொட்டு ரத்தத்தைக் கூட காட்டவில்லை அங்குள்ள மீடியா. ஆனால் தாஜ், ஒபாரே, நாரிமன் இல்லம் ஆகிய இடங்களில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலை ரியலிட்டி ஷோ ரேஞ்ஜிற்கு லைவ்வாக ஒளிபரப்பி, புண்ணியத்தைக் கட்டிக் கொண்டார்கள். தீவிரவாதிகளும் வெளிநாட்டுப் பயணிகளை பிணயக் கைதிகளாகப் பிடித்து வைத்து நம் உளவுத் துறையின் கையாலாகத்தனத்தை உலகிற்கே பறைசாற்றி விட்டனர்.

ஆக மொத்தத்தில் இந்தியாவின் பிரதான இரண்டு கட்சிகளான காங்கிரஸ�ம் சரி, பா.ஜ.க.,வும் சரி இந்தப் பிரச்னையை கையாளத் தெரியாமல் திணறுகிறது. அதற்குக் காரணம் காஷ்மீர் மக்களின் விருப்பத்துக்கு எதிராக தொடர்ந்து இந்திய அரசு தாங்கிப்பிடிக்கும் அவர்கள் கடைபிடித்து வரும் போக்குதான்.

இலங்கையில் ஈழத் தமிழர்களின் விருப்பத்துக்கு எதிராக சிங்கள அரசின் செயல்பாட்டிற்கு இந்திய அரசு ஆதரவு கொடுத்து வருவதும் இதே சிக்கலைத் தான் ஏற்படுத்தி வருகிறது. இலங்கைக்கு ஆயுதம் தருகிறீர்கள்? மும்பை வரை வந்து தாக்கும் தீவிரவாதிகளிடம் உயிரைவிடுகிறீர்கள். ஆசிய கண்டத்தில் ஆதிக்கச் சக்தியாக உருவெடுக்கவே இலங்கைக்கு ஆயுதம் தருகிறோம் என்று மத்திய அரசு சொன்னதாக ஞாபகம். உங்கள் ஆதிக்கச் சக்தியைப் பார்க்கும் போது ஒவ்வொரு இந்தியனுக்கும் புல்லரிக்கிறது!

http://www.tamilskynews.com/ http://www.tamilskynews.com/ http://www.tamilskynews.com/

Edited by தராக்கி

  • கருத்துக்கள உறவுகள்

பாகிஸ்தானின் பயிற்சிப் பெற்ற தீவிரவாதிகள் இவர்கள் என்று வழக்கம்போல் மத்திய அரசு சொல்லிவிட்டது.

உண்மைதான்

ஸ்ரீலங்காவில் என்ன நடந்தாலும் புலி என்பதுபோல்

இந்தியாவில் என்ன நடந்தாலும் பாகிஸ்தான்

இந்த அனுமானமே எல்லாவற்றிற்கும்

முக்கியமாக உண்மைக்குற்றவாளிகள் தப்பிக்கவும்

மீண்டும் மீண்டும் குற்றங்களைச்செய்தாலும் தம்மீது பழிவராது தப்பிக்கலாம் எக்ற தைரியத்தை கொடுப்பதும் இது தான்எப்போ மாறும் இந்த அதிபுத்திசாலித்தனம்

  • கருத்துக்கள உறவுகள்

அதி புத்திசாலித்தனம் என்பது வல்லரசாகபோறோம் என்பதா குகா

தனது நாட்டு மிகப்பெரிய நகரத்திற்க்கு இருக்கும் பாதுகாப்பை பார்த்தால்???

பாக்கு நீரிணையில் போட்டு தேடின கப்பலை கொஞ்சம் அந்த பக்கமும் அனுப்புங்கோ ஏதாவது பிடிக்கலாம் ...............

  • கருத்துக்கள உறவுகள்

இதற்கு நான்ஒரேசொல்லில் பதில் சொன்னால்

வெட்கக்கேடு.

இதைத்தான் சொல்வது

தனக்கெடா சிங்களம்

தன் பிரடிக்கு சேதம் என்று.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இதில் இந்திய மக்கள் தவிர சுற்றுலாச் சென்ற பயணிகளும் உயிர் விட்டதுதான். இன்னமும் அவமானமாகப்போய் விட்டது இந்தியாவிற்கு. ஊடகங்கள் நடந்த முறை இருக்கிறதே...ச்சே..."எல்லாமே வியாபாரமாகிவிட்டது...

உயிரிழந்த மக்களுக்கு அஞ்சலிகள்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இந்தியாவிலை கனக்க கோவில் இருக்கு அங்கு இருக்கும் கோவில் மணிகளை உருக்கி ஆயுதங்களை உற்பத்தி செய்யும்படி மத்திய அரசை கேட்டுக்கொள்கிறேன் அத்தோடு கோவில்களில் தேங்காய் அடிக்காமல் அந்த காசை இந்தியாவை சுற்றி பெரிய உயரமான மதில் (தடுப்புவேலி) கட்ட கொடுக்கும் படியும் கேட்டுக்கொள்கிறேன்

  • கருத்துக்கள உறவுகள்

இவ்வாக்கம் தமிழக உறவு ஒன்றினால் எழுதப்பட்டுள்ளது. ஆனால் தராக்கி இணைக்கும் பெறும்பாலான செய்திகளில் யாரால் எந்த ஊடகத்தில் இருந்து பெறப்பட்டுள்ளது என்பது குறிப்பிடும் வழக்கம் இல்லாமல் இருக்கிறது. அவர் http://www.tamilskynews.com/ யில் இருந்து பெறப்பட்டதாகக் குறிப்பிட்டாலும் அதில் வரும் செய்திகளில் பெரும்பாலானவை வேறு ஊடகங்களில் வந்த செய்திகளாகவே இருக்கிறது.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.