Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

கிளஸ்டர் குண்டு பாவனைக்கு எதிரான உடன்படிக்கை கைச்சாத்திடும் நாளில் நோர்வேயில் கவனயீர்ப்பு ஒன்றுகூடல்

Featured Replies

கிளஸ்டர் (Cluster) குண்டு பாவனைக்கு எதிரான உடன்படிக்கையில் 100-க்கும் அதிகமான உலக நாடுகள் சைச்சாத்திடவுள்ள மாநாடு நாளை நோர்வேயின் தலைநகரான ஒஸ்லோவில் நடைபெறவுள்ளது.

தமிழ் மக்கள் மீதான இன அழிப்பு வன்போரில் சிறிலங்கா அரசாங்கம் கிளஸ்டர் குண்டுகளை பயன்படுத்துவது அம்பலமாகியுள்ளது.

வன்னியில் இடம்பெயர்ந்த மக்கள் தங்கியிருந்த குடியிருப்பு மீது கடந்த சனிக்கிழமை இந்த வகை குண்டுகள் வீசப்பட்டு ஐந்து வயது குழந்தை உட்பட்ட இருவர் கொல்லப்பட்டுள்ளனர். ஏழு சிறுவா்கள் உள்ளிட்ட 21 பேர் படுகாயமடைந்துள்ளனர்.

அணுகுண்டுக்கு அடுத்தபடியாக பேரழிவு ஆயுதமாக கிளஸ்டர் குண்டு உள்ளது எனும் பின்னணியிலேயே 100-க்கும் அதிகமான உலக நாடுகள் இதன் பாவனைக்கு எதிரான உடன்படிக்கைக்கு இணங்கியுள்ளன.

அந்த வகையில், உலக நாடுகளின் இந்த ஆக்கபூர்வமான செயற்பாட்டுக்கு ஆதரவாகவும்

அதேவேளை, சிறிலங்கா அரசு தமிழ் மக்கள் மீது இந்த வகை பேரழிவு ஆயுதங்களைப் பயன்படுத்துகின்றமையை உலகின் கவனத்திற்கு கொண்டுவரும் முகமாகவும்

சிறிலங்காவிற்கான ஆயுத உதவிகளை நிறுத்துமாறு உலக நாடுகளைக் கோரியும்

கவனயீர்ப்பு ஒன்றுகூடல் நிகழ்வு நாளை புதன்கிழமை பிற்பகல் 3:00 மணிக்கு நோர்வே நாடாளுமன்றம் முன்பாக நடைபெறவுள்ளது.

இதில் கலந்து கொள்ள வருமாறு அனைத்து தமிழர்களையும் நோர்வே தமிழ் அமைப்புக்களின் ஒன்றியம் கேட்டுள்ளது.

புதினம்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அன்பான உறவுகளுக்கு ஒரு அவசர அழைப்பு

கவனயீர்ப்பு ஒன்றுகூடல்

(Cluster) பாவனைக்கெதிரான உடன்படிக்கையில் 100க்கும் மேற்பட்ட உலக நாடுகள் சைச்சாத்திடவுள்ளன. இதற்கான மாநாடு 03.12.08 புதன் அன்று ஒஸ்லோவில் (நகரசபை மண்டபத்தில்) நடைபெறுகின்றது.

தமிழ் மக்கள் மீதான இன அழிப்பு வன்போரில் சிறிலங்கா அரசு, கொத்தணிக் குண்டு எனப்படும் இவ்வகை மடயளநடிழஅடிந களைப் பயன்படுத்துவது அம்பலமாகியுள்ளது. கடந்த சனியன்று வன்னியில் இடம்பெயர்ந்த மக்கள் தங்கியிருந்த குடியிருப்பு மீது இவ்வகைக் குண்டுகள் வீசப்பட்டு, 5 வயது குழந்தை உட்பட்ட மூவர் கொல்லப்பட்டுள்ளனர். 7 சிறார்கள் காயமடைந்துமுள்ளனர்.

அணுகுண்டுக்கு அடுத்தபடியாக பேரழிவு ஆயுதமாக இந்த (Cluster) உள்ளது என்ற பின்னணியிலேயே 100க்கும் மேற்பட்ட உலக நாடுகள் இதன் பாவனைக்கெதிரான உடன்படிக்கைக்கு இணங்கியுள்ளன.

அந்த வகையில் உலக நாடுகளின் இவ் ஆக்கபூர்வமான செயற்பாட்டுக்கு ஆதரவாகவும்,

அதேவேளை சிறிலங்கா அரசு, தமிழ் மக்கள் மீது இவ்வகை பேரழிவு ஆயுதங்களைப் பயன்படுத்துகின்றமையை உலகின் கவனத்திற்கு கொண்டுவரும் முகமாகவும்,

சிறிலங்காவிற்கான ஆயுத உதவிகளை நிறுத்துமாறு உலக நாடுகளைக் கோரியும்

இக்கவனயீர்ப்பு ஒன்றுகூடல் ஏற்பாடு செய்யப்படுகின்றது.

காலம்: 03.12.08 புதன் பி.ப 3 மணி

இடம்: நாடாளுமன்றம் முன்பாக

ஒழுங்கமைப்பு: நோர்வே தமிழ் அமைப்புகளின் ஒன்றியம்

எங்களின் உறவுகளை காக்க சகலரும் ஒன்றிணைந்து வீதியில் இறங்குவோம்.

Edited by செவ்வேள்

29_11_08_01_vanni_01.jpg

29_11_08_01_vanni_03.jpg

29_11_08_01_vanni_01.jpg

Cluster Bomb used by SLAF on civilian target

29_11_08_01_vanni_02.jpg

Cluster Bomb used by SLAF on civilian target

01_12_08_girl_02.jpg

Edited by ஈழவன்85

  • கருத்துக்கள உறவுகள்

1987ம் ஆண்டும் வடமராட்சிப்பகுதியில் மலசலக்கூட கழிவுநீரை குடியிருப்புக்கள் மீது விமானத்தில் இருந்து வீசியதாக அறிந்தேன்..

போகேக்க தெளிவான பெரிய படங்களையும் கொண்டுபோகலாம். தமிழ்நெட்டில இந்தப்படத்தை பார்த்தன் கறுப்பு வெள்ளையாக. படத்திண்ட அகோரம் காரணமாக நிறத்தில போட இல்லைப்போல. மருத்துவர்கள் ஆய்வு கூடங்களில இறந்த உடம்புகளை வெட்டி ஆராய்ச்சி செய்யுறமாதிரி விமானிகள் பரிசோதனை செய்து ஏதோ படிக்கிறீனம் போல இருக்கிது.

SLAF__5_30_11_08.JPG

மூலம்: http://tamilnet.com/art.html?catid=79&artid=27633

  • கருத்துக்கள உறவுகள்

1987ம் ஆண்டும் வடமராட்சிப்பகுதியில் மலசலக்கூட கழிவுநீரை குடியிருப்புக்கள் மீது விமானத்தில் இருந்து வீசியதாக அறிந்தேன்..

86,87 பகுதிகளில் அத்துலத் முதலியினால் சகடை என்று யாழ் மக்கள் சொல்லும் விமானத்தில் இருந்து மலசலம் அடைக்கப்பட்ட பிப்பாய்களை மக்கள் பகுதியில் (வடமராட்சி , வலிகாமம்) வீசப்பட்டது.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.