Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

** போர் நிறுத்தத்திற்கு தயாரில்லை: எந்தச் சவாலையும் சந்திக்கத் தயார் - பிரதமர்!

Featured Replies

போர் நிறுத்தம் ஒன்றுக்குத் தயாரில்லை என சிறீலங்கா அரசாங்கம் தாயாரில்லை என சிறீலங்காப் பிரதமர் ரட்ணசிறீ விக்கிரமநாயக்க கூறியுள்ளார். நாடாளுமன்றில் இன்று வியாழக்கிழமை இடம்பெற்ற அவசரகாலச் சட்டம் மற்றும் பாதுகாப்பு அமைச்சு மீதான நிதி ஒதுக்கீடு குழுநிலை விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்:-

போர் நிறுத்தம் ஒன்றுக்கு நாம் தயாரில்லை. இதனால் வரும் எந்த சவாலையும் நாம் எதிர்கொள்ளத் தாயாக உள்ளோம். விடுதலைப் புலிகளால் யுத்த நிறுத்த அழுத்தங்கள் பிரயோகிக்கப்படுகின்ற போதும் அதனுள் நாம் சிக்கிக் கொள்ளமாட்டோம்.பயங்கரவாதம் இன்று எம்மிடம் சிக்கியுள்ளது. நாம் அனைவரும் ஒன்றிணைந்து பயங்கரவாதத்தை இல்லாது அழிக்க வேண்டும். 15வது திருத்தச் சட்டத்தை பேசுவதற்கு முன்னர் பயங்கரவாதத்தை அழித்த பின்னர் அனைவரும் இருந்து பேசுவோம்.

பயங்கரவாத்திற்கு எதிராக நாங்கள் வெற்றி மேல் வெற்றி பெற்றுக்கொண்டிருக்கும் இந்த நேரத்தில் அனைவரும் ஒன்றிணைந்து ஒத்துழைப்புகளை வழங்க வேண்டும். பயங்கரவாதிகளிடம் இருந்து நாட்டை விடுவித்து வருகின்றோம். இதனுள் போர் நிறுத்தம் ஒன்றுக்குள் சென்று சிக்கிவிடமாட்டோம். எத்தகைய சாவல்கள் வந்தாலும் அதனை சந்திக்கத் தயாராக உள்ளோம்.படைத்துறை சார்ந்த விடயங்களை நாங்கள் தீர்மானிப்பதில்லை. அதனை அத்துறையில் இருப்போரே தீர்மானிப்பார்கள். இவர்களுக்கு நாங்கள் நிதியினையும், தேவைகளையும் வழங்க வேண்டும் என அவர் அங்கு மேலும் உரையாற்றினார்.

_________

Pathivu.com

_

http://vaththirayan.blogspot.com/

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அடிவாங்கிறது உறுதி

  • தொடங்கியவர்

அடிவாங்கிறது உறுதி

அடிக்கப் பேறீங்க......

  • கருத்துக்கள உறவுகள்

போர்நிறுத்தத்திற்கு நீ ஓடோடி வரப்போகிறாய், அப்போது உன்னுடன் பேசுகிறேன்.

பிச்சை வேண்டாம் நாயை பிடியுங்கோ எண்டு GSP+ உதறி விடுகிறார் பீரிஸ்... வன்னியிலை சூறையாடி பொருள் சேர்க்கலாம், ஆனால் அங்கத்தையான் சனத்திட்டையும் ஒண்டும் இல்லை....!!

இப்போ வன்னிக்கு போறவைதான் சாப்பாடு குடுக்க வேணும்... இல்லை எண்டால் மனித உரிமை மீறல் எண்டு உலகம் சொல்லுது.... நீங்கள் செய்வது அப்பட்டமான கொலை வெறி ஆட்டம்... இதை உலகம் அறியும் போது நீங்களாக நாட்டை பிரிச்சு குடுப்பியள்...!! இல்லை பிரிச்சு எடுப்பினம்....

Edited by தயா

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பிச்சை வேண்டாம் நாயை பிடியுங்கோ எண்டு GSP+ உதறி விடுகிறார் பீரிஸ்... வன்னியிலை சூறையாடி பொருள் சேர்க்கலாம் அங்கத்தையான் சனத்திட்டையும் ஒண்டும் இல்லை....!!

வன்னிக்கு போறவைதான் சாப்பாடு குடுக்க வேணும்... இல்லை எண்டால் மனித உரிமை மீறல் எண்டு உலகம் சொல்லுது.... நீங்கள் செய்வது அப்பட்டமான கொலை வெறி ஆட்டம்... இதை உலகம் அறியும் போது நீங்களாக நாட்டை பிரிச்சு குடுப்பியள்...!! இல்லை பிரிச்சு எடுப்பினம்....

:)

  • கருத்துக்கள உறவுகள்

பனிப்போரின் இறுதிகாலகட்டப்பகுதியில் பல சுதந்திர நாடுகள் தோற்றம் பெற்றன அப்போது அதற்கு ஏதுவான சூழ் நிலையிருந்தது,அப்படியும் சேகுவேராவையே ஒரு பயங்கரவாதியாக்க எடுத்த சதி தோற்று உண்மை வெளியாயிற்று(அவரது நாட்குறிப்பின் மூலம்).ஆனால் நிலமை மாறிவிட்டது இன்று அவர்கள்தான் உலகின் காவல்துறை என்றாகிவிட்டது அவர்கள் சொல்வதுதான் நீதி என்றாகிவிட்டது உண்மையான பயங்கரவாதிகளே அவர்கள் தான் . இதற்குதான் கீரைக்கடைக்கும் எதிர் கடை வேண்டும் என்பது.

உலகம் சோவியத் ஒன்றியத்தின் வீழ்ச்சியை கமியூனிஸத்தின் வீழ்ச்சியாகப்பார்க்கிறது அது தவறு, இன்றைய பொருளாதார தளம்பலுக்கு ஒருத்தரை ஒருத்தர் அடித்து பறிக்கும் வர்க்க முரண்பாட்டை உருவாக்கும் முதலாளித்துவத்தின் வீழ்ச்சியே காரணம். முதலாளித்துவமே உண்மையான பயங்கரவாதம்.

உலக சர்வாதிகாரத்தின் முன் உண்மையான உரிமைப்போர் எல்லாம் பயங்கரவாதமாக்கப்படுகிறது. பயங்கரவாத போர்வையின் கீழ் உரிமைப்போர்களை நசுக்க முற்படுகின்றனர்.

"மண்ணாசை பிடித்து, சிங்களம் அழிவு நோக்கிய இராணுவப் பாதையிலே இறங்கியிருக்கிறது. உலகத்தையே திரட்டிவந்து எம்மோடு மோதுகிறது. இராணுவ வெற்றி பற்றிய கனவுலகில் வாழ்கிறது. சிங்களத்தின் இந்தக் கனவுகள் நிச்சயம் கலையும். எமது மாவீரர் கண்ட கனவு ஒருநாள் நனவாகும். இது திண்ணம்."

"தனது முழுப் படைப்பலத்தையும் ஆயுதபலத்தையும் ஒன்றுதிரட்டி, தனது முழுத் தேசிய வளத்தையும் ஒன்றுகுவித்து, சிங்களத்தேசம் எமது மண்மீது ஒரு பாரிய படையெடுப்பை நிகழ்த்திவருகிறது. சிங்கள இனவாத அரசு ஏவிவிட்டிருக்கும் இந்த ஆக்கிரமிப்புப் போரை எதிர்த்து, எமது விடுதலை வீரர்கள் வீராவேசத்தோடு போராடிவருகின்றனர்."

மாவீரர் தின உரையிலிருந்து.

கிழட்டு மாட்டுக்கள்ளனே.... உனக்கு நல்ல சிந்தனையே வராதா.........?.. அட நான் தர்மசிறியை பற்றி சொல்லுகிறேன் மாடு களவெடுத்து 30 ரூபா அபராதம் கட்டித்தப்பினதுமில்லாமல் அரசியலுக்கும் வந்து நாறடிக்குது உந்த எருமை.

Edited by Sooravali

:unsure:யுத்த நிறுத்தத்தை இந்தியா வலியுறுத்தினால் அதற்கு உத்தரவாதம் தரக் கோருமாம் இலங்கை! :D

தமிழீழ விடுதலைப் புலிகளுடனான யுத்தத்தை நிறுத்துமாறு இலங்கை அரசிடம் இந்தியா நேரடியாகக் கோருமானால்

அத்தகைய யுத்தநிறுத்தத்தின் ஏற்பாடுகளை விடுதலைப் புலிகள் இயக்கம் மீறமாட்டாது என்ற உத்தரவாதத்தை இந்தியா தர வேண்டும் என்று இலங்கை பதிலுக்குக் கேட்குமாம்! விடயமறிந்த வட்டாரங்கள் கொழும்பில் இவ்வாறு தகவல் வெளியிட்டன.

யுத்தத்தை நிறுத்துமாறு இதுவரை இலங்கையிடம் கோரவில்லை என்றும் அந்த வட்டாரங்கள் உறுதியாகத் தெரிவித்தன.

எனினும், யுத்தத்தை நிறுத்துமாறு இலங்கை அரசை வற்புறுத்துவதற்காக இந்தியா தனது வெளிவிவகார அமைச்சரை விரைவில் கொழும்புக்கு அனுப்ப முடிவு செய்திருப்பதாகக் கூறப்படுகின்றது. அது குறித்துக் கேட்டபோதே கொழும்பு அரசுத் தலைமையுடன் தொடர்புடைய வட்டாரங்கள் மேற்கண்டவாறு தகவல் வெளியிட்டன.

அந்த வட்டாரங்கள் மேலும் கூறியவை வருமாறு:

யுத்தத்தை நிறுத்தும்படி இந்தியா கோரும் என நாம் நம்பவில்லை. அப்படி யுத்தத்தை நிறுத்துமாறு இந்தியாகோருமானால் யுத்தம் நிறுத்தப்பட்ட வேளையில் தம்மைப் பலப்படுத்தித் திரும்பவும் யுத்தத்துக்குச் செல்வதற்குத் தம்மைத் தயார்படுத்தும் நடவடிக்கைகளிலோ, யுத்த நிறுத்தத்தை மீறும் செயல்களிலோ புலிகள் ஈடுபடமாட்டார்கள் என்ற உத்தரவாதத்தை புதுடில்லி தரமுடியும் என்றால் மட்டுமே யுத்த நிறுத்தம் குறித்து இந்தியா பேசமுடியும் என்பதை அவர்களுக்கு (இந்தியாவுக்கு) தெளிவாக எடுத்துரைப்போம்.

புலிகள் குறித்து அவர்களின் போக்கு மற்றும் செயற்பாடுகள் பற்றி தம்மால் உத்தரவாதம் தரமுடியாத நிலையில் இருக்கும் இந்தியா, புலிகளை நம்பி யுத்தநிறுத்தம் செய்யும்படி எங்களை எப்படிக் கோரமுடியும்? என்று அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

http://www.tamilwin.com/

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.