Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கொலைவெறியில் கொக்கரிக்கும் சரத்பொன் சேகாவே மன்னிப்புக்கேள்! மன்னிப்புக்கேள்!! - இந்திய அரசே! இந்திய அரசே! இலங்கைத் தூதரை வெளியேற்று!!-வைகோ,நெடுமார்றன் பங்கேற்பு

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இலங்கைத் தமிழர்களுக்கு ஆதரவாக குரல் கொடுத்து வரும் தமிழக அரசியல் கட்சி தலைவர்களை கோமாளிகள் என்றும், புலிகளிடம் பணம் பெற்றுக்கொண்டு அரசியல் செய்பவர்கள் என்றும் இழிவாக பேசிய இலங்கை இராணுவ தளபதி பொன்சேகாவின் பேச்சுக்கு இலங்கை அரசு வருத்தம் தெரிவித்துள்ளது.

பொன்சேகா மன்னிப்பு கேட்க வேண்டும், இலங்கை அரசு வருத்தம் தெரிவிக்க வேண்டும் என்று கலைஞர் கருணாநிதி, ராமதாஸ், வைகோ, திருமாவளவன், பாண்டியன் உட்பட பல்வேறு கட்சி தலைவர்களும் கண்டனம் தெரிவித்து வந்ததால், இலங்கை அரசு அந்நாட்டு இராணுவத்தளபதி பேசிய பேச்சுக்கு வருத்தம் தெரிவித்துள்ளது.

எனினும் இன்னும் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா மன்னிப்பு கேட்கவில்லை.

http://www.tamilwin.com/view.php?20IWnz20e...d43oQH3b02PLS3e

தமிழக அரசியல் கட்சித் தலைவர்களை இழிவுபடுத்திப் பேசிய இலங்கை இராணுவ தளபதி சரத் பொன்சேகா உருவபொம்மை எரிப்புப் போராட்டம் புதுச்சேரியிலுள்ள அனைத்து அரசியல் கட்சிகள், சமுதாய இயக்கங்கள் சார்பில், 9-12-2008 செவ்வாயன்று, காலை 10.30 மணியளவில், ஒதியஞ்சாலை, அண்ணா சிலை அருகில் நடைபெற்றது.

போராட்டத்திற்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் அமைப்புச் செயலர் சு.பாவாணன் தலைமைத் தாங்கினார். போராட்டத்தில், விடுதலைச் சிறுத்தைகள் ப.அமுதவன், ம.தி.மு.க. அமைப்பாளர் முன்னாள் அமைச்சர் நா.மணிமாறன், பொறுப்புக் குழு உறுப்பினர்கள் கபிரியேல், வ.செல்வராசு, பெரியார் திராவிடர் கழகத் தலைவர் லோகு.அய்யப்பன், மக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலாளர் கோ.சுகுமாரன், பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் தங்க.கலைமாறன், அகில இந்திய பார்வர்டு பிளாக் செயலாளர் யூ.முத்து, தேசியவாத காங்கிரஸ் தலைவர் ஜி.சுந்தரமூர்த்தி, புரட்சியாளர் அம்பேத்கர் தொண்டர் படை அமைப்பாளர் சி.மூர்த்தி, லோக் ஜனசக்தி தலைவர் புரட்சிவேந்தன், தமிழர் தேசிய இயக்கத் தலைவர் இரா.அழகிரி, முரசொலி மாறன் பேரவைத் தலைவர் நடராசன் உள்ளிட்ட அரசியல் கட்சிகள், சமுதாய இயக்கங்களின் தலைவர்கள் கலந்துக் கொண்டனர்.

போராட்டத்தில் பல்வேறு கட்சி, இயக்கத் தோழர்கள் 250 பேர் கலந்துக் கொண்டனர். போராட்டத்தில் கீழ்காணும் கோரிக்கைகள் எழுப்பப்பட்டன:

1) தமிழக அரசியல் கட்சித் தலைவர்களை கோமாளிகள் என இழிவுபடுத்திப் பேசிய இலங்கை இராணுவ தளபதி சரத் பொன்சேகாவை வன்மையாக கண்டிக்கிறோம்.

2) மத்திய அரசு உடனடியாக இந்தியாவிலுள்ள இலங்கைத் துணைத் தூதரை அழைத்து விளக்கம் கேட்க வேண்டும். இராணுவ தளபதி சரத் பொன்சேகா மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வலியுறுத்த வேண்டும்.

3) இந்தியாவிலுள்ள இலங்கைத் தூதரகத்தை மூட இந்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

4) இலங்கை அரசு நடவடிக்கை எடுக்காவிட்டால் இந்திய அரசு இலங்கை மீது பொருளாதார தடை விதிக்க வேண்டும்.

http://www.tamilseythi.com/tamilnaadu/puth...2008-12-09.html

-தமிழகத்திலிருந்து,சுகுமாரன்

சிறிலங்கா அரச தலைவர் மகிந்த ராஜபக்ச மற்றும் அந்நாட்டின் தரைப்படைத் தளபதி சரத் பொன்சேகா ஆகியோர் பகிரங்கமாக மன்னிப்புக் கேட்க வேண்டும்; இல்லை எனில் இந்தியாவில் உள்ள சிறிலங்கா தூதுவரை வெளியேற்ற வேண்டும்; இல்லை எனில் எமது போராட்டம் மேலும் தீவிரமடையும் என்று மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து வாசிக்க

இலங்கைத் தமிழர்களுக்கு ஆதரவாக குரல் கொடுத்து வரும் தமிழக அரசியல் கட்சி தலைவர்களை கோமாளிகள் என்றும், புலிகளிடம் பணம் பெற்றுக்கொண்டு அரசியல் செய்பவர்கள் என்றும் இழிவாக பேசிய இலங்கை ராணுவ தளபதி பொன் சேகாவின் பேச்சுக்கு கலைஞர், ராமதாஸ், வைகோ உட்பட பல்வேறு கட்சி தலைவர்களும் கண்டனம் தெரிவித்து வருகிறார்கள்.

கொலைவெறியில் கொக்கரிக்கும் சரத்பொன் சேகாவே மன்னிப்புக்கேள்! மன்னிப்புக்கேள்!! - இந்திய அரசே! இந்திய அரசே! இலங்கைத் தூதரை வெளியேற்று!!

படங்கள் இணைப்பு............

http://www.tamilskynews.com/index.php?opti...3&Itemid=56

யுத்த நிறுத்தம் செய்ய சொல்லி ஆர்ப்பாட்டம் எல்லாம் செய்தவர்கள் இன்று மன்னிப்பு கேக்க சொல்லி ஆர்ப்பாட்டம் செய்யும் நிலைக்கு கி கி அவன் சொன்னது சரி தானோ என்று என்ன தோனுகிறது..

இந்த ஆர்பாட்டங்களால் இலங்கைகைதூதரக தமிழ் அதிகாரி ஒருவர் நிம்மதியிழந்து தவிப்பதாக அவரது குடும்பத்தினரது வட்டாரங்கள் தெரிவிக்கின்றன

ஈழத்தமிழர்களைக் கொன்று குவித்துக் கொண்டும், ஈழத் தமிழர்களுக்காக குரல் கொடுக்கும் தமிழக அரசியல் தலைவர்களை கோமாளிகள் என்று இழிவு படுத்தி வரும் சிங்கள கொடுங்கோலன் ராஜபக்சே மற்றும் சிங்கள இராணுவ தளபதி பொன் சேகாவா ஆகியோரின் திமிர் பேச்சை கண்டித்து கொடும்பாவியை புரட்சிகர இளைஞர் முன்னணியினர் எரித்தனர்.

சமீபத்தில் ஈழத்தமிழர்கள் கொல்லப்படுவதைக் கண்டித்தும், அங்கே போர் நிறுத்தம் செய்ய 'இந்திய பிரதமர்' மன்மோகன் சிங்கிடம் பல்வேறு அமைப்பினர் கோரிக்கை விடுத்துவருகின்றனர். இந்த நடவடிக்கையை கோமாளித்தனமானது என்று இலங்கை அரசின் இராணுவ தளபதி சரத் பொன் சேகாவா திமிராக பேசியுள்ளான். இது ஈழத்திற்காக குரல் கொடுக்கும் அமைப்பினர்களை மட்டுமல்ல ஒட்டுமொத்த தமிழக தமிழர்களையும் இழிவு படுத்துவதாகும்.

இலங்கை அரசின் தமிழின அழிப்புக்கு இந்திய அரசு இராணுவ உதவி, பொருளாதார உதவி, தொழில் நுட்ப உதவி உள்ளிட்ட அனைத்து உதவிகளையும் செய்து வருகிறது. இதன் காரணமாகவே சிங்கள இராணுவ தளபதி பொன் சேகாவா ஆணவமாகப் பேசியிருக்கிறான். இதை இந்திய அரசு கண்டுகொள்ளாமல் இருப்பது என்பது, தமிழக தலைவர்களும், தமிழர்களும் கோமாளிகள்தான் என்று இந்திய அரசு கருதுவதாகத்தான் பொருள். எனவே,

* தமிழர்களை இழிவு படுத்திய சிங்கள இனவெறி அரசின் ராணுவத் தளபதி சரத் பொன் செகாவா மன்னிப்பு கோர வேண்டும்.

* சிங்கள அரசின் இனவெறிப் போரை உடனே தடுத்து நிறுத்த வேண்டும்.

* தமிழீழத்தை அங்கீகரிக்க வேண்டும்.

* சிங்கள இனவெறி அரசுக்கு எவ்வித உதவியும் செய்யக் கூடாது.

* சிங்கள அரசுடனான உறவைத் துண்டித்துக் கொள்ள வேண்டும்.

* இந்தியாவில் உள்ள இலங்கைத் தூதரகத்தை இழுத்து மூட வேண்டும்.

என வலியுறுத்தி பொன் சேகாவா, ராஜபக்சேவின் கொடும்பாவிகளை புரட்சிகர இளைஞர் முன்னணியினர் எரித்தனர்.

காலை 11 மணியளவில் சென்னை மெமோரியல் அரங்கம் அருகில் நடைபெற்ற இப்போராட்டத்திற்கு புரட்சிகர இளைஞர் முன்னணியைச் சார்ந்த தோழர் சீராளன் தலைமை தாங்கினார். இப்போராட்டத்தில் பெண்கள், குழந்தைகள் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு சிங்கள இனவெறி அரசின் அதிபர் ராஜபக்சே மற்றும் ராணுவ தளபதி சரத் பொன் சேகாவா ஆகியோரின் கொடும்பாவிகளை எரித்தனர். சிங்கள அரசுக்கு எதிராகவும், இந்திய அரசு இலங்கை அரசுடனான உறவைத் துண்டிக்கக் கோரியும், போரை உடனே தடுத்து நிறுத்தக் கோரியும், தமிழீழத்தை அங்கீகரிக்கக் கோரியும் முழக்கங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டம் செய்தனர்.

போராடிய நூற்றுக்கும் மேற்பட்ட பு.இ.மு. தோழர்களை தமிழக காவல்துறை கைது செய்தது.

http://www.tamilseythi.com/tamilnaadu/puimu-2008-12-10.html

செய்தி: தமிழகத்திலிருந்து மணிவண்ணன்

இந்தியாவுடனான முழு இராசதந்திர உறவை முறிக்கும் (அல்லது பாதிக்கும்) வகையில் தூதுவரை வெளியேற்று என்பது கனதியான வேண்டுகோள்.

அதிலும் பார்க்க சாத்தியப்படக் கூடியது மாநிலஅரசின் மாநில மக்களின் சனநாயக உரிமையுடையதுமானது சென்னையில் உள்ள சிறீலங்கா தூதரகத்தைப் பூட்ட வைப்பது. ஆனால் இதை வன்முறை செய்து ஆர்ப்பாட்டம் நடத்தி உருவப்பொம்மை எரித்து செய்ய முடியாது. தமிழ்நாடு அரசு அதன் சட்டமன்ற மற்றும் மாநில நிறைவேற்று அதிகாரங்களை வைத்து செய்யலாம்.

தம்மால் முடிந்த ஒன்றை காத்திரமாக இயங்கி செய்து முடிக்காது இந்திய (மத்திய) அரசால் செய்ய முடியாத ஒன்றை செய்யும் படி அறிக்கை விடுவது ஆர்ப்பாட்டம் நடத்துவது உருவப்பொம்மை எரிக்கும் நடத்தையைத்தான் மோட்டுச் சிங்களவர்கள் பார்த்து சிரித்துக் கொண்டிருக்கிறார்கள். அதையே பொன்சேக்கா உணர்ச்சிவசப்பட்டு வெளிப்படையாக சொல்லிவிட்டார்.

குறுக்கு சொல்வதில எனக்கு உடன்பாடுதான்...... காத்திரமான வழிகள் பல இருக்கும்போது அதை உபயோகிக்காமல் இருப்பது அழகில்லை

ஈழத்து ஏழைத்தமிழராகிய எங்களுக்கு சனாநாயக வழிகளிலோ அல்லது சட்டத்தின் மட்டத்தில் நின்று பேசக்கூடிய நிலை இல்லை, ஆனால் தமிழகத்தில் அவ்வாறில்லை, இப்ப சரத்த் சொன்னது எங்களைப்பத்தியுமில்லை அவர்களைப்பத்தி. இதுக்கு தமிழகம் தனது அரசியல் உரிமையின் பிரகாரம் தனது எதிர்ப்பை காட்டி இருக்க வேண்டும், கொடும்பாவி எரிச்சு கூடிப்பேசி போனா சரத் இதைவிடக்கூடத்தான் கதைபான்.

உண்மைதான். இவர்கள் இன்னும் பழைய பாணியிலேயே நிற்கிறார்கள். அவர்களின் உள்நாட்டு அரசியலிலும் சரி, போராட்டங்களிலும் சரி, எந்தவித முன்னேற்றமும் இல்லை. அவர்கள் தங்களுடைய பாணியை மாற்றினால் நிச்சயம் பலன் இருக்கும். அதற்கு நாமும் உதவலாமே

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

குறுக்கர் இண்டைக்கு தெளிவா பேசுறார். ???

தமிழக தலைவர்களை கோமாளிகள் என இலங்கை இராணுவ தளபதி விமர்சித்தமைக்கு அதிமுக கண்டனம் தெரிவிக்காதது ஏன்?: கலைஞர்

இலங்கை இராணுவ தளபதி பொன்சேகா தமிழக அரசியல்வாதிகளை இழிவுபடுத்தி பேசிய கருத்துக்கு அனைத்து கட்சிகளும் கண்டனம் தெரிவித்துள்ள நிலையில் அதிமுக மட்டும் கண்டனம் தெரிவிக்காத சூட்சுமத்தை தெரிந்துகொள்ள வேண்டும் என்று முதல்வர் கருணாநிதி தெரிவித்துள்ளார்.

இலங்கையில் உள்ள சேனாதிபதி தமிழக அரசியல்வாதிகளை இகழ்ந்துரைத்துள்ளார் என்ற செய்தி பத்திரிக்கையில் வந்தது.

இதற்கு பாமக நிறுவனர் ராமதாஸ், மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, முதல்வர் கருணாநிதி, விடுதலை சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில தலைவர் என்.வரதராஜன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் தா.பாண்டியன் ஆகியோர் கண்டனம் தெரிவித்துள்ளார்கள்.

தமிழகத்தில் உள்ள ஒரே ஒரு கட்சி மட்டும் கண்டனம் தெரிவிக்கவில்லை. ஏன் தெரிவிக்கவில்லை என்று திருமாவளவனிடம் சொன்னேன். நாம் தமிழர்கள் நாம் தமிழர்கள் என்று சொல்லிவருவதால் நாம் கண்டனம் தெரிவித்துள்ளோம். அப்படி சொல்லாதவர் என்பதால் அவரும் கண்டனம் தெரிவிக்கவில்லை.

இந்த உண்மையை, இந்த இரகசியத்தை எல்லோரும் தெரிந்துகொள்ள வேண்டும். என்று கலைஞர் தெரிவித்துள்ளார்.

http://www.tamilwin.com/

தமிழக தலைவர்களை கோமாளிகள் என இலங்கை இராணுவ தளபதி விமர்சித்தமைக்கு அதிமுக கண்டனம் தெரிவிக்காதது ஏன்?: கலைஞர்

இலங்கை இராணுவ தளபதி பொன்சேகா தமிழக அரசியல்வாதிகளை இழிவுபடுத்தி பேசிய கருத்துக்கு அனைத்து கட்சிகளும் கண்டனம் தெரிவித்துள்ள நிலையில் அதிமுக மட்டும் கண்டனம் தெரிவிக்காத சூட்சுமத்தை தெரிந்துகொள்ள வேண்டும் என்று முதல்வர் கருணாநிதி தெரிவித்துள்ளார்.

இலங்கையில் உள்ள சேனாதிபதி தமிழக அரசியல்வாதிகளை இகழ்ந்துரைத்துள்ளார் என்ற செய்தி பத்திரிக்கையில் வந்தது.

இதற்கு பாமக நிறுவனர் ராமதாஸ், மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, முதல்வர் கருணாநிதி, விடுதலை சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில தலைவர் என்.வரதராஜன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் தா.பாண்டியன் ஆகியோர் கண்டனம் தெரிவித்துள்ளார்கள்.

தமிழகத்தில் உள்ள ஒரே ஒரு கட்சி மட்டும் கண்டனம் தெரிவிக்கவில்லை. ஏன் தெரிவிக்கவில்லை என்று திருமாவளவனிடம் சொன்னேன். நாம் தமிழர்கள் நாம் தமிழர்கள் என்று சொல்லிவருவதால் நாம் கண்டனம் தெரிவித்துள்ளோம். அப்படி சொல்லாதவர் என்பதால் அவரும் கண்டனம் தெரிவிக்கவில்லை.

இந்த உண்மையை, இந்த இரகசியத்தை எல்லோரும் தெரிந்துகொள்ள வேண்டும். என்று கலைஞர் தெரிவித்துள்ளார்.

http://www.tamilwin.com/

ஜயாவின் அரசில் சாணக்கியத்தில் அலறுது ஈழத்தமிழினம்,,,,,,,,,,,,, :(

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.