Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மாணவிகள் மீது ஆசிட் வீசிய 3 வாலிபர்களை சுட்டுக் கொன்ற போலீஸ்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

மாணவிகள் மீது ஆசிட் வீசிய 3 வாலிபர்களை சுட்டுக் கொன்ற போலீஸ்

சனிக்கிழமை, டிசம்பர் 13, 2008, 12:12 இலவச நியூஸ் லெட்டர் பெற

ஹைதாபாத்: இரு கல்லூரி மாணவிகள் மீது ஆசிட் வீசி அவர்களது வாழ்வைக் கெடுத்த 3 வாலிபர்களை ஆந்திர போலீசார் சுட்டுக் கொன்றுவிட்டனர்.

வாரங்கல் மாவட்டத்தில் உள்ள ககதிய இன்ட்டியூட் ஆப் சயின்ஸ் அண்ட் டெக்னாலஜி கல்லூரியில் பயிலும் ஸ்வப்னிகா, பிரனீதா ஆகியோர் தங்களது டூ வீலரில் கல்லூரியிலிருந்து வீடு திரும்பிக் கொண்டிருந்தனர்.

அவர்களை பைக்கில் வந்த கல்லூரி மாணவர்களான சஞ்சய், ஹரிகிருஷ்ணா, ஸ்ரீனிவாச ராவ் ஆகியோர் வழிமறித்து ஆசிட் ஊற்றிவிட்டுத் தப்பினர்.

இதி்ல் இரு மாணவிகளின் முகம், உடல் வெந்துபோனது. இருவருமே மிகவும் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பாக 3 மாணவர்களையும் ஆந்திர போலீசார் கைது செய்தனர். இதையடுத்து மூவரையும் சம்பவம் நடந்த இடத்துக்கு நேற்றிரவு விசாரணைக்காக கொண்டு சென்றனர்.

எந்த இடத்தில் வைத்து ஆசிட் ஊற்றினார்களோ அதே இடத்தில் வைத்து மூவரையும் போலீசார் சுட்டுக் கொன்றனர். மூவரும் போலீசாரை தாக்கிவிட்டு தப்பியோட முயன்றதால் சுட்டிக் கொல்லப்பட்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

மாணவிகள் மீது ஆசிட் வீசப்பட்டது குறித்து ஆந்திர முதல்வர் ராஜசேகர் ரெட்டி மிகுந்த அதிர்ச்சி தெரிவி்த்திருந்தது குறிப்பிடத்தக்கது. இந் நிலையில் இந்த எண்கெளன்டர் நடந்துள்ளது.

இதில் ஸ்ரீனிவாச ராவ் ஸ்வப்னிகாவை ஒருதலையாக காதலித்து வந்துள்ளான். ஆனால், கார்த்திக் என்ற மாணவனை காதலித்து வந்த ஸ்பனிகா, ராவின் காதலை ஏற்க மறுத்துள்ளார்.

இதையடுத்து உன் மீது ஆசிட் வீசுவேன் என ஸ்வப்னிகாவிடம் ராவ் மிரட்டியுள்ளான். இது குறித்து ஸ்வப்னிகாவின் தந்தை தேவேந்தர் வாரங்கல் போலீசில் புகார் செய்துள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த ராவும் அவனது நண்பர்களும் தேவேந்தரின் மோட்டார் சைக்கிளை தீ வைத்து எரித்துள்ளனர். இது தொடர்பான வழக்கில் ஸ்ரீனிவாச ராவ் கைது செய்யப்பட்டு ஜாமீனில் வெளியே வந்தான்.

இதையடுத்து தனது சகோதரன் சிவப்பிரசாத ராவ், தனது நண்பர்களான ஹரிகிருஷ்ணா, சஞ்சய் ஆகியோருடன் கூடிப் பேசி ஸ்வப்னிகாவின் முகத்தில் ஆசிட் வீச வாரங்கலில் உள்ள ஒரு கடையில் `சல்பியூரிக்' ஆசிட்டை வாங்கியுள்ளான்.

பின்னர் ராவ், சஞ்சய், ஹரி மூவரும் மாமனூர் என்ற இடத்தில் நிறுத்தப்பட்டிருந்த ஒரு பைக்கை திருடிக் கொண்டு ஸ்வப்னிகா படிக்கும் கல்லூரிக்கு வந்துள்ளனர்.

தனது தோழி பிரனீதாவுடன் இரு சக்கர வாகனத்தில் வெளியே வந்த ஸ்வப்னிகாவை சிறிது தூரத்தில் வழிமறித்து ஆசிட்டை ஊற்றிவிட்டுத் தப்பினர்.

இதில் பிரனீதா ஹெல்மட் அணிந்திருந்ததால் முகம் தப்பியது. ஆனால், உடல் வெந்தது. ஸ்வ்னிகாவின் முகமும் உடலும் வெந்து போனது. இருவரும் அலறியபடியே மயங்கி கீழே விழுந்துள்ளனர்.

அவர்களை பொதுமக்கள் மீட்டு தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். ஸ்வப்னிகாவின் உடல் 60 சதவீத அளவுக்கு வெந்து போய் கவலைக்கிடமான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்தச் சம்பவத்தால் அதிர்ந்து போன முதல்வர் ராஜசேகர ரெட்டி மாணவர்களை உடனடியாகப் பிடிக்க உத்தரவிட்டார். போலீசார் 4 தனிப்படைகள் அமைத்து சிவபிரசாத் ராவ் உள்பட 4 மாணவர்களையும் கைது செய்தனர்.

இந் நிலையில் தான் போலீசாரின் குண்டுக்கு 4 பேரும் காலியாகியுள்ளனர். சிவபிரசாத ராவ் ஆசிட் ஊற்றியதில் நேரடியாக ஈடுபடவில்லை. இதனால் அவனை போலீசார் சுடவில்லை என்று தெரிகிறது.

thatstamil

  • கருத்துக்கள உறவுகள்

சரியான தண்டனை.

  • கருத்துக்கள உறவுகள்

காதல் இனித்திடும் நரகம்

கொடுக்கபட வேண்டிய தண்டனைதான் :)

சுட முதல் "அதனை" வெட்டி காக்கா விற்கு போட்டுட்டு சுட்டிருக்க வேண்டும்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

காதல் இனித்திடும் நரகம்

கொடுக்கபட வேண்டிய தண்டனைதான் :)

சிலர்... நரகத்திலயும் இருந்திருக்கினம் போல இருக்கு!

செய்தவன் ஒரேயடியா போட்டான், ஆனால் அந்த பெண்ணின் நிலை தான் பரிதாபத்துக்குரியது, தந்தைமார் எடுத்தேன் , கவிழ்த்தேன் எண்டு இருக்காமல் , இவ்வாறான பிரச்சனைகளை கவனமாக கையாளவேண்டும்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சுட முதல் "அதனை" வெட்டி காக்கா விற்கு போட்டுட்டு சுட்டிருக்க வேண்டும்

எதயுங்கோ ஒருக்காச் சொல்லுங்கோவன்

  • கருத்துக்கள உறவுகள்

கோர்ட் கேஸ் எண்டு போயிருந்தால் வெளிய வந்திருப்பினம். இனிமேல் செய்யிறவன் ஒண்டுக்கு ரெண்டுதரம் யோசிப்பான்தானே.

திருச்சியில ஒரு தரம் ஒரு ரௌடியை காவேரிப்பாலத்துக்குக் கீழே வரச் சொல்லிப் போட்டித்தள்ளினவை. பிறகு அந்த காவல்துறை கண்காணிப்பாளர் தன்ர கையை தானே கொஞ்சம் வெட்டிப்போட்டு ஆஸ்பத்திரியில போய் படுத்திட்டார். :)

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கோர்ட் கேஸ் எண்டு போயிருந்தால் வெளிய வந்திருப்பினம். இனிமேல் செய்யிறவன் ஒண்டுக்கு ரெண்டுதரம் யோசிப்பான்தானே.

திருச்சியில ஒரு தரம் ஒரு ரௌடியை காவேரிப்பாலத்துக்குக் கீழே வரச் சொல்லிப் போட்டித்தள்ளினவை. பிறகு அந்த காவல்துறை கண்காணிப்பாளர் தன்ர கையை தானே கொஞ்சம் வெட்டிப்போட்டு ஆஸ்பத்திரியில போய் படுத்திட்டார். :)

உதைத்தான் நாங்கள் அண்டு தொடக்கம் செய்யுறமாக்கும்

எங்களுக்கு ஒருத்தன்ரை குடலை எடுத்து மாலையாய் போடாட்டி பத்தியப்படாதே :)

  • கருத்துக்கள உறவுகள்

நிரூஜா Posted நேற்று, 11:44 PM

சிலர்... நரகத்திலயும் இருந்திருக்கினம் போல இ

நாம் வாழும் பூமி நரகமே நிருஜா :):)

பொலிஸ் சுட்டது தவறு. அவர்களுக்கும் அசிட்டால தோய வார்த்திருக்க வேண்டும்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.