Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

விடுதலைப் புலிகளின் ஓர் விமான ஓடுபாதையைக் கைப்பற்றியுள்ளதாக இலங்கை இராணுவம் அறிவிப்பு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

விடுதலைப் புலிகளின் ஓர் விமான ஓடுபாதையைக் கைப்பற்றியுள்ளதாக இலங்கை இராணுவம் அறிவிப்பு

இலங்கையின் வடக்கே மாங்குளத்திற்குக் கிழக்கே அம்பகாமம் பகுதியில் விடுதலைப் புலிகளின் 350 மீட்டர் நீளமுள்ள மேலும் ஒரு விமான ஓடுபாதையை இராணுவத்தினர் புதன்கிழமை காலை முழுமையாகக் கைப்பற்றியிருப்பதாக இராணுவத் தலைமையகம் தெரிவித்திருக்கின்றது.

இதனிடையில், பரந்தன் மற்றும் முகமாலை பகுதிகளில் விடுதலைப்புலிகளின் இலக்குகள் மீது நான்கு தடவைகள் விமானத் தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளதாகப் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்திருக்கின்றது.

ஆனால் பரந்தன் சந்திக்கருகில் உள்ள கத்தோலிக்கர்களின் திருக்குடும்ப கன்னியர் மடத்தின் மீதும். அதற்கருகில் இருந்த தேவாலயம் ஒன்றின் மீதும் வான்வழி தாக்குதல் நடத்தப்பட்டதாக விடுதலைப் புலிகள் தெரிவிததிருக்கின்றனர்.

அத்துடன் பரந்தனுக்கு மேற்குப்புறத்தில் உள்ள குஞ்சுப் பரந்தன் முன்னரங்க பகுதிகளில் இனறு காலை 4 மணியிலிருந்து இராணுவத்தினருக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையில் கடும் மோதல்கள் நடைபெற்று வருவதாகவும் விடுதலைப் புலிகள் கூறியிருக்கின்றனர்.

இந்த சேதங்கள் குறித்து இராணுவ தரப்பிலிருந்து தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை.

எனினும், முல்லைத்தீவு குமுழமுனை பகுதியில் விடுதலைப் புலிகளுடன் நேற்று இடம்பெற்ற மோதல்களில் 4 விடுதலைப் புலிகள் கொலலப்பட்டுள்ளதாகவும், படையினர்; தொடர்ந்தும் முன்னேற்ற முயற்சியில் ஈடுபட்டிருப்பதாகவும் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்திருக்கின்றது.

இதேவேளை, பரந்தனுக்கு மேற்கே சுமார் 6 கிலோமீற்றர் தொலைவில் உள்ள சின்னப்பரந்தன் பிரதேசத்தை விடுதலைப் புலிகளிடமிருந்து இராணுவம் கைப்பற்றியிருப்பதாகவும், இதன்போது, விடுதலைப் புலிகளுடன் இடம்பெற்ற கடும் சண்டைகளில் 20 விடுதலைப்புலிகள் கொல்லப்பட்டுள்ளதுடன், 5 சடலங்களையும் படையினர் கைப்பற்றியிருப்பதாகவும் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்திருக்கின்றது.

இதேவேளை,வவுனியா மணிபுரம் பகுதியில் உழவு இயந்திரம் ஒன்று வெடிப்புக்கு இலக்கான சம்பவத்தில் இராணுவச் சிப்பாய் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார். சிப்பாய்கள் இருவரும் சிவிலியன்கள் இருவரும் இதில் காயமடைந்துள்ளனர்.

http://www.bbc.co.uk/tamil/news/story/2008...ntaffairs.shtml

20081223_06TFp37.jpg

போரின் உக்கிரத்தையும் அதன் கடினத்தையும் உணர்ந்து கொள்ள கூடிய ஒரு படம்... புலிவீரர்களின் ஒரு காவலரண் வெடி மருந்துகளால் சிதைக்க பட்ட விதம் என்பது புலிகள் எவ்வளவு தீவிர யுத்ததில் முகம் கொடுக்கிறார்கள் என்பதுக்கு நல்ல உதாரணம்...

படம் MOD SL

Edited by தயா

  • கருத்துக்கள உறவுகள்

20081223_06TFp37.jpg

போரின் உக்கிரத்தையும் அதன் கடினத்தையும் உணர்ந்து கொள்ள கூடிய ஒரு படம்... புலிவீரர்கள் ஒரு காவலரண் வெடி மருந்துகளால் சிதைக்க பட்ட விதம் என்பது புலிகள் எவ்வளவு தீவிர யுத்ததில் முகம் கொடுக்கிறார்கள் என்பதுக்கு நல்ல உதாரணம்...

இது யாற்ற காவலரண்.. புலி வீரர்களதா.. சிறீலங்கா படையினரதா.. ஏனெனில்.. இதில் இது சிறீலங்காப் படையினரது என்பது தெளிவாகத் தெரிகிறது. இதற்குப் பின்னாலே.. சீரான உருளைகளாக வெட்டப்பட்ட காவலரன் கட்டைகள் பரப்பப்பட்டுக் கிடப்பதைக் காணலாம். புலிகள் அப்படியெல்லாம் வெட்டி மிணக்கட்டுக் கொண்டிருக்கக் கூடிய வாய்ப்பை கொண்டில்லை. அதுமட்டுமன்றி புலிகள் பச்சை நிற மண்மூட்டைகளை எல்லாம் பாவிக்கக் கூடிய நிலை இல்லை..! இது நன்கு வசதியான படையணி ஒன்றின்.. காவலரண்.. என்பது தெரிகிறது..! :lol: :lol:

அண்மையில் விடுதலைப்புலிகள் வெளியிட்ட படங்கள் தொடர்பில் இராணுவப் பேச்சாளர் கருத்துத் தெரிவிக்கையில் அவை சோடிக்கப்பட படங்கள் என்று சொல்லி இருந்தார். எனவே இராணுவ இணையத்தளத்தில் தரவேற்றப்படும் படங்கள் எத்துணை அளவுக்கு சோடிக்கப்படும் என்பதையும் மக்களுக்கு இனங்காட்ட வேண்டும்..! :rolleyes:

Edited by nedukkalapoovan

படம் MOD SL என்பதை நான் மீண்டும் இணைக்கும் முன்னம் நீங்கள் கருத்து எழுதி போட்டீர்கள் நெடுக்கு...!!

அங்கு குஞ்சு பரந்தலின் எடுக்கப்பட்டதாக சொல்லி கொள்ளலாம்.. எண்றாலும் படத்தில் சிதறி கிடக்கும் விதம் வெடி மருந்துகளால் ஆனது என்பதில் சந்தேகம் இல்லை... அதனல் போராளிகள் இப்படியான கடிய சூளலில் இருக்கிறார்கள் என்பது உண்மைதானே...??

பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்ட படங்கள் தான் இவை.. மேலும் படங்கள் அக்காவரலரனுக்கு அருக்கில் சாவடைந்த பெண்போராளிகள் படம் என்பதால் இணைக்க விரும்பவில்லை...

Edited by தயா

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.